31 அக்டோபர் 2010

எல்லா மக்களினது அபிலாஷைகளையும் ஸ்ரீலங்கா புரிந்து செயற்படவேண்டும்!

இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களினதும் அபிலாசைகளைப் புரிந்துகொண்டு முன்னேற்ற இலக்குகளை அடைவதற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பிலிப் ஜே குரோவ்லி தெரிவித்தார்.
அத்துடன் உள்நாட்டு யுத்தம் முடிபுற்றதன் பின்வந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கமானது நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வதற்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கஇராஜங்கத் திணைக்களத்தின் பேச்சாளரும், உதவிச் செயலாளருமான பிலிப் ஜே குரோவ்லி நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் வைத்து மேற்குறித்தவாறான கருத்தை வெளி யிட்டுள்ளார்.
இலங்கையில் போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக பல் வேறு தரப்புகளாலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில், அது தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதிலும் அனைத்துத் தரப்பினருக்குமிடையிலான முரண் பாடுகளைக்களைவது தொடர்பிலும் அரசாங்கம் முன்னுரிமை அளிக்கவேண்டுமென அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் மூலம் மாபெரும் மக்கள் பலமொன்றைப் பெற்றுக்கொண் டுள்ள அரசாங்கம் அனைத்து இன மக்களிடையேயும், இன ஒற்றுமையைக் கட்டியயழுப்பும் முயற்சிகளை முடுக்கி விட்டு, எல்லா மக்களினதும் அபிலாசைகளைப் புரிந்து கொண்டு செயற்படும் போதுதான் சுபீட்சமான இலங்கையைக் கட்டியயழுப்பக் கூடியதாக இருக்கும்.
இலங்கையின் எதிர்காலத்திற்கு அது மிக முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்ல யோசனைகளை முன்வைத்தால் சிறிலங்கா ஏற்றுக்கொள்ளும் என்கிறார் பீரிஸ்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளத் தயார் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பரிந்துரைகளை வரவேற்பதாகத் தெரிவித்ததன் மூலம் சகல பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது என அவர் கூறினார். எந்தத் தரப்பினராலும் நல்ல யோசனைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டால் அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டாது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் நல்ல யோசனைகள் முன் வைக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித் துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது,
வெளிநாட்டுச் சக்திகளால் மேற்கொள்ளப்படும் எந்தவிதமான விசா ரணைகளையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அரசு ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எவ்வாறெனினும் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு விசாரணை நடத்தவில்லை. தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது என பான் கீ மூன் பல சந்தர்ப்பங்களில் எனக்கு அறிவித்துள்ளார்.
உலகின் அனைத்து நாடுகளிலும் ராஜதந்திர சேவையில் அரசியல் தலையீடு காணப்படுகின்றது.இலங்கையிலும் அவ்வாறான நிலைமைகள் காணப்படுவதனை மறுப்பதற்கில்லை.பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சமஷ்டி ஆட்சி முறைமை குறித்து தாம் வலியுறுத்திய போதிலும் தற்போது நிலைமைகள் மாறியுள்ளதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் அதே நிலைப்பாட்டை தற்போது ஒப்புநோக்குவது பொருத்தமாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நோர்வே அரசாங்கத்துடனான உறவுகளை துண்டிக்க வேண்டிய அவசியம் கிடையாது. சமாதான முனைப்புக்களுக்கு முன்னதாகவே இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டன.
பொருளாதார ரீதியில் இரு நாடு களுக்குமிடையில் நெருங்கிய பிணைப்புக் காணப்பட்டது இலங்கையின் தென்பகுதி அபிவிருத்திப் பணிகளில் நோர்வே அரசாங்கம் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளது. இதனை எவரும் மறந்துவிடக் கூடாது.பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஜனாதிபதி பிரதம அதிதியாக அழைக்கப்பட்டமையினால் சீனாவுடனான உறவுகளில் விரிசல் ஏற்படாது.
இலங்கையின் நிலைமைகள் குறித்து வெளிநாடுகளில் போதிய அளவு தெளிவுப்படுத்தப்படவில்லை எனவும் எதிர்காலத்தில் தூதுவராலயங்களின் ஊடாக அதிகளவு தெளிவு படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

30 அக்டோபர் 2010

நக்சலைட் அமைப்பினரே இந்தியாவின் விடுதலைப் புலிகள்!

இந்தியாவின் தமிழீழ விடுதலைப்புலிகளாக நக்சலைட் தீவிரவாதிகள் உள்ளனர் என்று அந்நாட்டின் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து வெளியாகும் சென்ரல் ஸ்ரேனிக்கல் என்ற ஆங்கில பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள் ளது. அதில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு,
கடந்த 25 ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலி கள் மிகவும் ஸ்திரமான நிலையில் சொந்தமாக அரசு ஒன்றை வடக்கு,கிழக்கு மாகாணங்களில் ஸ்தாபித்து ஆட்சி நடத்தியிருக் கின்றனர். தரைப்படை, கப்பல்படை, வான்படை ஆகியவற்றை யும் வைத்திருந்தனர்.அரசு மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதும் அரசுடன் சமாதானப் பேச்சில் பேசுவதும் அவர் களின் சந்தர்ப்பவாத உபாயமாக இருந்து வந்துள்ளது.
நக்சலைட் தீவிரவாதம் நக்சல்வாடிப் பிரதேசத்தில் 1967 ஆம் ஆண்டு தோன்றியது. கடந்த 42 வருடங்களில் இந்தியாவின் 16 மாநிலங்களில் இவ்வியக்கம் விஸ்தரித்துள்ளது. முன்பு கட்டுப்பாட்டிலிருந்திராத புதிய இடங்களில் கூட ஸ்திரமாக காலூன்றி நிற்கின்றார்கள். அதில் ஒன்றுதான் போபால் நகரம். அங்கு ஒரு தொழிற்சாலையை அமைத்து இருந்தனர். 16 மாநிலங் களில் இருந்தும் மொத்தமாக 4 ஆயிரம் சதுரகிலோமீற்றர் பரப்பு டைய நிலம் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. 16 மாநிலங்களிலுள்ள 194 மாவட்டங்களில் இவர்களின் பிர சன்னம் உண்டு.
அவற்றில் 58 மாவட்டங்களில் சொந்தமாக அரசு ஒன்றை ஸ்தா பித்து ஆட்சி நடத்துகின்றனர். இங்கு சொந்தமாக நீதிமன்றங்கள் வைத்தி ருக்கின்றார்கள். இங்கு இவர்களின் கட்டுப்பாட்டி லுள்ள மக்கள் இவர்களுக்கு வரி செலுத்துகின்றனர். வருடாந்தம் இந்திய ரூபாயில் 200 கோடி வரி இவர்களுக்கு கிடைக் கப்பெறுகின்றது. இவர்கள் இந்தியாவின் தமிழீழ விடுதலைப்புலிகளாக உள்ளனர் என்றுள்ளது.

கிட்லர் செய்ததையே மகிந்த அரசும் செய்கிறது!

உலக மனித உரிமைகள் தினத்தன்று மாபெரும் போராட்டமொன்றை நடத்தி முன்னாள் இராணு வத் தளபதி சரத் பொன்சேகாவை மீட்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரி வித்தார். முன்னாள் சர்வாதிகாரியான ஹிட்லர் 1933 ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவையனைத்தும் படிப்படியாக இன்று இலங் கை அரசும் செய்துவருகிறது. ஹிட்லரின் ஆட்சி போலவே இலங்கை அரசின் ஆட்சியும் இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை கண்டியில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய மங்கள சமரவீர, முன்னாள் சர்வாதிகாரியான ஹிட்லர் 1933 ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவை அனைத்தும் படிப்படியாக இன்று இலங்கை அரசும் செய்துவருகிறது.
இச்சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக ஒரு இலட்சம் பேரைத்திரட்டி எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப் பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளோம். 1933 ஆம் ஆண்டுஹிட்லருக்கு எதிராக மக்கள் எழும்போது ஹிட்லர் அரச அதிகாரங் களை கைப்பற்றினார். அதுபோல் இன்று இலங்கையிலும் நீதிச்சேவை ஆணைக் குழு, பொலிஸ் சேவை ஆணைக்குழு, தேர் தல் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக் குழு போன்ற பல்வேறு ஆணைக்குழுக்க ளை ஜனாதிபதி தனது கையில் எடுத்துள்ளார்.
அவ்வாறு எமது ஜனநாயக உரிமைகள் பறிக் கப்பட்ட தினம் தான் செப்டெம்பர் 8 ஆம் திகதியாகும். எனவே நவம்பர் 8 ஆம் திக திக்கு இரண்டு மாதம் பூர்த்தியாகின்றது. அன் றும் நாடளாவிய நீதியில் ஓர் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளோம். அதேவிதமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி 3 மாதமாகிறது.
இருப்பினும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி உலக மனித உரிமை தினமாகையால் அன்று எமது உரிமை மீறப்பட்ட தினத்தை நினைவு கூறுவதுடன் மாபெரும் போராட்டமொன் றையும் நடத்தி சரத் பொன்சேகாவை மீட்டெ டுப்போம் என்றும் அவர் கூறினார்.

29 அக்டோபர் 2010

வடக்கில் சிங்கள மக்களுக்கு வழங்கும் வசதிகள் தமிழருக்குத் தெற்கில் கிடைக்குமா? : சிவாஜிலிங்கம் கேள்வி.

வாரந்தோறும் தெற்கிலிருந்து வட பகுதிக்கு வரும் சிங்கள மக்கள் , அரச பண்டகசாலைகளிலும், அரச பாடசாலைகளிலும் தங்க வைக்கப்படுகின்றனர். இதே போன்ற வசதிகள், வடக்கிலிருந்து வரும் தமிழ் மக்களுக்குத் தெற்கில் வழங்கப்படுமா?" என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
"கடந்த 22,23,24 ஆந் திகதிகளில், இலங்கை மருத்துவ பீடமும், யாழ் மருத்துவ பீடமும் இணைந்து மாநாடு ஒன்றை, யாழ். பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் நடத்தின. அச்சமயம் அங்கு சுமார் 1000க்கும் மேற்பட்டோர் குழுமியதால் பெரும் கூச்சல் நிலவவே, மாநாட்டு மண்டபத்துக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு சிறு சச்சரவேற்பட்டது. நூலக ஊழியர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். புத்தகங்களையும் சேதப்படுத்தினர்.
அச்சமயம், சிலர், தாம் ஜனாதிபதி செயலகத்தில் வேலை செய்பவர்கள் என்று கூறி அங்கிருந்தவர்களை மிரட்டினர். இது குறித்துப் பொலிஸாரும் இராணுவத்தினரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
இவ்வாறான சம்பவங்கள் வடக்கில் இன்று வாடிக்கையாகி விட்டன. தெற்கிலிருந்து வருவோர், இங்குள்ள அரச கட்டடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இவர்கள் இங்குள்ள உணவகங்களுக்குச் சென்று அடாவடித்தனங்களிலும் ஈடுபடுகின்றனர்.
ஆயிரம் ரூபாவுக்கு மேல் கடைகளில் பொருட்கள் வாங்கும் இவர்கள், தாம் 1000 ரூபா மட்டுமே தருவோம் என்று கூறி, தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்துகின்றனர்.
தமது மாமன், மச்சான் எல்லோரும் இராணுவத்தில் உள்ளனர் என்று கூறி இவர்கள் தமிழ் மக்களையும், வர்த்தகர்களையும் பல வழிகளிலும் தொல்லைப்படுத்துகின்றனர்.
விடுமுறை நாட்கள் என்றால் இவர்களுக்குப் பாடசாலைகளில் இடம் ஒதுக்கித் தரப்படுகிறது. இதே சலுகையைத் தமிழ் மக்களுக்குத் தெற்கில் மட்டுமல்ல, வேறெந்த பகுதிகளிலாவது அரசாங்கம் செய்து தருமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நோர்வே இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியிருக்கலாம் என சந்தேகம்!

நோர்வே, இறுதி யுத்தத்தின்போது இலங்கைக்கு ஆயுதங்களை இரகசிய மாக விற்பனை செய்துள்ளது என்று சந்தேகிக்கப்படுகிறது.நோர்வேயை தள மாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளில் ஒன் றான நோர்வேயியன் சேர்ச் எயிட் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே, இலங்கைக்கு நோர்வே இரகசியமான முறையில் ஆயுதங்களை விநியோகித்து உள் ளது என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வே அமெரிக்காவுக்கு ஏராளமான ஆயுதங்களை விநியோகித்து உள்ளது. நோர்வேயின் ஆயுதங்களின் உதவியுடன் ஈராக்குடனான அமெரிக்காவின் யுத்தத்தில் 200 ஈராக்கியர்கள் குறைந்தது கொல்லப் பட்டிருக்கிறார்கள் என இம் மனிதாபிமான அமைப்பின் செயலாளர் அற்லி சொமர்பில்ட் மேற்படி அறிக்கையில் தெரிவித்து உள்ளார். அமெரிக்க இராணுவத்தினர்தான் நோர்வேயின் அதிகளவிலான வாடிக்கையாளர் என்று தெரிவித்துள்ள அவர், இலங்கை சூடான், கொங்கோ ஆகிய நாடுகளுக்கும் நோர்வே ஆயுதங்களை விற்பனை செய்துள் ளது என்றும் கூறினார்.
நோர்வே ஆயுத விற்பனை மூலமாக பெரும் தொகை பணத்தை உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் சம்பாதிக்கின்றது .என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளை எக்காலத்திலும் அழிக்கமுடியாது!-வைக்கோ.

விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்த விசாரணையை பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் நடத்தி வருகிறது. சென்னையில் நேற்று நடந்த இந்த விசாரணையில் வைகோ, பழ.நெடுமாறன், சுப்பிரமணியசாமி ஆகியோர் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில், சிவகங்கை மாவட்ட கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், கும்பகோணம் டிஎஸ்பி இளங்கோவன், தூத்துக்குடி கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சென்னை துணைக் கண்காணிப்பாளர் முகமது அஸ்ரப், திண்டுக்கல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் ஆஜராயினர்.
அவர்களை வைகோ குறுக்கு விசாரணை செய்தார்.
இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனிடம், வைகோ,
"சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் பிரிவு 10(ஏ) (1)இன் கீழ் யார் மீதாவது வழக்கு பதிவு செய்தீர்களா?"
சந்திரசேகரன்,
"எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை"
நீதிபதி,
“விடுதலைப் புலிகள் அமைப்பு இருக்கிறதா, அழிக்கப்பட்டு விட்டதா?" என்று கேட்டார்.
அதற்கு வைகோ,
"அவர்களை எக்காலத்திலும் முற்றிலும் அழிக்க முடியாது, அவர்களின் லட்சியத்தை அவர்கள் வெல்வார்கள். இந்தியாவில் அவர்களின் அமைப்பு இல்லை." என்றார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதி, அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் முதலாந்திகதி புதுடில்லியில் நடைபெறும் என்று தெரிவித்து, விசாரணையை ஒத்தி வைத்தார்.
விசாரணையின்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சிவநேசன் என்பவர், தமது கருத்தையும் கேட்க வேண்டும் என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான தீர்ப்பும் ஒத்தி வைக்கப்பட்டது.

28 அக்டோபர் 2010

ராஜீவ் காந்தி கொலை: அன்றே எழுதப்பட்ட ஒரு தீர்க்க தரிசனம்?

போபால் விஷவாயுக் கசிவு: நாம் அனைவரும் அறிந்த விடையம். அறியாத விடையங்களும் நிறையவே உள்ளது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகன், மற்றும் ராஜீவ் காந்தியின் கூட்டுச் சதியே இந்த போபால் விஷவாயு தாக்கிய பல சம்பவங்களை மறைத்தது என்றால் ஆச்சரியமாக இல்லையா. இந்தியாவில் போபால் என்ற இடத்தில் யூனியன் காபைட் என்ற அமெரிக்க நிறுவனம் பூச்சிக்கொல்லி மருந்து ஆலை ஒன்றை நிறுவியிருந்தது. நடுத்தர வர்க்க மக்கள் என்றாலும் அக் கிராமத்தில் சிறுபிள்ளைகள், வயோதிபர்கள் என அனைவரும் தமது வீடுகளில் உறங்கிக்கொண்டு இருந்தனர். அன்று டிசம்பர் 3ம் திகதி 1984, யூனியன் காபைட் தொழிற்சாலை கொள்கலனில் இருந்து திடீரென நச்சுவாயு கசிந்தது. அதனால் பலர் தூக்கத்திலேயே மூச்சுத் திணறி இறந்துபோனார்கள்.
தொழிற்சாலையில் இருந்து மீத்தைல் ஐசோ சயனேட் எனும் நச்சு வாயு கசிந்ததில் 2,259 பேர் ஸ்தலத்திலேயே இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8௦௦ பேர் இறந்தனர். ஆகமொத்தத்தில் 3,059 பேர் அல்லது அதற்கும் கூடுதலான அப்பாவிப் பொதுமக்கள் இறந்தனர் என்பதே உண்மை. அந்த நேரத்தில், நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக தாம் சுற்றுப்பயணத்தில் இருந்ததாக ராஜீவ் காந்தி தெரிவித்தார். ஆனால் இன்றுவரை அவர் மகளோ, புதல்வரோ, இல்லை அம்மையார் சோனியா காந்தியோ இது குறித்து அதிகம் பேசியது கிடையாது. அப்போது யூனியன் காபைட் உரிமையாளராக வாரன் ஆண்டர்சன் என்ற அமெரிக்கர் இருந்தார்.
வாரன் ஆண்டர்சன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இச் சம்பவம் நடந்த சில நாட்களில் அவர் இந்தியா வந்திருந்தார். ஆத்திரமடைந்த மக்கள் அவரை சூழ்ந்துகொள்ள, அவருக்கு பாதுகாப்பு வழங்கி தனி விமானத்தில் டெல்லி கூட்டிச் சென்றது ராஜீவ் அரசு. அங்கு அவருக்கு விருந்துபசாரம் ஒன்றையும் கொடுத்து பின்னர் பத்திரமாக நீயூயோர்க் அனுப்பி வைத்ததும் ராஜீவ் அரசுதான். அவர் கைதுசெய்யப்படவில்லை, அவர் மீது இருந்த குற்றச்சாட்டிற்கு அவர் விசாரிக்கப்படவில்லை. மாறாக தப்பிச்செல்ல உதவியதும் ராஜீவ் அரசாங்கமே !
போபால் ஆட்கொல்லி ஆலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யத் தவறியவர், இல்லையேல் லாபம் ஈட்டும் நோக்கில் குறைந்த பாதுகாப்பு கருவிகளோடு நச்சுவாயுக் கொள்கலன்களை கையாண்டார் என்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது இருக்கிறது. இதைச் செய்தது யார்? இதற்கு யார் பொறுப்பு? கட்டபொம்மனின் வாரிசுகள் தமது மூதாதையரின் செயலுக்கு உரிமை பாராட்டிக் கொள்ள முடியும் அதில் ஒரு ஞாயம் இருக்கிறது ! ஆனால் எட்டப்பனின் சந்ததியினர் அவனது காரியத்துக்கு பரம்பரை உரிமை பாராட்டிக் கொள்ளமுடியுமா ? அந்த வெட்கக்கேடான செயலே சோனியா விடையத்தில் தற்போதும் நடக்கிறது.
ஆண்டர்சன் தப்பிப் போனதற்கு தாம் காரணமில்லை என்று கை விரிக்கிறார் ராஜீவ், போதாக்குறைக்கு தனக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என அடியோடு மறுக்கிறார். வாரன் ஆண்டர்சனின் விவகாரத்தை அன்று புதுதில்லியில் கையாண்டவர்கள் இரண்டு அதிகாரிகள்: ஒருவர் ராஜீவ்காந்தி அரசில் பொறுப்பேற்றிருந்த வெளியுறவு அமைச்சகச் செயலாளர் ரஸ்கோத்ரா. மற்றவர் ராஜீவ்காந்தியின் தனிச் சிறப்புச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டர். “ஆண்டர்சன் இந்தியா வரலாம், வந்தால் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்படுவார் என்று அமெரிக்கத் துணைத் தூதர் மூலம் உறுதியளிக்கப்பட்டதாம் அப்போது. அவ்வாறே நடந்தது. நடப்பவை பற்றி ராஜீவ்காந்திக்கு சொல்லப்பட்டது. அவர் மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை” என்கிறார் ரஸ்கோத்ரா.
இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் இந்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துப் பேசித்தான் எல்லாம் முடிவு செய்யப்பட்டன, அக்கூட்டத்தில் ராஜீவும் கலந்து கொண்டார் என்கிறார், அவரின் தனிச் சிறப்புச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டர். ஆக மொத்தத்தில் இவர்கள் இருவருமே ராஜீவுக்கு இவ்விடயம் தெரியும் என்பதை பகிரங்கமாக ஒப்புகொள்கின்றனர்.
“போபால் சம்பந்தமாக அரசின் நடவடிக்கைகள் குறித்து ஆதாரங்கள் எதுவும் அரசிடம் இல்லை. ஆண்டர்சன் வந்து போனதாகக் கூட அரசு ஆவணங்களில் ஆதாரம் இல்லை. அக்காலத்திய பத்திரிக்கைச் செய்திகளை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். அப்போதைய இந்து நாளேட்டின் செய்திப்படி, ஆண்டர்சன் நாட்டை விட்டுப் போன பிறகுதான் நடந்தவை ராஜீவுக்குத் தெரிந்தன” என்றார், பாசிச புளுகுணி சிதம்பரம். ஆண்டர்சன் வெளியேறுவதற்கு முன்பாக ராஜீவுக்கு சொல்லப்பட்டது என்றுதான் அக்காலத்திய இந்து நாளேடு செய்தி கூறியது. இதை இந்து நாளேடு செய்தியாளரே ஆதாரத்துடன் கேட்டபோது, அது இந்து நாளேட்டின் கருத்து என்று மீண்டும் புளுகி விட்டு ஓடிப்போனார் சிதம்பரம்.
ஆக, ஆண்டர்சன் வருகை முதல் பாதுகாப்பாக நாடு திரும்பியவரை எல்லாம் ராஜீவுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது. இதற்கு இந்து நாளேடு செய்தி, ரஸ்கோத்ரா, அலெக்ஸாண்டர், அர்ஜுன் சிங் ஆகிய சாட்சியங்கள் உள்ளன. இதற்கும் மேலாக, ராஜீவ் அரசாங்கம்தான் ஆண்டர்சனை அனுப்பி வைக்கும் முடிவு செய்ததாக சி.ஐ.ஏ. (CIA) ஆவணமும் ஆண்டர்சனைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அன்றைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ராஜீவிடம் தொலைபேசியில் வலியுறுத்தினார் என்ற ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.
3000 யிரத்துக்கும் அதிகமான பொது மக்களைக் கொனண்ற கொலையாளிக்கு உதவியது இந்திய பீனல் கோட் சட்டப்படி மாபெரும் தவறாகும். குற்றவாளிக்கு உடந்தையாக இருப்பதும் ஏன் குற்றவாளியை மறைத்து வைத்திருப்பதும் கூட கடுமையான குற்றமே. இவ் வகையில் வாரன் அன்டர்சனை பாதுகாத்து நாட்டை விட்டு தப்பியோட உதவிய ராஜீவ் காந்தியும் ஒரு கொலைக் குற்றவாளியே ! அவர் முறைப்படி நீதி மன்றில் நிறுத்தப்பட்டிருந்தால் மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கும், ஆனால் அவர் ஆட்சிபீடத்தில் இருந்தால் தப்பித்துக் கொண்டார், தெய்வம் நின்றுகொல்லும் என்பார்கள் ! அவர் உயிர் பறிக்கப்பட்டது. இதற்காக வருந்துவோர் முதலில் இந்தியாவில் இறந்த 3000 உயிர்களுக்கு பதில் கூறட்டும். ஈழத்தில் இந்திய அமைதிகாக்கும் படையால் இறந்த மக்களுக்கு முதலில் பதில் சொல்லட்டும்.
இதோ இங்கு இணைத்திருக்கிறோமே ஒரு புகைப்படம், இது இந்திய இராணுவத்தின் அட்டூழியப் படம். ஈழத்தில் இன்னும் சில இடங்களில் குர்க்கா இனத்திற்கும் தமிழச்சிகளுக்கும் பிறந்த சீனர் போன்ற தோற்றமுடைய பிள்ளைகள் இருப்பதை அரிதாகக் காணலாம், தற்போதுதான் தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் வளர்ந்துவிட்டதே, மரபணுப் பரிசோதனை மூலம் சொல்லிவிடலாம், இந்திய குர்க்காப் படையினரால் கற்பழிக்கப்பட்டு பிறந்த குழந்தைகள் யார் என்று. இத்தனை கொடுமைகளைப் புரிந்த ராஜீவ் என்னும் கொடுங்கோலன் இறப்பு என்பது தமிழரைப் பொறுத்தவரை ஏன் இந்தியர்களைக் பொறுத்தவரை கூட ஒரு விடிவு காலம் என்றே கூறவேண்டும்.
அதிர்வின் ஆசிரியபீடம்.


நன்றி:அதிர்வு இணையம்.

27 அக்டோபர் 2010

மணியம் தோட்டத்திலிருந்து தமிழர்களை விரட்டியது சிங்களப்படை!

யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியான மணியம் தோட்டத்திலுள்ள வசந்தபுரம் என்ற கிராமத்தில் மீள்குடியேறிய மக்களை சிங்களப்படையினர் துரத்தியுள்ளதாகச் செய்திகள் கிடைத்துள்ளன. 1995 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து 15 ஆண்டுகளின் பின்னர் தமது சொந்தக் கிராமத்தில் குடியேறிய 50 க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பத்தினரை திங்கட்கிழமை இரவு படைகள் துரத்தியுள்ளது. இந்த 50 குடும்பத்திலும் 200 தொடக்கம் 250 பேர் வரையானவர்கள் அடங்குகின்றனர். இவர்கள் மீண்டும் தமக்குரிய வீடுகளை இழந்து பரிதவிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
யாழ்ப்பாணத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து சென்ற சிங்களக் குடும்பங்கள் சில மீண்டும் இங்குவந்து யாழ். புகையிரத நிலையத்தில் முகாமிட்டுள்ளமை தெரிந்ததே. மணியம் தோட்டம் என்பது தமது சொந்த இடமென இவர்கள் கோரியுள்ளதோடு, தம்மை அங்கு மீளக்குடியேற்ற வேண்டும் எனவும் கோரியுள்ள நிலையிலேயே தமிழ்க் குடும்பங்களை சிங்களப்படைகள் இவ்வாறு துரத்தியுள்ளது.
மணியம் தோட்டத்தில் 1995 ஆம் ஆண்டில் தமது முகாமை அமைத்திருந்த படையினர் தற்போது அங்கு மீளக்குடியமர வந்துள்ள சிங்களவர்களுக்கு ஊக்கம் கொடுத்து, முகாமைச் சூழவுள்ள நிலத்தில் மீள்குடியமர உதவுவதாகவும்கூட செய்திகள் கூறுகின்றன.

சந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: 30 ஆண்டுகால கடூழியச் சிறைத் தண்டனை!

1998 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா குமாரதுங்கவைக் கொலை செய்வதற்காக குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த சக்திவேல் இலங்கேஸ்வரனுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி குண்டுத்தாக்குதலில் 28 பேர் பலியானதோடு சந்திரிக்காவுக்கு ஒரு கண் பார்வை இழந்ததோடு, பலத்த காயத்துக்கும் உள்ளாகியிருந்தார். இதுதவிர மேலும் 80 பேர் காயமடைந்திருந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பையே இன்று கொழும்பு மேல் நீதிமன்று வழங்கியுள்ளது.
இத்தாக்குதலை நடத்தியபோது இலங்கேஸ்வரனுக்கு 19 வயது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவரே இக்குண்டுத் தாக்குதலுக்கு வேண்டிய வெடிகுண்டுகளை கொழும்புக்குக் கொண்டுவந்துள்ளார் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இக்குற்றத்தை இலங்கேஸ்வரன் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே அவருக்கு 30 ஆண்டுகால கடூழியச் சிறைத்தண்டனையான இன்றைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

26 அக்டோபர் 2010

காணாமல் போன மாணவன் கனகாம்பிகைக் குளத்தில் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை காணாமல்போன மாணவன் ஒருவர் நேற்று காலை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலத்தின் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருப்பதுடன் வாய்ப் பகுதியில் இரத்தக் கறைகள் காணப்படுவதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் காணாமல் போயிருந்த கனகாம்பிகைகுளம் அ.த.க. பாடசாலை மாணவனான காந்தலிங்கம் சங்கீதன்(வயது 9)என்ற மாணவன் நேற்று குளத் திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் தனியார் கல்வி நிறுவ னத்திற்கு சென்ற பிரஸ்தாப மாணவன், அங்கு வகுப்புகள் இடம்பெறாத நிலையில் வீட்டுக் குத் திரும்பியுள்ளார்.
அவ்வேளை சைக்கிளில் வந்த நபர் ஒருவர் “நீதானே காந்தலிங்கத்தின் மகன் ” என தெரிவித்து அழைத்துச் சென்றதாக சங்கீதனுடன் சென்ற சக மாணவர்கள் தெரி வித்ததாக உறவினர்கள் கூறினர். மாணவனைக் காணாத நிலையில் நேற் றுமுன்தினம் இரவே கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் அவனது பெற்றோர் முறையிட் டுள்ளனர்.இந்நிலையில் நேற்றுக்காலை சிறுவனின் உடல் கனகாம்பிகைக் குளத்தில் இருந்து மீட் கப்பட்டது. மீட்கப்பட்ட சடலத்தின் கழுத்துப் பகுதியில் காயங்கள் காணப்படுவதாகவும், வாயில் இரத் தக் கறைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காணாமல்போன சிறுவன் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டமை குறித்த தகவல் காட்டுத் தீபோல ஊர் மக்களிடையே பரவியதும் அந்தப் பிரதேசத்து மக்களிடையே பெரும் பதற்றமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.பாடசாலைக்குச் சென்றுள்ள தமது பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அச்சமடைந்து பாடசாலைக்குச் சென்று அவர் களைப் பாதுகாப்பாக வீடுகளுக்கு கூட்டி வருவதற்கு முனைந்துள்ளார்கள்.
சம்பவம் குறித்து அந்தப்பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராமசேவை அதிகாரி மூலம் பொலிஸாருக்கும்,இராணுவத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவம் நடை பெற்ற இடத்துக்குச் சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான் சிவகுமார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேதப் பரிசோ தனைக்காக சடலத்தை வவுனியா வைத்திய சாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்ட மாணவன் பாடகர் சாந்தனின் சகோதரனின் மகன் என தெரிவிக்கப்பட்டது.

கண்ணகி குடியிருப்பில் கே.பி க்கு கலை வந்துள்ளது!

மாவீரர் நாள் நெருங்கி வரும் நிலையில், கடந்த வாரம் வன்னி சென்ற கே.பி கண்ணகி குடியிருப்புக்குச் சென்று அங்குள்ள பிள்ளைகளுக்கு பாடசாலைப் பைகளை வழங்கி ஒரு கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். மாவீரர்களின் பிள்ளைகளை தாம் பாதுகாக்கவேண்டும் எனவும், அவர்கள் தேசத்தை காக்க போராடி மாண்ட வீரர்களின் பிள்ளைகள் எனவும் கே.பி தெரிவித்துள்ளார். தாய் மண்ணுக்காகப் போராடிய மாவீர்ர்கள் கல்லறைகள் உடைக்கப்படும்போதும், மாவீரர் துயிலும் இல்லங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வீதியோர மண்ணாகப் பயன்படுத்தப்பட்ட போதும் எங்கிருந்தார் இந்த கே.பி ?
போற்றப்படவேண்டிய மாவீரர்களின் எலும்புகள் எல்லாம் வன்னி வீதிகளில் போட்டு, உலகில் எந்த ஒரு அரசும் செய்யத் துணியாத கேவலமான செயலை இலங்கை அரசு செய்யும்போது, கோத்தபாயவுடன் சல்லாபித்துக்கொண்டிருந்த கே.பிக்கு இப்போது எங்கிருந்து வந்தது இந்த ஞானம்? மாவீரர் நாள் நெருங்குவதால் அவ்வுரையை தான் ஆற்ற ஆசைப்படுகிறாரா ? இல்லை தன்னை தேசிய தலைவர் போல காட்ட முற்படுகிறாரா?இனியும் ஏமாற தமிழர்கள் என்ன முட்டாள்களா? இவர் கண்துடைப்பு நாடகமும், அதன் பின்னால் உள்ள சூட்சுமத்தையும் அனைத்துத் தமிழர்களும் அறிவார்கள் என்பதில் ஜயமில்லை.

25 அக்டோபர் 2010

சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு பிரான்சில் சிலை திறப்பு விழா!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக செயல்பட்டு, இராணுவத்தினரின் திட்டமிட்ட விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த மாவீரர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸ் நாட்டில் சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை, தமிழ்ச்செல்வன் மறைந்த டிசம்பர் 2ம் தேதி திறக்கப்படுகிறது.
உலக போரியல் விதிமுறைகளுக்கு முரணாக, மாவீரர்களின் கல்லறைகளையும், நினைவு தூபிகளையும் இருந்த இடம்தெரியாது இலங்கை இராணுவம் அழித்துவரும் நிலையில், பிரான்சின் லா கூர்நெவ் நகரில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு சிலை ஒன்றை அமைப்பதற்கு அம்மாநகர சபை அனுமதி வழங்கியுள்ளது.
சு.ப.தமிழ்ச்செல்வனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தன்று இச்சிலை திறந்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக லாகூர்நெவ் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2007ம் ஆண்டு நவம்பர் இரண்டாம் நாள் லா கூர்நெவ் நகரசபை, தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து மிகப் பிரமாண்டமாக தமிழ்க் கிராமம் என்ற நிகழ்வு ஒன்றை நடத்தியது. அதில் பிரான்சில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கொண்டன.
அந்நிகழ்வுக்கு லா கூர்நெவ் நகரசபை எமது சமாதான தூதுவராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனை பிரதம விருந்தினராக அழைத்திருந்தனர். அவ்வேளையில் தாயகத்தில் பிரச்சினை காரணமாக வர முடியாது என்றும், அன்றைய நாளில் தொலைபேசி மூலமாக வாழ்த்துக் கூறுவதாகவும் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அன்றைய நாளே அவர் வீர மரணத்தைத் தழுவிக் கொண்டார். லா கூர்நெவ் நகரசபை தலைவர் அன்றைய நாளில் அவரின் மறைவிற்கு வீரவணக்கத்தை செலுத்தி நிகழ்வுகளை நடத்தினார்.
தற்போது சு.ப.தமிழ்ச்செல்வனின் மூன்றாமாண்டு நினைவு நாள் அன்று அவருக்கான நினைவுச் சிலையினை அமைக்க லா கூர்நெவ் நகரசபை ஏற்கனவே அவரது நினைவாக நடப்பட்டுள்ள மரத்திற்கு அருகில் இடம் ஒதுக்கித் தந்துள்ளது.
லா கூர்நெவ் தமிழ்ச்சங்கமும் Le sens de l’art (la galerie) இணைந்து சு.ப.தமிழ்ச்செல்வனின் சிலையினை அமைத்து வருகின்றனர்.
இதையொட்டி நவம்பர் மாதம் முதலாம் நாள் லா கூர்நெவ் நகர சபை முன்னால் காலை 11 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

செட்டிக்குளம் பகுதியில் பாரிய சிங்களப் படைமுகாம்!

வவுனியா செட்டிகுளம் வதைமுகாம் பகுதியில் ஸ்ரீலங்காப்படையினரால் பாரிய படைமுகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை தற்காலிகமாக தங்கவைக்க வவனியாவில் உள்ள செட்டிகுளம் பகுதியில் பெருமளவான காணிகள் சீர்செய்யப்பட்டு மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டார்கள்.
தற்போது மக்கள் வாழ்விடங்களில் குடியேற்றியுள்ள நிலையில் மக்களை அடைத்துவைத்திருந்த காணியில் குறிப்பாக வலயம் நான்கு பகுதியில் நீர்வளம் கொண்ட இடத்தில் மன்னார் மதவாச்சி முதன்மை வீதிக்கு அருகில் ஸ்ரீலங்காப்படையினர் பாரிய படைத்தளம் ஒன்று அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளுக்குள் மக்களோ ஊடகவியலாளர்களோ செல்ல அனுமதிக்கபடவில்லை என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்குரிய லாண்ட்மாஸ்டர்கள் சிங்களவர்களுக்கு அளிப்பு!

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்கவிருந்த லாண்ட்மாஸ்டர்களைப் பிடுங்கிய அரசு அவற்றைச் சிங்களவர்களுக்குக் கையளித்துள்ளது. மொத்தமாக 470 பேருக்கு லாண்ட்மாஸ்டர்களை வழங்கவிருந்த செஞ்சிலுவைச் சங்கம், வவுனியா மாவட்டத்துக்கென 102 லாண்டமாஸ்டர்களை ஒதுக்கி இருந்தது. இதற்கான பயனாளிகள் பெயரும் செஞ்சிலுவைச் சங்கத்தாலேயே தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்க அதிகாரிகளோ தாம் கூறுபவர்களுக்கு அவற்றை வழங்க வேண்டும் என நிர்ப்பந்தித்ததோடு, அதற்கு மறுப்புத் தெரிவித்தால் ஒருவருக்குமே லாண்ட்மாஸ்டர்களைக் கொடுக்க முடியாதென்றும் நிர்ப்பந்தித்துள்ளனர்.
இந்த நிர்ப்பந்தந்தை அடுத்து, அரச தரப்பினர் தெரிவு செய்த பயனாளிகளுக்கே அவை வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் அனைத்தும் வவுனியா வடக்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்கே முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. அரசின் தலையீட்டை அடுத்து வெலிஓயா மற்றும் வவுனியா தெற்கில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன. இரு இடங்களுக்கும் தலா 25 லாண்ட்மாஸ்டர்கள் வீதம் 50 லாண்ட்மாஸ்டர்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கெலபகஸ்வௌ, ரங் கெத்கம, ஒசுடப்பிட்டிய, அவரந்தலாவ பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கே இவை பகிர்ந்தளிக்கப்பட்டன.
எஞ்சிய 52 லாண்ட்மாஸ்டர்கள் மட்டுமே போரால் பாதிக்கப்பட்ட வவுனியா வடக்கைச் சேர்ந்த தமிழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் வவுனியா கிளை அதிகாரி மேரிஸ் லிமோனார் தேம்பித் தேம்பி அழுததைக் காணக்கூடியதாக இருந்தது.
சிங்களவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீனும் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

24 அக்டோபர் 2010

மாணவர்களைத் தூண்டிவிட்டு அமைதியைக் குலைக்க முயற்சி - கோத்தபாய.

இலங்கையின் ஸ்திரநிலையைக் கெடுக்க முயலும் சில சக்திகள் தற்போது மாணவர்களைத் தூண்டிவிட்டு கலகங்களை ஏற்படுத்துவதாகத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே இத்தீய சக்திகளை மாணவர்கள் அடையாளம் காணவேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களிடையே காணப்படவேண்டிய ஒழுக்கம் இல்லாமல் போய்விட்டது. ருகுணு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடந்ததுபோல துணை வேந்தரைத் தாக்கும் அளவுக்கு இது உள்ளது. மாணவர்களின் பெற்றோர் அவர்களிடம் எதிர்பார்ப்பது இதுவல்ல என அவர் தெரிவித்தார்.
கணிசமான தொகையினர் செலுத்தும் வரிப்பணமே மாணவர்களின் கல்விக்குச் செலவு செய்யப்படுவதாகக் கூறியுள்ள அவர், இப்பணம் நாட்டின் அபிவிருத்திக்கு வலுவளிப்பதாக இருக்க வேண்டும் எனவும் கூறியதோடு, தாம் 8 ஆண்டுகளாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது அங்கு எதுவித பகிடிவதையையோ, வகுப்புகளைப் பகிஸ்கரிப்பதையோ காணவில்லை என்றுள்ளார்.

நுரைச்சோலை மின்நிலையத்தில் தீப்பற்றியுள்ளது!

நுரைச்சோலை அனல் மின்னிலையத்தில் சிறிது நேரத்துக்கு முன்னர் தீப்பற்றியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. கல்பிட்டி கடற்படைத் தளத்தின் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைப்பதில் பாடுபட்டு வருவதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் அத்துல சேனாரத் தெரிவித்தார்.
இதேவேளை, 95 வீதமான தீயைப் படையினர் அணைத்துவிட்டதாகவும், அங்கு எதுவித உயிரிழப்புகளோ சொத்துச் சேதமோ ஏற்படவில்லை என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

23 அக்டோபர் 2010

வருங்கால முதல்வர் எனக் கூறி கே.பி க்கு இராணுவத்தினர் சல்யூட்!

கடந்த ஆண்டு இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு தற்போது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கே.பி இடம் விசாரணைகள் தொடர்வதாக அரசு கூறி வருகின்ற போதிலும், அவரோ சுதந்திரமாக இலங்கையில் சகல பாகங்களுக்கும் சென்று வருகின்றார். அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு குளத்திற்கு அருகில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்ட கே.பி.க்கு இராணுவத்தினர் சல்யூட் அடித்து வரவேற்பளித்துள்ளனர். மேலும், புதுமாத்தளன் பிரதேசத்தில் இராணுவ உயர் அதிகாரியொருவரும் கே.பிக்கு இவ்வாறான வரவேற்பை அளித்துள்ளார்.
புதுமாத்தளன் பிரதேசத்திற்கு 200க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் வரவுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துக்கொடுக்குமாறு புதுமாத்தளன் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரிக்கு மேல் மட்டத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய செயற்பட்ட அந்த இராணுவ அதிகாரி இவர்களுக்கு தேவையான உச்சளவிலான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்த முக்கியஸ்தர்களில் அரசாங்கத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் கே.பி உம் ஒருவராக வந்தார்.
இந்த விஜயத்தின் போது, கே.பியின் பயணப் பொதியை விமானப்படைச் சிப்பாய் ஒருவரே சுமந்து சென்றதையும் காணக்கூடியதாக இருந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, படையினர் மத்தியில் பெரும் அதிருப்தி நிலைமை ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த நிகழ்வில் குமரன் பத்மநாதன் வட மாகாணத்தின் எதிர்கால முதலமைச்சர் என்றே அறிமுகப்படுத்தப்பட்டும் உள்ளார்.

தேசிய தலைவர் தொடர்பாக புதிய பரபரப்பு: காணொளி வெளியானதா?

தமிழீழத் தேசியத் தலைவர் தாடியோடு, தீவுப்பகுதி ஒன்றில் கடற்கரை ஓரமாக நடமாடுவது போன்ற காணொளி ஒன்று வெளியாகியுள்ளதாகவும், மாவீரர் நாழ் நெருங்குவதால் அவர் மாவிரர் தின உரை நிகழ்த்தவிருப்பதாகவும் பெரும் பரபரப்பு ஒன்று தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. ஒரு இணையத்தில் அவை வெளியாகியுள்ளதாக மக்கள் அறிந்து, பல பொதுமக்கள் இன்டர்நெட் கஃபேக்குப் போய் பல தமிழ் இணையங்களை பார்வையிட்டுள்ளனர். அத்தோடு அதுபோன்ற எந்தக் காணொளிகளும் வெளியாகவில்லை எனச் சிலர் கூறியும் உள்ளனர்.
வன்னியில் கடந்தவருடம் மே மாதம் 18ம் திகதி தேசிய தலைவர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் சரத்பொன்சேகாவோ அவர் மே 19ம் திகதி கொல்லப்பட்டார் என முரணான தகவலைவெளியிட்டார். மற்றும் அரச தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்ட உடல் தேசியதலைவரது அல்ல என சில தரப்பினர் வாதிட்டுவருவதும் யாவரும் அறிந்ததே. இதே நேரம் இன்று தமிழ் நாட்டில் உண்டான பரபரப்பால், விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு இன்னும் தமிழ் நாட்டிலும் தமிழர்கள் மத்தியிலும் நிலைத்து நிற்பதை தெள்ளத்தெளிவாக எமக்கு காண்பித்து நிற்கிறது.
"சாட்சிகள் அற்ற போர்" என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் இன்று வெளியிட்ட சில புகைப்படங்களாலேயே, இன்றைய பரபரப்பு தோன்றியதாக அதிர்வு இணையம் அறிகிறது. சாட்சிகள் அற்ற போர் என்ற அமைப்பு சில புதியபடங்களை வெளியிட்டுள்ளது. அதில் ஆனந்தபுரச் சமரில் இறந்த பெண்போராளிகள் உட்பட பலரது உடல்கள் நிர்வாணமான நிலையில் போடப்பட்டுள்ளது தெளிவாகக் காண்பிக்கப்படுகிறது. போரில் இறந்த போராளிகளின் சீருடைகள களைந்து அவர்களை அவமானப்படுத்தும் இலங்கை அரச இராணுவத்தினர் போர்குற்றங்கள் புரிந்திருக்கின்றமை இப் புகைப்படத்தில் நன்கு தெரிவதோடு, இறந்த சில போராளிகளை அடையாளம் காணக்கூடியதாக உள்ளதாகவும் அதிர்வு இணையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இவை ஆனந்த புரச் சமரில், இல்லையேல் புதுமாத்தளான் பிரதேசத்தில் நடைபெற்ற உக்கிரப் போரில் இறந்த போராளிகளாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
எது எவ்வாறு இருப்பினும், பலத்த சந்தேகங்கள் , கேள்விக்குறிகளுக்கு மத்தியில் தேசியத் தலைவர் இருப்புக் குறித்து பலராலும் பேசப்பட்டாலும், அவர் என்ன நினைத்தாரோ அதனை நாம் செய்து முடிப்பதே அவருக்கு தமிழர்கள் கொடுக்கும் பெரும் பரிசாக அமையும், அதுவே எமது நன்றிக்கடனாகவும் இருக்கும். இறப்பு பிறப்பு இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு மாவீரனாகவே நமது தேசியத் தலைவர் பிரபாகரணை தமிழினம் எப்போதும் பார்க்கிறது என்பதற்கு இதைத் தவிர சான்றுகள் எதையும் சொல்லிவிடமுடியாது.

22 அக்டோபர் 2010

சீமான் வழக்கு விசாரணைக்கு வந்தால் மீண்டும் மீண்டும் ஒத்திவைபோம்!

செந்தமிழன் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு பல முறை ஒத்திவைத்த பின்பு இன்று விசாரணைக்கு வந்தது, இன்று அரசு தரப்பு வழக்கறிஞர் ராமன் வராத காரணத்தை கூறி இன்னொரு நாளில் வழக்கை ஒத்திவைக்க திட்டமிட்டு இருந்தனர்
இந் நிலையில் சீமான் தரப்பு மூத்த வழக்கறிஞர் ந.நடராசன் 29.10.10 அன்று வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கலாம் என்று சொல்ல அதை அரசு வழக்கறிஞர் ஒத்துக்கொண்ட பிறகு, நீதியரசர் சொக்கலிங்கம், சத்யநாராயண இருவரும் “நீங்கள் இருவரும் ஒத்துக்கொண்டால் கூட இந்த தேதியை நீதி மன்றம் ஒத்துகொள்ளாது, அதே தேதியில் விசாரனைக்கு வந்தாலும் நாங்கள் மீண்டும் மீண்டும் இவ்வழக்கை ஒத்திவைப்போம்” (“if though partys is ready, court is not ready on that date also i will adjurn the case again and again “) என்று பகிரங்கமாக நீதிபதிகள் கூறினார்கள்.
இதன் மூலமாக தமிழக அரசு சீமானை வெளியே விட தயாராக இல்லை என்பதும், வருகின்ற தேர்தலில் கூட்டணியை நிர்ணயிக்கும் கருவியாகவே தமிழக அரசு செந்தமிழன் சீமானை கையாள்கிறது என்பதும் தெளிவாகிறது, சீமானை தேசிய பாதுக்காப்பு சிறையில் அடைத்து காங்கிரஸ் அரசோடு தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது இந்த தமிழின விரோத கருணா அரசு, இதன் மூலன் செந்தமிழன் சீமான் மீது தொடரப்பட்ட தேசிய பாதுக்காப்பு சட்டம் தேர்தல் சதுரங்க ஆட்டத்திற்காக புனைக்க பட்ட பொய் வழக்கு என்பதும், கருணா தலைமையிலான தமிழக அரசின் நயவஞ்சக தன்மையும் தமிழின துரோகமும் மேலும் ஒரு முறை தெள்ளத்தெளிவாககிறது.

சந்திரிக்கா கொலை முயற்சி- குற்றத்தை ஏற்றுக்கொண்டவருக்கான தீர்ப்பு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவைக் கொலை செய்வதற்காக தாம் வெடிகுண்டொன்றை வழங்கியதாக விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளாராம். இந்நபருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முடிந்துள்ள நிலையில் வருகின்ற 27 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
குறித்த நபர் தன்மீது சாட்டப்பட்ட குற்றத்தை முன்னர் ஏற்கவில்லை என்றும் ஆனால் பின்னர் குற்றத்தை ஏற்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது. எனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள பச்சைவேல் இலங்கேஸ்வரன் எனப்படும் இந்நபருக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி வரவேவா வருகின்ற புதன்கிழமை தீர்ப்புக் கூறுகிறார்.
1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சந்திரிக்கா மீது வெடிகுண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சந்திரிக்காவின் ஒரு கண் பார்வை இழந்தது. இவ்வெடிச் சம்பவத்துடன் தொடர்பான ஒரு பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனராம். இச்சம்பவத்தில் 21 பேர் கொல்லப்பட்டு 80 பேர் காயமடைந்தனர். இதன் விசாரணை 2001 ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருகின்றது.

போர்க்குற்ற புகைப்பட விவகாரத்தை அரசு எதிர்கொள்ளத் தயார் - கெஹெலிய.

குறிப்பிட்ட சில நிறுவனங்களும் அரசு சாரா நிறுவனங்களும் உலகளவில் இலங்கைக்கு உள்ள நற்பெயரைக் களங்கப்படுத்தவெனப் பாடுபட்டு வருகின்றன. இவற்றை அரசாங்கமும் தனது வல்லுநர்களைக் கொண்டு முறியடித்து வருகின்றபோதிலும், அது தொடர்ந்துகொண்டே வருகின்றது என்று கூறியுள்ளார் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல. இதன் ஒரு கட்டமாக தற்போது வெளியாகியுள்ள புகைப்பட விவகாரத்தையும் அரசாங்கம் துணிவாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது சாட்சியங்களைப் பதிவு செய்ததும் அந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்வறிக்கை அரசாங்கம் கொடுக்கும் உத்தியோகபூர்வ அறிக்கையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவறிக்கையில் நாட்டின் பாதுகாப்புக்கென அதிகூடிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளமை குறித்தும் பலர் அரசுக்கு எதிராக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். போர் முடிந்த பின்னரும் பாதுகாப்புச் செலவீனம் அதிகரிக்கிறது என அவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் பாவனைக்கு வேண்டிய சில ஆயுதங்களை அரசின் நட்பு நாடுகள் கொடுத்துதவின.
தொலைபேசி மூலம் அறிவிக்கவும் அவர்கள் அந்த ஆயுதங்களை எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவற்றுக்கு அப்போது கட்டணம் செலுத்தப்படவில்லை என்பதால், இனித்தான் அக்கட்டணங்களைச் செலுத்த வேண்டி உள்ளது. எனவேதான் பாதுகாப்புச் செலவீனம் அதிகரிக்கிறது என்று கெஹெலிய பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

21 அக்டோபர் 2010

இலங்கையில் இருந்து வந்த மர்ம நபர்கள் யார்?புலனாய்வுத்துறை விசாரணை!

ராமேஸ்வரம் வடகாடு கடல் பகுதியில் இலங்கை படகில் சென்றிறங்கிய, மர்ம நபர்கள் குறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர். ராமேஸ்வரம் கடல் பகுதியில் இலங்கை படகுகள் கரை ஒதுங்குவதும், படகில் வந்தவர்கள் தலைமறைவாவதும் வழக்கமாக உள்ளது.

கடந்த காலங்களில் தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், சேரான்கோட்டை, வடகாடு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய இலங்கை படகுகளை, கடற்படை, சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸார் கைப்பற்றினாலும், படகில் வந்தவர்கள் மட்டும் அகப்படுவதில்லை.
நேற்று முன்தினம் நள்ளிரவில், வடகாடு கடற்கரை பகுதியில், இலங்கை மன்னாரை சேர்ந்த பைபர் கிளாஸ் படகு ஒன்று கரை ஒதுங்கியது. 22 அடி நீளம் கொண்ட படகில் 15 குதிரை சக்தி கொண்ட சுசிகி இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தது.
படகில் வந்தவர்கள் எங்கே சென்றார்கள் எனத் தெரியவில்லை. இலங்கை மன்னார் மாவட்ட மீன்பிடி பதிவு எண் இருந்த போதும், படகில் எவரும் இருக்கவில்லை. படகில் வந்தவர்கள் மீனவர்களாக இருந்தால், தாமாகவே பொலிஸ் ஸ்டேஷன் சென்றிருப்பார்கள்.
படகில் வந்து தலைமறைவானவர்கள் இலங்கையைச் சேர்ந்த கடத்தல் நபர்களா, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது தெரியவில்லை.
இதனிடையே, நேற்று முன்தினம் தனுஷ்கோடி கடல் பகுதியில், இலங்கை படகில் தனியாக ஒருவர் பயணம் செய்து வந்ததை, ஹெலிகாப்டரில் ரோந்து சென்ற கடலோர காவல் படையினர் பார்த்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அரசு வெளியிட்ட புகைப்படம் துவாரகாவினுடையதல்ல!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் புதல்வி துவாரகா கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்டார் என்று அரச ஊடகங்கள் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி சில காலத்துக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தன. அச்செய்திக்கு ஆதரவாக துவாரகாவின் உடல் என்று புகைப்பட, வீடியோ ஆதாரங்களையும் அவ்வூடகங்கள் வெளிப்படுத்தி இருந்தன. ஆனால் அவை துவாரகாவினுடையது அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனால் அவ்வுடல் துவாரகாவினுடையது அல்ல என்றும் புலிகளின் ஊடகப் பிரிவான நிதர்சனம், புலிகளின் வானொலியான புலிகளின் குரல் ஆகியவற்றில் அறிவிப் பாளராக கடமையாற்றிய இசைப்பிரியா (வயது 28) என்பவர் உடையது என்றும் பின்னர் தகவல் கசிந்தது.
அத்துடன் துவாரகா செத்துவிட்டார் என்கிற செய்தியும் அடங்கிப்போய் விட்டது. இந்நிலையில் பிரித்தானிய தமிழர் பேரவையால் யுத்தக்குற்ற ஆதாரங்கள் என்று புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படங்களில் ஒன்றில் இசைப் பிரியாவின் சடலத்தை அடையாளம் காணமுடிகின்றது. சரண் அடைந்திருந்த தமிழர்களில் ஒரு தொகையினர் கடந்த வருடம் மே 18ஆம் திகதி காலை இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களில் ஒரு சிலருடைய சடலங்களே இவை என்றும் அடித்துக் கூறுகிறது பிரித்தானிய தமிழர் பேரவை.
ஆனால் பேரவையின் இப் புகைப்பட ஆதாரங்கள் பொய்யானவை என்றும் போலியானவை என்றும் ஒரேயடியாக மறுத்திருக்கின்றார் பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்.

அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் - பிரித்தானியா வலியுறுத்தல்!

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என, பிரித்தானிய அரசாங்கம் சிறீலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தி இருக்கின்றது.
பிரித்தானிய வெளியுறவுச் செயலர் (அமைச்சர்) வில்லியம் ஹேக்கை, சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று (புதன்கிழமை) சந்தித்தபோது நேரடியாக இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டது.
இலங்கையில் ஏற்படுத்தப்படும் நிரந்தர அரசியல் தீர்வு அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டும் எனவும் ஹேக் சுட்டிக்காட்டினார்.
சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள ‘கற்றுக்கொண்ட அனுபவங்களும், மீளக் கட்டியமைத்தலுக்கான ஆணைக்குழு’ பற்றி இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்ட அதேவேளை, இந்த ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் வில்லியம் ஹேக் கேட்டுக்கொண்டார்.
போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், அனைத்துலக சட்ட மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை சிறீலங்கா அரசாங்கம் நியாயபூர்வமாகவும், சுயாதீனமாகவும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருக்கின்றார்.
அத்துடன், சனநாயம், மனித உரிமைகள், மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பாக சிறீலங்கா அரசாங்கம் தெளிவான கடப்பாட்டைக் கொண்டிருப்பதாக, தாம் நம்பவதாகவும் ஹேக் இந்த சந்திப்பில் கூறியிருக்கின்றார்.
இவை மட்டுமன்றி இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் தொடர்பாகவும் பிரித்தானிய – சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடி இருப்பதாக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 அக்டோபர் 2010

இந்த விசாரணை நம்பிக்கை தருகிறது!

விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை ரத்து செய்வதா அல்லது நீடிப்பதா என்பதை விசாரிக்கும் மத்திய தீர்ப்பாயத்தின் கூட்டம் ஊட்டியில் இன்று நடந்தது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ததற்கு போதிய காரணங்கள் இருகின்றனவா, இல்லையா என்பதை விசாரிப்பதற்காக சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பாயத்தின் கூட்டம் ஊட்டியில் இன்று நடந்தது.
ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் காலை 11 மணிக்கு நடந்த இந்த கூட்டத்தில் தீர்ப்பாயத்தின் தலைவர் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் 13 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த அமர்வின்போது நேரில் ஆஜரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் இந்த விவகாரத்தில் தீர்ப்பாயத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மத்திய உள்துறை அதிகாரி பி.கே மிஸ்ராவிடம் குறுக்கு விசாரணை நடந்தது.
பி.கே. மிஸ்ரா, ‘’விடுதலைப்புலிகள் ஆதரவு எல்லா மாநிலங்களிலும் பரவியிருக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன. இந்த அமைப்பின் மூலம் பல கிளர்ச்சிகள் நடக்கின்றன. எனவேதான் தடை விதித்திருக்கிறோம்.
அமெரிக்கா,கனடா,ஐரோப்பா போன்ற நாடுகளில் இந்த இயக்கத்திற்கு தடை உள்ளது என்றா.
உடனே வைகோ, அதற்கு ஆதாரம் இருக்குதா என்று கேட்டார்.
தடை இல்லை என்பதற்கு உங்களுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டார்.
ஊடகங்கள்தான் அதற்கு ஆதாரம் என்று சொன்னார் வைகோ.
பின்னர் மத்திய தீர்ப்பாயத்தின் மறு கூட்டம் சென்னையில் வரும் 28ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘’இந்த விசாரணை நம்பிக்கை தருகிறது. கடைசிவரை போராடுவோம். விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் அதிகம் பாதிக்கப்பட்டவர் நெடுமாறன் அய்யாதான். கடைசிவரைபோராடி தடையை நீக்குவோம்’’என்று தெரிவித்தார்.

புத்தளம் கடற்கரையில் அரை நிர்வாண பெண்ணின் சடலம்!

புத்தளம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபடுவா கடற்கரையில் இன்று பின்னேரம் பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட இச்சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு அழுகிக் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். குறித்த சடலத்தில் இருந்த உள்ளாடை மற்றும் நீண்ட பாவாடையை வைத்தே அது பெண்ணொருவரின் சடலம் என இனங்காணப்பட்டுள்ளது.
இறந்த பெண்மணி கணிசமான அளவு நேரத்துக்குக் கடலில் இருந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் பல சடலங்கள் இக்கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் - ஆதாரங்கள் வெளிவருகின்றன!


வன்னியில் இடம்பெற்ற போரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களை சிறீலங்கா இராணுவம் கைகளை கட்டிய பின்னர் கொண்டு செல்லும் காட்சிகளையும், பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.
சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இந்த போர்க்குற்றங்கள் தொடர்பான புகைப்படங்களை நேற்று (19) சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது வெளியிடப்பட்டுள்ளது.
இதனை போல பெருமளவான புகைப்படங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவற்றில் கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களும், அதனை மேற்கொண்ட படை அதிகாரிகளும் தொளிவாக தெரிவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளர்.
இதனிடையே, இந்த புகைப்படங்கள் சிறீலங்கா அரசின் மிருகத்தனமான மனி உரிமை மீறல்களை காட்டுவதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ் ஏஜ இமானுவேல் அடிகள் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க கையெழுத்துப் போராட்டம்!

மேலும் இரு ஆண்டுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்வதாக அண்மையில் இந்திய அரசு அறிவித்திருந்தது. இத்தடையை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தும் மகஜரின் கையெழுத்துப் பெறும் போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்துள்ளது. தமிழ்நாடு அரசியல் செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி கூட்டத்தை சினிமா இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
50 மீற்றர் நீளமான பதாகையில் எழுதப்பட்டிருந்த மேற்படி மகஜரில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கையெழுத்திட்டனர். தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு சமூக அமைப்புக்களும் இதில் கலந்துகொண்டன. நிகழ்வில் நூற்றுக்கணக்கான கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் தமிழீழ ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

மாங்குளம் ஏ9 சாலையில் நிலக்கண்ணிவெடி!

மாங்குளம் ஏ9 சாலையில் நேற்றையதினம் ஒரு நிலக்கண்ணிவெடி மீட்கப்பட்டுள்ளது. மல்லாவிக்கும் மாங்குளம் சந்திக்கும் இடைப்பட்ட ஏ9 சாலையிலேயே இது மீட்கப்பட்டது. வெடிக்காதிருந்த இந்த நிலக்கண்ணிவெடி கண்டெடுக்கப்பட்டமையால் நேற்று இரவு 7 மணி முதல் 8.30 வரை அப்பகுதியில் இலங்கை இராணுவத்தினர் போக்குவரத்தைத் தடை செய்திருந்தனர். கண்டெடுக்கப்பட்ட கண்ணிவெடியை இலங்கை இராணுவத்தினர் வெடிக்கச் செய்த பின்னர் வழமைபோல போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
நேற்றையதினம் இலங்கை இராணுவத்தின் வவுனியா ஜோசப் முகாமில் நடந்த வடமாகாண அபிவிருத்திக் கூட்டத்தில் பங்கெடுப்பதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்திருந்தார். இந்நிலையில் இந்தக் கண்ணிவெடி கண்டெடுக்கப்பட்டமையால் வவுனியாவில் பரபரப்பாகக் காணப்பட்டது.

19 அக்டோபர் 2010

சரத் சிறையிலும் நாம் வெளியிலும் அரசியல் கைதிகளாக இருக்கிறோம்!-ரணில்.

எவருடைய வேண்டுகோளுமின்றி ஜனாதிபதி தனது விருப்பத்தின் பேரில் மட்டும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைத் தண்டனையில் இருந்து விடுதலை செய்ய முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கல்கிஸை, ஸ்ரீ ரம்ய விகாரையில் சரத் பொன்சேகாவின் விடுதலையின் நிமித்தம் சனிக்கிழமை நடைபெற்ற மத வழிபாடுகளின் இறுதியில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில், “சரத் பொன்சேகா எந்தவொரு சட்டத்தையும் மீறவில்லை என்றபோதும் அவர் ஆலோசனைகளை மீறியிருப்பதாகக் கூறுகின்றனர். ஆலோசனைகளை மீறுவதென்பது சட்டத்தை மீறுவதாகாது.
அது மட்டுமல்லாது சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்ணவுக்கும் ஹைகோப் நிறுவனத்துக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லையென நிறுவனங்கள் பதிவாளர் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் முன்னிலையில் சாட்சியமளித்திருக்கிறார்.
சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திடுவதை நிராகரித்து படையினர் அனைவரையும் காப்பாற்ற என்னால் முடிந்திருந்தது என்றால், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைப் பாதுகாத்துக் கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செயற்படாதது ஏன் என்பது எமது கேள்வியாக இருக்கிறது.
சரத் பொன்சேகாவின் ஜெனரல் பதவி நிலை, அவரது ஓய்வூதியம் போன்றவற்றைப் பறித்து, அவரை சிறை வைத்ததன் மூலம் அரசாங்கம் படையினரைக் கணக்கில் எடுக்காமல் மதிக்குகாமலுமே செயற்படுகிறது என்பது தெளிவாகிறது.
முன்னாள் இராணுவத் தளபதியை விடுதலை செய்ய சட்டத்தில் எந்தத் தடையுமில்லை. அதற்கமைய எவரது வேண்டுகோளுமின்றி ஜனாதிபதி தனது விருப்பத்தின் பேரில் மட்டும் அவரை விடுதலை செய்ய முடியும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை சரத் பொன்சேகா அன்று வெற்றிகொள்ளவில்லை எனில் மகிந்த ராஜபக்ஷவின் வீழ்ச்சி கண்டிருக்கும். அப்படியென்றால் அரசாங்கத்தைப் பாதுகாத்த நபரை விடுதலை செய்ய ஜனாதிபதி முடியாமல் போனது ஏன்?
இராணுவ நீதிமன்றத்தினால் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை இராணுவ சட்டத்தின் கீழ் இரத்து செய்து அவரை விடுதலை செய்யுமாறு எனது கையெடுத்திட்டு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தேன். அதேபோல், சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவை வலியுறுத்தி கையெழுத்திடும் மக்கள் மனுவுக்கு நான் உட்பட பலரும் கையெழுத்திட்டோம். அப்படி என்றால் சரத் பொன்சேகாவை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுதலை செய்ய இந்த நடவடிக்கைகள் போதுமானவையே.
உண்மையில் சரத் பொன்சேகா மட்டுமன்றி இந்த நாட்டின் சகல மக்களுமே அரசியல் கைதிகள் தான். சரத் பொன்சேகா வெலிக்கடையில் அரசியல் கைதியாக இருப்பதுடன், நாம் அனைவரும் இலங்கை எனும் தீவினுள் அரசியல் கைதிகளாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசு அலட்சியப்படுத்துகிறது!-சுரேஷ்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ரிசாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா ஆகியோருக்கே அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரைக் கூட பெரிதாக பொருட்படுத்துவது இல்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பை அலட்சியப்படுத்தியே நடக்கின்றது.” இவ்வாறு குற்றஞ்சாட்டி உள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ்.மாவட்ட எம்.பியுமான சுரேஸ் பிரேமச்சந்திரன்.
அவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுகின்ற அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் பங்குபற்ற கூட்டமைப்பு அழைப்பு விடுக்கப்படுவதே இல்லை. கிழக்கு மாகாண அபிவிருத்தி சம்பந்தமாக திருகோணமலையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்துக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை.
வட மாகாண அபிவிருத்தி சம்பந்தமான வவுனியா கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இது ஜனநாயக ரீதியான செயலா? வடக்கு, கிழக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரிதிநிதிகளைப் புறக்கணித்துக்கொண்டு அம்மக்களின் தலைவிதியை தீர்மானிக்கின்றார்கள்.
ஜனாதிபதியின் சகோதரரான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ எம்.பி ஆகியோர் ஏராளமான தடவைகள் வட மாகாணத்துக்கு விஜயம் செய்திருக்கின்றார்கள்.
ஆனால் அங்கு கூட்டமைப்பினரைச் சந்திக்கவே இல்லை. அரசு சில அரசியல்வாதிகளுடனேயே தொடர்புகளை வைத்திருக்க விரும்புகின்றது. டக்ளஸ் தேவானந்தா, ரிசாத் பதியுதீன், ஜே.ஸ்ரீரங்கா போன்றவர்களையே மடியில் தூக்கி வைத்திருக்கின்றது.
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரைக் கூடப் பெரிதாகக் கணக்கில் எடுப்பதில்லை என தெரிவித்தார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

சிங்கா படையணிக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும் - கோத்தபாய.

கொழும்பு ஆமர்வீதி பிரதேசத்தில் கடந்த 13 திகதி இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவத்தின் சிங்கா படைப் பிரிவின் இரண்டு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சரத் பொன்சேகாவால் உருவாக்கப்பட்ட சிங்கா படையணிமீது ஏற்கனவே வெறுப்பும் அவநம்பிக்கையும் கொண்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இச்சம்பவத்தைத் தனக்குச் சாதகமாகப் பாவிக்க எண்ணியுள்ளார். எனவே இக்குறித்த சம்பவம் தொடர்பான சிங்கா படையணிக்கு எதிராக விரிவான பிரசாரங்களை வழங்குமாறு அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இராணுவ அதிகாரிகள் அல்லது படையினர் ஏதேனும் குற்றச் செயல் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டால் அந்தச் சந்தேக நபர்கள் குறித்து அவர்கள் அங்கம் வகிக்கும் படைப் பிரிவிற்கு அறிவிக்கப்படுவது வழமையாகும். கோத்தபாயவின் உத்தரவின் பேரில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் டி.ஆர்.எல். ரணவீர கடத்தல் சம்பந்தமாக கைதுசெய்யப்பட்ட மூன்று இராணுவத்தினரில் இருவர் சிங்காப் படைப் பிரிவில் பணியாற்றியவர்கள் எனக் கூறப்படுகின்ற போதிலும் இதுகுறித்து அப்படைப்பிரிவுடன் தொடர்பு கொண்டதாகத் தெரியவில்லை.
கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள நகை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று இரண்டு கோடி ரூபா கப்பம் கோரியமை சம்பந்தகமாகவே இந்த இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

18 அக்டோபர் 2010

கைலாகு கொடுக்கச் சென்ற போதும் மகிந்தவை கண்டுகொள்ளாத மன்மோகன் - பலத்த அவமானம் என சண்டே லீடர் விபரிப்பு!

அண்மையில் இந்தியாவில் இடம் பெற்ற பொதுநலவாய போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவமதிக்கப்பட்டதாக சண்டே லீடர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விழாவின் சிறப்பதிதியாக அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் பிரசாரம் செய்து வந்தது. இதன் அடிப்படையிலேயே கடந்த புதன்கிழமை ஜனாதிபதி இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றார்.அங்கு பிரித்தானிய இளவரசர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுக்கு அருகிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அமர்ந்திருந்தார்.
இதன்போது வருகைதந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் கைலாகு செய்ய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெரும் ஆர்வத்துடன் சென்றபோதும்,மன்மோகன் சிங் அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.இது இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த 65 ஆயிரம் பார்வையாளர்கள் மற்றும் இந்நிகழ்வை உலகம் முழுவதும் தொலைக் காட்சியில் பார்வையிட்ட கோடிக்கணக்கான தமிழ் மக்கள் மத்தியில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நிகழ்வில் விசேட விருந்தினராக ஜனாதிபதி அழைக்கப்பட்டதாக முன்னர் பிரசாரம் செய்யப்பட்டபோதும், அவருக்கு இந்த நிகழ்வில் உரையாற்றுவதற்கேனும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில்,அவர் சிறப்பதிதியாக அழைக்கப்படவில்லை என்பதும், அவருக்கு உரையாற்ற வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதும் ஜனாதிபதிக்கு பலத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக சண்டே லீடர் சுட்டிக்காட்டியுள்ளது.

அகதிகள் விடயத்தில் கடுமையாக இருக்கும்படி கோத்தபாய கோரிக்கை!

இலங்கையிலிருந்து செல்லும் அகதிகள் விடயத்தில் அவுஸ்திரேலியா கடுமையான போக்கைக் காட்டவேண்டும் என்று இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கேட்டுள்ளார். கடந்த ஒரு வருடத்துக்குள் ஏராளமான அகதிகள் நாட்டுக்குத் திரும்பிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களில் 70 வீதமானவர்கள் இலங்கைக்கு வந்து செல்வதாக அண்மையில் ரொஹான் குணரட்ண தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இலங்கையிலிருந்து சட்டவிரோதமாகச் செல்லும் படகுகளைத் தடுத்து நிறுத்துவதில் இலங்கை கடற்படையினரும் போலீசாரும் தீவிரமாக உள்ளதாகத் தெரிவித்த கோத்தபாய, அண்மையில் இவ்வாறாக இலங்கையில் இருந்து ஒரு படகுகூடச் செல்லவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், விமானம் மூலமாக மக்கள் மூன்றாம் நாடுகளுக்குச் செல்வதையும் கோத்தபாய சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையிலிருந்த புலிகளைத் தாம் தோற்கடித்த பின்னர் இலங்கையில் மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்கிறார் கோத்தபாய. எனவே மக்கள் அகதிகளாக வெளியேற வேண்டிய தேவை எதுவுமே இல்லையாம் என்பது அவரது வாதமாகும். எனவே இலங்கை அகதிகள் யாருக்கேனும் அகதியுரிமை வழங்குவதில் அவுஸ்திரேலியா கடுமையான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோத்தபாய கேட்டுள்ளார்.

இராணுவத்தின் படுகொலை - மன்னிப்புச் சபை பிரச்சாரம்!

இலங்கை இராணுவத்தினர் புரிந்த படுகொலைகளை எடுத்துக்கூறும் விதமான பிரச்சார நடவடிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகமான சர்வதேச மன்னிப்புச் சபை இறங்கியுள்ளது. திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்களைப் படுகொலை செய்த கொடூரம் நடந்து வரும் ஜனவரி மாதம் இரண்டாம் திகதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஆனால் இம்மாணவர்களைக் கொலை செய்த இராணுவத்துக்கு எதிராக எதுவித நடவடிக்கையுமே இன்னமும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இதை உதாரணமாகக் கொண்டு இலங்கையின் போக்கை உலகறியச் செய்வதற்கான அஞ்சல் அட்டைப் பிரச்சாரத்தில் மன்னிப்புச் சபை இறங்கியுள்ளதாக அதன் அமெரிக்கப் பணிப்பாளர் ஜின் மக்டொனால்ட் கூறினார். இலங்கையில் நடந்துள்ள போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக இப்பிரச்சாரம் நடக்கவுள்ளது.

17 அக்டோபர் 2010

த.தே.கூட்டமைப்பின் தலைமை அலுவலகம் பம்பலப்பிட்டியில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையக அலுவலகக் கட்டடம் இன்று காலை பம்பலப்பிட்டியில் வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட விருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்கத் தொடங்கி பல வருடங்களான போதும் நிரந்தரக் கட்டடம் இல்லாத நிலையில் இது வரை காலமும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களிலேயே கூட்டங்களை, சந்திப்புக்களை நடத்திவந்தது.
பம்பலப்பிட்டியில் உள்ள தனியார் கட்டடம் ஒன்றில் இன்று முதல் கூட்டமைப்பின் அலுவலகம் இயங்கவுள்ளது. சம்பிரதாயபூர்வமாக அலுவலகம் திறக்கப்பட்ட பின்னர், தமிழரசுக் கட்சியின் செயற்குழு அங்கு கூடவிருக்கிறது. இன்றுள்ள அரசியல் நிலைமை தொடர்பாக இக்கூட்டத்தி ஆராயப்படவிருக்கிறது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவும் நாளை புதிய அலுவலகத்தில் கூடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய இருக்கிறதென தெரிவிக்கப்படுகிறது.

சரத்துக்கு தமிழ்க் காங்கிரஸ் ஆதரவு: உறுப்பினர்கள் அதிர்ச்சி!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் சிங்கள படைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக கனேடியன் தமிழ்க் காங்கிரஸ் குரல் கொடுத்துள்ளமையானது உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சரத்தை விடுவிக்குமாறு இவ்வாறு போராடுவதற்கு எந்தவகையான உத்தரவை அதன் உறுப்பினர்களிடமிருந்து தமிழ்க் காங்கிரஸ் பெற்றது என்பது இன்னமும் தெளிவில்லாத ஒன்றாகவே உள்ளது. இது டேவிட் பூபாலபிள்ளையினதும், கனேடியன் தமிழ்க் காங்கிரஸிடமிருந்து சம்பளம் பெறும் ஒரேயொரு பணியாளர் டான்ரன் துரைராஜாவினதும் புனைவுதிறனே இதுவென்றும் கூறப்படுகிறது.
காங்கிரசின் இந்த முடிவு குறித்து வன்கூவரின் நிதியியல் ஆலோசகர் ரோய் ரட்ணவேல் கேள்வியெழுப்பி கடிதம் எழுதியுள்ளார். இவர் கனேடியன் தமிழ்க் காங்கிரசில் நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும், உப தலைவராகவும் இருந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இக்கடிதத்துக்கு பலநாட்களாக எதுவித பதில் கடிதத்தையும் அவர் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் தலைவரான சிறிரங்கா எதுவித கட்டுப்பாட்டையோ அல்லது பதிலையோ கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை. சிலரோ கனடாவிலும் உலகிலுமுள்ள தமிழர்களைத் திகைப்புற வைத்த வெற்று வேட்டு என்று கூறுகின்றனர். இன அழிப்புக்கு எதிரான தமிழர்களின் பிரிட்டன் பேச்சாளரான ஜனனி ஜனநாயகம் இதுகுறித்துக் கூறும்போது, இந்தப் பேட்டியை இலங்கை மற்றும் இந்திய ஊடகங்கள் தமது முன்பக்கத் தலையங்கமாக பிரசுரித்தன என்று குறை கூறியுள்ளார்.
மேலும் டேவிட் பூபாலபிள்ளையும் கனேடியன் தமிழ்க் காங்கிரசும் தமது நிலைப்பாடு குறித்து ஒரு அறிக்கையை விடுவதற்கு மறுத்துவரும் நிலையில் தமிழர்கள் இலங்கையையும் இந்தியாவையும் எப்போதும் குற்றங்கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

16 அக்டோபர் 2010

தமிழினத் துரோகி மன்மோகன் மலேசியாவுக்குள் வர அனுமதிக்கக் கூடாது!

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு தமிழின துரோகி. அவர் மலேசியாவுக்குள் காலடி வைக்கின்றமையை அனுமதிக்கவே முடியாது.” இப்படிச் சீறுகின்றது மலேசியாவின் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றான Malaysia Consumer Advisory Association. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் 27 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கோலாலம்பூர் வருகின்றார். இந்நிலையில் மன்மோகன் மலேசியா வருகின்றமையை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து freemalaysiatoday இணையப் பத்திரிகைக்கு காட்டமாக பேட்டி வழங்கி உள்ளார் Malaysia Consumer Advisory Association இன் தலைவர் எம்.வரதராயு.
கடந்த காலங்களில் இலங்கையில் 80 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளில் இந்தியாவின் பங்கு காத்திரமானது. ஐ.நா சபையின் யுத்தக் குற்ற விசாரணையில் இருந்து இலங்கையை தப்ப வைப்பதிலும் இந்தியா உதவி செய்துள்ளது.
உலகம் பூராவும் வாழும் இந்தியர்களின் பிரச்சினைகள் குறித்து மன்மோகன் சிங்கின் அரசுஒருபோதும் அக்கறை செலுத்துவதாக இல்லை. உலகம் பூராவும் வாழும் தமிழினத்தின் துரோகி இவர்.
இவர் மலேசியாவுக்குள் காலடி வைக்க அருகதை அற்றவர். இவர் மலேசியாவுக்குள் காலடி வைக்கின்றமையை அனுமதிக்க முடியாது. மலேசிய அரசு இவரை அழைக்கவே கூடாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டுகளுடன் முன்னாள் புலிகள் உறுப்பினர் கைதாம்!

கண்டி, தலவாக்கலைப் பகுதியில் வெடிகுண்டுகளுடன் நடமாடிய முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவரைத் தாம் கைது செய்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. கண்டியிலுள்ள நபர் ஒருவர் கொடுத்த தகவலை அடுத்தே இக்கைது நிகழ்ந்ததாகவும் அவர்கள் கூறினர்.
குறித்த நபர் நான்கரைக் கிலோ நிறையுடைய சி 4 வெடிமருந்துகளையும், 5 கைக்குண்டுகளையும், 1.6 கிலோ நிறையுடைய ஒரு கிளைமோரையும் இரு ஜெனரேற்றர்களையும் வைத்திருந்ததாக மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண பயங்கரவாதப் புலனாய்வுத் துறையில் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள அந்நபரிடம் தற்போது விசாரணைகள் நடந்து வருகின்றனவாம்.

சரணடைந்து காணாமல் போனவர்களின் பட்டியல் ஒப்படைப்பு!

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலர் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு காணாமல் போயுள்ளவர்களின் பெயர்ப்பட்டியலை அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க் குற்றப் பிரிவிடம் கையளித்துள்ளது. பிரிட்டனிலுள்ள தமிழ் புலம்பெயர்வாளர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒக்ரோபர் 2010 வரை காணாமல் போயுள்ளவர்களின் விவரங்களே பட்டியலிடப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல், நிர்வாகம், மருத்துவம் மற்றும் நிதிப்பிரிவுகளைச் சேர்ந்த போராளிகளே சரணடைந்திருந்தனர். இவ்வாறு சரணடைந்தவர்களில் 70 வீதமானவர்கள் பற்றிய விவரம் எதுவுமே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரணடைந்த பலரையும் இலங்கை இராணுவத்தினர் சித்திரவதை செய்து, சுட்டுக் கொல்வது போன்ற பல ஆதாரங்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் பெற்றுள்ளது. இவ்வாறான போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசாங்கம் நடத்திவரும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கின்ற போரால் பாதிக்கப்பட்ட பலரும் தமது பிள்ளைகள் காணாமல் போனதையே தெரிவித்துள்ளனர். அதோடு விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி தனது கணவரை இராணுவத்தினர் கைது செய்து சென்ற பின்னர் காணாமல் போயுள்ளதாக முறையிட்டுள்ளார்.

15 அக்டோபர் 2010

வேலணையில் இளம் யுவதி மீது ஈ.பி.டி.பி பாலியல் முயற்சி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சிறுவர் போராளியான யாழ்.வேலணையை சேர்ந்த ஒருவரை கடந்த சனிக்கிழமை நள்ளிரவு ஈ.பி.டி.பி. சந்தேகநபர்கள் கொண்ட குழு ஒன்று கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்திருக்கின்றது.
மூன்று முச்சக்கர வண்டிகளில் வந்த சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்தனர். சிறுமியை தரதர என்று வெளியில் இழுத்து வந்து பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் செய்யத் தொடங்கினர்.
குடும்ப அங்கத்தவர்கள் சிறுமியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அடித்துப் போடப்பட்டார்கள். சிறுமி பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். சிறுமியின் குடும்ப அங்கத்தவர்களுடன் ஏற்பட்ட கைகலப்பு, சிறுமியின் பலத்த எதிர்ப்பு ஆகியன இக்குழுவினருக்கு பாதகமாக அமைந்தன.
இவர்கள் சிறுமியை விட்டு விட்டு போனார்கள். போகும்போது மீண்டும் வருவோம் என்று மிரட்டும் தொனியில் கூறி விட்டு சென்றனர். சிறுமி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வேலணை உப பொலிஸ் நிலையத்துக்கு சென்று இப்பாலியல் வல்லுறவு முயற்சி சம்பந்தமாக முறைப்பாடு மேற்கொண்டார்.
கூட்டாகக் கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களில் இருவரின் பெயர்களைக் கூறி இருக்கின்றார். ஆயினும் பொலிஸார் இம்முறைப்பாடு தொடர்பாக நடந்து கொண்ட விதத்தில் சிறுமிக்கு திருப்தி இருக்கவில்லை.
வீடு வந்த இவர் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். மீண்டும் இக்குழுவினர் வரக் கூடும் என்கிற அச்சத்தால் அடுத்த நாள் திங்கட்கிழமை அலரி விதையை உண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
ஆயினும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர் தெய்வாதீனமாக உயிர் தப்பி உள்ளார். இவருக்கு வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை வழங்கப்படுகின்றது. இவரது உடலில் கடிகாயங்கள் காணப்படுகின்றன.
கூட்டாக பாலியல் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்டவர்கள் கடித்திருக்கின்றார்கள். சிறுமியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது அடித்துப் போடப்பட்ட குடும்ப அங்கத்தவர்களும் இதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
இச்சிறுமியும், சிறுமியும் குடும்பத்தினரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சில மர்மநபர்கள் வைத்தியசாலையில் உலாவி வருகின்றனர் என்று வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சிறுமிக்கு பெற்றோர் கிடையாது. யுத்தத்தின் இறுதி நாட்களில் வன்னியில் இருந்தவர். வன்னியில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றபோது அரச படையினரால் கைது செய்யப்பட்டுப் பின் ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டார். யுனிசெப் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் சிறுவர்களில் இவரும் ஒருவர்.

கனடாவில் புகலிடம் கோரும் தமிழர் பொருளாதார குடியேற்றவாசிகளாம்!

கனடாவின் மேற்குக்கரையைச் சென்றடைந்த சுமார் 500 இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை திருப்பியனுப்புமாறு இலங்கை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறியுள்ளார். இலங்கையில் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்புக் குறித்து தாம் அச்சமடைவதாக கனடிய அதிகாரிகளுக்கு இந்தப் புகலிடம் கோருவோர் கூறுவது நேர்மையற்றதென வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு வருடத்தில் அமைதி திரும்பியிருக்கிறது. ஆயினும், தமிழர்கள் இலங்கையை விட்டு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். கடந்த ஆகஸ்டில் 490 பயணிகள் வன்கூவருக்கு சரக்குக் கப்பலில் வந்து சேர்ந்தனர். அதற்கு முன்னர் 76 இலங்கையர்கள் மற்றொரு கப்பலில் வைத்து கனடிய கடற்பரப்பில் இடைமறிக்கப்பட்டிருந்தனர். வேறு கப்பல்களும் தமிழர்களுடன் தாய்லாந்துக்குச் சென்று அங்கிருந்து கனடாவுக்கு பசிபிக் சமுத்திரத்தைக் கடந்து வருகைதர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தப் புகலிடம்கோருவோர் பொருளாதார குடியேற்றவாசிகளெனவும் அச்சத்தினால் அகதிகளாக வருவோரல்ல எனவும் பீரிஸ் கூறுகிறார். அகதி அந்தஸ்த்துக்கு விண்ணப்பிப்பதற்கான நியாயபூர்வமான அடிப்படை அம்சம் எதுவுமில்லையென அவர் தனது கொழும்பிலுள்ள அலுவலகத்தில் வைத்து "த ஸ்ரார்"க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அண்மைய மாதங்களில் இந்த நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்று கூறியுள்ள அவர், இப்போது அகதி அந்தஸ்து கோரும் மக்கள் பொருளாதாரக் காரணங்களுக்காக அதனைச் செய்கின்றனர் என்றுள்ளார். வளமான வாழ்க்கையைப் பார்ப்பதற்கு அவர்கள் விரும்புகின்றனர். இந்த நாட்டில் அட்டூழியங்கள் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டுவது அல்லது தவறாக செயற்பட்டவற்றை மறுத்து வைக்க விரும்புவது நேர்மையற்றதாகும் என்றும் நாட்டிற்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் விடயம் என்றும் பீரிஸ் கூறியுள்ளார்.

14 அக்டோபர் 2010

பிரித்தானிய அரச குடும்பத்தோடு மகிந்த அமர்வதா?: சூடான விவாதம்!

இந்தியாவில் நிறைவடைந்த காமன்வெலத் போட்டிகளின் விழாவில் பிரித்தானிய அரச குடும்ப அங்கத்தவர் அருகாமையில் போர் குற்றங்களில் ஈடுபட்ட மகிந்த அமர்வதா என பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இன்று பிரித்தானிய பாரளுமன்றில் நடைபெற்ற கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சோஃபி மக்டக்ளஸ், பிரித்தானிய வெளியுறவுக் கொள்கை எங்கே செல்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். போர் குற்றங்கள் புரிந்த மகிந்த ராஜபகஷ பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர் அருகில் உட்காருவதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக விவாதம் ஒன்றை பாராளுமன்றில் நடத்த சபாநாயகர் அனுமதி வழங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்தியாவில் நிறைவடைந்துள்ள காமன்வெலத் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள பிரித்தானியாவில் இருந்து இளவரசர் எட்வாட் அவர்கள் சென்றிருந்தார். இந்நிகழ்வுகளில் அவர் அமர்ந்திருந்த ஆசனத்துக்கு அடுத்தபடியாக மகிந்தவும் அமர்ந்திருந்தார். பிரித்தானியாவில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான சர்ச்சைக்குரிய மகிந்த எவ்வாறு பிரித்தானிய அரச குடும்பத்தோடு அமர்ந்திருக்கலாம் என தற்போது கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சோஃபி பல தடவை தமிழர்களுக்காக குரல்கொடுத்தவர், கொடுத்தும் வருபவர் என்பதை எவரும் மறுக்கமுடியாது. தமிழர்களுக்காக இவர் ஆற்றிவரும் சேவை பாராட்டுதலுக்குரியது.