31 மே 2012

சிங்களவர்களே வந்தேறு குடிகள்"தேரரின் கருத்துக்கு சிறிதரன் பதிலடி!

இலங்கை வரலாற்றில் சிங்கள மக்களே வந்தேறு குடிகள். தமிழ் மக்கள் அல்ல என்பதை பெளத்த பிக்குகள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். என தமிழரசுக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.கடும் போக்கு கருத்துக்களைக் கூறி இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கவிடாமல் தடுக்கும் ஒரு தீய சக்தியாக இப்பெளத்த பிக்குகள் விளங்குகிறார்கள் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது:
இலங்கை வரலாற்றில் சிங்கள் பௌத்த பிக்குகளின் செயற்பாடு என்பது, இலங்கையை முற்று முழுதாக சிங்கள நாடு என காட்டுவதாகவே அமைந்துள்ளது. அவர்கள் எப்போதுமே, இலங்கை தமிழ் மக்களின் மண் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. அந்த வகையிலேயே அண்மையில், மோதானந்த தேரரின் கருத்தும் அமைந்துள்ளது.
வடக்குக் கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகப் பகுதி. இதனை கடும் போக்குடைய பெளத்த பிக்குகள் ஏந்தவெரு காலப்பகுதியிலும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்களுக்கு உண்மையான வரலாறு தெரியாது. இலங்கையில் வாழ்கின்ற தமிழருக்கு என்று தனியான வரலாறு இருக்கின்றது. ஆதியிலிருந்து இயக்கர், நாகர் என்ற இனம் இலங்கையில் வாழ்ந்ததாக ஆதாரங்கள் இருகின்றன. அவர்கள் தமிழர்களே.
ஆனால் சிங்கள் மக்களின் மூதாதையரான விஜயன் குழுவினர் இலங்கைக்கு தற்செயலாகவே வந்து குடியேறியுள்ளார்கள். அவர்களே வந்தேறு குடிகள். அண்மையில் கூட பொலநறுவை,காலி மற்றும் அநுராதபுர பகுதிகளில் சிவன் ஆலயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆதியிலிருந்து இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் தமிழர்கள் வாழ்ந்து வந்தமைக்கான சான்றாகவே காணப்படுகின்றது. இதனை பெளத்த பிக்குகள் மறைக்க முற்படுகிறான்றார்கள்.
அண்மைக்காலமாக தமிழர்களின் நிலங்களில் திட்டமிட்ட வகையிலே சிங்கள பெளத்த பிக்குகள் விகாரைகளை அமைத்து வருகின்றார்கள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பான கடும் போக்கு கருத்துக்களை கூறி இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கவிடாமல் தடுக்கும் ஒரு தீய சக்தியாக இப்பெளத்த பிக்குகள் விளங்குகிறார்கள்.
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக உண்மையான விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை உலகத்திற்கு பயங்கரவாதிகளாக காட்டி தமிழ் மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்காமல் தடுத்தவர்கள் இப்பிக்குகளே. இவர்கள் காலத்திற்கு காலம் இவ்வாறான கருத்துக்களை கூறிவருபவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இனத்துக்கு என ஒரு தனிப்பட்ட பூர்வீக, பண்பாடு, மொழி, மதம் என பலதும் கொண்டது.. தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்ல எனவும் தெரிவித்திருந்தார்.

30 மே 2012

வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்கிறார் மகிந்த ராஜபக்ஷ!

மகிந்த ராஜபக்ச அடுத்து வரும் வாரங்களில் பல நாடுகளுக்கு உத்தியோகபூர்வமான விஜயங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், இந்த வாரம் தாய்லாந்துக்கான நான்கு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த அதனை இரண்டு கட்டங்களாக சென்று வர திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தாய்லாந்து சென்றுள்ள அவர், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகளின் திருமணத்தில் பங்கேற்பதற்காக ஒரு நாள் இரவு மட்டும் கொழும்பு திரும்பவுள்ளார்...
பின்னர் மீண்டும் தாய்லாந்து திரும்பி தனது உத்தியோகபூர்வ பணிகளை தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது..
இதன்போது தாய்லாந்து பிரதமர் யிங்லக் சின்வத்ராவை சந்திப்பதுடன், பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் உள்ளவர்களையும் சந்திக்கவுள்ளார்.
தாய்லாந்துப் பயணத்தை அடுத்து இலங்கை ஜனாதிபதி அடுத்த மாத தொடக்கத்தில் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அதையடுத்து வத்திக்கானுக்குப் பயணம் செய்து பாப்பரசரைச் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் பிறேசில், கியூபா ஆகிய நாடுகளும் ஜனாதிபதி மஹிந்த விரைவில் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.
கியூபாவுக்கான தூதுவர் பதவியை, தாமரா குணநாயகம் நிராகரித்துள்ள நிலையில், கியூபாவுக்கு இலங்கை ஜனாதிபதி பயணம் மேற்கொள்ளும் வரை அங்கு தற்காலிகத் தூதுவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். தற்போது வொசிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பிரதி தூதுவராகப் பணியாற்றும் எசல வீரக்கோனே ஹவானாவுக்கான தற்காலிகத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுத்தக்கருவியாக வல்லுறவு,விசாரிக்க பிரித்தானியா தயாராகிறது!

உலகில் போர் இடம்பெறும் பிராந்தியங்களில் வல்லுறவை யுத்தத்துக்கான கருவியாக பயன்படுத்துவது தொடர்பான ஆதாரத்தை திரட்டுவதற்கு துரிதமாக அந்தப் பகுதிகளுக்கு ஆட்களை அனுப்பிவைப்பதற்கு தேவையான விசேட செயலணிப் பிரிவை பிரிட்டன் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பிரித்தானிய அரசின் இந்தச் செயற்பாடு இலங்கை அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.முன்னாள் யூகோஸ்லாவியா, ருவாண்டா, மத்திய ஆபிரிக்கா, இப்போது சிரியா வென இத்தகைய போர்க்குற்றங்களை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் ஓரங்கமாக விரிவான முன்முயற்சியை பிரிட்டன் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தது.
இந்தவிசேட செயலணிக் குழுவானது நிபுணர்களைக் கொண்டிருக்கும், வெளிவிவகார அமைச்சே இக்குழுவை அமைப்பதாக த கார்டியன் பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.
பிரிட்டிஷ் பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், சட்டத்தரணிகளை கொண்டதாக இக்குழு அமைந்துள்ளது. இந்த வருட இறுதியில் இக்குழுவானது நடவடிக்கையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரியளவில் பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக அறிகுறிகள் தென்பட்டால் குறுகிய கால முன்னறிவித்தலுடன் போர் வலயத்துக்கு அனுப்பப்படுவதற்கு தயாராக இந்த விசேட குழு இருக்கும்.
இக்குழுவினர் முதலாவதாக செல்லும் இடமாக சிரியா இருக்குமென கூறப்படுகிறது. சிரியாவில் வல்லுறவுகள் இடம்பெற தொடங்கியிருப்பதாக திகிலான அறிக்கைகள் கிடைத்திருப்பதாக பிரிட்டிஷ் வெளிவிகார அமைச்சர் வில்லியம் ஹேக் கூறியிருக்கிறார்.
தனிப்பட்டவர்களும் அமைப்புகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டாலும் மோசமான பாலியல் குற்றங்களை இழைத்தவர்கள் தண்டிக்கப்படாமல்போகும் பொதுவான தன்மை காணப்படுகிறது என்று ஹேக் கூறியுள்ளார். இந்தக் குழுவுக்கு அவசர நடவடிக்கைக்கான நிதியாக 20 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
பொஸ்னியா யுத்தத்தின் போது இடம்பெற்ற வல்லுறவினால் பாதிக்கப்பட்டோரின் முகாம்கள் பற்றிய அஞ்சலினா ஜொலியின் திரைப்படமான இரத்தமும் தேனும் நிறைந்த மண், விசேட செயலணிக்குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது நேற்று காண்பிக்கப்படவிருந்தது.
பொஸ்னிய யுத்தத்தின்போது 50 ஆயிரம் பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர் என்று கணிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் வல்லுறவு போர் குற்றங்களுக்காக 30 விசாரணைகள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றது.
ருவாண்டா இனப்படுகொலையில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பதாக ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 1990 களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சியாராலியோனில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை லைபீரியாவிலுள்ள பெண்களின் தொகையில் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் படைவீரர் அல்லது துணைப் படைக்குழுவைச் சேர்ந்தவர்களினால் உடல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு இலக்காகியிருந்தனர்.
இரு வருடங்களுக்கு முன்னர் யுத்தத்தின் போதான பாலியல் வன்முறைகள் தொடர்பான விசேட பிரதிநிதியை ஐ.நா. நியமித்திருந்தது. இந்த விவகாரங்களுக்கான ஐ.நா. விசேட பிரதிநிதியான வோல்ஸ்ராம் கடந்த பெப்ரவரியில் பாதுகாப்பு சபைக்கு சமர்ப்பித்த தனது அறிக்கையில் மோசமான குற்றங்களை இழைத்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.
மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் தென் சூடானின் இராணுவம், ஜவரிகோஸ்ட்டிலுள்ள போராளிகள், கொங்கோ ஆயுதப்படைகள் என்பவற்றின் பெயர்களை வால்ஸ்ராம் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேவேளை யுத்தத்துக்குப் பின்னரான வலயங்களில் சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளை பாலியல் வன்முறைகள் எவ்வாறு புறந்தள்ளி வைத்தன என்பதற்கும் வோல்ஸ்ராம் உதாரணங்களை முன்வைத்திருந்தார் சாட், நேபாளம், சிறிலங்கா, கிழக்கு தீமோர், செஸ்னியா போன்ற நாடுகளை அவர் உதாரணங்களாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வகையில் இலங்கை நிலைமைகள் தொடர்பாகவம் பிரித்தானியா ஆராயலாம் என்பதால் கொழும்பு அதிர்ச்சியடைந்திருப்பதாகத் தெரிகின்றது.

29 மே 2012

சந்திரநேரு சந்திரகாந்தன் கைதாகி விடுதலை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் 3மணிநேரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்!
கடந்த வருடம் திருக்கோயில் நடந்த கலவரம் தொடர்பாக பொத்துவில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று நீதிமன்றுக்கு வந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் நீதிமன்ற உத்தரவின்பேரில் மூன்று மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப் பட்டுள்ளார்.
கடந்த வருடம் திருக்கோவில் பகுதியில் (12.8.2011 ) மூன்று மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடித்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் பொலிசார் இவ் மர்ம மனிதர்களை (கிறீஸ் மனிதன்) விடுவிக்க முயற்சி யெடுப்பதாக அறிந்த பொதுமக்கள் மிகவும் கோபமுற்று பொலிஸ் நிலை யத்தை முற்றுகையிட்டனர்.
அதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையங்களைச் சுற்றி பொல்லுகள், தடிகள் சகிதம் திரண்ட பொது மக்கள் மர்ம மனிதர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கோசங்களை எழுப்பினர். பின்னர் பொதுமக்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தையும் மேற்கொண்டதுடன் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர்.
இவ் வேளையில் அங்கு சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திர காந்தன் சந்திரநேரு இப்பிரச்சனையை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு பொதுமக்கள் சார்பில் பொலிசாருடன் பேசினார்.
மக்களின் எதிர்ப்பு அதிகமானதால் படையினர் ஸ்தலத்துக்கு வந்து துப்பாக்கி பிரயோகம் செய்தனர் படையினரை கற்களால் திருப்பி தாக்கினர். பின்னர் மீண்டும் மீண்டும் துப்பாக்கி பிரயோகம் செய்தே மக்களை விரட்டியடித்தனர் படையினர்.
இச்சம்பவத்தில் மக்களைத்திரட்டி கலகத்தில் ஈடுபட்டதாக திருக்கோயில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றில் ஆஜராகுமாறு சந்திரநேருவை அழைத்திருந்தும் கூட அவர் லண்டன் சென்றிருந்ததால் அவரால் சமூகமளிக்க முடியவில்லை. இதனால் இவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நிதிமன்றிற்கு ஆஜராகியிருந்தார். இதன்போது வழக்கை விசாரித்த நிதிபதி மூன்று மணித்தியாலங்கள் அவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் சாட்சிகள் வரவழைக்கப்பட்டு சந்திரகாந்தனை பிணையில் செல்ல அனுமதியளித்தார். மீண்டும் அடுத்த மாதம் 30அம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பதவி போனபின் தமராவிற்கு பிறந்த ஞானம்!

ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றும் தாமரா குணநாயகம் சிறிலங்காவின் இராஜதந்திர சேவையில் இருந்து விலகிக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அண்மையில் கியூபாவுக்கான தூதுவராக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இவரை இடமாற்றம் செய்ததை அடுத்தே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
கியூபாவுக்கான தூதுவர் பதவியை அவர் ஏற்கனவே நிராகரித்திருந்தார்.
இந்தநிலையில் அவர் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், சிறிலங்காவின் இராஜதந்திர சேவையில் தொடர்ந்து பணியாற்ற தாம் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அத்துடன் பிறேசில் அல்லது கியூபாவுக்கான தூதுவர் பதவியை ஏற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கொள்கையில் இருந்து தடம்புரள்வதாகவும் தாமரா குணநாயகம் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசாங்கம் அணிசேராக் கொள்கையில் இருந்து விலகி அணிசேரும் கொள்கைக்கு மாறத் தொடங்கியுள்ளதாகவும், இது சோசலிச அணிக்கு கவலையை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தை ஊடகங்களுக்கு தான் கசிய விடவில்லை என்றும் கூறியுள்ள அவர், எந்தவொரு இராஜதந்திர பதவிக்கும் அரசியல் ரீதியாக நியமனம் பெற விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

28 மே 2012

வலிகாமம் பகுதி வீடுகளில் படையினர் சோதனை நடவடிக்கை!

யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வீடுகளுக்குச் செல்லும் படையினர் குடும்பப் பதிவு அட்டைகளைப் பெற்று சோதித்துள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தியும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
வீடுகளுக்குச் செல்லும் படையினர் "ஆமி காட்" என அழைக்கப்படும் குடும்பப் பதிவு அட்டையை பார்வையிட்டு அதில் பதிவிலுள்ளவர்கள் வீட்டில் உள்ளனரா என விசாரிக்கின்றனர்.
அத்துடன், வீட்டிற்கு உறவினர் எவரேனும் வந்து செல்கின்றனரா? எனவும் விசாரிப்பதோடு அவ்வாறு எவரேனும் வருகை தந்திருப்பின் அவர் பற்றிய விபரங்களை விசாரிக்கின்றனர்.
முன்னாள் போராளிகள் குறித்த விடயங்களையும் அவர்கள் அவதானிப்பதாகவும் மக்களால் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று, விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கு செல்லும் படையினர் மற்றும் காவற்றுறையினர் அவர்களின் செயற்பாடு குறித்தும், நாட்டின் மீதும் அரசின் தற்போது அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களை கேட்டுச் செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் போராளிகள் குறித்து மாதம் ஒருமுறை புலனாய்வுப் பிரிவினர், படையினர் மற்றும் காவற்றுறையினர், நேரடியாக சென்று விசாரித்து வரும் நிலையில், இம்முறை, முன்னாள் போராளிகளை புகைப்படம் எடுத்தும் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கைதான ஆயுததாரிகளை விடுவித்தார் கோத்தபாய!

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்னும் சட்டவிரோதமான ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்றை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன 
நேற்று முன்தினம் அதிகாலை களுவாஞ்சிக்குடியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் கருணா அம்மானின் குழுவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. அதிகாலைவேளை விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிக்குடி அம்பாறை வீதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். 12.30 மணிக்கு கொழும்பு நோக்கி வந்த ஜீப் மற்றும் பிக்கெப் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
பிக்கெப் வாகனத்தில் சாரதியும் இரு தமிழ் இளைஞர்களும் ஜீப் வாகனத்தில் சாரதியும் மூன்று தமிழ் இளைஞர்களும் இருந்துள்ளனர். அதில் இருந்த ஒருவர் தன்னை கருணா அம்மானின் நெருங்கி அதிகாரி என அறிமுகப்படுத்தியுள்ளார். ஏனையோர் கருணா அம்மானின் ஆதரவாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வாகனங்களை பரிசோதனை செய்தபோது அதில் இருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் நான்கு மீட்கப்பட்டுள்ளன. துப்பாக்கிக்கு அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை ரவைகள் நிரம்பிய மெகசின் நான்கு இருந்துள்ளது. இவர்களை விசாரணை செய்தபோது இவர்கள் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஒருவரின் கையில் எரிகாய அடையாளமும் இருந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் என்ன நோக்கத்துடன் கொழும்பு வந்தார்கள் என சந்தேகமடைந்துள்ளனர் பொலீசார். அவர்களை சிறைவைக்க முயன்றபோது கொழும்பில் இருந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய கதைத்துள்ளார். அவர் விசேட அதிரடிப்படையினரை திட்டியதுடன் உடனே அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரியுள்ளார்.
அதன் பின்னர் வேறு வழியின்றி அவர்களை ஆயுதங்களுடன் விடுவித்த விசேட அதிரடிப்படையினர் அம்பாறைவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் இவர்கள் துப்பாக்கியுடன் கொழும்பு வருவது எதற்காக? தினமும் இவ்வாறு சட்டவிரோத ஆயுதம் கொண்டுவரப்படுகிறதா? என பாதுகாப்பு பிரிவு சந்தேகிக்கிறது. 

27 மே 2012

குழப்பத்தை ஏற்படுத்த முனைந்து குழம்பிப்போன பிள்ளையான்!


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 2012.05.25ம் திகதி தொடக்கம் 2012.05.27ம் திகதி இன்று வரை மட்டக்களப்பு அமெரிக்கமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 27.05.2012 இன்று மிகவும் சிறப்பான முறையில் 3000க்கு மேற்பட்ட மக்கள் முன்னிலையில் மாநாடு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அடாவடித் தனம் தோல்வி கண்டது. இம்மாநாட்டை குழப்பும் முகமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது அடிவருடிகளைக் கொண்டு பல துண்டுப் பிரசுரங்களை கடந்த இரு வாரமாக மாவட்டம் முழுவதும் வெளியிட்டார். "எதிர்ப்பு தெரிவிப்போம்", "மானமுள்ள மட்டக்களப்பு மக்கள்" என்ற தலைப்புகள் உட்பட 10க்கு மேற்பட்ட தலைப்புக்களில் மாவட்டம் முழுவதும் உள்ள தமது பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அடிவருடிகளை பயன்படுத்தி துண்டுப் பிரசுரங்களை இலட்சக் கணக்கில் அச்சிட்டு மாவட்டம் முழுவதும் வினியோகித்தனர்.
இதில் பிரசுரம் எழுதுதல், அச்சிடல் பணிகளில் செங்கலடி செல்லம் தியேட்டர் முதலாளியும், பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த முக்கிய பிரதிநிதியுமான மோகன் என்பவர் செயற்பட்டார். யாழ்ப்பாண மக்களை அதாவது வடபகுதி மக்களை இழிவுபடுத்தி இப்பிரசுரம் பிள்ளையானாலும் அவர்களது கூலிப் படையாலும் வெளியிடப்பட்டது.
அதுமட்டுமின்றி கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், பிள்ளையானின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் என்பவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அமைப்பாளருமான பிரதீப் மாஸ்டர் உட்பட்ட குழுவினர் மாவட்டத்தின் பல பாகங்களிலும் மட்டக்களப்பு நகரிலும் தமிழரசுக் கட்சியை தூற்றியும், அதன் தலைமையை கண்டித்தும், வடபகுதி மக்களை இழிவுபடுத்தியும் பிரசுரங்களை ஒட்டியதுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பிரசுரங்கள் மற்றும் பதாதைகளை பிடுங்கி எறிவதிலும், கிளிப்பதிலும் கவனம் செலுத்தினார்கள்.
அதுமட்டுமின்றி பொலித்தீன் மூலம் கறுப்பு கொடிகளை, நகரிலும் மாவட்டங்களிலும் தொங்கவிட்டனர். ஆனாலும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் ஆகியோர் மிகவும் சாதூரியமாக செயற்பட்டு மகாநாட்டை மிகவும் சிறப்பாக நடாத்த ஏற்பாடு செய்தனர்.
இதனை பொறுக்க முடியாத பிள்ளையான் தனது கையாள்களை பயன்படுத்தி மகாநாடு நடாத்த இருந்த மட்டக்களப்பு தேவநாயகம் மண்டப திரை பகுதியை (மேடை) இரு நாட்களுக்கு முன் எரித்தனர். ஆனால் இதிலும் உடனடி நடவடிக்கையை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு ஊறணி அமெரிக்கமிஷன் மண்டபத்தை ஒழுங்கு செய்தனர்.
அதனை பொறுக்க முடியாத தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் குழுவினர் பிள்ளையானின் ஆலோசனையில் மாநாட்டை குழப்ப தீர்மானித்தனர். 2012.05.27ம் திகதி அன்று பெரும் திரளான மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்கள் காலை 9.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்திலும் அதற்கு வெளியிலும் அமைக்கப்பட்ட கொட்டகைகளிலும் குழுமியிருந்தனர்.
இவ்வேளை ஒவ்வொரு நாளும் பிள்ளையான் மாநாட்டு மண்டப வழியாக வாகனத்தில் மெதுவாக கண்ணாடியை திறந்து பார்த்துக் கொண்டு செல்லும் நடவடிக்கை தொடர்ந்தது. 2012.05.27ம் திகதி அன்று மக்கள் திரளை கண்ட பிள்ளையான் (வாகனம் மூலம் வருகை தந்து பார்வையிட்டதுடன்) பெரும் கொதிப்புக்கு உள்ளாகி தனது அடிமைகளை அழைத்து மதுபானம் கொடுத்து மாநாட்டு மண்டபத்தில் சென்று குழப்புமாறும் வாகனங்களை உடைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிநிதிகளும் பிள்ளையானின் அடிமைகளும் மாநாட்டு மண்டபத்துள்ளும் வெளியிலும் நுழைந்து இருந்தனர். இவர்கள் பிள்ளையானின் ஏற்பாட்டில் இராணுவம், பொலிஸ், புலனாய்வுத்துறை ஆகியோரின் உதவியுடன் அங்கு செயற்பட தொடங்கினர். கிட்டத்தட்ட எட்டுப்பேர் நுழைந்தனர்.
இவர்களில் பிள்ளையானின் உறவினரும், வாழைச்சேனை பேத்தாழை கிராமத்தை சேர்ந்த செல்வநாயகம் ஈவெரா என்பவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் உரையாற்றும் போது அவர் வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் கோட்பாட்டை வெளிப்படுத்திய போது கிழக்கு மாகாணம் தனி;த்துவம் கோரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பதால் இவரது கதையை அவமதித்து மண்டபத்துள் சொற் பிரயோகம் பாவிக்க முற்பட்ட போது மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் அவரை தாக்க முற்பட்டனர்.
ஆனாலும் சிலர் தாக்கினர். உடனடியாக புறடியில் பிடித்து எல்லைக்குள் அப்பால் ஈவெரா என்பவர் தள்ளப்பட்டார். ஈவெராவுக்கு மட்டக்களப்பு அம்பாறை மக்கள் அடியும் கொடுத்தனர். இதன் பின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் குழுவினர் வீதியில் நின்றிருந்த வடபகுதி மக்கள் வருகை தந்த பஸ் வண்டிக்கு கல் வீசினர். இதன் பின்னணியில் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் செயற்பட்டார்.
அத்தோடு பிரசாந்தன் மாகாணசபை உறுப்பினர் மகாநாடு நடைபெறும் மண்டபத்தின் அருகில் உள்ள பிரதான வீதியால் தமது வாகனத்துக்கு பின் ஆட்டோவில் சவப்பெட்டி (வெற்றுப்பெட்டி) கட்டிக் கொண்டு பல தடவை போக்குவரத்து மேற்கொண்டார்.
இவ்வேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக வருகை தந்த பிள்ளையானின் அடிமைகள் ஒரு சிலர் மாநாட்டை பார்வையிட்டு தமது வருகை தந்திருந்த நண்பர்கள், உறவினர்களுடன் மாநாட்டை பாராட்டி கூறியுள்ளனர். பிள்ளையான் பொலநறுவை, திருகோணமலை, அம்பாறைகளில் இருந்து 16 பஸ் வண்டிகளில் சிங்கள மக்களை இறக்கி நடாத்திய தமது மாநாட்டை விட இங்கு மக்கள் பெரும் எழுச்சியுடன் சம்பந்தர் ஐயாவை வரவேற்று கொண்டு வந்து நடாத்தும் இம் மகாநாடு அமைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இவ்வேளை ஒரு சில அடிமைகள் தம்மை இதனை குழப்புமாறு பிள்ளையான் அனுப்பியதையும் தெரிவித்துள்ளனர். பிள்ளையானிடம் இருந்து எப்படி வெளியேறுவது என்று யோசித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஏனெனில் பிள்ளையானிடம் இரந்து விலகினால் தமது உண்மைகள் எல்லாம் வெளியில் சென்று விடும் என்பதால் தங்களை சுட்டுவிடுவார் எனக் கவலைப்பட்டுள்ளனர். இந்நிகழ்வுக்கு வருகை தந்த பிள்ளையானின் பிரதேச சபை உறுப்பினர் பிள்ளையான் போகச் சொன்னததால் வந்ததாக கூறியதுடன் பிள்ளையானால் தமக்கு கஷ்ரமாக உள்ளதாகவும் ஒருவரிடம் கவலைப்பட்டுள்ளார். பாவம் பிள்ளையானுடன் இணைந்தவர்கள் இவ்வேளை செ.ஈவெரா என்பவர் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதும் பயந்த பிள்ளையானின் அடிமைகள் மெதுவாக நழுவி வெளியேறினர்.
இம்மாநாட்டுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மலையகம் உட்பட பல பகுதிகளில் இந்து தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவும், முஸ்லிம்கள் சிலரும் சமூகமளித்தனர். மாநாட்டில் கலந்து கொண்டோர் இக்கட்சி தமது சொத்து என்ற வகையில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
இம்மாநாட்டை குழப்ப வேண்டும் என்ற பிள்ளையானில் செயற்பாடு அனைத்தும் தோல்வி கண்டது. மாநாட்டு குழுவே எதிர்பார்க்காத வகையில் மக்கள் பெரும் திரளாக கலந்து சிறப்பித்தனர். மாநாடு பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற்றது. பாவம் பிள்ளையான் இம்மாநாட்டை குழப்ப பல இலட்சம் ரூபாய் செலவு செய்தும் தமது எண்ணம் நிறைவேறவில்லை என்ற வேதனையுடன் தமது சகாக்கள் மீது கோபத்துடன் இருக்கின்றார். என தகவல் கிடைத்துள்ளது. 

இனவழிப்பு குற்றவாளியை அனுமதிக்காதே!லண்டனில் திரண்ட தமிழ் மக்கள்.

பிரித்தானிய அரசி முடிசூட்டிய அறுபதாவது வருட நிறைவுவிழாவே களங்கம் சூழப்போகிறது. அந்த விழாவுக்கு சிங்களதேசத்தின் அதிபரும் பெரும் இனஅழிப்பு ஒன்றின் பிரதான குற்றவாளியுமான மகிந்தராஜபக்ச வருவதை அனுமதிக்க வேண்டாம்.
இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்து தமிழர் பிரதேசங்களில் இன்றும் இராணுவ ஆட்சியை நடாத்திவரும் மகிந்த ராஜபக்ச இந்த விழாவில் கலந்து கொள்வது உலக மானுட பண்புகளுக்கும் மனித உரிமைகளுக்கும் பெருத்த அவமானம் ஆகும்.
அத்துடன் பாரம்பரியம் மிக்க பிரித்தானிய முடியாட்சிக்கும் இது மிகப்பெரும் களங்கத்தையும் வரலாற்று அவமானத்தையும் தந்துவிடும்.
மனிதஉரிமைகளையும் சர்வதேச சட்டங்களையும் காலில் போட்டு மிதித்து அதன்மீது ஏறிநின்று கொடும்ஆட்சி புரியும் மகிந்த ராஜபக்சவை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்கவேண்டாம் எனக்கோரி நடாத்தப்பட்ட இக்கவனஈப்புப் போராட்டத்தில் காவற்துறை அனுமதியளித்திருந்த எண்ணிக்கையை விட பல மடங்குமக்கள் கலங்து கொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

26 மே 2012

லண்டன் வரும் மகிந்தவை விரட்ட அணிதிரள்வோம்!

சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச லண்டன் வருதை எதிர்த்து இன்று பிற்பகல் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிங்களப் பேரினவாதம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர் தாயகத்தில் மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பின் உச்சமாய் 2009 ஆம் ஆண்டில் வகை தொகையின்றி ஒரு இலட்சத்திற்கும் மேலாக தமிழ் மக்களை கொன்று மிகப்பெரும் தமிழின அழிப்பினை செய்த போர்க்குற்றவாளியான சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச லண்டன் வருவதை புறக்கணித்து மேற்கொள்ளப்படும் போராட்டத்தில் பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் பிரித்தானிய தமிழர் ஒன்றியம் கேட்டுள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் பொது எதிரிக்கு எதிராக அணி திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் எனவே இன்று மாலை 4.00 மணியிலிருந்து 7.00 மணிவரை பிரித்தானிய தலைமை அமைச்சரின் காரியாலயம் அமைந்திருக்கும் டவ்னிங் வீதி லண்டன் என்ற இடத்தில் அனைவரையும் கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா வாழ் தமிழ் அமைப்புக்கள், ஆலய, பாடசாலை நிர்வாகங்கள், மற்றும் ஊர் சங்கங்கள், பழைய மாணவர் அமைப்புக்கள் என அனைவரையும் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தெகிவளையில் காவிகள் போராட்டம்,காத்தான்குடியில் தீ வைப்பு,முஸ்லீம்களுக்கும் ஆப்பு!

seithy.com gallery news
தெஹிவளை மிருகக்காட்சி சாலை கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாருர் ரஹ்மான் குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளை எதிர்த்து நேற்று (25.05.2012) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் மதரசாவை அங்கிருந்து அகற்றுமாறு கோசமிட்டதுடன் பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.
அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸ் மதரசா பகுதியில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர். இவ்வார்ப்பாட்டத்தில் ஐம்பது தொடக்கம் நூறு பேர் வரை கலந்துகொண்டனர். மேலும் இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் இந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பி.ப. 2:30 மணியளவில் முச்சக்கர வண்டிகளில் வந்த இனந்தெரியாத நபர்கள் மதரசா மீது கற்களை வீசிவிட்டுச் சென்றிருந்ததுடன் பின்னர் பிற்பகல் 4 மணியளவில் கல்விஹாரவில் இருந்து பிக்குமார் மற்றும் பொதுமக்களைக் கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று புறப்பட்டு மத்ரசாவைத் தாண்டி மிருகக்காட்சி வீதி சந்திக்கு வந்து சேர்ந்தது. குறித்த இடம் மாடுகளை அறுக்கும் மடுவமாக பாவிக்கப்படுவதாகவும் அதை மூட வேண்டும் என்பதும் முக்கியமான கோசமாக ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.
ஜாமியுஸ் ஷபாப் நிறுவனத்தின் காணியில் அமைந்திருக்கும் மேற்படி பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், பதினைந்து வருடங்களாக இவ்விடத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்பதற்றத்தை அடுத்து இவ்விடயத்தை ஆராயவென தெஹிவலை பொலிஸாரால் இன்று தெஹிவளை, கல்கிஸ்ஸை மாநகர சபை கட்டிடத்தில் பிற்பகல் 03.00 மணிக்கு பள்ளிவாயல் நிருவாகிகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கலந்துகொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது. 


காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய காத்தான்குடி அலுவலகம் இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து எரிகப்பட்டுள்ளது. இதனால் அலுவலக கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் அமைக்கப்பட்டிருந்த இவ் அலுவலகம் இன்று மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கபடபடவிருந்நமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

25 மே 2012

செங்கல் ஆலையில் இரகசியமான முறையில் சடலங்கள் எரிப்பு!


செங்கல் ஆலையில் இரகசியமான முறையில் மனித சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளன!இராணுவத் தூபிகளை நிர்மாணிக்க செங்கற்களை உற்பத்தி செய்த அநுராதபுரம் செங்கல் ஆலையொன்றில் கடந்த காலங்களில் மிகவும் இரகிசயமான முறையில் இளைஞர்களின் சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஜெதவனாராம, அபயகிரி போன்ற புனிதத் தளங்களின் புனர்நிர்மாணப் பணிகளுக்கும் ஆலையிலிருந்தே செங்கல் பெறப்படுகிறது. இந்த ஆலை யுனிஸ்கோ நிறுவனத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாகும். ஒரே தடவையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான செங்கற்களை உற்பத்திசெய்யும் வசதிகள் இங்கு காணப்படுகின்றன.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இராணுவ நினைவுத்தூபி நிர்மாணத்திற்குத் தேவையான செங்கற்களை உற்பத்தி செய்வதாகக் கூறி, இந்த செங்கல் ஆலையையும், அதற்குச் சொந்தமான ஏக்கர் கணக்கான காணிகளையும் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பின்னர் ஆலை சிவில் பாதுகாப்பு படையணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்பின்னர் வெளி நபர்கள் ஆலைக்குள் உட்பிரவேசிப்பது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சில சமயங்களில் பாதுகாப்பு அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த காலங்களில் அடிக்கடி வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பல இளைஞர்களின் சடலங்கள் இங்கு எரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலையில் தொடர்ச்சியாக செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுவதால் சடலங்கள் எரிக்கப்பட்டதற்கான எந்தவித தடயமும் கிடைக்காது. இதனாலேயே சடலங்களை எரிக்க இந்த ஆலை தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

உலக நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்த அமெரிக்காவின் 2011ம் ஆண்டுக்கான அறிக்கை நேற்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.200பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 44 பக்கங்களில் விபரிக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனும், ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் மைக்கல் போஸ்னரும் இணைந்து நேற்று வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் அதிபரும், பாராளுமன்றமும் மக்களால் தெரிவு செய்யப்பட்டாலும் அதிபரின் குடும்பமே ஆட்சியில் முழு ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், இரண்டு சகோதரர்கள், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொருளாதார அமைச்சு என இரு நிறைவேற்று அதிகாரமுள்ள பதவிகளை வைத்துள்ளனர்.
மூன்றாவது ககோதரர் நாடாளுமன்றத்தில் சபாநாயகராக உள்ளார். அதிபரின் மகன் உட்பட அவரது உறவினர்கள் முக்கியமான அரசியல் மற்றும் இராஜதந்திர பதவிகளில் உள்ளனர். அதிபர் மற்றும் நாடாளுமன்றத தேர்தல் இரண்டுமே தேர்தல் சட்டங்களை மீறிய மோசடியாகவே இடம்பெற்றன. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்புப் படைகளினதும் அரச ஆதரவுக் குழுக்களும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளையும், கடத்தல், கப்பம் கோரும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளதால் அங்கு மனித உரிமை மீறல் பிரச்சினைகள் பெருமளவில் காணப்படுவதாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற குழுகள் பொதுமக்கள், சமூகசெயற்பாட்டாளர்கள், விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் ஆகியோரை துன்புறுத்தி வருகின்றனர். ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தல்களுக்குள்ளேயே செயற்படுகின்றனர். இலங்கையில் காணாமல் போனோல் பிரச்சினை முன்னைய ஆண்டுகளை போலவே காணப்படுகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். அதற்கு எவ்வித பொறுப்புக்களும் கூறப்படவில்லை. பாதுகாப்புப் படையினர் தடுத்து வைத்திருப்போரை சித்திரவதை செய்கின்றனர். பொதுமக்கள் பலர் கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்படுபவர்களில் சிலர் விசாரணையின் போது மரணமாகியுள்ளனர்.நீதி விசாரணைகளின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்படுகின்றனர். கருத்து வெளியிடுதல், ஊடக சுதந்திரம், ஒன்றிணையும் சுதந்திரம், ஒன்று கூடும் உரிமை நடமாடும் சுதந்திரம் என்பவற்றுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. சிறுபான்மைத் தமிழர்களுக்கெதிரான பாகுபாடுகள் அதிகமாக காணப்படுகின்றன.
மனித உரிமை மீறல்களால் எண்ணிலடங்காத தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல்கள், படையினரின் சித்திரவதைகள், ஊழல் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டவர்களை அதிகாரபூர்வமாக தண்டிப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. ஏனெனில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பிருப்பதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மே 2012

மனித உரிமை விவகாரங்களில் நேர்மையில்லாத உலக நாடுகள்!

உலகின் பெரும்பாலான நாடுகள் மனித உரிமை விவகாரங்களில் நேர்மையாகச் செயற்படவில்லை என
சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பில், உலக நடுகளின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என வருத்தம் தெரிவித்துள்ள அவ்வமைப்பு, 91 நாடுகளில் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதெனவும், 101 நாடுகளில் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதெனவும், சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய கிழக்கிலும், வட ஆபிரிக்காவிலும் இடம்பெற்ற மனித உரிமைக்கான ஜனநாயகப் போராட்டங்களை, பல நாடுகள் சந்தர்ப்பவாத அடிப்படையில் பயன்படுத்திக் கொண்டதாகவும், சிறிலங்கா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சலீல் செட்டி, பக்கச்சார்பான முறையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கருத்துக்களை உலக நாடுகள் வெளியிடுவது பொருத்தமற்றது எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை நான் பார்த்தேன்!

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு, நீண்ட நாட்களாகப் பாதுகாப்பு வழங்கிவரும் படையணியாக இம்ரான் பாண்டியன் படையணி இருந்தது யாவரும் அறிந்த ஒரு விடையம். இது இராணுவத்துக்கும் தெரிந்த தகவல்
தான். தலைவரின் பாதுகாப்பை இப்படையணியூடாகப் பாதுகாத்து வந்தவர்களுள் மிக முக்கிய நபராக சொர்ணம் கருதப்படுகிறார். ஆனால் பலர் அறிந்திருக்காத விடையம் ஒன்று உள்ளது, ஏன் ..விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலர் கூட இதனை அறிந்திருக்கவில்லை எனலாம். அது என்னவென்றால் 2002ம் ஆண்டு இம்ரான் பாண்டியன் படையணி பிரிக்கப்பட்டு, அதில் உள்ள சிலரைக் கொண்டு ராதா வான்காப்பு படையணி பலப்படுத்தப்பட்டது. பின்னர் அப்படையணியே தலைவரின் பாதுகாப்பை கவனித்துவந்தது.
இவர்களுக்கே சைவர் (0 0) இலக்கத்தில் ஆரம்பிக்கும் தகடுகள் வழங்கப்பட்டது. (விடுதலைப் புலிகள் தங்கள் கழுத்தில் நச்சுக் குப்பியோடு சேர்த்து இத் தகடுகளை அணிந்திருப்பது வழக்கம்) இவ்வாறு சைவர் தகடுகள் வழங்கப்பட்ட போராளிகளே முள்ளிவாய்க்கால்வரை தேசிய தலைமையை பாதுகாத்து வந்துள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை தான் கண்டு அவரோடு பேசியதாக, சைவர் இலக்க தகட்டுடன் போராடி பின்னர் மீண்டு வந்துள்ள போராளி ஒருவர் அதிர்வுக்குத் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இருந்து, நந்திக்கடல் பக்கமாகச் செல்ல ஒரு பாதை இருப்பதாகவும், அப்பாதையில் உண்டியல் பிள்ளையார் கோயில் என்று ஒரு கோவில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கறுப்பு நிறம் கொண்ட, சேறு சகதிகளில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிளில் வந்த பொட்டு அம்மான், கடல் மூடப்பட்டுவிட்டதா என்று தன்னிடம் கேட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனூடாக, ஆனந்தபுரம் சமருக்குப் பின்னர், பொட்டம்மானை தாம் காணவில்லை என்றும், முள்ளிவாய்க்கால் பகுதியில் பொட்டம்மான் இருக்கவில்லை என்ற கூற்றுக்களில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது. ராதா வான்காப்பு படைப்பிரிவில் இருந்து சிலர் மற்றும் தலைவரின் மகனின் பாதுகாப்பு பிரிவில் இருந்து சிலரும் சேர்ந்து ஒரு குழுவாகச் சென்று, இராணுவ முற்றுகையை உடைத்து வெளியேற முற்பட்டுள்ளனர். இந் நிலையில் அவர்களை இராணுவம் சுற்றிவளைத்துவிட்டது. (இதில் தலைவரின் மகன் சாள்ஸும் அடங்குவார்) இக் குழுவில் இருந்த எழில் வண்ணன் என்பவர், தனது சட்டலைட் தொலைபேசியூடாக டென்மார்க்கில் உள்ள உற்ற நண்பரைத் தொடர்புகொண்டு, தாம் சுற்றிவளைக்கப்பட்டதை விபரித்துள்ளார். அச் சுற்றிவளைப்பில் இருந்து தாம் தப்பிக்க முடியாது எனவும், எல்லாம் முடிந்துவிட்டது... ஆனால் போராட்டத்தை புலம்பெயர் மக்களே இனிக் கொண்டு நடத்தவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இருந்து, தன்னுடன் பேசிவிட்டு புறப்பட்ட பொட்டம்மானைப் பார்த்து என்ன செய்யப்போகிறீர்கள் என நான் கேட்டேன். போராடுவோம் இறுதிவரை போராடுவோம். கடல் மூடப்பட்டால், பிறிதொரு பகுதியை உடைக்க முடியும் என்று சற்றும் மனம் தளராதவராய் அவர் கூறிவிட்டு, நந்திக்கடல் பக்கமாகச் சென்றார் என்று சைவர் இலக்க தகடு கொண்ட போராளி ஒருவர் மேலும் தெரிவித்தார். தேசிய தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சுமார் 600க்கும் மேற்பட்ட போராளிகள் காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். அவர்கள் அனைவரும் இலக்கை அடைந்தார்களா என்பது தான் தனக்குத் தெரியவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் பொட்டம்மான் குறித்து முன்னர் வெளியான பல தகவல்கள் பிழையானவை என்பது மட்டும் தற்போது நிரூபனம் ஆகியுள்ளது எனலாம். அவர் தேசிய தலைவரோடு முள்ளிவாய்க்காலில் நின்றிருந்தது உறிதிப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி:அதிர்வு

23 மே 2012

ஜெனிவா தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம்!


சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எதைக் கூறியிருந்தாலும், தாம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று நண்பகல் வொசிங்டனில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட்டிடம், ஹிலாரி கிளின்ரன் – ஜி.எல்.பிரிஸ் சந்திப்பின் இறுதியான விபரங்கள் உள்ளதா என்று கேள்வி எழுப்பட்டது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வூட்ரோ வில்சன் நிலையத்தில் உரையாற்றியபோது அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா நிராகரிப்பதாகக் கூறியதை செய்தியாளர்கள் அவரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அதற்குப் பதிலளித்த இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட்,
 “சிறிலங்கா சந்திப்புத் தொடர்பாக அழகாகவும் விரிவாகவும் கடந்த வெள்ளிக்கிழமை பேசியதாக நினைக்கிறேன். அப்போது முழுமையான விபரங்களை வெளிப்படுத்தினேன்.
நாங்கள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னால் நிற்கிறோம். அதன்படியே செயற்படுகிறோம். அதையே தொடர்வோம்“ என்று கூறியுள்ளார்.
அதேவேளை நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் சரத் பொன்சேகா விடுதலை தொடர்பாக அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

22 மே 2012

சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபட முடியாது!


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராகவோ, மாகாணசபை உறுப்பினராகவோ பதவியேற்க முடியாது என்று சட்டமா அதிபர் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு அளித்துள்ளார்.
ஆனாலும்,இலங்கையின் அரசியலமைப்பின் படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள் ஏழு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவோ அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடவோ முடியாது. பொதுமன்னிப்பு சரத் பொன்சேகாவின் சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தை மட்டுமே குறைத்துள்ளது.
அவரது சிறைத்தண்டனை குறைக்கப்படவில்லை. அவரது சிறைத்தண்டனைக்காலம் குறைக்கப்பட்டால் தான் அரசியலில் ஈடுபட முடியும். என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சரத் பொன்சேகாவின் குடியியல் உரிமைகளை முழுமையாக மீளப்பெறுவதற்கு அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தப் போவதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்று குடியியல் உரிமைகளை இழந்தாலும் கூட, அவற்றை மீளவழங்கும் வகையில் ஒருவருக்கு முழுமையான பொதுமன்னிப்பு அளிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
சந்திரிகா ஆட்சிக்காலத்தில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்த தற்போதைய அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இத்தகைய பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார்.
ஆனால் அத்தகைய முழுமையான பொதுமன்னிப்பு சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

21 மே 2012

கிலாரியிடம் பொய் கூறினார் பீரிஸ்!

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனைச் சந்தித்தபோது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உண்மையான தகவல்களை கூறவில்லை என்றும் அவர் புள்ளிவிபரங்களைத் திரித்துக் கூறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஹிலாரி கிளின்டனுடன் நடத்திய பேச்சுக்களுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த போது, நாட்டின் ஏனைய பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8 சதவீதமாககு இருக்கும் போது, போருக்கு பின்னரான காலகட்டத்தில் வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி 22.9 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பொருளியல் ஆய்வாளரான முத்துக்கிருஸ்ண சர்வானந்தா, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் கருத்து புள்ளிவிபர தகவல்களை திரிபுபடுத்தி, சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் தந்திரோபாய வழிமுறையாகவே கருதப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
“ஹிலாரி கிளின்டனுடனான சந்திப்பின் போது, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு ஒரு சில புள்ளிவிபரங்களின் அடிப்படையிலான தகவல்களையும், வடமாகாணத்தை பொறுத்தவரையில் வேறு சில புள்ளிவிபரங்கள் அடிப்படையிலான தகவல்களையும் அவர் வழங்கியுள்ளார்.
சிறிலங்காவின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி 2010ம் ஆண்டு கூடுதலான வளர்ச்சியை கண்டுள்ளது உண்மைதான்.
என்றாலும், இது புது விடயம் அல்ல. போர்நிறுத்த காலத்தில் கூட இப்படியான ஒரு சூழல் ஏற்பட்டது.
ஆனால் போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்ட அந்த பொருளாதார வளர்ச்சி நிலைத்து நிற்கவில்லை.
அதேபோல் வடமாகாணத்திலும் பொருளாதார வளர்ச்சி தொடருமா என்பதும் கேள்விக்குறியே.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியதில் சற்றுக் கள்ளத்தனம் இருப்பதாக தான் கருதுகிறேன்.
அரசியல் விவகாரங்கள் மற்றும் மனிதஉரிமை விபரங்களை திரிபுபடுத்திக் கூறும் தற்போதைய ஆட்சியாளர்களின் பரப்புரை உத்தியாகவே பீரிசின் கருத்துக்கள் உள்ளன.
சிறிலங்கா அரசு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சி தான் முக்கியம் என்று பரப்புரை செய்து வருகிறது.
அதற்காக வெளிநாடுகளிடமிருந்தும் உதவிகளை வெளிப்படையாக கேட்டு வருகிறது.
அதனை ஆதரிக்கும் வகையில் இப்படியாக திரிபுபடுத்தப்பட்ட புள்ளிவிபரங்களை வெளியிட்டு அவர்களை தவறான வழியில் நம்ப வைக்கும் நடைமுறையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதே கருத்தையே ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோவும் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 மே 2012

இனவழிப்பு குற்றவாளிகளில் ஒருவரான சரத்பொன்சேகா விடுதலையாகிறார்!

இனவழிப்பு குற்றவாளிகளில் ஒருவரான சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றிரவு கையெழுதிட்டுள்ளதாக ‘சிலோன் ருடே‘ ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு கட்டாருக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் சிறிலங்கா அதிபர் இந்த ஆவணங்களில் கையெழுத்திட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் நாளை நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும் என்றும் அதன்பின்னர் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

19 மே 2012

அஞ்சலிக்கே தடைபோடும் நீங்கள் எவ்வாறு பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள்?


அமரத்துவம் எய்திய எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடத் தடைபோடும் நீங்கள் எப்படி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போகிறீர்கள்? என வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியாவில் நேற்று நடைபெற்ற முள்ளிவாய்க்காவில் மரணமடைந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கேள்வி எழுப்பினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா கிளை இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்விற்கு சிவசக்தி ஆனந்தன் தலைமை தாங்கினார். நிகழ்வில் வீ.ஆனந்தசங்கரி, வினோநோகராதலிங்கம், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்விற்குத் தலைமைதாங்கி உரையாற்றும்போதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
"முள்ளிவாய்க்காலில் அமரத்துவம் எய்திய எமது மக்களுக்கு மூன்றாவது ஆண்டாகவும் நாம் பல்வேறு நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வை இதே மண்டபத்தில் நடத்துகின்றோம். சிவப்பு வர்ணத்தில் துண்டுப்பிரசுரம் மூலமாகவும், வவுனியாவின் பலபாகங்களில் திடீர் வீதிச்சோதனைகளை ஏற்படுத்தியும் இன்னபிற யுக்திகளைக் கையாண்டும் எமது மக்கள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலத்துவதைத் தடுப்பதற்கு எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் எமது மக்கள் அத்தனைத் தடைகளையும் தகர்த்தெறிந்து தமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற இங்கு கூடியுள்ளனர்.
இங்கு ஏராளமான உளவுத்துறையினர் கூடியுள்ளீர்கள். நிழற்படம் மற்றும் காணொளிகளை எடுக்கின்றீர்கள். அஞ்சலி செலுத்திய தாய்மார்களும் சகோதரிகளும் கண்ணீர்விட்டு அழுவதையும் ஊடகத்துறையினரின் ஒளிப்பதிவுக் கருவிகள் அவர்களை நோக்கித் திரும்பியதை நீங்கள் பார்த்ததுடன் பதிவும் செய்திருக்கிறீர்கள். இதனை ஜனாதிபதியிடம் காண்பியுங்கள். இவ்வளவு சோகத்தைத் தேக்கி வைத்து அவர்கள் மனத்துக்குள் குமுறுவது அவர்களின் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். இனியாவது எமது மக்கள் அஞ்சலி செலத்துவதைத் தடுக்க வேண்டாம் என்று அவருக்கு விபரித்துச் சொல்லுங்கள்.
நாங்கள் எமது மக்கள் மீண்டும் ஆயுதப்போராட்டத்திற்குப் போவதற்காக இந்நிகழ்வை ஏற்பாடு செய்யவில்லை. இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்நீத்த மக்களின் ஆத்ம சாந்திக்காகவே இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். அவர்கள் தமது கவலை மற்றும் துக்கங்களைப் பகிர்ந்துகொண்டு, அவர்களது மனப்பாரத்தை இறக்கிவைத்து, ஒரு புதிய ஜனநாயக அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதற்காகவே நாம் இந்நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளோம்.
இந்நிகழ்வைத் தடுப்பதினூடாக நீங்கள் எங்களை மீண்டும் மீண்டும் துன்பத்தில் ஆழ்த்துகின்றீர்கள். எங்களது அஞ்சலியைக்கூடச் செலுத்தவிடாமல் தடுக்கும் நீங்கள் எப்படி எங்களது பிரச்சினையைத் தீர்க்கப்போகிறீர்கள்?
இன்று ஒரு முக்கியமான நாள். எமது நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அமெரிக்க வெளியுறவு அமைசச்ர் கிலாரி கிளிண்டனை இன்றுதான் சந்திக்கின்றார். இந்தச் சந்திப்பையும் இந்தநாளையும் ஒப்பிட்டுப் பார்த்தீர்களானால் இதன் உட்பொருள் நன்கு விளங்கும்.
முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் சிந்திய கண்ணீரும், செந்நீரும் இன்று சர்வதேச சமூகம் எம்மைத் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. எமது பிரச்சினை அவர்களது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் நல்லிணக்கத்தையும், நல்லுறவையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக இந்த அரசாங்கம் முன்பைவிட மோசமான அடக்குமுறைகளைக் கட்டவிழித்துவிட்டுள்ளதுடன், எம்மை அடிமைப்படுத்தும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.
இந்த அரசு காணிஸ்வீகரிப்பு, மீன்பிடிப்பதற்குத் தடைவிதித்தல், எமது பகுதிகளில் வலுக்கட்டாயமாக புத்தகோயில்களை நிறுவுதல், திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துதல், போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு எம்மை எமது பாரம்பரிய நிலப்பரப்பிலேயே சிறுபான்மையினராக்கும் நிகழ்ச்சிநிரலை மேற்கொண்டுள்ளது. இதற்கு வசதியாக சிங்கள அதிகாரிகளை நியமிக்கின்றது.
இவற்றிற்கெதிராக நாம் ஜனநாயகரீதியில் குரல்கொடுப்பதற்கு எமது அமைப்பு வலுவானதாக இருக்க வேண்டும். ஆனந்தசங்கரி கூறியதுபோல் தமிழ் மக்களின் அரசியல் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான அமைப்பாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் திடசங்கற்பம் ஏற்க வேண்டும். அதுவே நாம் முள்ளிவாய்க்காலில் அமரத்துவம் எய்திய எமது உறவுகளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். இவ்வாறு சிவசக்தி ஆனந்தன் உரையாற்றினார்.
முள்ளிவாய்க்காலில் அமரத்துவம் அடைந்தவர்களுக்கான மூன்றாமாண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று வவுனியாவிலும் நடைபெற்றது. அதன்போது ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவர்களது ஆன்மா சாந்தியடைய தீபமேற்றி வழிபட்டனர் மெழுகுவர்த்தி தீபமேற்றிய பெண்கள் சோகம் தாளாமல் கண்ணீர்விட்டு அழுத காட்சி அனைவரையும் நெகிழச்செய்தது. ஆண்கள் தங்களது துக்கத்தையும் சோகத்தையும் நெஞ்சில் சுமந்தபடி தீபமேற்றினர்.
இதன்போது உரையாற்றிய சிவாஜிலிங்கம், சர்வதேச போர்க்குற்ற விசாரணையே முள்ளிவாய்க்காலில் மரணித்த மக்களுக்கான நியாயமான தீர்வாக அமையும். அரசியல் தீர்வு என்பது எமது அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக மட்டுமே அமையும். சர்வதேச போர்க்குற்ற விசாரணையே மரணித்த மக்களுக்கான உண்மையான நீதியை வழங்க முடியும் என்று கூறினார்.  

18 மே 2012

படைகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் யாழ்,பல்கலையில் அஞ்சலி நிகழ்வுகள்!


ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 3ம் ஆண்டு நினைவு தினம் பலத்த இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.40 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு 12.15 வரை தொடர்ச்சியாக நடைபெற்றது.
போரில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கும் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கும் இங்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அவர்கள் சார்பாக மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டும் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.
நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கலந்து கொண்டன இவ்வஞ்சலி நிகழ்வில், மாணவ மாணவிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றதோடு பேராசிரியர் ஒருவரும் உரையாற்றினார்.
இதேவேளை, இவ்வஞ்சலி நிகழ்வினை ஒழுங்கு செய்த மாணவர் ஒன்றியச் செயலாளர் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் வைத்து, இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டும், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் எவையும் தடையின்றி நடைபெற்றன.

லண்டன் விவாதத்தை எட்டரை இலட்சம் பேர் பார்த்தனர்!

விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசபடைகள் நடத்திய போர் முடிவுக்கு வந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், சிறிலங்கா விவகாரம் அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள், அதற்கான பொறுப்புக்கூறல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தல் ஆகியன குறித்தும், போருக்குப் பிந்திய நல்லிக்க சூழல் குறித்தும் அனைத்துலக அளவில் விவாதங்கள் எழுந்துள்ளன.
முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் போர் குறித்து அனைத்துலக அளவில் விவாதங்கள், கருத்தரங்குகள் மற்றும் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதுடன், அனைத்துலக ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
“சிறிலங்கா - நல்லிணக்கமும் நீதியும்“ என்ற தலைப்பில் நேற்றுமுன்தினம் இரவு லண்டனில் உள்ள புரொன்ட்லைன் கிளப்பில் விவாதம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
பிபிசியில் ‘ஹாட்ரோக்‘ நிகழ்ச்சியை வழங்கும் ஸ்டீபன் சக்குர் இந்த விவாதத்துக்குத் தலைமை தாங்கினார்.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படங்களின் தயாரிப்பாளரும் இயக்குனருமான கல்லும் மக்ரே, தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் பேச்சாளர் ஜான் ஜனநாயகம், அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்கா விவகார ஆய்வாளர் யோலன்ட் போஸ்டர், சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் ராஜீவ விஜேசிங்க, சிறிலங்கா அதிபரின் இணைப்பாளர் அருண் தம்பிமுத்து ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.
இந்த விவாதம் அனைத்துலக அளவிலான பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த விவாத அரங்கம் முன்பதிவுகளால் ஏற்கனவே நிறைந்து விட்டதால், விவாதத்தை இணையத்தில் நேரலையாகப் பார்க்குமாறு புரொன்ட்லைன் கிளப் அறிவித்திருந்தது.
நேற்று முன்தினம் இரவு பிரித்தானிய நேரப்படி இரவு 7மணிக்கு ஆரம்பமாகி சுமார் 2 மணிநேரம் இடம்பெற்ற இந்த விவாதத்தை 844,042 பேர் இணையம் மூலம் நேரலையாகப் பார்வையிட்டுள்ளனர்.
இதுவே இந்த விவகாரம் அனைத்துலக அளவில் எந்தளவுக்கு கவனத்தைப் பெற்றுள்ளது என்பதற்காக ஆதாரமாக அமைந்துள்ளது.
அதுவேளை போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறியுள்ளதைச் சுட்டிக்காட்டும் வகையிலும், பொறுப்புகூற வலியுத்தியும், அனைத்துலக ஊடகங்கள் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
புரொன்ட்லைன் கிளப்பில் இடம்பெற்ற விவாதத்தை பார்வையிட இங்கே சொடுங்குங்கள்- http://www.youtube.com/watch?v=VBcVbFeuVtg

17 மே 2012

மே 18 மாலை 6.10மணிக்கு சுடரேற்றுங்கள்!-யாழில் “மே 18 இயக்கம்”!


May copyபோரில் ஆகுதியாகிப்போன எம் தமிழ் உறவுகளை நினைந்து மே 18ஆம் நாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி அதனை கடைப்பிடிக்க உறுதி பூண்டுள்ளோம் அதன் முதல் படியாக இந்த ஆண்டு அனைத்து மக்களையும் தமது வீடுகளில் மாலை 6.10 மணிக்கு விளக்குகளை ஏந்தி நினைவேந்தல் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இருந்து மே 18 என்ற இயக்கம் என்ற பெயரிலான அமைப்பு அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்திருக்கின்றது.
அந்த அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைக்கான அறிமுக மடலில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டம் மே-18ஆம் நாள் முள்ளிவாய்க்காலில், அதற்கு முன்னதான பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி உயிர்களின் காவெடுப்புகளுடன் முடிவுக்கு வந்தது. ஆனால், அதற்கான ஆற்றுப்படுத்தல்களையோ ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளையோ முன்னெடுக்க முடியாத அவல நிலையில் தமிழ் மக்கள் கடந்த மூன்றாண்டுகளாகத் தவித்து வருகிறார்கள்.
அரசியல்வாதிகளால் கடந்த ஆண்டுகளில் முன்னெடுக்க முயற்சிக்கப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் இராணுவத்தின் அடக்குமுறைகளால் நசுக்கப்பட்டன. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழர்களாகிய நாம் ஒன்றிணைந்து ’18 மே இயக்கம்’ ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.
போரில் ஆகுதியாகிப்போன எம் தமிழ் உறவுகளை நினைந்து மே 18ஆம் நாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி அதனை கடைப்பிடிக்க உறுதி பூண்டுள்ளோம் அதன் முதல் படியாக இந்த ஆண்டு அனைத்து மக்களையும் தமது வீடுகளில் மாலை 6.10 மணிக்கு விளக்குகளை ஏந்தி நினைவேந்தல் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
என்று தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு,
18 மே – கரிநாள்
தமிழர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட  வன்துயரங்கள் ஊடாகப்  பயணித்த காலம்  மூன்றாண்டுகளைக் கடக்கின்றது. முள்ளிவாய்க்காலில் மூர்ச்சையாகிப் போனவைகளுக்கு  எந்தப் பெறுமதியையும் தராத உலகம் நம்மை  வெறுங்கையோடு பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்கின்றது.
இந்த அலைந்துழல்வு வாழ்க்கைப் பாகத்தில் நம்மிடம்  எஞ்சியிருப்பதெல்லாம் எம் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமைகளின் நினைவுகள் மட்டும்தான்.   முள்ளிவாய்க்கால் பறித்துக் கொண்டவைகளிலிருந்து மிச்சமாய்   இருக்கும் அந்த நினைவுகளையாவது நாம்  இறுகப் பற்றிக் கொள்ள முயற்சிக்கின்றோம்.  இழந்தவைகளும் அதன் துயரவலிகளும் அந்த நினைவுகளால்  ஒத்தடம் பெறுவதை உணர்கின்றோம்.
ஆறாத வடுவாகி நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை 40000 தமிழ் உயிர்களைத் தின்றது. இந்தக் கணிப்பு ஐ.நாவினுடையது. களத்தில் நின்ற தமிழர்களுக்குத் தெரியும் இன்னும் எத்தனை ஆயிரம் கொலைகள் சமநேரத்தில் நிகழ்ந்தனவென்று. தாயின் கருவில் இருந்த  சிசு தொடக்கம், நாளை கட்டையேறத் தயாராயிருந்த மூத்தோர் வரைக்கும் கண்மூடித்தனமாகக்  கொன்றொழித்தவர்கள் வெற்றியைக் கொண்டாடுகையில், நாம் ஒன்றுகூடி ஒரு துளிக் கண்ணீரைக் காணிக்கையாக்கும் வழி வகையின்றி நிற்கிறோம். இந்தக் காயங்களை    சொற்களுக்குள்அடக்கி விடமுடியாது.  நம் அவலத்திற்கு மொழியில்லை. அதனால்தான் அது இன்னமும் மௌனித்தே கிடக்கின்றது.
இந்த  நாள்களில், நம்மிடம்  இருக்கும் துயர்  வலிமைபெறவேண்டும்.  முள்ளிவாய்க்கால் தந்த  துயர நினைவுகளை  நினந்துருகுதல்  அந்த வலிமையைத் தரும் கணங்களாக இருக்கும். மே 18 இல் முள்ளிவாய்க்காலில் மரணித்த அனைத்து மக்களின் மரணப் பெறுமதியையும் கனதியாக்கி, அன்றைய தினத்தை கரிநாளாகக் கடைப்பிடிப்போம். அதற்காக உங்கள் வீடுகளில்  மே 18 ஆம் திகதி மாலை 6.10 மணிக்கு சுடரேற்றுங்கள்.  அந்தக் குறுகிய  வன்முறை வெளியில் தம்மை  ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்காக ஒரு நிமிட   மௌன வணக்கத்தைச்   செலுத்துங்கள். இந்த நாள்களில்  மௌனித்த  ஆன்மாக்கள் மேன்மை பெறட்டும். நமக்கு வலிமை தரட்டும்.
நன்றி

அனோமா பொன்சேகாவை தேடிச்சென்று சந்தித்தார் மகிந்த!


சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
நேற்றுமாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலசின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, அவசரமாக லண்டனில் இருந்து திரும்பிய ரிரான் அலஸ் நேற்றுக்காலை அலரிமாளிகையில் சிறிலங்கா அதிபரை சந்தித்து, சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகப் பேசியிருந்தார்.
இதையடுத்தே ரிரான் அலசின் வீடு தேடிச் சென்று அனோமா பொன்சேகாவிடம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார்.
அலரிமாளிகையில் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபருடன் பேச்சு நடத்திய பின்னர் ரிரான் அலஸ், நவலோகா மருத்துவமனைக்குச் சென்று சரத் பொன்சேகாவை சந்தித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட்டவுடன் பொன்சேகா விரைவில் விடுவிக்கப்படுவார்“ என்று கூறியிருந்தார்.
“சில சிறிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இன்றுகாலை நான் சிறிலங்கா அதிபரைச் சந்தித்தேன். இந்த விடுதலை தொடர்பாக எந்தவொரு தரப்பும் நிபந்தனை விதிக்கவில்லை“ என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ரிரான் அலசின் வீடு தேடிச்சென்று அனோமா பொன்சேகாவைச் சந்தித்திருப்பது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது விடுதலை தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம் தானோ தனது குடும்பத்தினரோ மண்டியிடப் போவதில்லை என்று சரத் பொன்சேகா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அனோமா பொன்சேகாவை அலரி மாளிகைக்கு அழைத்துப் பேசும் முயற்சிகள் தோல்வி கண்ட நிலையிலேயே, அவரைத் தேடிச்சென்று மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் இவ்வாறு படியிறங்கிப் போனது ஏன் என்ற கேள்வி கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

16 மே 2012

தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்கவேண்டும்-மனோ கணேசன்.


ஆண்டாண்டுகாலமாக சிறைவாழ்க்கை வாழும் தமிழர்களதும், அவர்களது குடும்ப உறுப்பினர்களதும் கண்ணீரை துடைப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஆகியோர் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
சரத் பொன்சேகா சிறைக்கு போக முன், சிறை வாழ்க்கை அனுபவிக்க தொடங்கிய தமிழ் அரசியல் கைதிகள், இனி சரத் பொன்சேகா விடுதலை ஆன பின்னரும் தொடர்ந்து சிறையில் இருக்கப்போவது, ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயம் அல்ல.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பான போராட்டங்களில் நாம் தொடர்ந்து பங்களித்துள்ளோம். இன்று அவர் விடுதலை செய்யப்படுவதற்கான சூழல் உருவாகி இருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் எமது மகிழ்ச்சி முழுமையானது அல்ல.
நீண்ட காலமாக கொழும்பு, கண்டி, நீர்கொழும்பு, அனுராதபுரம், யாழ்ப்பாணம், பூசா ஆகிய சிறை கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறை கைதிகள் பிரச்சினை முற்று பெறுவதன் மூலமே அரசியல் கைதிகள் பிரச்சினை இந்நாட்டில் முழுமையாக முடிவுக்கு வர முடியும்.
சரத் பொன்சேகாவின் விடுதலைக்கு அமெரிக்க, இந்திய அரசுகளின் அழுத்தங்கள் காரணம் என சொல்லப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் கைதிகளின் மிக நீண்ட நாள் பிரச்சினைகளுக்கும் அமெரிக்க, இந்திய அரசுகள் உரிய அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்தை இந்நாடு புரிந்து கொள்ள வேண்டும். மலையகம், வட-கிழக்கு, கொழும்பு ஆகிய அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த தமிழர்கள் பலர் பயங்கரவாதத்திற்கு ஒத்தாசை புரிந்தார்கள் என்ற சந்தேகங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறைவாசம் அனுபவிக்கின்றார்கள்.
இவர்களில் ஒரு சிலர் மீது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பலர் தொடர்பான விசாரணைகள் முடிவடையவில்லை. இன்னும் சிலரின் வழக்குகள் நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்படுகின்றன. இதில் பெண்களும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். இந்து-கிறிஸ்தவ மத துறவிகளும் இருக்கின்றார்கள்.
திருமணம் செய்த நிலையில் சடுதியாக கைது செய்யப்பட்டவர்களும் இருக்கின்றார்கள். பலரது இளமைகாலம் முழுக்க சிறையில் முடிந்து போயுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடுபவர்களும் இருக்கின்றார்கள்.
இவர்கள் அனைவரையும் ஒரேயடியாக ஒரே தினத்தில் விடுதலை செய்யுங்கள் என நாம் கோரவில்லை. இவர்கள் தொடர்பில், விசேட நீதி மன்றம் அமைக்கப்பட்டு, துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நீண்ட நாட்கள் சிறையில் இருந்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும். ஏனையோர் புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட வேண்டும். இதுவே மக்கள் கண்காணிப்பு குழுவின் கோரிக்கை.
இந்த தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அக்கறைகொள்ளும்படி எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் கோரியுள்ளேன். கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் இது தொடர்பில் அக்கறை காட்ட வேண்டும்.
பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசாங்கத்திற்கு இந்த விவகாரத்தை முடிவிற்கு கொண்டு வரும்படி கூட்டமைப்பு சொல்ல வேண்டும். இது தொடர்பில் உரிய அழுத்தங்களை பிரயோகிக்கும்படி நான் இன்று இலங்கையின் அமெரிக்க, இந்திய தூதுவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் நீடிப்பு?

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு அனுமதி தருமாறு, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஐ.நா பொதுச்சபையிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அவர் மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பணியாற்ற இணங்கியுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூனின் பணியகம் அறிவித்துள்ளது.
தென்னாபிரிக்க நீதியாளரான நவநீதம்பிள்ளை, 2008ம் ஆண்டில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளராகப் பதவியேற்றிருந்தார்.
இவர் இந்தப் பதவியை ஏற்க முன்னர், நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அமர்வின் நீதியாளராக பணியாற்றியிருந்தார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டு வரும் நவநீதம்பிள்ளை, பாரபட்சமாக நடந்து கொள்வதாக சிறிலங்கா அரசினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருபவராவார்.
நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைவதையிட்டு சிறிலங்கா நிம்மதியடைந்திருந்த நிலையில், அவருக்குப் பதவிநீடிப்பை வழங்க பான் கீ மூன் அனுமதி கோரியிருப்பது சிறிலங்காவை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

15 மே 2012

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கும் தீர்வு வேண்டும்-அமெரிக்கா!

சர்வதேச உதவிகள் மூலம் பொருளாதார அபிவிருத்தி குறித்து அக்கறை காட்டி வரும் இலங்கை, அதேஅக்கறையோடு போர் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்த அரசியல் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.. 
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் ஜெனிவா தீர்மானம் தொடர்பான செயல்திட்டங்கள் பற்றி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் கேள்வி எழுப்பவுள்ளார்.. 
இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ள அமைச்சர் பீரிஸ் இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய கருத்தரங்கில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் கலாநிதி போல் காட்டர் இதனை தெரிவித்தார்.. 
அவர் மேலும் கருத்து தெரிவிக்ககையில்: தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேசி இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண்பதில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் அது பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பாக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்து. 
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்த போதிய கால அவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டது. எனினும் கால அவகாசம் போதாது என இலங்கை அரசு கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகள் தேவைகள் நிவர்த்தி செய்யத் தவறியமையே இனப்பிரச்சினை ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது... 
ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நல்லிணக்கம் ஏற்படுவதாக அமையும். எனினும் இந்த அறிக்கையில் பொறுப்புக் கூறல், சர்வதேச மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை தொடர்பாக போதியளவாக இல்லை என்பது எமது கருத்தாக உள்ளது. 
ஆணைக்குழுவின் சிபார்சுகளை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த தவறியதன் காரணமாகத் தான் அமெரிக்கா உள்ளிட்ட 39 நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தீர்மானத்தை நிறைவேற்றின. இந்த விடயம் தொடர்பாக சில ஊடகங்களும் சிலரும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வந்தனர்.  
இந்தப் பிரேரணையில் மூன்று முக்கிய விடயங்கள் உள்ளன. அதில் ஒன்று ஆணைக்குழுவின் சிபார்சுக்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தல், இரண்டாவது, விசாரணைகள் மேற்கொள்ளும் செயல்திட்டத்தை இலங்கை அரசு முன்வைக்க வேண்டும், 
மூன்றாவது, ஐக்கிய நாடுகள் நவநீதம்பிள்ளை இலங்கை அரசுடன் கலந்துரையாடி தொழில் நுட்ப உதவிகளை வழங்குதல் என்பனவாகும். 
இந்த விடயங்கள் தொடர்பாக 2013 இல் இடம்பெறும் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை தடைப்பட்டதற்கு நாம் வருந்துகின்றோம். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகளுடன் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் பங்குபற்ற முடியும் என்று கூறியுள்ளது, இதனை நாம் வரவேற்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசித் தான் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாகும். அரசியல் தீர்வைப் பெற எமது உதவிகளை வழங்குவோம். என்றும் அவர் குறிப்பிட்டார்..

14 மே 2012

சிறீலங்கா தொடர்பான விவாதம் ஒன்று லண்டனில் நடைபெறவுள்ளது!

சிறிலங்காவின் கொலைக்களங்களின் பாதிப்பும், நாட்டின் இன்றைய நிலையும்‘ என்ற தலைப்பிலான விவாதம் ஒன்று பிரித்தானியாவில் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
லண்டனில் உள்ள ஒரே ஊடகக் கழகமான ‘புரொன்ட்லைன் கிளப்‘ இந்த விவாத நிகழ்வை வரும் 16ம் நாள் மாலை 7 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
80 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் பேர் வரையிலானோர் சிறிலங்காவில் மரணமாக காரணமாக அமைந்த - 26 ஆண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர், முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளாகியுள்ள நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான கேள்விகளும், அதற்கு எவ்வாறு பதிலளிக்கவுள்ளனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக ‘புரொன்ட்லைன் கிளப்‘ தெரிவித்துள்ளது.
‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படங்கள் இரண்டும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளின் முக்கியமான ஆதாரங்கள் என்றும், பொதுமக்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களையும் ஏனைய கொடூரங்களையும் இது வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாகவும் ‘புரொன்ட்லைன் கிளப்‘ குறிப்பிட்டுள்ளது.
பிபிசியில் ‘ஹாட்ரோக்‘ நிகழ்ச்சியை வழங்கும் ஸ்டீபன் சக்குர் இந்த விவாதத்துக்குத் தலைமை தாங்குவார்.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படங்களின் தயாரிப்பாளரும் இயக்குனருமான கல்லும் மக்ரே, தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் பேச்சாளர் ஜனநாயகம், அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்கா விவகார ஆய்வாளர் யோலன்ட் போஸ்டர், சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் ராஜீவ விஜேசிங்க ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள சிறிலங்கா தூதுவர் கிறிஸ் நொனிசும் ஒரு பேச்சாளராக் பங்கேற்பார் என்று ‘புரொன்ட்லைன் கிளப்‘பின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அவருக்குப் பதிலாக, விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் மகன் அருண் தம்பிமுத்து பங்கேற்பார் என்று தெரியவருகிறது.
இந்த நிகழ்வுக்கான ஆசனப்பதிவுகள் முடிவடைந்து விட்டதாகவும், இதனைப் பார்க்க விரும்புவோர் http://www.ustream.tv/frontlineclub என்ற இணையத்தளம் மூலம்  நேரலையாகப் பார்க்கலாம் என்றும் ‘புரொன்ட்லைன் கிளப்‘ அறிவித்துள்ளது.

13 மே 2012

வன்னியில் பலியானோருக்கு வவுனியாவில் வணக்க நிகழ்வுகள்!


வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.இதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியாக் கிளையினர் மேற்கொண்டுள்ளனர். வன்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளன. உயிர் நீத்த அனைவரதும் ஆத்மா சாந்தியடையவும் அவர்களின் குடும்பத்தினரின் துயரங்கள் நீங்கி சுபீட்சமாக வாழவும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன “எமது இறைமையை, வாழ்வுரிமையை அழித்தொழிக்கும் நோக்கில் மானிடமே வெட்கித் தலை குனியும் அளவுக்கு எமது உறவுகள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகின்றன.
ஆனால் இன்னமும் அவர்களது இரத்த உறவுகள் அவர்களுக்கான இறுதிக்கிரியைகளை செய்யமுடியாமல் தவிக்கின்றனர். உயிர் நீத்தவர்கள் அனைவரது ஆத்மாக்களும் சாந்தியடையவும், மரணித்தவர்களின் குடும்பங்களின் துயரங்கள் நீங்கி சுபீட்சமான வாழ்வு வாழவும் நாம் அனைவரும் கூட்டாக அஞ்சலி செலுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி வாழ் மக்கள் அனைவரையும் அழைக்கிறது என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்டக்கிளை.

12 மே 2012

சம்பந்தரின் தமிழரசுக்கட்சி தலைவர் பதவிக்கு ஆப்பு!


தமிழரசுக்கட்சியின் தற்போதைய தலைவர் இரா.சம்பந்தனை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு மட்டக்களப்பில் நீண்டகாலமாக தமிழரசுக்கட்சியில் இருக்கும் சட்டத்தரணி ஒருவரை தலைவராக தெரிவு செய்வதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மகாநாடு எதிர்வரும் 25, 26, 27ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெற உள்ளது. 25ஆம் திகதி மாலை மத்திய செயற்குழுவின் கூட்டம் நடைபெறும்.
26ஆம் திகதி காலை மகாநாடு ஆரம்பமாக முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் தலைவர், பொதுச்செயலாளர், மூத்ததுணைத்தலைவர், இணைச்செயலாளர்கள், இணைப்பொருளாளர்கள், மற்றும் மத்தியகுழுவும் தெரிவு செய்யப்படும்.
தலைவர், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர்கள், மூத்ததுணைத்தலைவர்கள், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்பமானவர்கள் மாவட்ட கிளைகள் ஊடாக தங்கள் விண்ணப்பங்களை 15ஆம் திகதி செவ்வாய்கிழமைக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார்.
27ஆம் திகதி பிரதிநிதிகள் மகாநாடு, தலைமைபேருரை, பிரகடனம் என்பன இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிருக்காது என்றும் மாவை சேனாதிராசாவே ஏகமனதாக தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தலைவர் பதவிக்கு போட்டி இருக்கும் என தெரியவருகிறது.
தற்போது தலைவராக இருக்கும் சம்பந்தனை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு மட்டக்களப்பில் நீண்டகாலமாக தமிழரசுக்கட்சியில் இருக்கும் சட்டத்தரணி ஒருவரை தலைவராக தெரிவு செய்வதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக்கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

11 மே 2012

கிளிநொச்சி கொலை குறித்து விசாரணை கோருகிறது கனடா!

 
கிளிநொச்சி கொலை குறித்து கனடா முழுமையான விசாரணை கோருகிறது
 இலங்கையின் வடக்கில் கிளிநொச்சி பகுதியில் கடந்த வாரம் ஒரு கனடிய பிரஜை கொலை செய்யப்பட்டமை குறித்து இலங்கை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக கனடா கூறியுள்ளது.
போர் காலத்தில் தாம் இழந்துபோன தமது குடும்ப சொத்துக்களை மீளப் பெறும் நோக்கத்துடன் கனடாவின் பிரஜையான அந்த இலங்கை தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் அங்கு வந்திருந்தபோது கொல்லப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.
கிளிநொச்சி நகருக்கு சற்று வெளியே அந்தோனிப்பிள்ளை மகேந்திரராஜா என்னும் அந்த நபர் ஒரு குழுவினால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இலங்கைக்கான கனடாவின் தூதுவர் புரூஸ் லெவி பிபிசியிடம் கூறியுள்ளார்.
பல வருடங்களாக விடுதலைப்புலிகளின் தலைமையகமாக திகழ்ந்த இந்தப் பகுதி தற்போது இலங்கை இராணுவத்தின் கடுமையான பாதுகாப்பின் கீழ் உள்ளது.
கடந்த வாரம் நடந்த இந்தக் கொலை குறித்து ஒரு முழுமையான புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், அதனை கனடா தொடர்ச்சியாக அவதானித்துவரும் என்றும் தான் முறைப்படியான ஒரு குறிப்பை அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ளதாக லெவி அவர்கள் கூறியுள்ளார்.
முகமூடி அணிந்த நபர்கள் மகேந்திரராஜாவை தாக்கியதை கிராமத்தவர்கள் பார்த்ததாகக் கூறப்படுவதாக ஊடகச் செய்திகளும், வடக்கில் உள்ள செய்தி ஆதாரங்களும் கூறுகின்றன.
அவர் தனது கொலையாளிகளிடம் இருந்து தப்புவதற்காக போராடியுள்ளார். அவரது ஆணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரில் கடைகளை வைத்திருந்த செல்வந்தரான அவரது குடும்பம் போர் காலத்தில் கனடாவுக்கு சென்று குடியேறியுள்ளது.
ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட இவரது சொத்துக்கள், தற்போது இலங்கையின் பிரபல அங்காடி கடைகளை வைத்திருக்கும் ஒரு நிறுவனம் மற்றும் ஏனைய சிலரின் கைகளில் இருக்கின்றன.
தனது காணியை மீளப்பெறுவதற்காக இலங்கை வந்த அவர், அதில் ஒரு கட்டடத்தைக் கட்டிக்கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இவர் இராணுவத்துடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக சில செய்திகள் கூறுகின்றன. ஊடகமான தமிழ்நெட், இவரது நடமாட்டத்தை இராணுவ புலனாய்வுத்துறையினர் கண்காணித்து வந்ததாகத் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து அதிகமான கருத்துக்களைக் கூற மறுத்த பொலிஸ் தரப்புப் பேச்சாளர், இந்த விடயம் குறித்த புலனாய்வுகளில் 4 புலனாய்வுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரையும் எவரும் கைது செய்யப்படவில்லை என்று பிபிசியிடம் கூறினார்.
நாடு திரும்பவிரும்பும் அகதிகளை வரவேற்று அவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் இந்த வாரத்தில் கூறியிருந்தது. ஆனால், இப்படியான சம்பவங்கள் அகதிகள் திரும்ப வருவதை தவிர்க்கச் செய்யும்.
நன்றி BBC

மன்னார் ஆயர் மீது சி.ஐ.டி.அதிகாரிகள் விசாரணை!?


மன்னார் ஆயர் இராயப்பு ஜேசெப் மீது இலங்கை அரசாங்கத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடுமையான விசாரணைகளை நடத்தியுள்ளார்கள். போரின் இறுதிக்காலப் பகுதியில் 1,46,679 பேர் காணாமல் போயிருப்பதாக நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக அவர் சாட்சியமித்தமை தொடர்பாகவே இந்த விசாரணைகள் இடம்பெற்றதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல்போன 146,679 பேர் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என தன்னுடைய சாட்சியத்தின் போது மன்னார் ஆயர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய குற்றப் புலனாய்வுத் திணைக்க அதிகாரிகளிடம், நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக தான் சமர்ப்பித்த எந்த அறிக்கையை வேண்டுமானாலும் சமர்ப்பிப்பதற்கு தயாராக இருப்பதாக ஆயர் தெரிவித்தார்.
காணாமல்போனவர்கள் தொடர்பில் ஆயர் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கின்றாரா என அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த ஆயர், மதகுரு ஒருவர் கூட காணாமல் போயிருப்பதாகவும், ஆனால், காணாமல்போன அவருடய நிலை தொடர்பாகவுமே தான் அக்கறைப்படுவதாக ஆயர் பதிலளித்தார்.
போர்க் காலத்திலும், அதன் பின்னருமான வன்னிப் பகுதியின் சனத் தொகை விபரங்களைத் தருமாறு சி.ஐ.டி. அதிகாரிகள் கேட்டபோது அதற்குப் பதிலளித்த ஆயர், இந்த விபரங்களை ஒவ்வொரு மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிராந்தியச் செயலகங்கள் மற்றும் கிராமசேவகர்களிடம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனத் தெரிவித்தார். 146,679 பேர் காணாமல் போயுள்ளார்கள் என்ற தகவலைக்கூட அரசாங்க ஆவணங்களில் காணப்படும் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக்கொண்டே தான் வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆயருடைய வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவு செய்துகொண்ட அதிகாரிகள், இறுதியில் அதனை அவருக்கு வாசித்துக் காட்டி அவரது கையொப்பத்தையும் அதில் பெற்றுச் சென்றதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப்புலனாய்வுத் திணைக்க அதிகாரிகள் ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு இவ்வாறு விசாரணைகளை முன்னெடுத்திருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விசாரணை இடம்பெற்ற போது ஆயருடன் மேலும் பல கத்தோலிக்க மதகுருக்களும் காணப்பட்டனர். ஆயருடன் காணப்பட்ட ஏனைய மதகுருக்களின் பெயர் விபரங்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பெறப்பட்டது. ஆயரை இரண்டு அதிகாரிகளே விசாரணைக்கு உள்ளாக்கியதாகவும் அவர்கள் இருவரும் முஸ்லிம்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தமது விசாரணைகளை தமிழ் மொழியிலேயே மேற்கொண்டார்கள்.
மன்னார் ஆயர் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக அளித்த சாட்சியம் குறிப்பாக 1,46,679 பேர் காணமல் போயிருப்பதாக அவர் தெரிவித்திருந்தமை சர்வதேச ரீதியாக இலங்கைக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்ததுடன், ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடரிலும் முக்கியமாகப் பேசப்பட்டது. தற்போதும் சர்வதேச சமூகம் இது தொடர்பில் கேள்வி எழுப்பியிருக்கின்றது.
இவ்வாறு சர்வதேச ரீதியாக நெருக்கடி நிலை ஒன்று உருவாகியிருக்கும் பின்னணியிலேயே ஆயர் கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவரது சாட்சியமும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

10 மே 2012

தூதுவர் பதவியை நிராகரித்தார் தாமரா குணநாயகம்!


தூதுவர் பதவியை நிராகரித்தார் தாமரா குணநாயகம்
கியூபாவுக்கான தூதுவர் பதவியை, தாமரா குணநாயகம் நிராகரித்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜெனிவாவுக்கான தூதுவராகப் பணயாற்றும் தாமரா குணநாயகம் நேற்றுமுன்தினம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் கியூபாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார்.
இந்தப் பதவியையே அவர் ஏற்க மறுத்துள்ளார்.
விரைவில் வெனிசுவேலாவில் திறக்கப்படவுள்ள சிறிலங்காவின் புதிய தூதரகத்துக்கு தன்னை நியமிக்குமாறு தாமரா குணநாயகம் கோரியுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.

09 மே 2012

மாவீரர் துயிலும் இல்லத்தை படையினருக்கு எழுதிக்கொடுத்த பிரதேசசெயலர்!


வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணியினை 611 ஆவது படைப்பிரிவினைச் சேர்ந்த இராணுவத்தினரின் பெயருக்கு எழுதி வழங்கிய வவுனியா பிரதேச செயலர் சிவபாலசுந்தரன், காணி உத்தியோகத்தர் வசந்தன் ஆகியோருக்கு படைப்பிரிவின் அதிகாரி மனம் நிறைந்த நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்திருக்கின்றார்.ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ள ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லக்காணியில் உள்ள மாவீர்களின் நினைவுத்தூபிகள், கல்லறைகள் என்பன இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டு இடிபாடுகள் காணியின் எல்லைப்பகுதிகளின் அரண்களாக குவிக்கப்பட்டுள்ளன.
துயிலும் இல்லக்காணியில் இராணுவத்தினர் முகாம் அமைத்துவருவதற்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் காணியினை தமக்கு உரித்தானதாக்க இராணுவத்தினர் முடிவுசெய்திருந்த நிலையில் வவுனியா பிரதேச செயலர் அ.சிவபாலசுந்தரனும், காணி உத்தியோகத்தர் வசந்தனும் தாமாகவே முன்வந்து குறித்த காணியினை இராணுவத்தினருக்குச் சொந்தமானது என்று காணி உரிமைப்பத்திரம் வழங்கியிருக்கின்றனர்.
இந்தக் காணி தனியாருக்குச் சொந்தமான காணியாக இருந்தும், உரியவருக்கு இந்தக் காணியை வழங்காமல் பிரதேச செயலாளரும், காணி உத்தியோகத்தரும் படைத்தரப்பினருக்கு உரிய நடைமுறைகளுக்கு மாறாக, அத்தகைய நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் எதேச்சதிகாரமாக வழங்கியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரச அதிகாரியாகிய இந்த பிரதேச செயலர் தான் ஓர் அரசாங்க சார்பு அரசியல்வாதியைப் போலவே நடந்து  கொள்கின்றார் என்றும், பொது மக்கள் மற்றும் தனக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களிடமும் அவ்வாறே நடந்து கொள்கின்றார் என்றும் பொது மக்கள் இவர் மீது குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள். இவரது முறையற்ற நடவடிக்கைகள், செயற்பாடுகளை விமர்சிப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களை அடையாளப்படுத்தி வைத்து, அமைச்சர் ஒருவரின் அரசியல் பலத்தைப் பின்னணியாக வைத்துக்கொண்டு, பல்வேறு செயற்பாடுகளின் மூலம் இவர் பழிவாங்கி வருவதனால், தங்களால் இவருக்கு எதிரான முறைப்பாடுகளை நேரடியாகச் செய்ய முடியாதிருக்கின்றது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏதேனும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விபரம் கேட்பவர்களிடம் மீடியாவில் செய்தி போடவா கேள்வி கேட்கின்றாய், மீடியா இல்லை எந்த வெங்காயத்திலும் எழுது. எனக்குப் பயமில்லை. ஆனால் நீ கேட்கிற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது நான் சொல்வதைக் கேட்டு அதன்படி செய்தால் உனக்கு நல்லது. தேவையற்ற கேள்விகளைக் கேட்காதே என்று அச்சுறுத்துவதும் இவரது வழக்கமாக இருக்கின்றது என்று பலரும் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த காணியில் 611 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதன் திறப்பு நிகழ்வின் போது உரையாற்றிய படைத்துறையின் அதிகாரி குறித்த நபர்களின் பணியினை மனந்திறந்து பாராட்டியதாக தெரியவருகின்றது.
வவுனியாவில் நடைபெறும் சட்டவிரோத மண் அகழ்வு, கருங்கல் உடைத்தல், மரக்கடத்தல், காணி அபகரிப்பு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பிரதேச செயலரும் காணி அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஈடுபட்டுவருகின்ற அதேவேளை அவர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் பல அந்நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக வவுனியாவில் இருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

08 மே 2012

போராட்டம்தான் தீர்வைதரும் என்றால் அதற்கும் தயார்!


தமிழர் தாயக பூமியில் திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேற்றப்படும் சிங்களக் குடியேற்றங்களை இலங்கை அரசு உடன் தடுத்து நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டங்களை வெடிக்கச் செய்யும் நிர்ப்பந்தத்துக்குள் தாம் தள்ளப்படுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டப் பேச்சுகளில் நம்பிக்கையானதொரு சூழலை உருவாக்குவதற்கு இலங்கை அரசு தவறியுள்ளதால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரத்தைக் கையாளவேண்டிய அணுகுமுறை குறித்து அவசரமாகக் கூடி ஆராயவேண்டிய தேவைப்பாடு தமக்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி தமிழர்களுக்குத் தீர்வை வழங்கவேண்டிய இத்தறுவாயில், இலங்கை அரசு தமிழர்களைக் கொடுமைப்படுத்துகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரம் மற்றும் வடக்கில் திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேற்றப்படும் சிங்களக் குடியேற்றங்கள் ஆகியவை குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியவை வருமாறு:
"இலங்கை அரசுடன் மீண்டும் பேச்சுகளை நம்பிக்கையுடன் தொடங்குவதற்கான சாதகமானதொரு சூழலை அது இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. கூட்டமைப்பு இதுவரையில் அரசுடன் முன்னெடுத்து வந்த பேச்சுகளில் அரசு நம்பிக்கையாக நடந்துகொள்ளவில்லை. எமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரினோம். காணாமல் போனோர் குறித்தான விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் என அரச தரப்பிடம் வேண்டுகோள் விடுத்தோம். அதுமட்டுமன்றி, இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துமாறும் வலியுறுத்தினோம். ஆனால், இவை எதனையும் இலங்கை அரசு செய்து முடிக்கவில்லை. தொடர்ந்தும் அசட்டைப் போக்கிலேயே செயற்படுகின்றது. நம்பிக்கைத் தன்மையை வெளிப்படுத்துவதற்கு இலங்கை அரசு இன்னும் முன்வரவில்லை." எனக் கூறிய அவா் தொடர்ந்து,
"நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரினோம். ஆனால், அந்த விடயத்தில் இலங்கை அரசு இன்னும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. தமிழ் மக்களின் குறைந்தபட்ச தேவைகளையாவது நிறைவேற்றவேண்டிய தறுவாயில் தமிழர்களை அந்நியர்களாகக் கருதி இலங்கை அரசு கொடுமைப்படுத்துகின்றது. நில ஆக்கிரமிப்பு, சிங்களக் குடியேற்றங்கள் எனத் தமிழர் விரோதச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்து விடுகின்றது. தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் உண்மையான எண்ணம் அரசிடம் இல்லை என்பதை அதன் செயற்பாடுகள் உணர்த்துகின்றன. இவ்வாறானதொரு நிலையில், நாம் எப்படித் தெரிவுக்குழு குறித்து சிந்திப்பது? பேச்சுகளில் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தத் தவறிய மஹிந்த அரசை எந்த அடிப்படையில் நாம் நம்புவது?"
"நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரம் குறித்து என்னால் தனித்து பகிரங்கமாகக் கருத்து வெளியிட முடியாது. சக உறுப்பினர்களுடன் கூடி ஆராய்ந்த பின்னரே இது விடயம் தொடர்பில் உறுதியானதொரு நிலைப்பாட்டைத் தெரிவிக்கமுடியும். எது எப்படியிருப்பினும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு விடயத்தில் கையாள வேண்டிய அணுகுமுறை குறித்து கூடி ஆராயவேண்டிய தேவைப்பாடு எமக்குள்ளது. ஆனாலும் தெரிவுக்குழு விடயத்தில் எமது நிலைப்பாடு இன்னும் உறுதியாகவே உள்ளது. வடக்கு மாகாணத்தில் மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மட்டுமல்ல, கிழக்கு மாகாணத்திலும் திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்படுகின்றன. தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் குடிசன பரம்பல் விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே இலங்கை அரசு திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக் குடியேற்றங்களைத் தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றது என்பது தற்போது தெளிவாகப் புரிகின்றது.குடியேற்றத்துக்கும், குடிப்பரம்பல் விகிதாசாரத்தைத் திட்டமிட்ட அடிப்படையில் சூழ்ச்சிகளை மேற்கொண்டு மாற்றியமைப்பதற்குமிடையில் வித்தியாசம் உள்ளது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்."
தொழில் நிமித்தம் வடக்குக்கு வரும் சிங்கள மக்கள் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குடியமர்த்தப்படுகின்றனர். தமிழர் பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. இவை எந்த அடிப்படையில் நியாயம்? நில அபகரிப்பு, சிங்களக் குடியேற்றங்கள் உட்பட முக்கிய சில காரணங்களுக்குத் தீர்வை வலியுறுத்தி இதற்கு முன்னர் நாம் வவுனியாவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தோம். ஆனால், எமது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்த்ததாகத் தெரியவில்லை. இன்னும் மந்தப் போக்கிலேயே செயற்படுகின்றது. தமிழர் தாயகப் பூமியில் அரங்கேற்றப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்களை இலங்கை அரசு உடன் நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் நாம் தள்ளப்படுவோம்.
போராட்டங்கள்தான் பிரச்சினைக்குத் தீர்வைத் தேடித்தரும் என மஹிந்த அரசு நிர்ப்பந்திக்குமானால் அதனைச் செய்வதற்கும் நாம் தயாராகவே உள்ளோம். அரசின் இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து பலமுறை நாம் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். இந்தியாவுடனும் பேசியுள்ளோம். எனவே, இந்தப் பிரச்சினை குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்தவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.