14 ஜனவரி 2015

"என்னை அழித்தது நீங்கதாண்டா"கோத்தாவிடம் சீறினார் மகிந்த!

என்னைத் தமிழனோ, முஸ்லிமோ அழிக்கவில்லை. நீங்கள் தான்டா என்ர அரசியலை அழித்தீா்கள் என கோத்தபாயவிடமும் பிள்ளைகளிடமும் எரிந்து விழுந்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
தோ்தலில் தோல்வியடைந்த பின்னா் தனது சொந்த இடத்திற்கு சென்ற மகிந்த ராஜபக்ச அங்கு வந்து தன்னைச் சந்தித்த பொதுமக்களுடன் கலந்துரையாடிவிட்டு அடுத்தநாள் காலையில் பிள்ளைகளுடனும் தனது சகோதரா்களுடனும் கோபதாண்டவம் ஆடியதாகத் தெரியவருகின்றது.
தனது 45 வருட அரசியல் வாழ்க்கை எனது பிள்ளைகளாலும், சகோதரா்களாலும் அழிந்துவிட்டது என மகி்ந்த கத்தியுள்ளார்.
என்னை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறாகள் என கோத்தபாய தனது அண்ணணுக்கு தொலைபேசியில் எடுத்து கூறிய போதே மகிந்த இவ்வாறு கத்தியுள்ளார்.
எனக்கு வாய்த்த சகோதரங்களும் அப்படி, பிள்ளைகளும் அப்படி, நான் என்ன செய்வது என மகிந்த துக்கத்தில் பிதற்றியதாக மகி்ந்த ராஜபக்சவுக்கு நெருங்கிய வட்டாரங்களால் செய்தி கசிந்துள்ளது.

10 ஜனவரி 2015

புதிய பாதுகாப்பு செயலராக பசநாயக்க நியமனம்!

கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா! புதிய பாதுகாப்பு செயலராக பசநாயக்க நியமனம்!பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக புதிய பாதுகாப்பு செயலாளராக பசநாயக்கவை அதிபர் மைத்ரிபால சிறிசேன நியமித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றதைத் தொடர்ந்து அவரால் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றனர்.இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முதலொல் தமது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாயவும் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து புதிய பாதுகாப்பு செயலராக சுற்றுச் சூழல் அமைச்சக செயலர் பசநாயக்கவை நியமித்து அதிபர் மைத்ரிபால உத்தரவிட்டுள்ளார். இதேபோல் அதிபரின் செயலாளராக பொதுநிர்வாக அமைச்சகத்தின் செயலாளர் அபயகோன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவைத்தான் பாதுகாப்பு செயலராக நியமிக்க மைத்ரிபால் சிறிசேன முடிவு செய்திருந்தாராம். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பசநாயக்கவை மைத்ரிபால நியமித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

09 ஜனவரி 2015

ஊருக்கு புறப்பட்டார் மகிந்த!

பதவியிழந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஹம்பாந்தோட்டையில் மெதமுலனவில் உள்ள தமது இல்லத்துக்கு இன்னும் சற்று நேரத்தில் வந்து சேருவார் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக கொழும்பில் இதுவரை அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்த அவரது உடைகள் மற்றும் பாவனைப் பொருட்கள் அவசர அவசரமாக அங்கிருந்து பொதி செய்யப்பட்டு மெதமுலன இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. Bin Bag ஆகப் பயன்படுத்தப்படும் கறுப்பு பைகளிலே அவை அவசர அவசரமாகச் சேகரித்துக் கட்டப்பட்டு வாகனம் ஒன்றில் ஏற்றி மெதமுலனவுக்கு அனுப்பப்பட்டன. அவை சற்று முன்னர் மெதமுலனவில் உள்ள ராஜபக்‌ஷவின் குடும்ப இல்லத்தில் இறக்கப்பட்டு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டன. இதுவரை காலமும் ஜனாதிபதி என்ற முறையில் கொழும்பு அலரி மாளிகை இல்லத்துக்கு அருகில் இருந்து ஹெலிக்கொப்டர் மூலமும் மெதமுலனவுக்குச் சென்று வந்த மஹிந்த ராஜபக்‌ஷ தம்பதியினர் இன்று தமது காரில் கொழும்பிலிருந்து ஊருக்குப் புறப்பட்டனர்.ஜனாதிபதிக்குரிய பாதுகாப்புத் தொடரணியை அவர் இன்னும் மீளக் கையளிக்காமையால் அந்த வாகனத் தொடரணியிலேயே தற்போது அவர் ஊருக்குப் புறப்பட்டார். தம்முடைய தரப்பில் பயன்படுத்தப்படும் மேலதிக வாகனங்களையும் அவர் விரைவில் புதிய அரசிடம் ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மெதமுலனவில் ராஜபக்‌ஷ தரப்பினரை வரவேற்பதற்கு சிறிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.

01 ஜனவரி 2015

குமார் குணரத்தினம் மீண்டும் சிறீலங்கா வந்தார்!

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கை வந்துள்ளார்.
நாடு கடத்தப்பட்டிருந்த குமார் குணரட்னத்திற்கான அபராத பணம், குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு செலுத்தப்பட்ட நிலையிலேயே அவர் இலங்கை வர அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவு 12.15 அளவில் அவர் நாடு திரும்பியதாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.முன்னாள் ஜேவிபி உறுப்பினரான இவர் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.