26 பிப்ரவரி 2015

விஜய் டி.விக்கு தடை-ஐரோப்பா தமிழர்கள் அதிரடி!


Bild in Originalgröße anzeigenவிஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கர் ஜூனியர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த முறை நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களின் கவணத்தை ஈர்த்தது. காரணம், ஈழத்து சிறுமியான ஜெஸ்ஸிகா என்பவர் இந்த நிகழ்சியில் போட்டியிட்டார். இந்நிலையில், இந்த நிகழ்சியின் கடைசி கட்டம் சென்னையில் நடந்தது. இது உலகம் முழுவதும், நேரடியாக ஒளிபரப்பானது. வழக்கம் போல் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்களை, மக்களே SMS மூலம் வாக்களித்து தேர்ந்தெடுத்தனர்.இதற்காக, உலகத் தமிழர்களும், ஈழத்து சிறுமிக்காக வெளிநாடுகளில் இருந்து வாக்களித்தனர். இந்த SMSகள் மூலம் மட்டுமே விஜய் டிவிக்கு 20 கோடி ரூபாய் வரை கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இறுதிச்சுற்றில், வெற்றியாளர்களை தேர்தெடுத்ததில் விஜய் டி.வி., முறைகேடு செய்துள்ளதாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

SMS வாக்குகள் அதிகம் பெற்றவரை வெற்றியாளராக அறிவிக்காமல், தங்கள் இஷ்டத்திற்கு விஜய் டி.வி., வெற்றியாளரை அறிவித்துள்ளதாக ஐரோப்பிய தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் விஜய் டி.வி., நிர்வாகம் மீதும், இறுதிச் சுற்றுக்கு வருகை தந்த, சிறப்பு விருந்தினர்களான, தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத், உள்ளிட்டோர் மீதும் வழக்கு தொடரப் போவதாக, அவர்கள் அறிவித்துள்ளனர்.
மக்கள் அளித்த வாக்கு எண்ணிக்கை கோடிகளைத் தாண்டியதாகக் கூறிய விஜய் டி.வி., வக்கு எண்ணிக்கையின் முழு விபரத்தை வெளியிடாதது ஏன் என்றும் ஐரோப்பிய தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், விஜய் டி.வி., முன்கூட்டியே முடிவு செய்து, இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளரை தேர்ந்தெடுத்து விட்டதாகவும், பார்வையாளர்களை கவருவதற்காகவும், பணம் சம்பாதிக்கவுமே இத்தகைய SMS சூழ்ச்சமங்களை கையாண்டுள்ளதாகவும் இலங்கையைச் சார்ந்த இணையங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதனடிப்படையில், விஜய் டி.வி., மக்களை அவமதித்ததாகவும், ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி நடைமுறை விதிகளை மீறியதாகவும், நிகழ்ச்சியில் குளறுபடி செய்ததாகவும் மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை முன் வைத்து விஜய் டி.வி., மீது வழக்கு பதிவு செய்யப்போவதாக ஐரோப்பா வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்கள், சிறப்பு விருந்தினர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், இயக்குனர் உள்ளிட்ட நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படவேண்டும் என்றும் தாம் வலியுறுத்தப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்து தீர்ப்பு மனுதாரர் தரப்பில் அமைந்தால், நிகழ்ச்சியின் நடுவர்கள், சிறப்பு விருந்தினர்களான அனுருத், தனுஷ், சிவகார்த்திகேயன், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், இயக்குநர் என அனைவருக்கும், ஐரோப்பிய சட்டப்படி, அந்நாட்டிற்குச் செல்ல தடை விதிக்கப்படலாம். அது மட்டுமல்லாது, விஜய் டி.வி.,யும் ஐரோபாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

18 பிப்ரவரி 2015

ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடையுங்கள் என கனிமொழி சொன்னார்-அனந்தி

கருணாநிதி-கனிமொழி
“ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடையுங்கள் உங்களை நாங்கள் பாதுகாப்போம் என்று கனிமொழி, அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி சார்பில் என் கணவரிடம் சொன்னார் ” என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்திருக்கின்றார்.
தமிழகத்துக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த அனந்தி சசிதரன் ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு துணைப் பொறுப்பாளராகக் கடமையாற்றிய எழிலனின் மனைவியான அனந்தி இந்தப் பேட்டியில் முக்கிய விடயங்கள் பலவற்றை அம்பலப்படுத்தியிருக்கின்றார்.
“போர் மிகவும் மோசமாக நடைபெற்று இராணுவத்தின் குண்டுவீச்சுக்களால் பெருந்தொகையான மக்கள் குடும்பம் குடும்பமாக செத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது மே 16 ஆம் திகதி இரவு எனது கணவர் தொலைபேசியில் பேசினார். அவருடன் பேசியது கனிமொழி. முன்னாள் முதலமைச்சர் கருணாநதியின் மகள்.
நீங்கள் சரணடையுங்கள். உங்களைப் பாதுகாப்பதற்கு நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம். அது தொடர்பாக நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றோம் என கனிமொழி தனது தந்தையின் சார்பில் சொன்னார். இவற்றை நம்பி சரணடைந்த நூற்றுக்கணக்கான போராளிகள் இன்று வரை எங்கே என்பது தெரியவில்லை” எனவும் அனந்தி தெரிவித்தார்.

09 பிப்ரவரி 2015

சம்பந்தன் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றால் மரியாதை!

சம்பந்தனின் நீண்ட நாள் போற்றக் கூடிய அரசியல் சேவையிலிருந்து ஓய்வுபெற்று, அடுத்த இளம் தலைமுறைக்கு தம்மையை விட்டுக் கொடுப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும், சம்பந்தர் தமிழ்ச் சரித்திரத்தில் வாழ்நாள் தலைவராக இல்லாது, தமிழ் இனத்திற்காக தன்னை அர்ப்பணித்தார் என்று தமிழ்ச் சரித்திரம் கூறும்.
சரித்திரத்தை அமைத்துவிட்ட அமெரிக்காவின் முதல் தலைவர் ஜோர்ச் வாசிங்டன் 5 வருடம் அரசியலில் பணியாற்றிவிட்டு மீண்டும் 65 வயதில் தனது விவாசாயத்தினை செய்வதற்கு வேர்யினியாவுக்கு சென்றுவிட்டார்.
தென் ஆபிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலா 5வருடம் தலைவராய் பணியாற்றிவிட்டு மீண்டும் தனது வீடு சென்று ஓய்வு பெற்றார்.
சம்பந்தர் அவர்கள் 81 வயதினை அடைகின்றார். இந்த யூன் மாதத்துடன் அவரது எம். பி பதவி முடிவு பெறுகின்றது. இந்நிலையில் வடகிழக்கில் உள்ள ஒரு இளம் தலைவரை தேர்ந்து எடுப்பதற்கு இது ஒரு நல்ல தருணம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த புதிய தலைவர் சட்டதடதரணியாக இருக்கக் கூடாது. ஏனெனில் சட்டத்தரணியானவர் எங்கள் போராட்டத்தினை நீதித்துறையோடு இணைப்பதை தவிர போராடக்கூடியவர்கள் அல்லர். அத்துடன் எங்கள் புதிய தலைவர் துணிந்தவராகவும் நேர்மையுள்ளவராகவும், அறிவுள்ளவராகவும். குறிப்பாக போராட்டக் குணம் கொண்டவராகவும் இருக்கவேண்டும்.

(ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு)