23 மே 2015

கஜேந்திரன் விபத்தில் படுகாயம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை வீதியின் கைதடி வீதி-கோப்பாய் சந்தியில் இந்தியா பணியாளர் ஒருவர் செலுத்தி வந்த பாரம் தூக்கி மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இன்று மாலை 4,15அளவில் இவ்விபத்து நடந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர் உயிர் தப்பியுள்ளபோதும் அவரது மோட்டார் சைக்கிள் முற்றாக நசியுண்டுள்ளது.
இது திட்டமிட்ட கொலை முயற்சியாவென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

மாணவியின் பிணத்தின் மீது அரசியல் லாபம் தேட முயன்ற மஹிந்த! அமைச்சர்கள் கண்டனம்.


புங்குடுதீவில் மிகக்கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்ட மாணவியின் பிணத்தின் மீது அரசியல் லாபம் தேடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முற்பட்டுள்ளமையானது மிகவும் கேவலமானதொரு செயலாகும் என அரச அமைச்சர்கள்  கண்டனம் வெளியிட்டுள்ளனர்.  
மிகக்கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்ட மாணவியின் பிணத்தின் மீது அரசியல் லாபம் தேடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முற்பட்டுள்ளமையானது மிகவும் கேவலமானதொரு செயலாகும் என அரச அமைச்சர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்த்தன மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா ஆகிய மூவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயற்பாட்டை இனவாதத்தை தூண்டி மீண்டுமாக பதவியைப் பிடிப்பதற்கான வெட்கக்கேடான செயற்பாடெனவும் சுட்டிக்காட்டினர்.
இந்த ஈனத்தனமான செயற்பாட்டின் மூலமாக மஹிந்த ராஜபக்ஸ தனது மிலேச்சத்தனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார். தமது குடும்பத்தைச் சேர்ந்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவருக்கு ஏற்பட்ட பேரவலத்தையடுத்து கோபங்கொண்ட மக்கள் இயல்பாக வெளிப்படுத்திய உணர்ச்சிவெளிப்பாடே யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டிருந்தார்.

20 மே 2015

இன்று யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால்!போக்குவரத்து முடக்கம்!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பூரண கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தை தடுக்கும் விதத்தில் நாற்சந்தியில் ரயர்கள் கொளுத்தப்பட்டன. இதனால் குறைந்தளவு மக்களே பயணித்த போதும் அவர்களின் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டது. காலையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் தொடங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதேவேளை இன்று யாழ்ப்பாணம் முழுவதும் வர்த்தக நிலையங்கள், அரச திணைக்களங்கள், வங்கிகள் இயங்காது எனத் தெரியவருகிறது. தனியார் பேருந்து சேவைகளும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

12 மே 2015

மண்டைதீவில் மக்கள் காணிகளை கையகப்படுத்தியது கடற்படை!

மண்டைதீவு பகுதியில் கடற்படையினரால் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி கையகப்படுத்தப்பட்டு உள்ளது. 18 ஏக்கர் தோட்டக் காணியும் 7 ஏக்கர் கடற்கரை காணியுமே அவ்வாறு கையகப்படுத்தியுள்ளனர்.
காணி கையகப்படுத்தப்பட்டதாக காணி உரிமையாளர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கடிதம் அனுப்பபட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்களால் வேலணை பிரதேச செயலாளருக்கு மறுப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடற்படையினர் தொடர்ந்து தமது தோட்ட காணியினை கையகப்படுத்தி வைத்திருப்பதனால் தோட்டம் செய்ய முடியாது தாம் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி வறுமையில் வாடுவதாக காணி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடற்படையினரிடம் இருந்து தமது தோட்டகாணியினசம்பந்தப்பட்ட தரப்பினர் மீட்டு தந்து தமது வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.