16 ஆகஸ்ட் 2015

தீவக வாக்குப்பெட்டிகள் கடற்படையிடம்!

நாளை (17.08.2015)நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னொட்டி இன்று காலை தேர்தல் தொகுதிகளுக்கு வாக்குப்பெட்டிகளை அனுப்பும் பணி ஆரம்பமாகியுள்ளது.குறிப்பாக தீவகப் பகுதிக்கான வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் பணி,வாக்களிப்பு நிறைவடைந்ததும் மீண்டும் வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்வது போன்ற பணிகள் அனைத்தும் சிறீலங்காவின் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

14 ஆகஸ்ட் 2015

பொட்டுவின் சேனை என்ற பெயரில் மறுப்பறிக்கை!

13-08-2015 நேற்றையதினம் "தமிழ்வின்"இணையத்தில் வெளியாகிய -புலனாய்வு முக்கியஸ்தர் அனுப்பிய கடிதம்...!என்ற தலைப்பில் வந்த செய்தி தொடர்பாக எமது மறுப்பறிக்கை!

விழிப்புடன் செயற்படுங்கள் எம் மக்களே!

எமது அமைப்பிற்குள் சமாதான காலத்தை பயன்படுத்தி ஊடுருவலையும்,சேதங்களையும் ஏற்படுத்துவதற்காக 2003ம் ஆண்டு நடுப்பகுதியில் எதிரியால் திட்டமிட்டு வன்னிப்பகுதிக்கு அனுப்பப்பட்டவர்தான் இந்த புலனாய்வு முக்கியஸ்தர் என்று தனக்குத்தானே புகழ்மாலை சூட்டி தனது படத்தையும் போட்டு பொய்ச் செய்தியை அவிட்டிருப்பவரான {சி.சசிதரன் இ.பெயர்:செவ்வாணன்}-

சொந்த முகவரி:மலையகம்-(இந்திய வம்சாவழி)
வன்னியில்-த.முகவரி: றெட்பானா விஸ்வமடு
வீட்டுப் பெயர்: சி.சசிதரன்
இயக்கப் பெயர்: செவ்வாணன்
இயக்கத்தில் இணைவு:2004

பணிகள்: 2003ல் இருந்து 2004லு வரை புலனாய்வு முகவர், 2004ல் இருந்து உள்ளகப் புலனாய்வுப் பொறுப்பாளர் காந்தி அவர்களின் வாகனச் சாரதியாகவும், அம்முகாமின் எரிபொருள் அளக்கும் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
சமாதான காலம் இவருடைய வரவுக்கும் இணைவுக்கும் சாதகமாகியதால் இவர் இரட்டை முகவராக பணிபுரிந்தார்' ஆரம்பத்திலிருந்தே இவரை எமது விசேட கண்காணிப்புக்குள் உட்படுத்தியே பொறுப்பாளர் காந்திக்கான சாரதியாகவும் நாம் நியமித்திருந்தோம்.
அத்துடன் இவர் சாரதியாக பணிபுரிந்தவேளை முகாமிற்கான எரிபொருள் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் எரிபொருள் பொறுப்பினை வகித்த காலப்பகுதியில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த சில தனியார் எரிபொருள் களஞ்சியங்களுக்கு களவாக எரிபொருட்களை முகாமிலிருந்து திருடி விற்றதை கையும் களவுமாக பிடித்து எமது கண்காணிப்புப் போராளிகள் காந்தியிடம் ஒப்படைத்திருந்தார்கள். இது நடந்தது 2006ம் ஆண்டு இறுதிப்பகுதியில்.இந்த களவிற்கான தண்டனையாக காந்தி அவர்களால் முகமாலை முன்னரங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஆனால் இவர் இரட்டை முகவராக பணிபுரிந்துவருவதை எம்மால் உடனடியாக உறுதிப்படுத்தமுடியாமல் இருந்தபொளுது இவர்தொடர்பான தகவல் ஒன்று முகமாலை களமுனையில் இருந்து எமக்கு கிடைக்கப்பெற்றது. அதுதான் இவரின் இரட்டைவேடத்தை எமக்கு உடைத்தது' அது என்னவெனில் முன்னரங்கிலிருந்து தொலைத்தொடர்பு வளியாக எமது தகவல்களை இராணுவத்திற்கு வளங்குகிறார் என்பதே அத்தகவல்.
இதன்பின் இவர் உடனடியாக எம்மால் கைதுசெய்யப்பட்டு வள்ளிபுனம் அல்பா5-Alpha5 எனும் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அங்கு வைத்து இவர் காந்தி அவர்களால் கடுமையாக தண்டிக்கப்பட்டிருந்தார். பின்னர் போர் உக்கிரமடைந்த காலப்பகுதியான 2008 நடுப்பகுதியில் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் தொடர்ந்து எம்மால் கண்காணிக்கப்பட்டும் வந்தார்.
மேலும் போர் உக்கிரம் பெற்றது. இவர் வசித்துவந்த றெட்பானா விஸ்வமடுவை இராணுவம் கைப்பற்றியபொழுது இவர் அங்கு இராணுவத்துடன் இணைந்துகொண்டார்' அதன்பின் 17-05-2009 காலை நாம் இவரை முல்லைத்தீவு இராணுவ முகாமுக்குள் கண்டோம். இவர் அங்கு சிவில் உடையில் நின்று எம்மை காட்டிக்கொடுத்ததுடன் இன்றும் இவர் இராணுவத்துடன்தான் சேர்ந்து இயங்கிவருகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆகவே எம் அன்பார்ந்த தமிழீழ மக்களே...

தமிழ்வின் இணையதளத்தினர் பிரசுரித்த பொய்யான செய்தியை எவரும் நம்பவேண்டாம்.அத்தோடு ஜனநாயகப் போராளிகளின் வரவினை யார் விரும்புவார்கள் யார் விரும்பமாட்டார்கள் என்பது உங்களுக்கு நன்கு தெரியும்' இன்று த. தே.கூட்டமைப்பின் கையாலாகாத் தனத்தினாலும் அவர்களின் சோரம்போகும் குணத்தினாலுமே இன்று கூட்டமைப்பில் நம்பிக்கையிழந்து எமது முன்னைநாள் போராளிகள் நேரடியாக களமிறங்கியுள்ளார்கள்.
இவர்களின் வரவினை எதிர்பவர்கள் இன்று நீங்கள் அறிந்தவரை எதிரிகளும் எமது முன்னைநாள் துரோகிகளுமே அன்றி வேறு யாருமல்ல. மேலும் ஜனநாயகப்போராளிகளாகிய இவர்கள் உண்மையான போராளிகள் என்பதை எதிரிகளும் துரோகிகளும் தமது பொய்யான அறிக்கைகள் ஊடாக உங்களுக்கு நிரூபித்தும் வருகின்றார்கள். ஆகவே இதன் உண்மைத்தன்மையை விளங்கி அவர்களின் வெற்றியை உறுதிசெய்து உங்கள் பிள்ளைகளின் உண்மையான பாதுகாப்பினை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி

உங்கள் காவலர்களான....
பொட்டுவின் சேனை
தமிழீழம்.

06 ஆகஸ்ட் 2015

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரங்களுக்கு தொடர்ந்து இடையூறு!

தேர்தல்விதி முறைகளைமீறினாரென சாவகச்சேரி காவல்துறையினரால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று சாவகச்சேரி நீதிமன்ற அழைப்பாணைக்கு அமைவாக நீதிமன்றினில் ஆஜராகியிருந்தார்.
கடந்த மாதம் 31ம் திகதி சாவகச்சேரி பகுதியினில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தல் பிரச்சாரத்தினில் ஈடுபட்டடிடிருந்த வேளை அவர்களில் சிலரை பொலிசார்  கைது செய்து தடுத்து வைத்திருந்ததுடன் கடுமையாக அச்சுறுத்தியுமிருந்தனர்.
அவர்கள் தேர்தல் விதி முறைகளை மீறினரென சாவகச்சேரி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நீதிமன்றம்  அழைப்பாணை விடுத்திருந்தது.அதேவேளை பிரச்சாரக் குழுவுடன் சென்ற யாழ்,மாவட்ட வேட்பாளர் திருநாவுக்கரசு சிவகுமாரனுக்கும் அழைப்பாணை அனுப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக இன்று காலை இருவரும் நீதிமன்றிற்கு சமூகமளித்தனர். அவ்வழக்கு பதில் நீதவான் கணபதிப்பிள்ளையால் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள நிலையினில் அரசு திட்டமிட்டு தமது பிரச்சாரங்களை குழப்பிவருவதாக முன்னணி குற்றச்சாட்டுக்களினை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.