28 டிசம்பர் 2016

ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதல்ல!

Karate Husseini says Jayalalitha was murderedஅதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதல்ல, அவரை திட்டமிட்டு படுகொலை செய்து விட்டனர் என்று கராத்தே வீரர் ஹூசைனி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சசிகலா நடராஜன் அதிமுக பொதுச்செயலாளராக வேண்டும் என்று அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.சசிகலா நடராஜனின் தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாத நிர்வாகிகள் சிலர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இன்று காலையில் கட்சியில் இருந்து விலகிய ஆனந்தராஜ், கட்சிச் தலைமைக்கு சசிகலா ஏற்றவர் அல்ல என்று கூறினார். இந்த நிலையில் கராத்தே வீரர் ஹூசைனி சசிகலா மீதும் நடராஜன் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதல்ல என்று கூறினார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை ரத்தத்தினால் வரைந்து அவரிடம் கொடுத்ததாகவும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே, அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக 40 பக்க கடிதம் எழுதி கொடுத்திருந்ததாகவும் ஹூசைனி கூறினார். ஜெயலலிதாவை திட்டமிட்டு கொலை செய்து விட்டனர். இதில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். ஓபிஎஸ் மீது நம்பிக்கை வைத்து முதல்வர் பதவி அளித்துள்ளார் ஜெயலலிதா. தயவு செய்து மன்னார்குடி கும்பலிடம் ஆட்சியை கொடுத்து விட வேண்டாம். இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. முள்ளிவாய்க்கால் பிரச்சினை வந்த போது சசிகலாவின் கணவர் நடராஜன் பற்றி வாக்குமூலம் கொடுத்தேன். அப்போதே நான் கடிதம் எழுதினேன். 40 பக்க கடிதம் கொடுத்தேன். எனக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுத்தனர் என்றும் கராத்தே வீரர் ஹூசைனி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். முதன் முறையாக மன்னார்குடி குடும்பத்தைப் பற்றி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றினை கூறியுள்ளார் ஹூசைனி.

25 டிசம்பர் 2016

தொடரும் போராளிகளின் திடீர் மரணம்!


வவுனியா- புளியங்குளத்தில் ஏ-9, வீதியில் பஸ்ஸூக்காக காத்து நின்ற முன்னாள் போராளி ஒருவர்,நேற்று திடீரென மயங்கி வீழ்ந்து மரணமானார். மயங்கி வீழ்ந்ததையடுத்து சக பயணிகளால் மீட்கப்பட்டு, புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சை வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, இவர் இடை வழியில் உயிரிழந்தார்.
வவுனியா- புளியங்குளத்தில் ஏ9 வீதியில் பயணிகள் ஊர்திக்காக காத்திருந்த போராளி ஒருவர்,நேற்று திடீரென மயங்கி வீழ்ந்து மரணமானார் என தெரிவிக்கப்படுகிறது.மயங்கி வீழ்ந்ததையடுத்து சக பயணிகளால் மீட்கப்பட்டு புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது இவர் வழியில் உயிரிழந்தார் என மேலும் தெரியவருகிறது.நெடுங்கேணி குழவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆசீர்வாதம் ஸ்ரிபன் (வயது 36) என்பவரே உயிரிழந்தவராவார். நேற்றுமாலை இவர் யாழ்ப்பாணத்திலிருக்கும் தனது உறவினரின் வீட்டிற்கு செல்வதற்கு புளியங்குளம் சந்தியில் உள்ள பயணிகள் ஊர்தி தரிப்பிடத்தில் காத்திருந்த போதே மயங்கி விழுந்துள்ளார்.உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக, வவுனியா வைத்தியசாலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ரஷ்ய இராணுவ விமானம் விழுந்து நொருங்கியுள்ளது!

High-speed: A Russian jet came within 10ft of a U.S. plane over international waters. Which type of plane was not clear, but an SU-27 Flanker, shown above, was involved in a similar incident in April92 பயணிகளுடன் சென்ற ரஷ்யாவின் ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்து விட்டதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சோச்சி நகரிலிருந்து ரஷ்ய நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.20 மணிக்கு கிளம்பிய இந்த விமானம், கிளம்பிய 20 நிமிடங்களில் ரேடார் (தரைத்தொடர்பு) பார்வையிலிருந்து விலகியுள்ளது.
இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் டியு-154 ரக விமான வகையை சேர்ந்த இந்த விமானத்தில், ரஷ்ய ராணுவத்தினர், புகழ்ப்பெற்ற அலெக்ஸான்ட்ராஃப் ராணுவ இசைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் இருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்ள லடாகியா மாகாணத்தை நோக்கி இந்த விமானம் சென்று கொண்டிருந்தது.மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், சோச்சி நகரில் உள்ள அட்லெர் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.

20 டிசம்பர் 2016

மரணத்தில் மர்மம் ஜெயலலிதாவின் தோழி வழக்கு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஜெயலலிதாவின் தோழி என கூறும் கீதா என்பவர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மனு தாக்கலுக்கு பிறகு, நிருபர்களிடம் கீதா கூறியது: நான் ஜெயலலிதாவுடன் பள்ளி காலத்திலிருந்து நட்புடன் இருந்தேன். அவரது மரணம் தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சந்தேகிக்கிறேன்.ஜெயலலிதா விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஜெயலலிதாவின் உறவினர் தீபாவுக்கு எனது ஆதரவு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். சசிகலா, நடராஜன், இளவரசி, அப்பல்லோ பிரதாப் ரெட்டி, முதல்வர் பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ், ஆலோசகர் ஷீலா பாலா கிருஷ்ணன், சிகிச்சை அளித்த டாக்டர் சிவகுமார், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட 20 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும்.பதவி, அதிகாரம், சொத்து ஆகிய காரணங்களுக்காக கொலை செய்ய, தவறான சிகிச்சை அளிக்க முன்வந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துகளை கைப்பற்ற கொலை செய்ததாக, இந்திய தண்டனை சட்டம் 327, 304 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் போயஸ் கார்டன், அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கீதா சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வாதிடுகிறார்.

17 டிசம்பர் 2016

நெடுந்தீவில் குதிரை ஓடியவர் விளக்கமறியலில்!

நெடுந்தீவில் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதியவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் முடிவடையும் இந்தப் பரீட்சையில் குறித்த நபர் வேறொருவருக்காக பரீட்சை எழுதிய நிலையில் கடந்த 15ஆம் திகதி சித்திர பாடத்தன்று கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.ஊர்காவற்றுறை பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதுடன் அவரது அடையாள அட்டை, பரீட்சை சான்றிதழ்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார். இதேவேளை மற்றைய நபர் தலைமறைாவாகியுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

12 டிசம்பர் 2016

புனர்வாழ்வு பெற்று விடுதலையான மற்றோர் போராளி மரணம்!


முல்லைத்தீவு, வற்றாப்பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளி ஒருவர் நேற்று உயிரிழந்தார். சுகவீனம் காரணமாக திருகோணமலை குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் வசித்து வந்த இராசதுரை திக்சன் (வயது 26) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.

முல்லைத்தீவு, வற்றாப்பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளி ஒருவர் நேற்று உயிரிழந்தார். சுகவீனம் காரணமாக திருகோணமலை குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் வசித்து வந்த இராசதுரை திக்சன் (வயது 26) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் வெலிக்கந்தை திருகோணமடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திக்சன், இரண்டரை வருடங்களின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். விடுதலை செய்யப்பட்ட நிலையில் திக்சன், சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

06 டிசம்பர் 2016

"துரோகிகள்" புடைசூழ துயில் கொள்கிறாரே ஜெ... அதிமுகவினர் கடும் விரக்தி!

ADMK men upset over Sasikala's relatives in Rajaji Hall மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் துரோகிகள்; சதிகாரர்கள் என அடையாளம் காட்டப்பட்ட அத்தனை பேரும்தான் அவரது உடலை சுற்றி நிற்கிறார்கள்...இது எவ்வளவு பெரிய அநியாயம் என கொந்தளிக்கின்றனர் அதிமுக நிர்வாகிகள். 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக ஒரு நடவடிக்கை மேற்கொண்டார். அதாவது சசிகலா, அவரது கணவர் எம்.நடராஜன், உறவினர்கள் டி.டி.வி தினகரன், வி.என். சுதாகரன், வி. பாஸ்கரன், வி.கே. திவாகர், வி.மகாதேவன், வி. தங்கமணி, டாக்டர் வெங்கடேஷ் என 13 பேரை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கினார் ஜெயலலிதா.இதைத் தொடர்ந்து சசிகலா, போயஸ் கார்டனை விட்டு வெளியேற நேரிட்டது. பின்னர் சசிகலா மட்டும் மன்னிப்பு கேட்டு மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்து கொண்டார். அப்போது சசிகலா வெளியிட்ட அறிக்கையிலும் கூட, தமது குடும்பத்தினரின் துரோகங்களை சுட்டிக்காட்டியிருந்தார். ஜெயலலிதா உடல்நலத்துடன் இருந்தவரை சசிகலாவை தவிர அவர் சுட்டிக்காட்டிய அதிமுகவின் துரோகிகள் எவரையும் கட்சிக்குள் தலைகாட்ட அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ந் தேதி ஜெயலலிதா சேர்க்கப்பட்டது முதல் துரோகிகள் பட்டியலில் இடம்பெற்ற அத்தனை பேரும் மீண்டும் அதிமுக விவகாரங்களில் கோலோச்ச தொடங்கினர். அதிமுகவை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டில் ஜெயலலிதா சுட்டிக்காட்டிய அந்த துரோகிகள்தான் கைவசம் எடுத்துக் கொண்டனர். ஜெயலலிதா காலமாக போயஸ் கார்டனில் வைத்து இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டது. தற்போது அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருக்கிறது. ராஜாஜி ஹாலில் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஜெயலலிதா உடலுக்கு கீழே படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா உடலைச் சுற்றி அவர் யாரையெல்லாம் துரோகிகள் என சுட்டிக்காட்டினாரோ அவர்கள்தான் நிற்கிறார்களே... இது எவ்வளவு பெரிய துரோகம்... கொடுமை என கொந்தளிக்கின்றனர் அதிமுக நிர்வாகிகள். அத்துடன் அமைச்சர்களுக்கு அவர்கள் கட்டளை இடுவதும் அதை பவ்யமாக ஏற்று அவர்கள் செயல்படுவதும் சகிக்க முடியவில்லையே எனவும் புலம்புகின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

04 டிசம்பர் 2016

முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு!லண்டன் மருத்துவர் அவசர ஆலோசனை!

அப்பல்லோ மருத்துவமனையின் முன் குழுமியிருக்கும் கூட்டம்சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல் நலன் குன்றியதால், மருத்துவமனையின் முன் தற்போது கட்சித் தொண்டர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்பட பெருங் கூட்டம் திரண்டுள்ளது.முன்னதாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இன்று மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் இருதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணித்துவருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று உடல் நலக் குறைவின் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு வருகைத்தந்துள்ளார்.தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயிலுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அவருடைய உடல் நலம் பெற மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று அப்போலோ கேட்டு கொண்டுள்ளது.முன்னதாக, கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் சிகிச்சை பெற்று வந்தார்.
சற்று உடல் நலம் பெற்று, பொது வார்டுக்கு மாற்றப்பட்டு, சீக்கிரம் முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார் என்று இன்று முற்பகல் அதிமுக தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ தெரிவித்தது.அப்பல்லோ மருத்துவமனையின் முன் குழுமியிருக்கும் கூட்டம்அப்பல்லோ மருத்துவமனையின் முன் குழுமியிருக்கும் கூட்டம்

27 நவம்பர் 2016

தமிழீழத்தில் பெரும் எழுச்சி கொண்ட மாவீரர் நாள் நிகழ்வுகள்!

கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் இன்று மாலை 6.05 மணிக்கு ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றனர்.கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடந்த நிகழ்வில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், ஈகைச்சுடர் ஏற்றி வைத்தார். இவ் அஞ்சலி நிகழ்வில், வடமாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.அதேவேளை, தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி - முழங்காவில் துயிலுமில்லத்தில், நடந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். பொதுச்சுடரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏற்றிவைத்தார்.

26 நவம்பர் 2016

தமிழர் பகுதிகளில் நாளை துயிலுமில்லங்களில் சுடரேற்றல்!

தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை சுத்தப்படுத்தும் பணிகள் இன்றும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், நாளை மாலை அங்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில், மாவீரர் நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இங்கு நேற்றும் இன்றும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இராணுவத்தினரால் உடைக்கப்பட்ட மாவீரர் துயிலும் கல்லறைகள், நடுகற்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. இந்தச் சிதைவுக் குவியலின் மீது மாவீரர் தீபம் ஏற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில், 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரையில் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டதுடன், நடுகற்களும் நாட்டப்பட்டன. இங்கு 2150 மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டதுடன் 1000 நடுகற்கள் அமைக்கப்பட்டும் உள்ளன.2009 ஆம் ஆண்டு இராணுவத்தினர் குறித்த பகுதியை கைப்பற்றிய பின்னர் மாவீரர் துயிலுமில்லம் அழிக்கப்பட்டதுடன், கல்லறைகளும் சிதைக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன் குறித்த பகுதி இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதனையடுத்து, உடைக்கப்பட்ட கல்லறைகளை ஒன்று சேர்த்து நாளை அதன் மேல் மாவீரர்களின் நினைவாக சுடரேற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.அதேவேளை, ஒரு சில கல்லறைகள் சேதமடையாத நிலையில் மண்ணில் புதையுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இராணுவத்தின் பிடியில் இல்லாத துயிலுமில்லங்களில் நாளை மாவீரர்களை நினைவு கூருவதற்கு பரவலான ஏற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

24 நவம்பர் 2016

புலிகளின் தலைவர் ஒருவரை கொல்வோமா எனக் கேட்டார்கள்!

புலிகளின் தலைவர் ஒருவரை கொல்வோமா எனக் கேட்டார்கள்!எல்.ரீ.ரீ.ஈ தலைவரொருவர் இருக்கிறார். அவரை, நாளை கொல்லப்போகிறோம். போவோமா?’ என, கருணா அமைப்பைச் சேர்ந்த சாமி என்பவர் கேட்டார். அதற்கு நான், சரி எனக் கூறினேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் முதலாவது சாட்சியாளரான பிருதிவிராஜ் மனம்பேரி, நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.அதுமட்டுமின்றி, இந்த வழக்கின் சந்தேகநபரான சாமி என்றழைக்கப்படும் பழனிச்சாமி சுரேஷை, கொழும்பு கங்காராமை, லொன்றிவத்தை பகுதியில் வைத்து, ரவிராஜ் எம்.பி கொல்லப்படுவதற்கு முந்தைய தினம் சந்தித்தபோது, அவருடன் இருந்த கடற்படை வீரர்கள் மூவரையும் மன்றுக்கு அடையாளம் காட்டினார்.த.தே.கூ எம்.பியான நடராஜா ரவிராஜ், படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய ஜூரிகள் சபை முன்னிலையில், நேற்று முற்பகல் 11.17 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக இருந்து, அரச தரப்புச் சாட்சியாக மாறிய பிருதிவிராஜ் மனம்பேரி சாட்சியமளிக்க, சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்டார்.அவரிடம், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரலான ரோஹந்த அபேசூரிய கேள்வி கேட்டபோதே, அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறியதோடு, பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் கேள்விகளுக்குப் பதிளித்து, சாட்சியம் வழங்கினார். அவர் சாட்சியமளித்த போது “கிழக்கு மாகாணத்தில், பொலிஸ் அதிகாரியாக நான் பணியாற்றியபோது, எல்.ரீ.ரீ.ஈ அமைப்பிலிருந்து பிரிந்த கருணா குழுவினர் எங்களுடன் சேர்ந்து செயற்பட்டனர். இதன்போதே சாமி என்றழைக்கப்படும் பழனிச்சாமி சுரேஷுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களுடன் இணைந்து, எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் முகாமொன்றைத் தாக்க முயன்றபோது, விசேட அதிரடிப்படையினர் எங்களைத் தடுத்தனர்.
அதனையடுத்து, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு நான் மாற்றப்பட்டேன். நான், கொழும்பில் பணியாற்றிக்கொண்டிருந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில், கருணா குழுவைச் சேர்ந்த சாமி என்பவர், கொட்டாஞ்சேனைப் பகுதியிலேயே தங்கியிருந்தார். 2006.11.09 அன்று மாலை 4.30 மணியளவில், சாமியிடமிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பின் பின்னர், கங்காராமை, லொன்றிவத்தை பகுதியிலுள்ள கட்டடத்தில் அவரைச் சந்தித்தேன். அங்கேயே, கடற்படை அதிகாரிகளான பிரசாத் ஹெட்டியாராச்சி, செனவிரத்ன, வஜிர என்ற கடற்படை அதிகாரிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்னரும், அப்பகுதியில் வைத்து அவர்களைச் சந்தித்துள்ளேன்.எல்.ரீ.ரீ.ஈ தலைவரொருவர் இருக்கிறார். அவரை, நாளை கொல்லப்போகிறோம். போவோமா?” என, சாமி கேட்டார். நானும் சரி என்றேன். அன்றையதினம், தனது மோட்டார் சைக்கிளையும் தலைக்கவசங்கள் இரண்டையும் என்னிடம் தந்த சாமி, நாளை (2006.11.10) காலை 6 மணிக்கு பொரளை கனத்தை மயானத்துக்கு அருகில் வருமாறு என்னிடம் கூறினார். நானும், அந்த இடத்துக்குச் சென்றேன்” எனச் சாட்சியமளித்தார்.
அத்துடன், சாட்சியமளிப்பு நிறுத்தப்பட்டது. முதலாவது சந்தேகநபரின் சாட்சியமளிப்பு, இன்றும் தொடரவுள்ள நிலையில், வழக்கு விசாரணையை, இன்று காலை 10.30க்கு, நீதிபதி ஒத்திவைத்தார்.

13 நவம்பர் 2016

முதல்வர் ஜெயலலிதா பெயரில் அறிக்கை!

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஓர் அறிக்கை வெளியாகியிருக்கிறது.அனைவரது பிரார்த்தனையாலும், தான் மறுபிறவி எடுத்துள்ளதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். வெகு விரைவில் முழு உடல் நலன் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
வரும் 19-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.
அதேபோல், தனது கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில், தொண்டர்கள் அனைவரும் அதிமுக வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஆனால், அந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் கையொப்பம் இடம்பெறவில்லை. பெயர் மற்றும் பதவி மட்டுமே குறி்ப்பிடப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை தேறிவிட்டதாக அப்போலோ மருத்துமவனை தலைவர் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்த நிலையில், அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே, அவரது உடல் நிலை குறித்த தெளிவு இல்லாத நிலையில், இந்த அறிக்கை வந்திருக்கிறது.இடைத் தேர்தலில் கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கவும், வாக்காளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி, தனது கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யவுமே இந்த நடவடிக்கை என அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

03 நவம்பர் 2016

போராளி ஒருவர் திடீர் மரணம்!

வவுனியா- பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி ஒருவர் நேற்று திடீரென மயங்கி வீழ்ந்து மரணமானார். புளியங்குளம் பகுதியை சேர்ந்த அமலதாஸ் (வயது-46) என்ற முன்னாள் போராளியே மரணமானவராவார்.நேற்றைய தினம் உறவினர்களுடன் வெளியில் சென்று விட்டு மதியம் மூன்று மணியளவில் வீடு திரும்பிய இவர் ஓய்வு எடுப்பதற்காக உறங்கச் சென்ற வேளை திடீரென மயங்கி கீழே விழுந்தார். மயக்கத்துடன் தான் இருக்கின்றார் என்று நினைத்து குடும்பத்தினர் அவரை புளியங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே மரணமாகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இவரது மரணம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள உறவினர்கள், இதுவரை அவர் நல்ல ஆரோக்கியமாகவே காணப்பட்டார் என்றும் தெரிவித்தனர். அமலதாஸ் 2011.04.23 அன்று புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையானவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

21 அக்டோபர் 2016

யாழ்,பல்கலை மாணவர்கள் படுகொலை!ஐவர் கைது என தெரிவிப்பு!

கொக்குவில்- குளப்பிட்டி பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனையின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்பட்ட ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அரச தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.மாணவர்களின் கொலை தொடர்பிலான விசாரணைகள் இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட 3 ஆம் வருட மாணவர்களான கந்தரோடையைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷ்ன் என்ற 24 வயதுடைய மாணவனும், 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் என்ற 23 வயதுடைய மாணவனும் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் உயிரிழந்திருந்தனர். கந்தரோடையில் இருந்து யாழ்ப்பாணம் - பல்கலைக்கழக விடுதிக்கு, சென்று கொண்டிருந்த போது, கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலொன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இவர்கள் இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு 11.30 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக மாணவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மாணவன் சுலக்சனின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பதை சட்ட மருத்துவ அதிகாரி தனக்குக் காட்டியதாக அவரது தந்தையார் தெரிவித்தார்.
இதனால் மாணவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம், இந்தக் கொலைகளுக்கு நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை பகிஷ்கரித்துள்ளதுடன், உயிரிழந்த மாணவர்களின் உருவப் படங்கள் பொறிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பதாதைகளையும் தொங்கவிட்டுள்ளனர். அத்துடன் பல்கலைக்கழகத்தில் கருப்புக் கொடிகளும் தொங்கவிடப்பட்டுள்ளன.

14 அக்டோபர் 2016

அவுஸ்திரேலியாவில் மேயர் தர்மராசாவான ஈழத்தமிழன்!

நானும் லவனும் எங்கிருந்து வந்தோம், நாங்கள் யார், என்றில்லாமல் கிடைத்த சந்தர்ப்பங்களை இறுகப் பற்றிக் கொண்டோம்... சுய தலைமைத்துவப் பாடங்கள் ஆறு. மேயர் சேரலாதன் தருமராசா லவன், அவுஸ்திரேலிய இராணுவ மேயர் பற்றிப் பெருமை கொள்ளாது இருக்க முடியாது. நானும் அவரும் 19 வயதில் அவுஸ்திரேலிய மண்ணில் புகலிடம்கோரி 10ம் வகுப்பில் ஒன்றாகப் படித்தோம். அவருடைய அனுபவங்கனைப் பகிர்வதில் எனக்குப் பெருமையாக உள்ளது. நீங்கள் எங்கு தொடங்குகிறீர்கள் என்பதில்லை எங்கு போகிறீர்கள் என்பதுதான். லவன் 15 வயதில் ஒரு அகதியாக அவுஸ்திரேலியாவிற்கு வந்தார், சகோதரியாருடனும், தாயாருடனும். அவருடைய தந்தை இல்லை. தாயார் ஒரு பரதநாட்டிய ஆசிரியர். அதனால் சீவியத்திற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. லவன் கடையில் வேலை செய்து குடும்பத்திற்கு உதவினார். குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு அவருடைய தோளில் விழுந்தது. எனினும் அவுஸ்திரேலியா அவருக்குப் பாதுகாப்பும் சந்தர்ப்பமும் அளித்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை கடும் உழைப்புடனும் விடாமுயற்ச்சியுடனும் சரியாகப் பயன் படுத்தினார். நானும் லவனும் எங்கிருந்து வந்தோம்?நாங்கள் யார்?என்றில்லாமல் கிடைத்த சந்தர்ப்பங்களை இறுகப் பற்றிக் கொண்டோம். உங்கள் கனவுகளை அடைய நேர் பாதை இருக்காது. லவன் என்றும் பட்டாளத்தில் சேர்வது போலிருக்கும். லவன் எல்லோருக்கும் விக்கிப்பீடியாதான். எனக்கு தேவையான எல்லாம் கற்றுக் கொடுத்தான்.
ஆனால் எதுவும் எண்ணியபடி நடப்பதில்லை. சீவியத்திற்குரிய பிளைப்பைத்தேட வேண்டும். நாம் ஒரு குடிபெயர்ந்த சமூகம். கிடைத்ததைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எப்படியோ சீவியம் பண்ணவேண்டும்.
லவன் சிட்னிக்குப் போனான். அங்கே ஆமி சேமப்படையில் பதிந்து கெண்டான். பட்டதாரித் தொழிலுக்கு விண்ணப்பிக்கவில்லை. அம்மாவுக்காகப் படித்த பட்டம்தானே! அவனுக்கு தான் என்ன செய்கிறேன் என்பதே தெரியாது.
அமைதியாக றோயல் மிலிரறி கொலீச்' சில் சேர்ந்தான். மனைவிக்குக்கூடத் தெரியாது. யாருக்கும் சொல்லவில்லை. தன் வருங்காலத்தைப் பணயம் வைத்தான்.
காலத்தின் விளைவாலும் விதி விட்ட வழியாலும் அவனுடைய விடா முயற்சியாலும் சரித்திரம் படைத்தான்.
தியாகங்களுடன் பிரயாணம் ஆனால் அன்பின் உழைப்பு லவனுடைய இளவயது ஆசை நிறைவேறியது. ஆனால் இன்னமும் தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது. அவனுடைய பாதை சுலபமானதாக இல்லை. குடும்பத்தைப் பிரிந்து கடமை நிமித்தம் அவுஸ்திரேலியாவின் பல பாகங்களுக்கும் சென்றான். ஆனால் மிக உபயோகமானது என்றே சொல்ல வேண்டும்.
எதற்கும் ஒரு குழுத் தேவை. நான் அறிந்த மட்டில் லவன் நண்பர்களுடன் ஒளிவு மறைவின்றிப் பழகுவான். அவனுடைய மனைவி அவனுக்கு உறு துணை. அவனுடைய எல்லா முயற்சியிலும் அவளே கதாநாயகி. ஏன் லவனுக்கு அவளே வழிகாட்டி. லவனால் கட்டப்பட்ட கோட்டையின் அத்திவாரமே அவள்தான். உங்களுக்கு ஒரு கனவு நனவாக வேண்டுமானால் புத்திசாலித்தனமாக குழுவைத் தெரிவு செய்யவேண்டும். தனி மரம் தோப்பாகாது. தினமும் சிறிய செயல்கள் மீட்டவல்லவன் ஆமையும் முயலும் போட்டிபோல தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றிலும் நிதானமாக இருப்பான்.
ஒவ்வொரு அடிக்கும் பின்னால் அடுத்த அடியை வைத்துக் கொண்டே இருப்பான்.
வேர்களை மதியுங்கள். உங்கள் வினைச்சலுக்குக் காரணமானவர்களைப் பெருமைப் படுத்துங்கள்.
லவன் பெருமையுடன் ஒரு அவுஸ்திரேலியன்! பெருமையுடன் ஒரு தமிழன். இரண்டும் அவனுக்கப் பெறுமதியானவை. இது எல்லா குடியேற்ற வாசிகளுக்கும் அகதிகளுக்கும் பொருந்தும்.
லவன் இலங்கையிற் பிறந்து தமிழனாக வளர்க்கப்பட்டவன். போரின் கொடுமைகளை அனுபவித்த குடும்பம். லவன் பெருமையுடன் தமிழ் பேசவும் எழுதவும் செய்வான்.
அவனுக்கு தன் மொழி பண்பாடு சரித்திரம் யாவற்றிலும் அபாரப் பெருமை. யார் என்ன கூறினாலும் விட்டுக் கொடுக்க மாட்டான்.
ஆனால் அவுஸ்திரேலியாதான் அவனுக்கு வாழ்வு கொடுத்தது என்பதைக் கூறத்தவறமாட்டான். தன் நாடு தரத் தவறியதை தந்தது அவுஸ்திரேலியாதான் என்ற விசுவாசம் அவனுக்கு என்றும் உண்டு.
அதனால் அவன் அதனைப் பெருமைப் படுத்துவான். அவுஸ்திரேலியன் போலவும் இருப்பான் இலங்கையன்போலவும் இருப்பான்.
வேர்களை நினையுங்கள். உங்கள் விளைச்சலுக்குக் காரணமானவர்களை மறவாதீர்கள்.
லவன் பட்டாளத்தில் சேர எண்ணிய போது எனக்குப் புரியவில்லை. அது அவனுடைய கனவு! அவன் இன்று அதனை நனவாகக் காண்கிறான்! மேயர் தருமராசாவாக! அவனுடைய 35வது பிறந்த நாளில்! ஒரு பெரிய சாதனை! ஒரு சிறிய அகதிப் பையனுக்கு! வாழ்த்துக்கள்!
இது வெறும் தொடக்கம்தான்...! உனக்கு ஒரு பெரிய எதிர்காலம் உண்டு.

நன்றி:செய்தி இணையம்
 

02 அக்டோபர் 2016

பிரபாகரன் தெய்யோ…சிங்கள பெண் சிப்பாய்கள் நெகிழ்ச்சி!

யாழ்ப்பாணத்தில் தற்பொழுது பனம் பழம் சீசன். தீவுப்பகுதியில் கடமையிலிருந்து விட்டு விடுமுறையில் வீடு செல்வதற்காக புறப்பட்டு வந்து யாழ்ப்பாணம் நகரத்தில் பனம் பழப்பாணி, பனாட்டு, கருப்பட்டி, பனங்குட்டான் என்று ஆர்வத்தோடு வாங்கிக்கொண்டிருந்த பெண் இராணுவ சிப்பாய்களுடன் பேச்சுக்கொடுத்தோம்.
அவர்கள் தெறிக்க விட்டவற்றிலிருந்து ஒரு பகுதியே இது…
பிரதான வீதியிலிருந்து உள்ள பஸ்ஸே ஓடாத எட்டு பத்து கிலோமீற்றர்கள் கால் நடையாக நடந்தே வரவேண்டிய குக்கிராமங்களிலிருந்து முன்பெல்லாம் நாங்க சரியா கஸ்டப்பட்டிருக்கிறம். சுமாரா படிச்சிருந்தும் வேலையில்ல. எங்கட வாழ்க்கை எப்புடி அமையும், எப்பிடி குடும்பத்தை கொண்டு நடத்தப்போறம் என்ற பயம் வேற மனசுக்குள்ள ஓடிக்கொண்டேயிருக்கும்.
ஆனா… எங்களுக்கு பிரபாகரன் தான் தெய்யோ (தெய்வம்). இந்த தொழில், வாழ்க்கை, சந்தோசம் எல்லாமே எங்களுக்கு அவரால தான் கிடைச்சது. தெய்யோ… இல்லாட்டி இப்பயும் நாங்க ஊரில சரியா கஸ்டப்பட்டுக்கொண்டு தான் இருப்பம். இப்பயும் நெறைய புள்ளைங்க ஊரில கஸ்டப்பட்டுக்கொண்டிருக்காங்க.
அதப்பார்க்கேக்க எங்களுக்கு தெய்யோ… பிரபாகரன் தான் நெனைப்புக்கு வரும். தெய்யோ… இருந்தா இப்ப அவையளுக்கும் ஆமியில வேலை கெடைச்சிருக்கும்.
ஆமியில சேர்ந்தாப்புறம் ஆரம்பத்தில எங்களுக்கு பயமாய் தான் இருந்திச்சு. ‘கொட்டியா தாக்கும் எப்பயும் உஸ்ஸாரா இருங்கன்னு’ மேலதிகாரிகள் பயமுறுத்திக்கிட்டே இருப்பாய்ங்க. அப்புறம் எங்க மேல (பெண் இராணுவ படைகள் மீது) தாக்க வேணாம்முன்னு தெய்யோ… தன்ட கொட்டியாவுக்கு (விடுதலைப்புலிகளின் படையணிகளுக்கு) கொம்மாண்ட் (உத்தரவு) கொடுத்திருப்பதாக எங்கட மேல்மட்டத்தில பேசிச்சினம். அப்பத்தான் எங்களுக்கு உசிர் மேல நம்பிக்கையே வந்திச்சு.
(தங்களுக்குள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரிக்கிறார்கள்)
(அப்புறம் மேல சொல்லுங்க என்று கேட்கிறோம்)
ம்… எப்பவாய்ச்சும் வீட்டில இருந்து போனில அம்மா அப்பா நங்கி தம்பின்னு பேசுவாங்க. மாசத்தில மூனு காகிதமாய்ச்சும் (கடிதம்) போடுவாங்க. ஜாக்கிரத… ஜாக்கிரதன்னு சொல்லித்தான் எழுதியிருப்பாங்க. கவலையாய்யிருக்கும். லீவுல வீட்லப்போய், ‘எங்க மேல தாக்க வேணாம்முன்னு’ பிரபாகரன் தன்ட கொட்டியாவுக்கு கொம்மாண்ட் போட்டிருப்பதாகச் சொன்னம். ஊரில எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்க. அதுக்கு மேல வீட்ல உசிர் பத்தி பயம் இல்லாம எல்லாரும் சந்தோசமா இருக்க ஆரம்பிச்சிட்டாங்க.
ஆனா… பிரபாகரன் கவுரம் பிடிச்சவர். தன்ட பெண் கொட்டியாவக்கொண்டு (விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகள்) உங்கள தாக்குவினம். உஸ்ஸாரா இருங்கன்னு மேலதிகாரிகள் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ஆனா… எங்களுக்கு அப்பிடியொரு சம்பவமே நடக்கேல்ல.
(தெய்யோ… தெய்யோ தான் என்று கோரஸ்ஸாக சத்தம் போட்டு சிரிச்சுக்கொண்டு சொன்னவர்கள். சட்டென சீரியஸ் ஆகி, ஹலோ… தெய்யோ இருக்கா? என்று மறுகேள்வி கேட்டு விட்டார்கள்)
எதிர்பாராத இந்தக் கேள்வியால் அப்படியே நிலைகுலைந்து போய்விட்டோம். (அவர்களுடைய முகம் விகாரமடைவதை உணர முடிந்தது)
ஹலோ… என்ன சொல்லுங்க… தெய்யோ இன்னவா? என்று மறுபடியும் அவர்கள் குரல் கேட்டு சுதாகரித்துக்கொண்ட நாம்,
‘இருக்கிறான் என்றாலும்
இல்லைதான் என்றாலும்
இருக்கும் அவன் மீதொரு
பயமும் – பக்தியும்’
எனும் பா.விஜய்யின் கவிதை வரிகள் நினைவில் வந்துபோக, மெல்லிய புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு  அவர்களிடமிருந்து அப்பால் நகர்ந்தோம்.
இவ்வாறு ஒரு இணையத்தில் பிரசுரிக்கப் பட்டிருந்தது.

25 செப்டம்பர் 2016

தேசியத் தலைவர் பாதுகாப்பாக உள்ளார்!செய்தியால் மக்கள் ஆனந்தம்!

லண்டனில் இருந்து இந்த செய்தி நேற்று வலைத்தளங்களில் பரவியபோது மொத்த தமிழ் இனமும் ஆனந்த கூத்தாடியது. இறுதி போரில், வரமாட்டேன் என்றுதான் தலைவர் கூறியிருக்கிறார்.
நான் என்மக்களோடு தான் இருப்பேன். வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் அது இந்த ஈழ மண்ணில் தான். என் பாதுகாப்பு மட்டும் எனக்கு முக்கியம் அல்ல. என் மக்கள் எல்லோரும் ,எந்தம்பிகள் எல்லோரும் கொத்துக்குண்டுகளுக்கு பலியாகின்றனர்.
என் தளபதிகள் ஈழம் காணாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள்.நான் மட்டும் தப்பிச்செல்வது பெரும் சுயநலம் இப்படித்தான் பொட்டுஅம்மானிடம் கூறியிருக்கிறார் தலைவர்.
அவரை ஒரு குழுவாக நின்று பேசி சமாதானம் கூறி ஒருவழியாக அரைமனதோடு தலையாட்டினார் தலைவர்.அந்த ஒரு நொடி எங்களுக்கு போதுமானதாக இருந்தது.மே பதினாறு சிங்களரின் 57வது பட்டாலியன் கோரத்தாண்டவம் ஆடியது.
பாஸ்பரஸ் குண்டுகள் விடாது பொழிந்தது. கொத்துக்குண்டுகள் வெடித்துச் சிதறியது. நாங்கள் களத்தில் இருந்தோம் கரும் புலிகள் பெரும் ஊடறுப்புத் தாக்குதலுக்கு தயாராகினர்.
புயல் போல் நாலாபுறம் இருந்தும் ஊடறுத்து சிங்களரின் படைக்குள் நுழைந்தனர்.அந்த நொடியில் எம் பொடியன்கள் நடத்திய சாகசம் உலக வரலாற்றில் எங்கும் நடந்ததில்லை .அப்படி ஒரு வீர சாகசம்.
சிங்கள பட்டாளியனுக்கு ஒன்றுமே புரியவில்லை.எங்கிருந்து இவன்கள் வருகிறார்கள்,எந்த திசையில் இருந்து வருகிறார்கள் என்ன நிகழ்கிறது ஏன் எல்லோரும் தூக்கி வீசப்படுகிறோம் என்று திகைத்தனர்.
கொத்து கொத்தாக உடல் சிதறி பறந்தனர். தப்பித்து ஓட ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் தான் தலைவரை தூக்கினோம்.,
ஒரு தேவ தூதனை தூக்குவது போல தூக்கினோம்..இதோ உடல் நலம் தேறி வியூகம் வகுத்துக்க் கொண்டிருக்கிறார் தலைவர்.
கலங்காதீர்கள். சந்தர்ப்பம் எதிர் பார்த்து காத்திருக்கிறார்…இப்படி ஒரு செய்தி நேற்று உலக தமிழர்களிடையே பெரும் ஆனந்த கண்ணீரை வரவைத்தது.
ஒரே மகிழ்ச்சி வெள்ளம்..! எம் தேசியத்தலைவரே உம்மை வரவேற்க உலகத்தமிழ் இனமே தயாராக இருக்கிறது.என்று வாழ்த்துச் செய்தி அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு இணையமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

புலிகளின் தடை நீக்கம் குறித்து அவதானிக்கிறதாம் சிறீலங்கா!

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கினால் ஏற்படக் கூடிய விளைவுகள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்க வேண்டும் என்று, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில், ஐரோப்பிய ஒன்றிய சமூகத்தின் பிரித்தானிய சட்டமா அதிபர் எலேனர் சாப்ஸ்ரன் கடந்த வியாழக்கிழமை பரிந்துரைத்திருந்தார்.தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் மற்றும் ஹமாஸ் அமைப்புகளின் பெயர்களை நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சார்பாக, செய்யப்பட்ட மேன்முறையீட்டை தள்ளுபடி செய்யுமாறு எலேனர் சாப்ஸ்ரன் ஆலோசனை வழங்கியிருந்தார். இவரது பரிந்துரையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் நீதிபதிகள் மதிப்பளிப்பது வழக்கம். இதனால், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் உறுதி செய்யலாம் என்று கருதப்படுகிறது.இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்ற உத்தரவு தொடர்பாக தீவிரமாக கண்காணிக்குமாறு பிரசெல்சில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டுள்ளது. நிலைமைகளை உன்னிப்பாக கண்காணிக்குமாறு அங்குள்ள தூதரகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்க உத்தரவிட்டால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் சொத்துக்கள், நிதி என்பன விடுவிக்கப்படும். அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மீதான பயணத் தடையும் நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

17 செப்டம்பர் 2016

திலீபனை நினைவு கூர்ந்த முஸ்லீம் சகோதரர்கள்!

திலீபன் நினைவிடத்தில் இன்றைய நினைவு கூர்தல் நிகழ்வில் கலந்துகொண்ட முஸ்லீம் சகோதரர்கள். எங்களின் தியாகங்களை வைத்து அரசியல் செய்யும் கோமாளிகள் மத்தியில் இச்சகோதரர்கள் சுடரேற்றி தமது வணக்கத்தை செலுத்தியது எமக்கு மனநிறைவை தந்துள்ளது.திலீபா யார் உன்னைதொடரமறுப்பினும் உன் மிச்சமாய் நாமிருப்போம்.ஊடகப்பிரிவு ஜனநாயக போராளிகள் கட்சி.இவ்வாறு அவர்களது முகநூலில் பதிவிட்டுள்ளனர்.

15 செப்டம்பர் 2016

உரிமைகளை மீட்கப் போராடுங்கள்... தீக்குளித்த விக்னேஷ்!

Vignesh facebook post on Self immolation Protest நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர்
பா. விக்னேஷ் தீக்குளிப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் உரிமைகளை மீட்க போராடுங்கள் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது. அதில் சீமான், அமீர், சேரன் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியின்போது பா. விக்னேஷ் திடீரென தன் மீது நெருப்பு வைத்துக கொண்டார். தீயில் கருகிய அவரை அங்கிருந்தோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.95 சதவீத தீக்காயம் ஆகி விட்டதாக கூறியுள்ள டாக்டர்கள் பிழைப்பது கடினம் என்று கூறி விட்டனர். இந்த நிலையில் தீக்குளிப்புக்கு முன்பு விக்னேஷ் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:காவேரியில் நீரை பெற்று விவசாயத்தை மீட்டு எடுக்க போராடுங்கள்.என் தாய் மண் மன்னார்குடியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்த போராடுங்கள்.எம் மண்ணை மலடாக்கும் மன்னையில் இயங்கும் சாராய ஆலையை மூட போராடுங்கள்.இந்தி திணிப்பால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று 800 க்கும் மேற்ப்பட்ட மொழிப்போர் மறவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். அதுபோல புதிய கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டு நம் தாய்மொழி சாகக் கூடாது என்பதற்காக முதல் மற்றும் இறுதி உயிராக என்னுயிர் இருக்கட்டும் அதற்காக போராடுங்கள். * நம் மண்ணில் அந்நிய முதலீட்டை தவிர்த்து தமிழ்த் தேசிய முதலாளிகளை உருவாக்க போராடுங்கள். * நான் வைத்த கோரிக்கைகள் சரியாக இருப்பின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடும் தமிழர்களுக்கு இனி வாக்குச் செலுத்துங்கள்.
இவன்:பா.விக்னேஷ் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலாளர்.என்று அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார் விக்னேஷ். மாணவரான விக்னேஷின் இந்த முடிவு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

10 செப்டம்பர் 2016

என் தலைமுடி உதிர்வதுபோல் என் தமிழும் உதிர்ந்திடுமோ?

கவிதைகள் எழுதும் திறமையை ஊக்குவிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் சிறுவர், சிறுமியர்களுக்கான நிகழ்ச்சி 2011ல் இருந்து ஆண்டு தோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் எல்லோரும் தங்கள் படைப்புகளை வாசித்து கொண்டிருக்கையில், சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய ஒரு தமிழ் தம்பதியரின் மகளான மாயா ஈஸ்வரன் (17) தன் கவிதையை ஆங்கிலத்தில் வாசித்தார்.
அந்த கவிதை ஒபாமா மனைவி மிச்சேல் மற்றும் அந்த சபையில் கூடியிருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்யும் வகையில் இருந்தது.
“என் இத்தனை வருட வாழ்வில் நான் இழந்ததை விட, முக்கியமான ஒன்றை நான் இழந்திருக்கிறேன். என் தலை முடி உதிர்வதை போல, என் இனத்தின் அடையாளமான என் தமிழை உதிர்த்து இழந்து கொண்டிருக்கிறேன். என் தாய்மொழியை நான் பேசியே மூன்றாண்டுகள் ஆகிறது. என் தலைமுடி முழுதும் உதிர்வதை போல், என் தமிழை நான் முழுவதும் மறந்து விடுவேனோ என பயப்படுகிறேன்.” என்று அவரது கவிதை அமைந்திருந்தது.
இதை அவர் வாசித்து முடிப்பதற்குள் அரங்கிலிருந்த மிச்சேல் மற்றும் அனைவரும் உணர்ச்சி வசத்தில், உற்சாகத்தோடு கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். நீ கவிதையை இயற்றிய விதமும், அதை வெளிப்படுத்திய தன்மையும் சிறப்பாக இருந்தது என மிச்சேல் அவர்கள் மாயாவை மனம் மகிழ பாராட்டினாராம்.

18 ஆகஸ்ட் 2016

ஆணைக்குழு முன் ஒரு போராளி வைத்த கருத்துக்கள்!

அரசியல்வாதிகள் தங்களது சுய லாபங்களுக்காக தமிழ் மக்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதை தவிர தமிழ் மக்களின் பிரச்சனையை யாரும் கவனிப்பதில்லை,என இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (17.08.2016) நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கிய  முன்னாள் போராளி ஒருவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.முன்னாள் போராளிகள் 107 நபர்கள் மரணித்துள்ளனர். விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக பல கருத்துக்கள் வருகின்றன. நாங்கள் தடுப்பு முகாங்களில் இருந்த சமயத்தில் எமக்கு உணவுகள் வழங்கப்பட்டது, தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட உணவுகளை,தடுப்பூசிகளை பரீட்சித்து பார்த்து சாப்பிடும் நிலையில் அன்று நாங்கள் இருக்கவில்லை.
அதனால் அதன் உண்மைத்தன்மை முன்னாள் போராளிகளுக்கு தெரியவில்லை . தற்போது நாங்கள் உள்ள நிலையில் அனைவரும் மன அளவில் பாதிப்படைந்துள்ளோம். 95 வீதம் முன்னாள் போராளிகள் தமக்கு என்ன நடந்திருக்கும் என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல்வாதிகள் நாங்கள் தமிழர்களுக்காக இருக்கின்றோம், விடுதலைக்காக இருக்கின்றோம். எமக்கு தீர்வுத்திட்டம் வேண்டுமேன பேசும் அவர்கள் முன்னாள் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி யாரும் கதைப்பதில்லை.முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டது யாவரும் அறிந்த விடயம். ஆனால் சமூகத்துடன் இணைப்பட்ட எந்த அத்தாட்சியும் வெளிப்படவில்லை முன்னாள் போராளி என்பதால் எனது உறவினர்கள் கூட என்னுடன் கதைப்பதில்லை அந்த அளவிற்கு எம்மை இந்த சமூகம் பின்தள்ளியுள்ளது.
நாங்கள் போராடியது எமது தமிழ் பேசும் மக்களுக்காக இன்று தமிழ் மக்கள் இந்த நிலையில் இருப்பதுக்கு காரணம் எமது போராட்டம் இந்த அளவிற்கு வலுப்பெற்றது. நங்கள் போராடாமல் இருந்திருந்தால் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகியிருக்கும்.நாங்கள் போராடியது தமிழ் மக்களுக்காக, போராடிய முன்னாள் போராளிகள் மாவீரர்கள் அவர்கள் ஒன்றும் அறியதாவர்கள் எங்களுக்கு தனிநாடு எங்களுக்கு ஒரு தீர்வுத்திட்டம் , தமிழர் தனித்துவமாக நிம்மதியாக வாழ ஒரு வழி வேண்டுமேன்று போராடி மரணித்தவர்கள் . அவர்களை நாங்கள் நினைவு கூறுவதற்கு கூட தற்போது எதுவும் இல்லை.என்னுடன் ஒன்றாக பயிற்சி எடுத்த 140போராளிகளில் நாங்கள் 4 பேர் தற்போது உயிருடன் இருக்கின்றோம்.136 பேர் மரணித்துள்ளனர். அவர்களை நாங்கள் நினைவு கூறு முடியாதா? அவ்வாறு நினைவு கூர்வது தவறா? யுத்தத்தில் இறந்த இராணுவ வீரர்களுக்கு வடக்கில் நினைவுத் தூபிகள் தமிழ் மக்களுக்காக போராடிய போராளிகளுக்கு தூபிகள் எங்கே என்றும் கேள்வி எழுப்பினார்? உண்மையிலேயே விஷ ஊசி ஏற்றப்படாவிட்டாலும் மனதளவில் முன்னாள் போராளிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண ஒரு நோய் ஏற்ப்பட்டால் கூட ஊசி ஏற்றப்பட்டதால் வந்த நோயாக இருக்குமோ என்ற பயம் அனைத்து முன்னாள் போராளிகளிடமும் தற்போது காணப்படுகின்றது.முன்னாள் போராளியான நாங்கள் ஒரு கூட்டத்திற்கு சென்றால் கூட புலனாய்வு பிரிவினர் எம்மை பின்தொடர்கின்றனர். அப்படியிருந்தும் எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை ஆணைக்குழு முன் எனது கருத்துக்களை கூற வேண்டும் என வந்துள்ளேன் என தெரிவித்தார்.

12 ஆகஸ்ட் 2016

வாழும் போராளிகளை காப்பாற்றக் கோரி ஜெர்மனியில் போராட்டம்!

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர். இதுவரையிலும் 107 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே இறந்துள்ளனர்.
சிங்கள பேரினவாத ராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகளின் மர்ம மரணங்களைக் கண்டித்தும் ! பன்னாட்டு விசாரணையை கோரியும் பேர்லின் நகரில் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை 18.08.2016 அன்று மாலை 16:30 மணிக்கு நடைபெறவுள்ளது. கொன்று அழிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் மறைமுக யுத்தத்தினை அம்பலப்படுத்தவும், யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு இதன் பயங்கரவாதத்தினை எடுத்துச் சொல்லவும் ஒன்று கூடுகிறோம்.போராளிகள் சிறைக்குள்ளும், வெளியேயும் சிதைக்கப்படும் காலகட்டத்தில், நமது போராட்ட குரல்களே அவர்களுக்கான நீதியை கொடுக்கும்.மௌனமாக அரங்கேறிக்கொண்டிருக்கும் உயிர்வதைகளை, உயிர்க்கொலைகளை நிறுத்த இந்த போராட்டங்கள் முக்கியம் என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்றுகூடுவோம். எமது விடுதலைக்காக தமது வாழ்வையே அர்ப்பணித்து போராடி இன்று பல்வேறு வடிவங்களில் சிங்கள பேரினவாத அரசின் கெடுபிடியால் துன்பப்படும் போராளிகளுக்காக குரல் கொடுப்போம் வாருங்கள்.வாழும் போராளிகளை காப்பாற்ற வேண்டும் ஏனெனில் அழிக்கப்பட்ட எமது சரித்திரத்தில் எஞ்சியுள்ள சாட்சிகளும் , சரித்திரமும் அவர்கள் மட்டும் தான்.

09 ஆகஸ்ட் 2016

நான்காம் மாடியில் ஸ்பிறே அடித்து சித்திரவதை செய்தார்கள்!

கொழும்பிலுள்ள தீவிரவாத விசாரணைப்பிரிவுத் தலைமையகமான 4ஆம் மாடிக்கு விசாரணைக்குச் சென்று வந்த பின்னர் வெயிலில் நிற்கவும், கடினமான வேலைகள் செய்யவும் முடிவதில்லை என முன்னாள் போராளியொருவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், கொழும்பு 4ஆம் மாடியில் எங்களை விசாரணை செய்யும் போது, எங்களுக்கு வலி ஸ்பிறே ஒன்று அடித்து விசாரணை செய்தனர். சீனத் தயாரிப்பான அந்த ஸ்பிறே அடித்தால், வலிகள் தெரியாது. அதன்பிறகு எங்களை சித்திரவதை செய்வார்கள்.சித்திரவதை செய்யும் நேரத்தில் அதனை உணர்ந்து கொள்ள முடியாது. ஆனால், சில மணி நேரங்கள் கழிய வலி தொடங்கினால், அதனைத் தாங்க முடியாது. இவ்வாறு செய்த சித்திரவதைகளால் இன்று கடினமான வேலை செய்ய முடிவதில்லை. வெயிலில் அதிக நேரம் நின்றால், தலைவலி ஏற்பட்டு மயக்கம் வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

06 ஆகஸ்ட் 2016

அவுஸ்திரேலியாவில் கணக்கெடுப்பில் தமிழீழம் என்பதும் இணைப்பு!

அவுஸ்திரேலியாவின் சனத்தொகை கணக்கெடுப்பில்"பிறந்த நாடு"என்பதற்கு தமிழீழம் எனவும் தனியாக குறிக்கப்படமுடியும் எனவும் அதன் மூலம் தமிழீழம் எனக்குறிப்பிடுவோர் தனியான பகுதியினராக கணக்கெடுப்பில் உள்ளடக்கப்ப டுவார்கள் என அந்நாட்டு கணக்கெடுப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைவாக சனத்தொகை கணக்கெடுப்பின்போது பிறந்தநாடு என்பதற்கு தமிழீழம் எனவும் பேசும்மொழி பூர்வீகம் என்பதற்கு தமிழ் எனவும் பயன்படுத்துமாறு சமூக ஆர்வலர்களால் சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.
அவற்றில் சில வருமாறு:
சர்வதேச சமூகங்களும் ஊடகங்களும் எங்களை தமிழர் என்றே வகைப்படுத்துகின்றனர். ஆனால் நாங்கள் எங்களை தமிழர்களாக பிரகடனப்படுத்துவதில் இடர்படுகின்றோம்.
ஒஸ்ரேலியா போன்ற தமிழர்கள் ஏறத்தாழ 75000 அளவில் வசிக்கின்ற நாடுகளில் எமது எண்ணிக்கையை சரிவர பிரகடனப்படுத்துவதன் மூலமே தமிழர் தொடர்பான சமூகபிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியும். இம்முறை பிறந்தநாடு எனும்போது தமிழீழம் எனவும் பதிவோம்.
எம்மை நாமே யாரென்றுசொல்வோம்.

Q11 – Country of Birth – TAMIL EELAM
Q15 – Language spoken at home (other than English) – TAMIL
Q17 – Our ancestry – TAMIL

குறிப்பு:
(1)இம்முறை தமிழீழம் (TAMIL EELAM) என்று குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பதியப்படாது போனால் அடுத்தமுறை கணக்கெடுப்பில் தமிழீழம் என்ற தனியான பகுதி கணக்கெடுப்பிலிருந்து நீக்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு.
(2)ஒஸ்ரேலியாவின் ஏதோவொரு வீட்டில் எதிர்வரும் செவ்வாய்கிழமை 09-08-2016 இரவு இருப்பவர்கள் எவரும் இக்கணக்கெடுப்பில் பங்குபற்றியே ஆகவேண்டும். அல்லது தண்டப்பணம் கட்டவேண்டும். நாங்கள் யார்? எமது அடையாளம் என்ன?இலங்கை தமிழை பூர்வீகமாக கொண்டு, இலங்கையில் பிறந்து, தமிழை ஆங்கிலம் தவிர்ந்த மொழியாக பேசிக்கொண்டு அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள்.2016 குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்பில் இல 16 – ஆங்கிலம் தவிர்ந்த வேறு எந்த மொழியை வீட்டில் பேசுகிறீர்கள் என்ற கேள்விக்கு தமிழ் என்று குறிப்பிட வேண்டியது எமது வரலாற்று கடமையாகும்.2011 குடிசன மதிப்பீட்டு தரவுகளின்படி வெவ்வேறு பூர்வீகங்களை கொண்ட மக்களில் மொத்தமாக 50151 மக்கள் வீட்டில் தமிழை பேசுகிறார்கள் என்ற கணக்கெடுப்பின் படி தான் அவுஸ்திரேலிய அரசு நமது தமிழ் மக்களுக்கான சலுகைகளையும் மானியங்களையும் வழங்கியது என்பது மிக தெளிவான உண்மையாகும்.கடந்த 5 வருடங்களில் இறந்தவர்களையும் நாட்டை விட்டு பல் வேறு காரணங்களால் வெளியேறியவர்களையும் தவிர்த்து புதிதாக குடியேறியவர்களும், தமிழ் பேசும் மக்களுக்கு பிறந்த குழந்தைகளும்
2016 குடிசன மதிப்பீட்டில் சேர்த்துக்கொள்ள படுவதனால் இம்முறை கணக்கெடுப்பில் இத்தொகையை இரட்டிப்பாக்குவதற்கு நாம் எல்லோரும் எம்மாலான பங்களிப்பை வழங்க வேண்டும். இதற்காக நாமும் நமது குழந்தைகளும், நமது முதியோரும், நமது தமிழ் நண்பர்களும், அவர்களை சார்ந்தவர்களும் ஆங்கிலம் தவிர்ந்த மொழியாக வீட்டில் பேசப்படும் மொழி தமிழ் என்பது குறிப்பிட பட வேண்டிய அவசியத்தை ஊக்குவிக்க வேண்டும். மிகவும் முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது!எமது பூர்வீகம் இலங்கை தமிழ் என்பதாகும்.
நாம் நம்மை இலங்கை தமிழர்கள் என அடையாளம் காட்டி கொண்டால் மட்டுமே உலக அரங்கில் எமது தொகை அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை தமிழர் தொகையை நிர்ணயிக்கும்.
அப்பொழுது தான் ;
(1)நாம் இங்கே ஏன் புலம்பெயர்ந்தோம் என்ற வரலாறு எழுத்துகளால் பொறிக்கப்படும்.( 2011 இன் எண்ணிக்கைக்கும் 2016 இன் எண்ணிக்கைக்கும் இடையிலான வேறு பாட்டுக்கான காரணம் சுட்டிக்காட்டப்படும்)
(2)நம்மிடையே நம்முடன் வாழும் இலங்கை தமிழ் சகோதர சகோதரிகளின் அகதி விண்ணப்பங்களில் கணிசமான கவன ஈர்ப்பு செலுத்தப்படும்.
(3)அவுஸ்திரேலிய பிரஜா உரிமை கொண்ட இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்தவர்களை வழிநடத்தக்கூடிய தகுதியையும் அவர்களை நம் சகோதரங்களாகவும் ஏற்றுக்கொண்டமையையும் உறுதிப்படுத்த முடியும். குறிப்பு;
“இலங்கை” என்பது தான் நாம் பிறந்த நாடு.
Ceylon என்ற பெயர் Sri Lanka என மாற்றப்பட்டமை ஓர் துரதிர்ஷ்டமான, தமிழர்களாகிய எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாத சொற்பதம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆனால் சமகாலத்தில் எம்மை உலக அரங்கிலோ, அவுஸ்திரேலியாவிலோ இலங்கை தமிழர்கள் என அடையாளப்படுத்த வேண்டிய தேவையை நாம் உணர வேண்டும்.
இதனை அவுஸ்திரேலிய தமிழர் பேரவையும், தமிழ் பாடசாலைகளின் கூட்டமைப்பும், தமிழ் மூத்தோர் சங்கங்களும் உணர்ந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
“Other ” என்ற சொற்பதம் கணக்கெடுப்பில் “Other” என்று மட்டும் தான் குறிப்பிடப்படும் என்பது தவிர்க்க முடியாத்து “Tamil nfd” என்ற பூர்வீகம் எமக்கு ஓர் அடையாளத்தை கொடுக்காது என்பதனை nfd (no further definison) குறித்து நிற்கிறது என்ற உண்மையை உணர்ந்துதானாக வேண்டும்.
இத்துடன் இணைக்கப்பட்ட 2011 குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரங்கள் நாம் கடந்த காலத்தில் விட்ட தவறையும், எதிர் காலத்தில் விடப்போகும் தவறையும் புத்தி ஜீவிகளுக்கு உணர்த்தும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
“இலங்கை தமிழர்” என்ற சொற்பதம் எம்மை “Ceylon tamil” என்றோ அல்லது “தமிழ் ஈழ தமிழர்” என்றோ மட்டுமே மறைமுக அடைமானம் கொள்ளப்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இலங்கை தமிழர்களாக நம்மை அடையாளம் காட்டி மற்றய உலக தமிழர்களோடு இணைந்து தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் வளர்த்து வாழ வைக்கும் முற்போக்கு சிந்தனையை நமதாக்கிக்கோள்வோம்!

02 ஆகஸ்ட் 2016

நாரந்தனையில் மரத்தில் மாணவனின் சடலம்!

நாரந்தனை 8 ஆம் வட்டாரப் பகுதியில் மரமொன்றில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் சடலம், இன்று மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். வேலணை மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்விகற்ற தவிசாலன் பானுசன் (வயது 17) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் நேற்று முதல் காணாமற்போயிருந்த நிலையிலேயே, இன்று வெற்றுக்காணியிலுள்ள மரமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாணவனின் இறப்பு தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற ஊர்காவற்துறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், விசாரணைகளை மேற்கொண்டார். அத்துடன், தடய அறிவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. நீதிவானின் உத்தரவுக்கமைய சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

29 ஜூலை 2016

தஞ்சம் கோருபவர்களை வரவேற்கும் முடிவில் மாற்றமில்லை-அங்கெலா மெர்கல்

ஜெர்மனியில் சமீபத்தில் தஞ்சம் கோரி வந்தவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில்,தஞ்சம் கோருபவர்களை வரவேற்கும் தன்னுடைய கொள்கையை கைவிட முடியாது என ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கல் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் குடியேறிகளாக வந்த இருவர், இஸ்லாமிய அரசு என அழைத்துக் கொள்ளும் அமைப்பின் பெயரில் தாக்குதல் ஒன்றை நடத்தியதன் மூலம், அவர்களுக்கு ஆதரவளித்த நாட்டை கேலி செய்துள்ளனர் என்று அங்கெலா மெர்கல் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் பாதுகாப்பை உறுதிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக கூறியுள்ளார்.
ஆனால்,ஜெர்மனியின் வெளிப்படையான கலச்சாரத்தை தீவிரவாதிகள் குறைத்து மதிப்பீடு செய்வதை அனுமதிக்க முடியாது என அவர் மேலும்தெரிவித்துள்ளார்.

25 ஜூலை 2016

ஜெர்மனியில் மீண்டும் தாக்குதல்!

ஜெர்மனியில் இசை விழா ஒன்று நடந்த இடத்துக்கு வெளியே குண்டை வெடிக்கச் செய்த சிரியாக்காரர் பல்கேரியாவுக்கு நாடுகடத்தப்படவிருந்தவர் என்று ஜெர்மனி கூறுகின்றது.
தற்கொலை செய்துகொண்ட தாக்குதலாளி பன்னிரெண்டு பேரை காயமடையச் செய்துள்ளார்.
இந்த குண்டு வெடிப்பு தெற்கு மாநிலமானபவாரியாவில் அன்ஸ்பக் நகரில் நடந்துள்ளது.
இசை விழா நடந்த அரங்குக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தாக்குதலாளி தனது முதுகுப் பையில் இருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
ஜெர்மனியின் தெற்கு நகரான அன்ஸ்பர்க்கில் இசை திருவிழா ஒன்றில் 15 பேரை காயமடையச் செய்த தாக்குதலுக்கு, தீவிரவாத அமைப்பான இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தாக்குதல்தாரி தயாரித்த கைபேசி வீடியோவில், ஐ .எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பகாடியிடம் தாக்குதல் தாரி தனது விசுவாசத்தை காண்பிப்பதாக தெரிகிறது என பவேரியன் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மன் நாட்டின் தெற்கு பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தஞ்சம் மறுக்கப்பட்ட சிரியா நாட்டு நபர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து, பொது இடங்களில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க ஜெர்மன் உள்துறை அமைச்சர் தாமஸ் டி மைசிரி உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதல்தாரி இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜெர்மன் வந்ததாகவும், அங்கு தஞ்சம் மறுக்கப்பட்டதால் பல்கேரியாவிற்கு செல்ல இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

நன்றி:பிபிசி தமிழ்

22 ஜூலை 2016

ஜெர்மனியில் தாக்குதல் பலர் பலி!

தெற்கு ஜெர்மன் நகரான முனிஸில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில் பலர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகிறார்கள்.
அங்கு காவல்துறையினர் சுற்றி வளைத்து எதிர் நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிதாரி ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.ஒலிம்பியா வணிக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மக்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதிக்கு மக்களை வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் பல பேர் உயிரிழந்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக காவல்துறை கூறுகிறது.திங்கட்கிழமையன்று போவேரியாவில் குடியேறி ஒருவர் தொடரூந்தில் ஐந்து பேரை குத்தியதை அடுத்து பாதுகாப்பு படைகள் எச்சரிக்கப்பட்டிருந்தனர்.மேலும் பல தாக்குதல்கள் நடக்கலாம் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.ஒரு தாக்குதல்தாரியைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன. சம்பவம் நடைபெற்ற இடத்தில் உலங்குவானூர்திகள்  பறப்பதாகவும், கடைகளில் உள்ள ஊழியர்கள் வெளியே வர முடியாமல் தவிப்பதாகவும் தெரிகிறது.

19 ஜூலை 2016

ஜெர்மனியில் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை!

ஜெர்மனியின் தென்புற நகரான வூர்ஸ்பர்கில் தொடரூந்து ஒன்றில் பல பயணிகளைத் தாக்கிய 17 வயது ஆப்கானிஸ்தான் குடியேறி ஒருவரை ஜெர்மானியப் போலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.இந்தக் குடியேறி கையில் ஒரு கோடாரி மற்றும் ஒரு கத்தியால் பயணிகளைத் தாக்கியதாகவும், அவரால் தாக்கப்பட்டவர்களில் நால்வர் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது.
பவேரியா மாகாண உள்துறை அமைச்சர் ஜோயாச்சிம் ஹெர்மன் இந்த தாக்குதலுக்கான உள்நோக்கம் என்னவென்று இது வரை தெரியவில்லை என்றார்.
பிரான்ஸில் நடந்ததைப் போல இஸ்லாமியவாதிகளின் தாக்குதல்கள் ஜெர்மனியிலும் நடக்கலாம் என்று கணிசமானவர்கள் அஞ்சுவதாக  ஜெர்மனியில் உள்ள பிபிசி செய்தியாளர் குறிப்பிட்டுள்ளதாக "பிபிசி தமிழ்" செய்தி வெளியிட்டுள்ளது.

16 ஜூலை 2016

துருக்கியில் 200பேர்வரை பலி!

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடு முழுக்க நடந்த மோதல்களில் சுமார் 200 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், பெரும்பான்மையானவர்கள் பொதுமக்கள்.
துருக்கியின் இரு பெரு நகரங்களான இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் ஒரே இரவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்புகளை தொடர்ந்து, 1500க்கும் மேற்பட்ட ஆயுத படையினர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி அதிபர் ரீஸெப் தாயிப் எர்துவான் தொலைக்காட்சி உரையில், இந்த முயற்சியைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.
தன்னுடைய அரசை கவிழ்க்க செய்யப்பட்ட முயற்சிகள் தேசத்துரோக செயல் என்றும், ராணுவம் சுத்தபடுத்தப்பட வேண்டும் என்பதை இது காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
29 கர்ணல் மற்றும் 5 தளபதிகள் இதுவரை துருக்கி ராணுவத்தில் தங்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பாோஸ்போரஸ் நீரிணை மீதுள்ள பாலத்தில் நிலை கொண்டிருக்கும் கவச டாங்கிகளை விட்டு, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட படையினர் கையை மேலே தூக்கியபடி சரணடைய வருவதை துருக்கி தொலைக்காட்சி ஒன்று காட்டியது.

நன்றி:பிபிசி தமிழ்

08 ஜூலை 2016

சிங்கள மயமாகிறது நாயாறு! தமிழர் செல்ல அனுமதி மறுப்பு!!

சிங்கள மயமாகிறது நாயாறு! தமிழர் செல்ல   அனுமதி மறுப்பு!! - இராணுவம் துணைபோகிறது   எனக் குற்றச்சாட்டுமுல்லைத்தீவின் நாயாறு கிராமத்தை முற்றுமுழுதாக சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிட்டன எனவும், தமிழ் மக்களும், கிராம சேவை அலுவலகர்களும் அந்த கிராமத்திற்குள் நுழைவதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை எனவும் முல்லைத்தீவு மீனவ அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கை இராணுவமும் அதற்குத் துணைபோகின்ற அதிகாரிகளும் நாயாறு கிராமத்தை முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கையை பூர்த்திசெய்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:- முகத்துவாரம் கிராமத்தை தமிழ் மக்களிடமிருந்து கைப்பற்றிய பின்னரே நாயாறு கிராமத்தை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன. இப்பகுதியில் 299 சிங்கள குடும்பங்களைக் குடியேற்றும் பணி தற்போது பூர்த்தியடைந்துள்ளது. அவர்கள் குறிப்பிட்ட கடலோரப் பகுதியில் தற்போது நிரந்தரமாக வாழத்தொடங்கியுள்ளனர்."குறிப்பிட்ட பகுதி இராணுவ வலயமாகப் பேணப்படுகின்றது. தமிழர்களும் கிராம சேவகர்களும் இந்தப் பகுதிக்குள் நுழைவதற்கு முற்றாக அனுமதி மறுக்கப்படும் நிலை காணப்படுகின்றது'' என்று கரைத்துறைப்பற்று தமிழ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரிய கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டி சிங்கள குடியேற்றத்திற்கு தாங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றபோதிலும் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு சிங்கள மீனவர்களுக்கு அப்பகுதியில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை வழங்கிவருவதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் மீனவர்களுக்கென அமைக்கப்பட்ட கூட்டுறவுச்சங்க கட்டடத்தை சிங்கள மீனவர்கள் முற்றாக ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 1983ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்ட அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்களால் மிகவும் பாதிக்கப்பட்டது நாயாறு கிராமம். இதன் காரணமாக முழு கிராமமும் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலையேற்பட்டது. 27 வருடங்களுக்குப் பின்னர் 2010இல் மீண்டும் குறிப்பிட்ட அளவு குடும்பங்கள் குடியேறின. எனினும், தற்போதைய அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் அந்தப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்ட பெரும்பான்மை மீனவர்களால் அந்தப் பகுதியின் தமிழ் கிராமத்தவர்களால் விரட்டப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

27 ஜூன் 2016

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது நல்லதல்ல-டேவிட் கமரூன்

யாழில் டேவிட் கமெரூன்
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் தீர்மானம் நாட்டின் நன்மைக்குரியதல்ல. ஆனால் அந்த தீர்மானம் மதிக்கப்பட்டு சிறந்த சாத்தியமான முறையில் நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்திருக்கிறார்.நிறைந்திருந்த மக்கள் பிரதிநிதிகளின் மத்தியில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.அவர் பதவி விலக போவதாக அறிவித்த பிறகு ஆற்றுகின்ற முதல் உரையில், முறையாக விலகல் நடைமுறை குறித்து தனக்கு அடுத்து வரும் பிரதமர் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பிரிவு 50 என்று அறியப்படும் பொறிமுறையில் எந்த மாதிரியான புதிய உறவை உருவாக்குவது என்று பிரிட்டன் முடீவு செய்ய வேண்டும்.ஐரோப்பிய அண்டை நாடுகளோடு வலிமையான சாத்தியமான பொருளாதார பிணைப்பை பிரிட்டன் உருவாக்க வேண்டும் என்று கேமரூன் பேசினார்.

18 ஜூன் 2016

இலங்கைத்தமிழர் தற்கொலை எச்சரிக்கை!

தமிழகம் திருச்சியில் சிறப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எச்சரித்தமையை அடுத்து நேற்று (17) தீவிரநிலை ஏற்பட்டுள்ளது.
தயாபரராஜா என்ற இந்த இலங்கையரை ஏற்கனவே விடுவிக்க உத்தரவு வழங்கப்பட்ட போதும் இன்னும் அவர் விடுவிக்கப்படவில்லை.
ஏற்கனவே தயாபரராஜாவின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் இராமேஸ்வரம் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டனர்
எனினும் தயாபரராஜாவை விடுவிப்பதாக அதிகாரிகள் கூறிய போதும் அவர் விடுவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று தயாபரராஜாவின் மனைவியும் பிள்ளைகளும் திருச்சி முகாமுக்கு சென்றிருந்த போது தயாபராஜாவை விடுவிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தமது அறைக்கு விரைந்த தயாபரராஜா அறையின் கதவை தாழிட்டு தாம் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து அந்த இடத்தில் தீவிரநிலை தோன்றியது.
இதேவேளை தாம் விடுவிக்கப்படாவிட்டால் குடும்பத்துடன் கடும் முடிவு ஒன்றை எடுக்க நேரிடும் என்று தயாபராஜா முகாம் அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

15 ஜூன் 2016

சோமவன்ச அமரசிங்க மரணமடைந்துள்ளார்!

மக்கள் விடுதலை முன்னணியின்(ஜேவிபி) முன்னாள் தலைவரும் மக்கள் சேவை கட்சியின் பொதுச் செயலாளருமான சோமவன்ஸ அமரசிங்க காலாமானார். இராஜகிரியவிலுள்ள தனது சகோதரரின் வீட்டில் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார் என தெரிவிக்கப்படுகிறது. இறக்கும்போது அவருக்கு வயது 73. 1969ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து கொண்ட சோமவன்ஸ அமரசிங்க, அக் கட்சியின் நான்காவது தலைவராக பதவியேற்றார். பின்னர், 2015ஆம் ஆண்டு அக் கட்சியில் இருந்து விலகி மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை நிறுவினார். மக்கள் விடுதலை முன்னணியின் நிறுவுநரான ரோஹன விஜயவீரவுக்கு பின்னர், அக்கட்சியின் தலைமை பீடத்தில் நீண்டகாலம் பதவி வகித்தவர் சோமவன்ஸ என்பது குறிப்பிடத்தக்கது.இறுதிக்காலங்களில் மகிந்த சார்பு கொள்கையை கடைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மரணம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.

29 மே 2016

தமிழருவி மணியனின் முடிவுக்கு விவேக் வருத்தம்!

Comedy Actor Vivek Photo Gallery | Actor Vivek - Photo Galleryகாந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதற்கு, நடிகர் விவேக் வருத்தம் தெரிவித்துள்ளார். நான் இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை என்ற முடிவுடன் போகிறேன் என்று சிறந்த பேச்சாளரும், காந்திய மக்கள் கட்சியின் தலைவருமான தமிழருவி மணியன் [26-05-16] வியாழனன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதற்கு நடிகர் விவேக் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழருவி மணியன் பொது வாழ்வு மற்றும் அரசியல் வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளாராம். நேர்மை உறங்கலாமா? நீங்கள் விலகலாமா?” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ஒரு பதிவில், “ஒரு முறை தமிழருவி மணியன் என் அலுவலகம் வந்தார். அவருக்கு ஒரு பேனா பரிசளித்தேன். வாங்க மறுத்து, சொன்னார், ’இலவசம் அனைத்தும் லஞ்சமே. எவ்வளவு பெருந்தன்மை!

26 மே 2016

வீரப்பனைப் பற்றி வீரப்பனே சொல்கிறார்!(காணொளி)

இப்பதிவை வெளியிட்ட முகநூல் நண்பருக்கு எம் நன்றிகள்!

15 மே 2016

விஜய் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு!

731639077நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கே தமது ஆதரவு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.அவர் இதனை தனது பிரத்தியேக செயலாளர் ஊடாக அனைத்து இந்திய ரசிகர் மன்ற அமைப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பின் காரணமாக ரசிகர்களும் தமிழ் உணர்வாளர்களும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.இதேவேளை நாம் தமிழர் கட்சிக்கும் சீமானுக்கும் தமது ஆதரவை தெரிவிப்பதாக தமிழ் பற்று கொண்ட சகாயம் ஐ.ஏ.எஸ், நடிகர் கமலகாசன், சத்தியராஜ், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி, சிவக்குமார், இயக்குநர் பாரதிராஜா, தங்கர்பச்சான், ஆர்.கே. செல்வமணி, பாலா, சசிகுமார், சமுத்திரக்கனி, சேரன், பார்த்திபன், அமீர் மேலும் சிலர் மறைமுகமாக கூறியுள்ளமை வரவேற்கத்தக்கது என இந்திய தமிழ் எழுத்தாளர் ஒருவர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் வாக்களிக்கும்படி புலம்பெயர் விஜய் ரசிகர் மன்ற தலைவர் அண்டோனி தெரிவித்திருந்தார். அத்துடன் நடைபெறவுள்ள தமிழக சட்டபை தேர்தலில் சீமானுக்கு தமது வாக்குகளை வழங்கி அவரை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இவ்வாறு இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

10 மே 2016

ஜெர்மனியில் பயணிகள் மீது கத்திக்குத்து ஒருவர் பலி!

ஜேர்மனி ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு - ஒருவர் பலிஜேர்மனின் மியூனிக் நகரில் ஒரு நபர் கத்தியால் வெட்டியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளார்கள்.இந்த தாக்குதலுக்கு ஏதாவது இஸ்லாமியவாத தொடர்பு இருக்கின்றதா என்று போலிஸார் புலன்விசாரணை செய்கிறார்கள்.இன்று காலை 5 மணியளவில் கிரஃபிங் ரயில் நிலையத்தில் வைத்து 4 பயணிகளை அந்த 27 வயதான நபர் தாக்கியுள்ளார், காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது.
தாக்குதலாளியை போலிஸார் மடக்கிப் பிடித்ததாக தெரியவருகின்றது. அவர் அல்லாஹ் அக்பர் என்று கோஷமிட்டதாக சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால், தாக்குதலாளியின் நோக்கம் தெரியவில்லை.இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருக்கலாம் என்ற சந்தேகத்தை தாம் புறந்தள்ளவில்லை என்று போலிஸ் தரப்பு பேச்சாளர் கூறியுள்ளார்.

நன்றி:பிபிசி தமிழ்

29 ஏப்ரல் 2016

தமிழகத்தில் 130 வயதிற்கு மேற்பட்ட 28 வாக்காளர்கள்!

தமிழகத்தில் 130 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 28 பேர் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் வசிக்கும் அதிக வயதுள்ள வாக்காளர்களின் பட்டியல் தனியாக தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 627 பேர் உள்ளனர். மேலும் 130 வயதிற்கு மேற்பட்டவர்கள் 28 பேர் உள்ளனர்.வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவு தினத்தன்று வரிசையில் நின்று வாக்களிக்கத் தேவையில்லை. அவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 100 வயதிற்கு மேற்பட்டவர்களின் விபரம் வருமாறு, வேலூர் - 597,கோவை-440,சென்னை-434,திருப்பூர்-403, நெல்லை-359,விழுப்புரம்-355,காஞ்சிபுரம்-339,சேலம்-328,ஈரோடு-311,திண்டுக்கல்-306,திருவண்ணாமலை-303, கிருஷ்ணகிரி-282,திருச்சி-277,தஞ்சாவூர்-261,திருவள்ளூர்-260,தருமபுரி-230,கடலூர்-217,கன்னியாகுமரி-212, விருதுநகர்-190,மதுரை-183,நாகப்பட்டினம்-168,ராமநாதபுரம்-166,தூத்துக்குடி-154,சிவகங்கை-149,தேனி-145,புதுக்கோட்டை-130,திருவாரூர்-120-நாமக்கல்-113,அரியலூர்-64,பெரம்பலூர்-48,நீலகிரி-45,கரூர் 38.

27 ஏப்ரல் 2016

நாரந்தனையில் கிணற்றில் வீழ்ந்த சிறுமி மரணம்!

நாரந்தனைப்பகுதியில் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் வீழ்ந்து சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று மாலை குறித்த ஏழு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிசாரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.சிறுமியின் உடலம் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் உடலம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

21 ஏப்ரல் 2016

தாயொருவர் கூண்டில் அடைத்து வைப்பு!


வவுனியா சாந்தசோலை கிராமத்தில் ஒருவர்  95 வயதான தனது பெற்ற தாயை 5 வருடங்களாக கூண்டில் அடைத்து வைத்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்படுள்ளது. அதனையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார், தாயை  மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில்  அனுமதித்தனர். 
சாந்தசோலை கிராமத்தில் ஒருவர் 95 வயதான தனது பெற்ற தாயை 5 வருடங்களாக கூண்டில் அடைத்து வைத்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது. அதனையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார், தாயை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.இதேவேளை, குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, தாயை கொடுமைப்படுத்தவில்லை எனவும் அவரை நல்லமுறையில் பராமரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், தன் மீது தவறான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.இவ்வாறு செய்தியொன்று தெரிவிக்கின்றது.