29 மே 2016

தமிழருவி மணியனின் முடிவுக்கு விவேக் வருத்தம்!

Comedy Actor Vivek Photo Gallery | Actor Vivek - Photo Galleryகாந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதற்கு, நடிகர் விவேக் வருத்தம் தெரிவித்துள்ளார். நான் இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை என்ற முடிவுடன் போகிறேன் என்று சிறந்த பேச்சாளரும், காந்திய மக்கள் கட்சியின் தலைவருமான தமிழருவி மணியன் [26-05-16] வியாழனன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதற்கு நடிகர் விவேக் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழருவி மணியன் பொது வாழ்வு மற்றும் அரசியல் வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளாராம். நேர்மை உறங்கலாமா? நீங்கள் விலகலாமா?” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ஒரு பதிவில், “ஒரு முறை தமிழருவி மணியன் என் அலுவலகம் வந்தார். அவருக்கு ஒரு பேனா பரிசளித்தேன். வாங்க மறுத்து, சொன்னார், ’இலவசம் அனைத்தும் லஞ்சமே. எவ்வளவு பெருந்தன்மை!

26 மே 2016

வீரப்பனைப் பற்றி வீரப்பனே சொல்கிறார்!(காணொளி)

இப்பதிவை வெளியிட்ட முகநூல் நண்பருக்கு எம் நன்றிகள்!

15 மே 2016

விஜய் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு!

731639077நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கே தமது ஆதரவு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.அவர் இதனை தனது பிரத்தியேக செயலாளர் ஊடாக அனைத்து இந்திய ரசிகர் மன்ற அமைப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பின் காரணமாக ரசிகர்களும் தமிழ் உணர்வாளர்களும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.இதேவேளை நாம் தமிழர் கட்சிக்கும் சீமானுக்கும் தமது ஆதரவை தெரிவிப்பதாக தமிழ் பற்று கொண்ட சகாயம் ஐ.ஏ.எஸ், நடிகர் கமலகாசன், சத்தியராஜ், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி, சிவக்குமார், இயக்குநர் பாரதிராஜா, தங்கர்பச்சான், ஆர்.கே. செல்வமணி, பாலா, சசிகுமார், சமுத்திரக்கனி, சேரன், பார்த்திபன், அமீர் மேலும் சிலர் மறைமுகமாக கூறியுள்ளமை வரவேற்கத்தக்கது என இந்திய தமிழ் எழுத்தாளர் ஒருவர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் வாக்களிக்கும்படி புலம்பெயர் விஜய் ரசிகர் மன்ற தலைவர் அண்டோனி தெரிவித்திருந்தார். அத்துடன் நடைபெறவுள்ள தமிழக சட்டபை தேர்தலில் சீமானுக்கு தமது வாக்குகளை வழங்கி அவரை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இவ்வாறு இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

10 மே 2016

ஜெர்மனியில் பயணிகள் மீது கத்திக்குத்து ஒருவர் பலி!

ஜேர்மனி ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு - ஒருவர் பலிஜேர்மனின் மியூனிக் நகரில் ஒரு நபர் கத்தியால் வெட்டியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளார்கள்.இந்த தாக்குதலுக்கு ஏதாவது இஸ்லாமியவாத தொடர்பு இருக்கின்றதா என்று போலிஸார் புலன்விசாரணை செய்கிறார்கள்.இன்று காலை 5 மணியளவில் கிரஃபிங் ரயில் நிலையத்தில் வைத்து 4 பயணிகளை அந்த 27 வயதான நபர் தாக்கியுள்ளார், காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது.
தாக்குதலாளியை போலிஸார் மடக்கிப் பிடித்ததாக தெரியவருகின்றது. அவர் அல்லாஹ் அக்பர் என்று கோஷமிட்டதாக சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால், தாக்குதலாளியின் நோக்கம் தெரியவில்லை.இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருக்கலாம் என்ற சந்தேகத்தை தாம் புறந்தள்ளவில்லை என்று போலிஸ் தரப்பு பேச்சாளர் கூறியுள்ளார்.

நன்றி:பிபிசி தமிழ்