19 பிப்ரவரி 2017

காயம்பட்ட நிலையில் போராளியின் உடலம்!

வவுனியா – கோதாண்டர்நொச்சிக்குளம் பகுதியில் முன்னாள் போராளியான இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோதாண்டர்நொச்சிக்குளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த 33 வயதான கோபு என்று அழைக்கப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குடும்பத்தினருடன் நேற்றிரவு உறங்கச்சென்றவர், இன்று காலை வீட்டின் முன் மண்டபத்தில் சடலமாக காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அருகில் உறங்கிய கணவனைக் காணவில்லை என தேடியபோது அவர் தூங்கில் தொங்கியவாறு காணப்பட்டதாகவும், சடலத்தை கீழ் இறக்கி விட்டு உறவினர்களை அழைத்ததாகவும் உயிரிழந்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது சடலம் நிலத்தில் இருந்துள்ளதுடன் அவரது நெற்றியில் காயம் ஒன்றும் காணப்படுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஈச்சங்குளம் பொலிசார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரணவிசாரணை அதிகாரி எஸ்.சுரேந்திரன், சடலத்தைப் பார்வையிட்டதுடன், பிரதே பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மனைவி வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

15 பிப்ரவரி 2017

நடராஜனை கட்டிப்பிடித்து கதறி அழுத சசிகலா!

Sasikala weeps before leaving prisonசொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோர் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்த வழக்கு 21 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. அதன்படி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்றும் 4 ஆண்டுகள் தண்டனை பெற வேண்டும் என்பது உறுதியானது.இதனையடுத்து, ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், சசிகலாவும் இளவரசியும் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்கள். பின்னர், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர், உறவினர்களிடம் பேசுவதற்கு 15 நிமிடங்கள் இளவரசிக்கும் சசிகலாவிற்கும் நேரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்த சசிகலா தன் கணவர் நடராஜனுடன் பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார். அப்போது, சிறைக்கும் செல்லும் துக்கம் தாங்க முடியாமல் நடராஜனை கட்டிப் பிடித்து ஓ வென்று கதறி அழுதார் சசிகலா. பின்னர், அவரை நடராஜன் சமாதானம் செய்தார். தனக்கு வழங்கப்பட்ட 15 நிமிடங்கள் முடிந்த நிலையில் சிறைக்கு சென்றார் சசிகலா.

10 பிப்ரவரி 2017

பேரெழுச்சியுடன் நடைபெற்றது எழுக தமிழ் பேரணி!

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இன்று நடத்தப்பட்ட எழுக தமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற்ற இந்த எழுக தமிழ் நிகழ்வில் "சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை திணி க்க வேண்டாம், அரசியல் கைதிகளை விடுதலை செய், பயங்கரவாத தடை சட்டத்தை நிறுத்து" போன்ற கோசங்களை எழுப்பியவாறு மக்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு கல்லடி மணிக்கூடு கோபுரத்திற்கு அருகில் இருந்து வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்களுடன் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த எழுச்சி பேரணியில் கலந்து கொண்டனர். இந்த எழுச்சிப் பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்தன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாவற்குடா விவேகாந்தா விளையாட்டு மைதானத்தை பேரணி வந்தடைந்ததும் அங்கு தமிழ் வாழ்த்துப்பா இசைக்கப்பட்டு எழுக தமிழ் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இங்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றினார். மேலும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.

07 பிப்ரவரி 2017

பன்னீர்செல்வத்தின் புரட்சியால் அதிர்கிறது தமிழகம்!

Bildergebnis für panneerselvamமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு ஜெ. நினைவிடத்திற்கு சென்று மவுன அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, முதல்வர் ஜெ. உயிருடன் இருக்கும்போதே கட்சியின் பொதுச்செயலாளராக மதுசூதனனையும், முதல் அமைச்சராக நீங்களும் இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார் என்று பன்னீர்செல்வம் கூறியதும், ஆனால் அம்மாவின் எதிர்பார்ப்புக்கு மாறாக சசிகலா ஈடுபட்டதையும் இன்று மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினார் பன்னீர்செல்வம். இந்த செய்தி தமிழகம் முழுக்க தீயாக பரவியதில் கொந்தளித்தத்துப்போன அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தூக்கமில்லாமல் ஆங்காங்கே கூடி பரபரப்பாகவும், பதட்டமாகவும் பேசி வருகிறார்கள்.

சசிகலா அம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டார். அம்மாவின் சாவில் சந்தேகம் உள்ளது என்று நாம் கூறியது இப்போது உறுதியாகி உள்ளது. இப்படியெல்லாம் உட்கிராமங்கள்தோறும் அதிமுக தொண்டர்கள் கொந்தளித்து வரும் நிலையில் அதிமுக செல்வாக்காக உள்ள மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டலத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளின் மனநிலை எப்படி உள்ளது என பலரிடம் பேசினோம்.

இதில் தற்போது எம்எல்ஏவாக உள்ள ஒருவரும், கடந்த மாநகராட்சி மேயராக இருந்த ஒருவரும் நம்மிடம் கொந்தளித்துப் பேசியது இதுதான்.

எம்எல்ஏவாக உள்ள நான் கோடிக்கணக்கில் செலவு செய்து வெற்றி பெற்றேன். என்னிடம் தற்போது உள்ள அதிமுக தலைமை நிர்வாகிகள் கூறியது, சின்னம்மா சசிகலா இருந்தால்தான் நீ செலவு செய்த காசைவிட இரண்டு மடங்கு எடுக்கலாம் என்று உறுதி கூறினார்கள். வேறுவழியில்லாமல்தான் நான் கடனாளியாக இருககக் கூடாது என்பதற்காகத்தான் சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டோம். ஆனால் எனது மனச்சாட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று அம்மாவின் மனசாட்சியாக பன்னீர்செல்வம் கொட்டி தீர்த்துவிட்டார். இதைத்தான் எதிர்ப்பார்த்தோம். இப்போது எங்களைப்போன்ற எம்எல்ஏக்களிடம் முன்பு உள்ள பிரச்சனை செலவை செய்ததை திரும்ப எடுப்பதல்ல. மனசாட்சி இல்லாமல் வாழ்வது முடியாது. கட்சியின் பொதுச்செயலாளராக கட்சிக்குள் உள்ள நிர்வாகிகள் வந்திருந்தால் இந்த கேவலம் நிகழ்ந்திருக்காது. ஆனால் அதற்கு நேர் எதிராக சசிகலாவை தேர்ந்தெடுத்தது யாருக்குமே பிடிக்கவில்லை.

இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் வெளிப்பாட்டை அதிமுகவின் 130 எம்எல்ஏக்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆதரிப்பார்கள். இதனை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் எங்கள் கட்சியின் தொண்டர்கள் ஒன்று செய்ய வேண்டும். அம்மாவின் இறப்புக்கு காரணமான சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து விரட்ட வேண்டும். அதற்கு தொண்டர்கள் தயாராகி சென்னை நோக்கி வர வேண்டும். இங்கு சசிகலா எந்த அரசு பொறுப்பிலும் இல்லை. அப்படிப்பட்ட ஒருவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பது சட்ட விரோதமானது. தொண்டர்கள் நினைத்தால் சசிகலாவை போயஸ் கார்டனில்இருந்துவிரட்டிவிட்டு அம்மாவின் இல்லத்தை அதிமுக கட்சியின் கோயிலாக மாற்றுவோம். பன்னீர்செல்வத்துக்கு, அவருடைய குரலுக்கு உறுதுணையாக தொண்டர்கள் திரண்டு வர வேண்டும்  என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

நன்றி:நக்கீரன்-
ஜீவா தங்கவேல்

02 பிப்ரவரி 2017

என்ன செய்கிறார் கருணாநிதி!

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக நினைவு இழந்து, மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் நோய் தொற்று காரணமாக கடந்த டிசம்பர் 15ஆம் தேதி இரவு காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, டிச.23ம் தேதி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். தற்போது அவர் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின், அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அவர் பெயரில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. ஜல்லிக்கட்டு தொடர்பாக, அத்தனை போராட்டங்கள் நடந்த போதும் அவர் எந்த கருத்தும் கூறவில்லை.
கை, கால், முதுகு, இடுப்பு, கழுத்து ஆகியவற்றில் என அவரது உடலில் ஏற்பட்ட கொப்பளங்கள், வயோதிகம் ஆகியவற்றில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் கருணாநிதி. கொப்பளங்களை முழுமையாக போக்க அளிக்கும் மருந்துகளை ஏற்றுக்கொள்ளும் வலிமை அவரின் உடலுக்கு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்து விட்டதாக தெரிகிறது.தற்போது அவருக்கு, குழாய் வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் அவரால் பேச முடியாமலும் போனது. அரிதாக சில நேரம் மட்டும் மு.க.ஸ்டாலின் மற்றும் மகள் கனிமொழி ஆகியோரை அவர் அடையாளம் கண்டு கொள்கிறாராம். சில சமயம் முகத்தில் புன்னகை மட்டும் பதிலாக வருகிறதாம்.
அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக கட்சி பிரமுகர்கள் உட்பட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், செயற்கை சுவாம் அளிக்க பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் அகற்றபப்ட்டுள்ளதாகவும், 3 நாட்களுக்கு முன்பு, மாடியில் உள்ள அவரது அறையிலிருந்து கீழ் தளத்திற்கு அவரை அழைத்து வந்தனர் எனவும், அப்போது அவர் குடும்பத்தினரை பார்த்து புன்னகைத்தார் எனவும் திமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
மேலும், அவர் உடல் நிலையில் எந்த குறையும் இல்லை. பேச்சு திறனும், ஞாபக சக்தியும் வந்து விட்டால், அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என அவர்கள் கூறி வருகிறார்கள்.