28 மே 2017

சட்டவாளர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி இன்று பிற்பகல் 1 மணியளவில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்.  அப்பாத்துரை வினாயகமூர்த்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவராகவும் முன்னர் செயற்பட்டிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி இன்று பிற்பகல் 1 மணியளவில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும். அப்பாத்துரை வினாயகமூர்த்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவராகவும் முன்னர் செயற்பட்டிருந்தார்.2000ஆம் ஆண்டு, 2001ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்டவர். அப்பாத்துரை வினாயகமூர்த்தியின் இறுதிச் சடங்கு யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மனித உரிமை செயற்பாட்டாளரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் நூற்றுக்கணக்கான மனித உரிமை மீறல் வழக்குகளுக்காக ஆயராகி வாதாடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவரின் இழப்பானது தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் பேரிழப்பாகும்.அன்னாருக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் தனது அகவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

09 மே 2017

மொன்றியலில் வெள்ளம்,இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது!

கனடாவில், மொன்றியல், கியுபெக் பகுதிகளில் வெள்ளம் அதிகரித்ததால் இராணுவத்தினர் அழைக்கப்பட்டிருப்பதுடன் மொன்றியலில் அவசர கால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மொன்றியலிற்கும் Île-Perrotற்கும் இடையில் Galipeault பாலம் மூடப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் மழை தொடர்ந்து பெய்ததால் அவசர கால நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப்பணிகளை மேற்கொள்வதற்கு 1,200 துருப்புக்கள் அனுப்பபட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மொன்றியலில் 179 குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மொன்றியல் Sacré-Coeur Hospital in Ahuntsic வைத்தியசாலையிலிருந்து 86 மனநோயாளர்கள் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
கியுபெக்கில் பல இடங்களில் போக்குவரத்து பாதைகள் மூடப்பட்டன. பிரதான பாலங்கள் போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளும் இயங்கவில்லை. மொன்றியலில் 100ற்கும் மேற்பட்ட நகராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கியு பெக்கிலும் 100ற்கும் மேற்பட்ட நகராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கியுபெக் பூராகவும் 146 நகராட்சிகள் வெள்ள மண்டலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டன. இப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கியுபெக்கின் மேற்கு பகுதிகளான றிகாட் கற்ரினோ மற்றும் ஹட்சன் பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

04 மே 2017

ரொறன்றோவிற்கு காலநிலை எச்சரிக்கை!

தேசிய காலநிலை உதவி மையம் காலநிலை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ரொறொன்ரோ பெரும்பாகம் உட்பட்ட இடங்களில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பிக்கும் மழை ஞாயிற்றுகிழமை வரை தொடரும். வியாழக்கிழமை கிட்டத்தட்ட 10-15 மில்லி மீற்றர்கள் வரை மழை பெய்யலாம் என வானிலை கணிப்பு கூறுகின்றது. மழையின் பெரும்பகுதி வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கப்படுகின்றது.ஒரு மாதத்தின் மதிப்புள்ள மழை மே மாதம் முதல் ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு ஒரு வாரத்தில் பெய்யும். மழையுடன் குளிரான கால நிலையும் இணைந்து கொண்டு வெப்பநிலை அடுத்த நான்கு நாட்கள் 6-8 C ஆக காணப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.