30 டிசம்பர் 2017

மண்டைதீவு கடலில் மீனவர் மரணம்!

மண்டைதீவு கடற்பரப்பில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.2ம் வட்டாரம் அல்லைப்பிட்டி பகுதியினை சேர்ந்த பொடிபாஸ் ஸ்ரான்லிலாஸ் வயது (64) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நேற்று உயிரிழந்த குறித்த நபர் தனது மைத்துனருடன் மண்டைதீவு துறைப்பகுதியில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் மீன்பிடித்துள்ளார். அவருக்கு ஒவ்வாமை காரணமாக திடிரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.அவரை மைத்துனர் அழைத்துச் சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இறப்பு விசாரணையினை யாழ்,போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

26 டிசம்பர் 2017

சொந்த மக்கள் முன் வரப்பயத்தால் சுமந்திரனுக்கு அதிக பாதுகாப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப்பதவி என்பது புதிதான விடயமல்ல என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.சுமந்திரன் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய நபர், மக்கள் மத்தியில் சென்றால் அடி விழும் என்பதற்காக அவருக்கு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஒரு அங்கம், அதனைப் பிரித்துப் பார்க்க முடியாது. சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டதோ, இல்லையோ, தமது சொந்தக் கட்சியில் உள்ள அமைச்சர்களுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினை நல்லாட்சி அரசாங்கம் வைத்திருக்கின்றதென்பது அனைவரும் அறிந்த விடயம்.
ஒரு அமைச்சருக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பினையும் விட கூடிய பாதுகாப்பு எதிர்க்கட்சி தலைவருக்கும், பேச்சாளருக்கும் உள்ளது.தமது சொந்த மக்களை சந்திக்க முடியாது, அவ்வாறு சந்தித்தால் அடி விழும் என்ற நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படுகின்றதெனில் எந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவர்களாக இந்த அரசுடன் இருக்கின்றார்கள் என்பதனை மக்கள் விளங்கிக்கொள்ள முடியும்.இந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி, கடந்த அரசாங்கத்திலும் 3ஆவது அதி உயர் பாதுகாப்புக்கள் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், நீலம் திருச்செல்வத்திற்கும் வழங்கப்பட்டிருந்தது.
அரசாங்கத்திற்கு எதிராக போராடி உரிமைகளைப் பெற்றுக்கொள்கின்றோம் எனக் கூறிக்கொண்டு மக்கள் மத்தியில் சென்று வாக்குகளைக் கேட்கின்றார்கள்.ஆனால், அந்த அரசாங்கம் தான் அவர்களை அதிகமாக பாதுகாப்பதற்கு விரும்புகின்றது. யார் அரசாங்கத்துடன், எந்தக் கோணங்களில் இருக்கின்றார்கள் என்பது பற்றி மக்கள் விளங்கிக்கொள்வார்கள்.இந்த விடயங்களை காலம் தாழ்த்தி ஊடகங்கள் தெரிவிப்பது தனக்கு கவலையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

24 டிசம்பர் 2017

தமிழக அரசியல் வரலாற்றில் தினகரன் புரிந்த சாதனை!

சுயேச்சை வேட்பாளர் வெற்றி தமிழக அரசியல் வரலாற்றில் இடைத்தேர்தலில் முதல் முறையாக ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சியையும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் முந்தி சென்று வெற்றி பெற்றுவிட்டார். ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு பிறகு மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் அமில சோதனையாகவே பார்க்கப்பட்டது.திமுக ஆட்சியில் நடந்த அவலங்களை அதிமுகவும், அதிமுகவில் நடப்பதை திமுக, தினகரன் அணியினரும் மாறி மாறி மக்கள் முன்பு வைத்தனர். குற்றச்சாட்டுகளை முன்வைத்தே தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது. மேலும் நீட் தேர்வு, ஜெயலலிதா மரணம், குட்கா ஊழல், ஓகி புயல் உள்ளிட்டவை இந்த தேர்தலில் பிரதிபலித்தன.சுமார் 19 சுற்றுகளாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில் தினகரன் 89,013 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரை குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டார். மதுசூதனனை காட்டிலும் 40707 வாக்குகள் அதிகம் பெற்று தினகரன் சாதனை பெற்றுவிட்டார்.தினகரன் வெற்றி பெற்றதன் மூலம் இடைத்தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் என்ற சாதனையை படைத்துவிட்டார். அதேபோல் தமிழகத்தில் இடைத்தேர்தலில் முதல் முறையாக ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் தோற்கடித்த சுயேச்சை வேட்பாளர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்து விட்டது.

23 டிசம்பர் 2017

வேட்பாளர்களாக திருடர்களும் மோசடிக்காரர்களும் என்கிறது பவ்ரல் அமைப்பு!


உள்ளுராட்சித் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளவர்களில் குற்றவாளிகள் இருப்பதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
மாட்டு திருடர்கள், கொள்ளையர்கள், நிதி மோசடிக் காரர்கள், சட்ட முரணான போதைப் பொருள் வியாபாரிகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் காணப்படுவதாக பெப்ரல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளவர்களில் குற்றவாளிகள் இருப்பதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. மாட்டு திருடர்கள், கொள்ளையர்கள், நிதி மோசடிக் காரர்கள், சட்ட முரணான போதைப் பொருள் வியாபாரிகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் காணப்படுவதாக பெப்ரல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இத்தகையவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் உள்ளதாகவும் தகவல்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதும் அவர்களின் பெயர்களை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இத்தகையவர்களுக்கு வாக்களிப்பதிலிருந்து தவிர்த்து கொள்ளுமாறு தாம் வாக்காளர்களைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கேட்டுள்ளார்.

16 டிசம்பர் 2017

தமிழரசுக் கட்சி வேட்பாளர் ஏழு பேர் விலகல்!


 சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்கள், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.  இது தொடர்பாக கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு தமது உறுதிப்படுத்தப்பட்ட கையொப்பத்துடனான கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்கள், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு தமது உறுதிப்படுத்தப்பட்ட கையொப்பத்துடனான கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனு பட்டியல் தயாரிப்பின்போது இடம்பெற்ற முறைகேடுகளை மறைத்து தம்மிடம் கையொப்பம் பெறப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர்கள், குறித்த செயலுக்கு தமது வன்மையான கண்டனத்தினையும் பதிவு செய்துள்ளனர்.

சம்பவத்தன்று காலையில் தம்மிடம் முறையான வேட்பாளர் பட்டியலைக் காட்டி அடையாள அட்டைப் பிரதி மற்றும் கையொப்பம் பெறப்பட்டதன் பின்னர், மீண்டும் மதியவேளை வேறொரு வேட்பாளர் பட்டியலில் முறைகேடாக கையொப்பம் பெறப்பட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் தமது சக வேட்பாளர்கள் மற்றும் பிரதேச மக்களின் மன உணர்வினைக் கருத்திற்கொண்டு இந்த தேர்தலில் நிற்பதிலிருந்து தாம் ஒருமித்தவகையில் விலகிக்கொள்வதாகவும், மிகுந்த மனவருத்தத்துடன் எடுக்கப்பட்ட இந்த முடிவிற்கு கீழ்த்தரமான சம்பவங்களே காரணமாக அமைந்துள்ளது என்று அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கடிதத்தினை தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு அனுப்பியுள்ளதோடு அதன் பிரதிகளை ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளனர்.

10 டிசம்பர் 2017

ஆர்.கே.நகர் தொகுதியில் நடப்பது தேர்தல் அல்ல.. யுத்தம்:சீமான்!

ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றியும் பயனில்லை என்று சீமான் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இளைஞர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். டிசம்பர் 21ஆம் நாள் நடைபெற உள்ள ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது.இன்று காலையில் காசிமேட்டில் சீமான் தனது கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயத்திற்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஒன்பது ஹெலிகாப்டர்களைக் கொண்டு தொலைந்துபோன மீனவர்களைத் தேடுகிறது கேரள அரசாங்கம். இங்கு தெருவுக்குத் தெரு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்றார். விஷால் வேட்புமனு நிராகரிப்பு கேள்விக்குறியாகவே உள்ளது என்று கூறிய சீமான், ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றியும் பயனில்லை என்றார். ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இளைஞர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பார்கள் என்றும் சீமான் தெரிவித்தார். இந்த இடைத்தேர்தல் தேர்தல் மட்டுமல்ல ஒரு போர் என்றும் சீமான் கூறினார்.