15 மார்ச் 2017

என் அம்மா ஜெயலலிதாவை சசிகலா மாடியிலிருந்து தள்ளி விட்டார்!

ஜெயலலிதாவின் மகன் நான்தான், அவரது மொத்த சொத்துகளும் எனக்குதான், என்னை உலகுக்கு அறிமுகப்படுத்த ஜெயலலிதா முற்பட்டபோது சசிகலா அவரை மாடியிலிருந்து கீழே தள்ளினார் என்று தமிழக தலைமைச் செயலாளருக்கு ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அனுப்பியுள்ளார்.ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி நீர் சத்துக் குறைபாடு, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தொண்டர்கள் அப்பல்லோ வாசலில் காத்து கிடந்தனர்.இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் திட உணவுகளை உட்கொள்கிறார் என்றும், அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டார் என்றும் அப்பல்லோ நிர்வாகம் தகவல் தெரிவித்து வந்தது.75 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அதிகபட்ச சிகிச்சைகள் அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.நல் ஆளுமை, பன்முகத்திறமை, திறமையான நிர்வாகம் ஆகியவற்றை கொண்ட ஜெயலலிதாவை இழந்ததால் நாட்டு மக்கள் மட்டுமல்ல அண்டைய மாநில தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி கிடந்தது. சசிகலா மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதிமுகவின் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பி.எச். பாண்டியன், ஜெயலலிதாவை அவரது வீட்டிலிருந்து யாரோ கீழே தள்ளிவிட்டதாகவும், சிபிஐ விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியே வரும் என்றும் தெரிவித்திருந்தார்.ஜெயலலிதாவின் தோழியான கீதாவும் இதேபோல் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறிவந்தார். மக்களின் சந்தேகத்தை தீர்க்க அப்பல்லோவும், எய்ம்ஸ் மருத்துவமனையும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிக்கைகளை வெளியிட்டும் யாரும் நம்பவில்லை.ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழகமே குழப்பத்தில் உளள நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தமிழக தலைமை செயலாளருக்கு ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.அதில், நான் தான் ஜெயலலிதாவின் மகன். அவரது உண்மையான வாரிசு நான்தான். அவரது சொத்துகள் எனக்கு மட்டுமே சொந்தம். ஜெயலலிதா இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஆண்டு 4 நாள்கள் அவருடன் போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்தேன்.இந்நிலையில் ஜெயலலிதா என்னை அவரது மகனாக இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று சசிகலாவிடம் கூறினார். ஆனால் அதற்கு சசிகலா வேண்டாம் என்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் எனது அம்மா ஜெயலலிதாவை சசிகலா மாடியில் இருந்து தள்ளிவிட்டார் என்று பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். தலைமைச் செயலருக்கு வந்துள்ள இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 மார்ச் 2017

முன்னாள் அதிபர் சரோஜினி ஞானசோதியனின் அன்பான வேண்டுகோள்!

அன்பான மக்களே! இன்றய உலகில் மனித உயிர்களுக்கு பெறுமதி இல்லை என்ற ஒரு நிலை உருவாகிவிட்டதை நாளாந்தம் நடக்கும் விபத்துக்களில் இருந்து அறிகின்றோம் .காரணம் என்ன??ஒவ்வொரு வாகன ஓட்டிகளினதும் பொறுப்பற்ற செயல்களே !கூடுதலாக பலரிடமும் (லீசிங் ,)என்ற முறையில் அளவுக்கதிகமாக வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அரை குறை சாரதிப் பயிற்சியுடன் வாகனங்கள் ஓட்டிமற்றவர்களை தட்டுவதும் ,மதுப்பாவனை அதிகரித்து குடித்துவிட்டு ஒடுவதும் பண ஆசையில் நான் முந்தி நீமுந்திஎனப் போட்டி போட்டு ஓடுவதும் ,காப்பெற் வீதியில் வேகமாக ஓடலாம் என்ற பாணியில் இளைஞர்கள் ஓடுவதும் கூடி விட்டது .இவற்றைவிட டிப்பர் வாகனங்கள் கூடி அவற்றின் மூலமும் பலர் அடிபட்டு இறந்துள்ளனர் .அத்துடன் வீதிகளில் பொருட்களை ஏற்றி வரும் போது பழுதடைந்ததும் அப்படியே விட்டு விட்டு அதற்குப் பாதுகாப்பு விளக்குப் போடாமல் விட்டுச் சென்றதனால் ஏற்படும் விபத்துக்களும் தற்போது கூடியுள்ளது கடந்த 9-3-2017 அன்று என் அன்பு மாணவி விஜயரூபன் சர்மிளா மரணமாக வேண்டி வந்ததே டிராக்டர் ஒன்று நடு வீதியோரம் நிறுத்திவைத்திருந்தமையே அநியாய மரணம் அவரது மாமா ஒரு திறமையான சாரதி வேக்க்கட்டுப்பாட்டை மதிப்பவர் என்பதாலேயே மாமனுடன் அன்று ச்மிளா பயணித்தாள் அவளின் விதியா??இல்லை யாஎன்பது வேறு,உழவுயந்திரம் அப்படி நிறுத்தி வைக்காதிருந்தால் சர்மிளாவுக்கு இப்படி நடந்திருக்காது .தயவு செய்து வாகன ஓட்டிகளே மனித உயிர்களை பலியெடுக்காதீர்கள் .உங்கள் உயிர்களையும் மதியுங்கள் பிற உயிர்களையும் மதியுங்கள் நிதானம் பொறுமை கண்ணியம் என்பவற்றைக் கைக்கொள்ளுங்கள் சாரதிப் பணி சமூகப்பணி என எண்ணுங்கள் உங்கள் ஒருவர் கைகளிலேயே பல மனித உயிர்களின் காப்புறுதி உள்ளது "உயிர்களைக்காப்போம் விபத்துக்களைத் தவிர்ப்போம் ""எமது கோரிக்கையை பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள் .முகநூல் நண்பர்களே நீங்களும் ஒவ்வொருவரும் விழிப்பணர்வை உங்கள் மூலமாகவும் ஏற்படுத்துங்கள்.

08 மார்ச் 2017

நாங்கதான் சி.எம் ; ஒரு தலையணை போதும் ; கூறினார் நடராஜன் !

ஓ.பி.எஸ் அணி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு பெற்று பேசிய அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன், சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியதாக ஒரு செய்தியை கூறி ஓ.பி.எஸ் உட்பட அனைவரையும் அதிர்ச்சியடை செய்தார்.ஜெ.வின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் ஓ.பி.எஸ் அணி எழுப்பி வருகிறது. அவரின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ அல்லது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தம் 33 இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர்.
இதில் ஓ.பி.எஸ் அணி சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போரட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதில், பொன்னையன், மதுசூதனன், பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அங்கு வந்து பேசிய அகில இந்திய மூவேந்தர் முன்னனி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். 7மாதங்களுக்கு முன்பு, ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை சசிகலா கணவர் நடராஜன் நடத்தினார். அப்போது சில நெருங்கிய பத்திரிக்கையாளர்களிடம் அவர் மனம் திறந்து பேசினார். இன்னும் 2 மாதங்கள் கழித்து நாங்தான் முதலமைச்சர் எனக் கூறியுள்ளார். அதுகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த செய்தியாளர், தற்போதுதான் 4 ஆயிரம் கோடி செலவு செய்து தேர்தல் நடத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த நடராஜன், கோடியெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனை கிடையாது. நாங்கள் நினைத்தால் சி.எம் ஆகிவிடுவோம். அதற்கு ஒரு தலையணை இருந்தால் போதும் எனக் கூறினார் என்ற அதிர்ச்சி தகவலை சேதுராமன் வெளியிட்டார்.
சேதுராமன் கூறிய செய்தி கேட்டு, ஓ.பி.எஸ் உட்பட மேடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.