01 டிசம்பர் 2018

அமெரிக்க முன்னாள் அதிபர் சீனியர் ஜோர்ச் புஷ் காலமானார்!

ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மற்றும் பார்பரா புஷ்அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் காலமானார் என்று அவரின் மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அறிவித்துள்ளார். அவருக்கு வயது 94.

ஜார்ஜ் புஷ் சீனியர் என்று அறியப்படும் அவர், வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் நேரப்படி 22:10 மணிக்கு காலமானார், என அக்குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

எட்டு மாதங்களுக்கு முன்புதான் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷின் மனைவி பார்பாரா காலமானார்.

"அன்பிற்குரிய எங்கள் தந்தை 94 ஆண்டுகள் வாழ்ந்து, தற்போது இறந்துவிட்டார் என்ற செய்தியை ஜெப், நீல், மார்வின், டொரோ மற்றும் நான் வருத்தத்துடன் அறிவிக்கிறோம்." என் 43வது அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் ஜூனியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"அவர் மிக உயர்ந்த குணமுடைய மனிதர் மட்டுமல்லாது, எங்களுக்கு சிறந்த தந்தையாகவும் இருந்தார்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1924ஆம் ஆண்டு ஜூலை 12ம் தேதி ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் மசட்ச்சூசஸில் பிறந்தார். முதலீட்டு தொழிலில் இருந்த இவரது தந்தை, பின்னர் அமெரிக்க சென்னட் சபை உறுப்பினரானார்.

பர்ல் ஹார்பர் தாக்குதலை தொடர்ந்து தானே முன்வந்து அமெரிக்கக் கடற்படையில் புஷ் சேர்ந்தார். பசிஃபிக் பெருங்கடலில் பணிக்காக நியமிக்கப்படும் முன், விமான ஓட்டியாக பயிற்சி பெற்றார்.

இரண்டாம் உலகப்போரில் இவர் அமெரிக்க கடற்படை விமானியாகவும் பணியாற்றியுள்ளார். செப்டம்பர் 1944இல் இவர் விமானத்தில் குண்டு வீச சென்றபோது ஜப்பானியர்களால் சுடப்பட்டபோது தப்பியவர் புஷ்.41வது அமெரிக்க அதிபராக 1989 முதல் 1993 வரை அவர் இருந்தார். அதற்கு முன் ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்த போது, ஜார்ஜ் புஷ் இரண்டு முறை துணை அதிபராக இருந்தார்.

ஜார்ஜ் புஷ் சீனியர் அதிபராக இருந்த காலத்தில், கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அப்போது இவரது அரசு வெளியுறவுக் கொள்கைகளை வகுத்ததற்கு பெயர் பெற்றது.

எனினும், உள்நாட்டு விவகாரங்களில் போதிய கவனம் செலுத்தவில்லை என குற்றஞ்சாட்டப்பட்ட இவர், 1992 தேர்தலில் பில் கிளின்டனால் தோற்கடிக்கப்பட்டார்.

வரிகளை உயர்த்தப் போவதில்லை என்று வாக்குறுதி அளித்து அதனை நிறைவேற்றாமல் போனதில் இவர் விமர்சிக்கப்பட்டார்.

எண்ணெய் தொழில் தொடங்கி தனது 40 வயதில் பணக்காரரான புஷ், 1964ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார்.

1945ல் கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், 18 வயதுடைய பார்பாரா பியர்ஸை திருமணம் செய்து கொண்டார். 73 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் 6 குழந்தைகள் பெற்றனர்.

அவருக்கு 17 பேரக் குழந்தைகள் மற்றும் 8 கொள்ளுப்பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள்.

1966 - பிரதிநிதிகள் சபையில் இடம் பிடித்தார்.

1971 - அதிபர் நிக்சன் புஷ்ஷை ஐ.நா தூதராக நியமித்தார்.

1974 - பெய்ஜிங்கில் தொடங்கப்பட்ட புதிய வெளியுறவு அலுவலகத்துக்கு தலைமை வகித்தார்.

1976 - அதிபர் ஃபோர்ட் புஷ்ஷை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வின் இயக்குநராக நியமித்தார்

1981-1989 - அதிபர் ரீகன் ஆட்சியில் துணை அதிபராக பணியாற்றினார்.

1989-1993 - அமெரிக்க அதிபர், முதல் வளைகுடா போரில் அமெரிக்காவை வழிநடத்தினார்; கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிச வீழ்ச்சியை சமாளிக்க கொள்கை வகுத்தார்.ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷின் மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் (வலது) 2000 முதல் 2008 வரை அமெரிக்க அதிபராக இருந்தார்.
1945ல் கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், 18 வயதுடைய பார்பாரா பியர்ஸை திருமணம் செய்து கொண்டார்
நன்றி:பிபிசி தமிழ்

18 நவம்பர் 2018

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நிதியை நிறுத்தியது!

Image result for சர்வதேச நாணய நிதியம்இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து, நிதிய உதவிகளை நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியம், இலங்கையுடன் மேற்கொண்டு வரும் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியான நிலைமை முடிவடைந்து விட்டது என்பது தெளிவாகும் வரை திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் அதிகரித்து வரும் நிலைமைகளை கண்காணித்து வருவதாக இதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.சர்வதேச நாணய நிதியம் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்களை வழங்குவதற்காக அனுமதியை வழங்கியதுடன், அதில் தவணை கொடுப்பனவை வழங்க ஏற்பாடுகளை செய்திருந்தது.
முக்கியமான பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டும் என நிபந்தனைகளின் அடிப்படையில், இந்த நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணங்கியிருந்தது.எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் வரி சீர்த்திருத்தங்கள் அந்த நிபந்தனைகளில் அடங்கியிருந்தன. இதற்கு அமைய எரிபொருள் விலை சூத்திரத்தை முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிமுகப்படுத்தியிருந்தார்.

09 நவம்பர் 2018

சிறீலங்கா நாடாளுமன்றம் கலைப்பு!

மைத்திரிபால சிறிசேனஇலங்கை நாடாளுமன்றத்தை இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவுடன் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாக அரசாங்கத்தின் பதில் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கடந்த 26ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தையும் நவம்பர் 14ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் போதிய எம்பிக்களின் ஆதரவை பெற மகிந்த தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவை மகிந்த தரப்புக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தன.
அரசில் நேரெதிர் துருவங்களான தமிழ் தேசிய கூட்டணி, ஜனதா விமுக்தி பெரமுன ஆகியவற்றின் தலைவர்கள் சந்தித்து பேசியதுடன் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒத்துழைக்கப் போவதாகவும் அறிவித்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவில்லை.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

27 அக்டோபர் 2018

மனோவும் ஹக்கீமும் ரணிலுக்கு ஆதரவு!

மனோ கணேசன்ஆறு எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்பில் நடந்துவரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.அதைப் போலவே இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமும் ரணில் விக்கிரம சிங்கே கரத்தை பலப்படுத்துவதாக அறிவித்தார்.

நாடாளுமன்றம் நவம்பர் 16-வரை ஒத்திவைப்பு

இதனிடையே நாடாளுமன்றத்தை நவம்பர் 16 வரை ஒத்திவைத்து வர்த்தமாணி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஜனாதிபதிதான் வெளியிட முடியும்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன-ராஜபக்ஷ அணிக்கு நாடாளுமன்றத்தில் போதிய பலம் இல்லாததால்தான் அதனை ஒத்திவைக்கிறார்கள் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் ரணில் விக்கிரமசிங்கே.
உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டிய கடமை ஜனாதிபதிக்கு உண்டு என்று கூறிய ரணில் உடனடியாக கூட்டுமாறு வேண்டுகோளும் விடுத்தார். சுகாதார அமைச்சர் ராஜிச சேனாரத்னவும் இதே போன்ற கருத்தைத் தெரிவித்தார்.

சம்பந்தன் கருத்து

இதனிடையே இரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். கட்சிகளை பற்றி நான் சிந்திக்கவில்லை. எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நன்றி:பிபிசி தமிழ்

09 செப்டம்பர் 2018

ஏழுபேர் விடுதலை ஆளுநர் ஏற்றே ஆகவேண்டும்,ஜெயக்குமார் அதிரடி!

யார் பெரியவர்? மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களின் விடுதலையில் அரசின் முடிவை கவர்னர் ஒப்புக்கொள்ள வேண்டும், வேறு வழியில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை 4 மணியளவில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூட்டம் முடிந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அதில் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் பற்றி ஆலோசனை நடத்தினோம். உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் கருணை மனுவை 161வது சட்ட பிரிவின்கீழ் பரிசீலிக்கலாம் முடிவு எடுக்கப்பட்டது.161வது பிரிவு தெளிவாக உள்ளது.அமைச்சரவை முடிவை ஆளுநர் ஏற்றாக வேண்டும். அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதைதான் பின்பற்ற வேண்டும். சட்டத்தில் அப்படித்தான் உள்ளது.இதில் எந்தக் குழப்பமும் இல்லை, தெளிவாக உள்ளது.இன்றே தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். உடனடியாக இப்போதே பரிந்துரையை அனுப்பி வைக்க உள்ளோம்.ஒட்டுமொத்த தமிழரின் எண்ணம் 7 தமிழரையும் விடுவிக்க வேண்டும் என்பதுதான். ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம்தான் இது.அன்று நிறைவேறாமல் போய் விட்டது, இன்று நிறைவேறும். இந்த முறை கண்டிப்பாக அரசின் பரிந்துரை ஏற்கப்படும்.மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டுத்தான் 7 பேரையும் விடுவிக்க முடிவு. உச்ச நீதிமன்றம் அதைத்தான் சொல்லி இருக்கிறது. உச்சநீதிமன்றம்தான் முக்கியமானது, அதற்கு மேலானவர்கள் யாருமில்லை. அதனால் ஆளுநர் இதை ஏற்றே ஆக வேண்டும்.

06 செப்டம்பர் 2018

ஏழுபேர் விடுதலை தமிழக அரசே முடிவு செய்யலாம்-நீதிமன்றம் உத்தரவு!

Tamilnadu govt can release 7 tamils on the Rajiv gandhi murder case: Supreme court ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் கடந்த 2013ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. இதற்கு எதிரான மத்திய அரசின் வழக்கையும் சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்துள்ளது.

31 ஜூலை 2018

எழுந்து வா தலைவா என கோஷமிட்டவர்களிடம் ஐயா வந்துடுவாரா எனக்கேட்டவர் மீது தாக்குதல்!

அடி, உதை ஐயா வந்துருவாரா என்று நக்கலாக கேள்வி எழுப்பிய நபரை காவேரி மருத்துவமனை அருகே, திமுக தொண்டர்கள் அடித்து உதைத்தனர். சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, இன்று 4வது நாளாக சிகிச்சை தொடர்கிறது. இதையடுத்து மருத்துவமனை வெளியே, தொண்டர்கள் பலரும் குழுமியிருந்து வாழ்க கோஷங்களை எழுப்பியபடி உள்ளனர்.இன்று மதியம், இப்படி குழுமியிருந்த தொண்டர்களை அணுகிய, நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர், ஐய்யா வந்துவிடுவாரா என கேலியாக கேள்வி எழுப்பினாராம். இதனால் தொண்டர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். அதில் சிலர் அந்த நபரை பிடித்து அடிக்க தொடங்கியதால் அங்கு பெரும் கூச்சல், சத்தம் எழுந்தது.கருப்பு சிவப்பு வண்ணத்தில் சேலை கட்டிய பெண் தொண்டர் ஒருவர், அந்த நபரை பார்த்து கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்துவிட்டார். நாங்கள், எழுந்து வா என கோஷம் போட்டபடி இருக்கிறோம். ராத்திரி பகலாக இங்கேயே தங்கியிருக்கிறோம். இவர் என்னடான்னா, ஐயா வந்துடுவாரா என நக்கலாக கேள்வி எழுப்புகிறார் என்று சத்தம் போட்ட காட்சிகள் அங்கிருந்த ஊடகத்தாரின் கேமராக்களில் பதிவாகியுள்ளது.இதையடுத்து ஆண் தொடர்கள் சிலர் அந்த நபரை அடித்து தள்ளி விட, அப்போது போலீசார் அங்கு வந்து, அந்த நபரை மீட்டு வெளியே போகச் சொல்கிறார்கள். இந்த காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இப்படி பேசினால் அடிப்பார்கள், பேசாமல் போய்விடு என ஒரு இளைஞர், அந்த நபரிடம் எச்சரிக்கும் காட்சியும் வீடியோவில் உள்ளது.காவேரி மருத்துவமனை வெளியே குவிந்துள்ள தொண்டர்களுக்கு திமுக சார்பில் இலவச உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்களும் அங்கேயே குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

28 ஜூலை 2018

தா.பாண்டியன் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

Senior Communist leader Tha Pandian hospitalised மூத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக இருந்தவர் தா.பாண்டியன். முதுபெரும் கம்யூனிச தலைவர்களில் ஒருவர். அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
85 வயதான தா.பாண்டியன் சமீப காலமாக சிறுநீரக பிரச்சினை தொடர்பாக டயாலிசிஸ் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அராலியில் குள்ள மனிதர்கள் அட்டகாசம்,மக்கள் பீதி!


மரத்­துக்கு மரம் தாவும் குள்­ளர்­கள் பெண்­கள், குழந்­தை­கள் மீதும் வீடு­க­ளின் மீதும் கல்­வீ­சித் தாக்­கு­ம் சம்பவங்களால்,   அராலியில் நேற்­றி­ர­வு பெரும் பதற்­றம் நில­வி­யது.
மரத்­துக்கு மரம் தாவும் குள்­ளர்­கள் பெண்­கள், குழந்­தை­கள் மீதும் வீடு­க­ளின் மீதும் கல்­வீ­சித் தாக்­கு­ம் சம்பவங்களால், அராலியில் நேற்­றி­ர­வு பெரும்
பதற்­றம் நில­வி­யது.நேற்று இரவு அராலி, ஐய­னார் ஆல­யத்­தைச் சூழ­வுள்ள பகு­தி­க­ளில் இந்­தக் குள்ள மனி­தர்­க­ளின் தாக்­கு­தல் இடம்­பெற்­ற­தா­கக்
கூறப்­ப­டு­கின்­றது. அரா­லி­யில் உள்ள அதி­க­மான வீடு­கள் மீது நேற்­றி­ரவு கல் வீசப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. கல் எறிந்­து­விட்டு மரத்­துக்கு மரம் தாவி­யும் ஒடி­யும் மறை­யும் குள்­ளர்­க­ளைத் தேடி ஊர­வர்­கள் திரண்­ட­னர். இத­னால் அந்த இடம் பதற்­றக் கள­மா­னது. மக்­களை அச்­சு­றுத்­து­வ­தற்­காக திட்­ட­மிட்டு இவ்­வான சம்­ப­வங்­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என்று இளை­ஞர்­கள்
தெரி­வித்­த­னர்.
சம்­ப­வம் தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வ­னுக்கு தக­வல் வழங்­கப்­பட்­டது. அவர் உட­ன­டி­யாக அந்த இடத்­திற்கு விரைந்­தார். நில­மை­களை அறிந்து வட்­டுக் கோட்­டைப் பொலி­ஸா­ருக்கு தக­வல் வழங்­கி­னார்.
இரவு 8.30 மணி­ய­ள­வில் வட்­டுக்­கோட்டை பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்ட பொலி­ஸார் குழு­வி­னர் சம்­பவ இடத்­துக்கு வந்­த­னர். விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.
கடந்த சில தினங்­க­ளா­கவே வீடு­கள் மீது கல்­வீச்சு நடப்­ப­தாக மக்­கள் முறை­யிட்­ட­னர். குள்­ளர்­கள் வீடு­க­ளின் கூரை­க­ளில் தாவு­வ­தால் வீட்­டில் உள்ள பெண்­கள், சிறு­வர்­கள் பயத்­து­ட­னேயே வாழ்­கின்­ற­னர் என்­ற­னர். வீட்­டுக் கூரை­யில் ஏதோ ஒன்று விழு­வது போன்று சத்­தம் கேட்டு வெளி­யில் வந்­தால் குள்ள மனி­தர்­களை ஒத்­த­வர்­கள் கூரை­யில் இருந்து மதி­லுக்­குப் பாய்ந்து மதி­லில் இருந்து வீதிக்­குப் பாய்ந்து சில நொடி­க­ளில் தப்­பித்­துச் சென்­று­ வி­டு­கின்­ற­னர் என்­றும் மக்­கள் தெரி­வித்­த­னர்.
அண்­மை­யில் பொது­மக்­கள் அவர்­க­ளைத் துரத்­திச் சென்­ற­னர். அவர்­கள் அரா­லித் துறை நோக்கி ஓடித் தப்­பி­னர். நேற்று முன்­தி­னம் கட­லுக்­குச் சென்று வந்த ஒரு­வரை மடக்­கிய குள்ள மனி­தர்­கள், அவரை விசா­ரித்­துள்­ள­னர். இத­னால் அவர் பயத்­தில் உள்­ளார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. மிக­வும் குள்­ள­மாக இருக்­கும் அவர்­கள் கைக் கோட­ரி­யை­யும் வைத்­துள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.
சில­ருக்கு கைக் கோட­ரி­யைக் காட்­டிப் பய­மு­றுத்­தி­யுள்­ள­னர். எனவே பாது­காப்பு ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளுங்­கள் என்று மக்­கள் பொலி­ஸாரை கேட்­ட­னர். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சர­வ­ண­ப­வ­னி­ட­மும் அந்­தக் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.
இது தொடர்­பான கூட்­ட­மொன்று இன்று மாலை 5 மணிக்கு அராலி மாவத்தை விளை­யாட்டு மைதா­னத்­தில் பொலி­ஸா­ரால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. அதில் பொலி­ஸார், மற்­றும் கிராம மக்­க­ளைக் கலந்­து­கொள்­ளு­மாறு மூத்­த­வர்­கள் வேண்­டு­கோள்­வி­டுத்­த­னர். மேல­திக விசா­ர­ணை­களை பொலி­ஸார் மேற்­கொண்­ட­னர்.

24 ஜூலை 2018

நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்திக் விடுதலை!

Naam Tamilar Party’s student leader Idumbavanam Karthik released from jail காவிரி உரிமைக்காக ஐபிஎல் முற்றுகையில் ஈடுபட்டதற்காக, குண்டர் சட்டத்தில் கைதான நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் விடுதலை செய்யப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "காவிரி நதிநீர் உரிமைக்காகத் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்றுவந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மக்களைப் திசைதிருப்புவதாக அமைந்ததால், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தாமல் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்துகொள்ளுங்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டும் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற்றதால் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி வழக்குத் தொடரப்பட்டது. மேலும் கட்சியைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துவிட்டனர். அதே வழக்கில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கடந்த மே-18 அன்று சென்னை, பெருங்குடியில் நடைபெற்ற மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிவிட்டு இரவு அலுவலகம் திரும்புகையில் காவலர்களால் கைது செய்யப்பட்டு பின்னர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். கடந்த ஜூலை 4 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் நீதிபதிகள் அமர்வில் நேர் நிறுத்தப்பட்டு ஜூலை 14 அன்று குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதாக தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இன்று நேற்று ஜூலை 23 ஆம் தேதி பிணை கிடைத்ததையொட்டி இன்று ஜூலை 24 இல் புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். அவ்வயம் சிறப்பான வரவேற்பு அளிக்கும் விதமாக நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்புரிமையுடன் அழைக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 ஜூன் 2018

இத்தாலியில் வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில் ஊர்காவற்றுறையை சேர்ந்த இளையோர் போட்டி!


இத்தாலியில் இடம்பெறவுள்ள வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில்  இரண்டு ஈழத் தமிழ் இளையோர் களமிறங்கியுள்ளனர். இத்தாலி பலெர்மோ மாநகரில் இன்று  வெளிநாட்டவர்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது.17 நாடுகளைச் சேர்ந்த 26 வெளிநாட்டவர்கள் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.இத்தாலியில் இடம்பெறவுள்ள வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில் இரண்டு ஈழத் தமிழ் இளையோர் களமிறங்கியுள்ளனர். இத்தாலி பலெர்மோ மாநகரில் இன்று வெளிநாட்டவர்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது.17 நாடுகளைச் சேர்ந்த 26 வெளிநாட்டவர்கள் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.குறித்த தேர்தலில், ஈழத் தமிழர்களான தியாகராஜா ரமணி, மற்றும் அருள்நேசன் தயாராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும், யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையைச் சேர்ந்தவர்களாவர்.

10 ஜூன் 2018

கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் போராட்டத்திற்கு ஆதரவு!

10-06-2018
ஊடக அறிக்கை

கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் போராட்டத்திற்கு ஆதரவு!

வடபகுதி மீனவர்களின் மீன்பிடித்தொழிலை அழிக்கும் வகையில் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழ் மாவட்ட கடற்தொழில் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது.
வடபகுதி மீனவர்களின் மீன்டிபிடித் தொழிலை பாதிக்கும் வகையில் தென்பகுதி மீனவர்களுக்கு கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை சிறீலங்கா அரசு வழங்குவதன் மூலம் வடபகுதி மீனவர்களின் தொழிலை அழிக்கும் நடவடிக்கைகள் 2015 ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தொடர்ந்து வருகின்றது.வடமராட்சி கிழக்கின் கடற்கரையோரமாக ஐநூறுக்கும் அதிகமான மீன்வாடிகளை அத்துமீறி அமைத்துள்ள வெளிமாவட்ட மீனவர்களின் நடவடிக்கைகளால் அப்பிதேச மீனவர்களின் மீன்பிடித் தொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வெளிமாவட்ட மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அகற்ற வேண்டும், கடலட்டை பிடிப்பதற்கு வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகள் உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும்
என்ற கோரிக்கைகள் உள்ளடங்கலாக மீன்பிடித் தொழிலை பாதுக்காக்கும் வகையில் யாழ் மாவட்ட கடற்தொழில் சம்மேளத்தினால் நாளை
திங்கட்கிழமை 11.06.2018
அன்று யாழ் மாவட்டத்தில் நடாத்தப்படவுள்ள போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்வதுடன்,
மீனவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தமிழ்த் தேசத்தின் கடல்சார் பொருளாதாரத்தை பாதுகாக்கவும் அனைவரும் ஒற்றுமையாக அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

08 ஜூன் 2018

பெளத்த இனவாதப் போக்குடன் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மோசமான சிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாட்டில் இருப்பதாக நவ சமசமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன குற்றம்சாட்டியுள்ளார். அதனாலேயே தமிழ் மக்களின் தேசியப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்காக தயாரிக்கப்பட்டு வந்த புதிய அரசியல்யாப்பு உருவாக்கம் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நவ சமசமாஜக் கட்சியின் ஏற்பாட்டில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்று கொழும்பு மருதானையில் நேற்று நடைபெற்றது. நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகுகருணாரத்ன, இலங்கை சமாதானப்பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா, புரவெசி பலயஅமைப்பின் இணை ஏற்பாட்டாளர் காமினி வெயங்கொட, காணாமல் போனோரை கண்டறியும் குழுவின் இணைப்பாளர் சுந்தரம் மகேந்திரன் மற்றும் தென்னிலங்கை பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.ஏற்படுத்தப்பட்டுள்ளஆணைக்குழுவின் அறிக்கையிலும் பயங்கரமான முறையில் படுகொலைகளும், காணாமல்ஆக்கப்பட்டவைகளும் உள்ளன. அவற்றை ஆராய்ந்து நீதியை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. இன்றும் செயற்படுத்தப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகமும்இதே நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த விவகாரத்தில் இறுதித்தீர்மானத்தை எடுத்து கைது செய்து, தண்டனையை வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாத அளவுக்கு இன்று சிங்கள பேரினவாத சக்திகளின் இடையூறுகள் நாட்டில் செயற்பட்டு வருகின்றன. சாலியபீரிஸ் அவர்களும் காணாமல் போகவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்களே உள்ளனர் என்றும் கூறியுள்ளார். ஆனால் விசாரணைசெய்வதற்கும், நீதிபதிகளின்குழுக்களை அமைப்பதற்கும் சாத்தியங்கள் இல்லை என்றுதான் தெரிகிறது.
சர்வதேசத்தின்உதவிகளையும் பெறமுடியாது. இவற்றை கூறும்போதே சிங்கள இனவாத சக்திகள் கூச்சலிட்டு பல்வேறு எதிர்கருத்துக்களை கூற ஆரம்பிக்கின்றன. அதனால் முதலாவதாக சிங்கள இனவாத சக்திகளை அழிப்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் சுத்தப்படுத்துவதற்கான கருத்தாடலை ஆரம்பிக்க வேண்டும். இப்போது பணங்களை விரயம்செய்து அமைப்புக்களை ஏற்படுத்தியும்ஒன்றையும் செய்யமுடியாவிட்டால் அதில் பயனில்லை.80களில் மாகாண சபை முறையை எதிர்த்து ஜே.வி.பியினர் கிளர்ச்சி செய்தனர். மாகாண சபை வேண்டாம், அதற்கு உதவினால் கொலை செய்வோம், வாக்களித்தால் விரல்களை வெட்டுவோம் என்று அன்று அறிவித்தனர். இரண்டாவது வேறுமொழிகளுக்கு சமவுரிமை அளிக்கமுடியாது, தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரஜாவுரிமை அளிக்கமுடியாது என்ற மூன்று விதமான விடயங்களை முன்வைத்தே ஜே.வி.பியினர் கிளர்ச்சிகளை செய்தனர்.இன்று அந்தவிதமானஇனவாத சிந்தனைகளும் ஜனாதிபதிக்கு இருப்பதால்தான் அவரும் சற்று தடுமாற்றம் அடைகின்றார். அசியல்யாப்பை மாற்றுவதற்கு பெரிதும் கஷ்டப்பட்டு வரைபுகளைகொண்டுவந்தனர். இன்று அந்த முயற்சி ஸ்தம்பிதமடைந்துள்ளது.இனவாத சக்திகளால் அதற்கு தடைக் கற்கள் இடப்பட்டுள்ளன. அதனை எதிர்கொள்ள வேண்டும் அல்லது அவற்றை தகர்த்தெறிய வேண்டும். ஆனால் அவற்றை செய்யாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் பிரச்சினைகள் தீராது. ரணில் விக்கிரமசிங்கவிடம் ஏன் பேசுகிறீர்கள், அவர் வங்கிக் கொள்ளையாளர் அல்லவா என பலரும் என்னிடம் வினவுகின்றனர். வங்கிக் கொள்ளையாளரா அல்லது கொள்ளைக்காரரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதனைப் பார்க்கிலும் இனவாதமே பயங்கரமானது. இனவாதத்தை அழிப்பதற்காக வங்கிக் கொள்ளையரானாலும் அவருடன் சேர்ந்து செயற்பட நான் தயார்” என்றார் விக்கிரமபாகு.

27 மே 2018

பசுவதை தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்தம் காட்டம்!


இலங்கை இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல என சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.பசுக்கள் மீதான வதைகளை எதிர்த்து இந்து பௌத்த மத தலைவர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.இலங்கை இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல என சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.பசுக்கள் மீதான வதைகளை எதிர்த்து இந்து பௌத்த மத தலைவர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,“எங்கள் பகுதிகளுக்கு வந்தால் எங்கள் மரபுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். இலங்கையானது இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல. எங்களுக்குரிய பண்பாட்டு மரபிருக்கிறது.எமது பகுதிகளுக்கு வந்தால் எங்கள் மரபுகளோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். அப்படியில்லையாயின் அவுஸ்திரேலியப் பிரதமர் சொல்லவதைப் போல உங்கள் நாட்டுக்கே போய் விடுங்கள்.
இந்த மண் புனிதமான மண். பசுக்களைப் பேணுவதால் அது புனிதமானது. எமது புனிதமான மண்ணைக் கெடுக்காதீர்கள்.எப்படி ஒரு ஆணை, பெண்ணை, குழந்தையை கொல்வது கொடுமையோ அவ்வாறே பசுவைக் கொல்வதும் கொடுமையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

23 மே 2018

புரட்சிகர இயக்கத்தினர் மட்டும் எப்படி இலக்கானார்கள்?

தப்பிய அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் தூத்துக்குடிப் படுகொலைகள் பல அபாயகரமான கேள்விகளை எழுப்பாமல் இல்லை. புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் போன்ற இயக்கங்கள், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி என குறிப்பிட்டுச் சொல்லும்படியானவர்கள் இலக்கு வைக்கப்பட்ட நிலையில் எந்த ஒரு அரசியல் கட்சியினருமே இக்கோர துப்பாக்கிச் சூட்டில் பாதிக்காமல் தப்பியது எப்படி என்பது ஆகப் பெரும் கேள்வி. தூத்துக்குடிப் படுகொலைகளின் பின்னால் மாபெரும் சதி இருக்கிறதோ என்கிற சந்தேகத்தை அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 3 மாதங்களாக பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அந்த மக்களைச் சந்திக்க முடியாத நிலைதான் இருந்தது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் பிரதான அரசியல் கட்சிகள் மீது மக்கள் கடும் கோபத்தில்தான் இருந்தனர். அதனால்தான் சிறு சிறு இயக்கங்கள், கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் அங்கே வந்து ஆதரவு தெரிவிக்க அவர்கள் அனுமதித்தனர்.ஆனால் பிரதான கட்சியினரை உள்ளேவிடாமலேயே விமர்சனங்களை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். ஸ்டெர்லைட்டை முன்வைத்து பிரதான கட்சிகள் மீது மக்களுக்கு சந்தேகமும் இருந்தது.ஸ்டெர்லைட்டிடம் தூத்துக்குடி அரசியல் பிரமுகர்கள் பெற்ற ஆதாயங்கள் போராட்ட களத்தில் மக்களின் பேசுபொருளாகவும் இருந்ததை மறுக்க முடியாது. இந்த நிலையில் மேம்போக்காக மக்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம் என பசப்பு வார்த்தைகளைத்தான் இந்த அரசியல் கட்சிகள் தெரிவித்தும் வந்தனர்.மேலும் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இந்த போராட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வரக்கூடாது என தடுக்கின்றனர் என்றும் பகிரங்கமாக பொதுவெளிகளில் ஊடகங்களிலும் பேசப்பட்டது. இந்த நிலையில் உச்சகட்டமாக 100-வது நாள் தன்னெழுச்சிப் புரட்சியில் திட்டமிட்ட வகையில் பலர் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுப்பப்படுகிறது.போராட்டத்துக்கு முதல் நாள் 65 பேரை இலக்கு வைத்து போலீஸ் தேடியது.. இதில் 10 பேர் மட்டுமே சிக்கினார்கள் என்பது அப்பகுதி ஊடகத்தார் அவர்களது ஊடகங்களில் சொன்ன செய்தி. இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்களில் புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழரசன், மக்கள் அதிகாரம் ஜெயராமன் இருவரும் அடக்கம். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்திருக்கிறார்.ஆனால் பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர் அல்லது போலீசாரின் பாதுகாவலில் இருந்திருக்கின்றனர். அப்படியெனில் போராட்டக்காரர்கள் மீதான வன்மங்களைத் தீர்க்க கட்சிகளும் அரசும் போலீஸும் இணைந்து திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டை நடத்தியதா? என்கிற கேள்வி இப்போது விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது.மக்கள் தன்னெழுச்சி போராட்டங்களை ஆதாயமாக்கிக் கொண்டு அரசியல் அறுவடை செய்ய திராணியற்றவர்களும் அதிகார வர்க்கத்துடன் இப்படுகொலையில் கை கோர்த்து உள்ளனரா? அரசியலில் போணியாகவே முடியாதவர்களுக்கு மக்களின் போராட்டங்கள் எரிச்சலைத்தான் தரும்.. ஆதாய அரசியல் மட்டுமே போதும்... கொள்கை கோட்பாடு நாடகமெல்லாம் நமக்கு மட்டும் தெரியும் என்கிற மமதையில் இருக்கும் அந்த அரசியல்வாதிகளின் கள்ளக் கூட்டில்தான் இந்த 'இனப்படுகொலை' நிகழ்த்தப்பட்டதா?வரலாறு விடை சொல்லும்!

18 மே 2018

நாரந்தனையில் தொடரும் பசுக்கொலைகள்!

2018-05-18 நாரந்தனை வடக்கில் தொடரும் பசுவதைகள்! முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலை நினைவுநாளான இன்று கோமாதா என அழைக்கப்படும் பசுவைக் கொன்று இறைச்சியாக்கும் ஈனச்செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.கட்டாக்
காலிகள் அழிக்கப்படவேண்டும் என கடந்தகாலங்களில் கோஷமிட்ட சிலர் இந்த பசுக்கொலைக்கு ஆசீர்வாதம் வழங்குவதாக அறியப்பட்டுள்ளது.கோயில் திருவிழாவுக்கு பால் கொண்டுவா, தயிர் கொண்டுவா என விளம்பரம் விடும் கோயில் நிர்வாகிகள் பசுக் கொலையைக்கண்டிப்பதில்லை. மனச்சாட்சி இருந்தால் இதைக் கண்டிக்கலாமே!
பொது அமைப்புகள் எவையும் கண்டிப்பதாகத் தெரியவில்லை.
என்னினமே! என் சனமே! எமக்கேன் இந்த ஈன நிலை?
ஒவ்வொரு நாளும் கொலைசெய்யப்பட்டு இறைச்சிவாரப்பட்டுக் கிடக்கும் பசுக்களின் உடலைத் தரிசனம் செய்வது தான் எமது தலைவிதியா? சைவசமயிகள் என்று பட்டை அடித்துக்கொண்டு திரிய வெட்கம் இல்லையா? நாரந்தனைக் கந்தசாமி கோயில் திருவிழா நாளை ஆரம்பமாம்! 12 நாளும் தவறாமல் செல்லுங்கள்! மாடுகள் செத்தால் உங்களுக்கென்ன? நீங்கள் எல்லாம் சைவசமயிகள் அல்லவா?
யாராவது கேணைப்பயல்கள் மாடுகளைப்பற்றி விசனப்படட்டும்!

நன்றி:முன்னாள் அதிபர் திரு,ஞானசோதியன்(முகநூல்)

17 மே 2018

ஈபிடிபி ஆசிரியையின் செயலால் கொந்தளிப்பு!

Related imageஇருபாலை பகுதியில் மாணவர்களை முன்பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டுச் சென்ற முன்பள்ளி ஆசிரியை தொடர்பான தகவல் வெளியானதை அடுத்து கல்வி திணைக்கள அதிகாரிகளால் குறித்த முன்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.இருபாலை தெற்கு ஞான ஒளி சனசமூக நிலையத்தில் இயங்கி வந்த குறித்த முன்பள்ளியில் மாணவர்கள் கற்று கொண்டு இருந்த நேரம் திடீரென ஆசிரியை மாணவர்களை முன்பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டார்.மூடப்பட்ட முன்பள்ளிக்குள் மாணவர்கள் தனித்து இருந்தபோது, அச்சம் காரணமாக அவலக்குரல் எழுப்பினர்.அதனை அவதானித்த அயலவர்கள் முன்பள்ளி ஆசிரியையின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்ததுடன் மாணவர்களை மீட்கும் முகமாக ஆசிரியையை தேடி சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பில் கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கும் அயலவர்கள் தகவல் தெரிவித்தனர். அதனை அடுத்து குறித்த முன்பள்ளிக்கு விரைந்த அதிகாரிகள் மாணவர்களை மீட்டதுடன், விசாரணைகளையும் மேற்கொண்டனர். அத்துடன் தற்காலிகமாக முன்பள்ளியை மூடுமாறு பணித்துள்ளனர்.
குறித்த முன்பள்ளியின் ஆசிரியை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் என்று தெரிவிக்கப்படுகிறது.

13 மே 2018

இந்தோனீசியாவில் தேவாலயங்கள் மீது தற்கொலைத் தாக்குதல்!

தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் - 9 பேர் பலிஇந்தோனீசியாவின் இரண்டாவது பெரிய நகரான சுரபயாவில் உள்ள மூன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தற்கொலை படையினர் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 9 பேர் இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.சில நிமிட இடைவெளியில் நடந்த இந்த தாக்குதல்களில் பல டஜன் மக்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
தாக்குதல் நடந்த ஒரு தேவாலயத்தின் நுழைவாயிலில் குப்பைகள் மற்றும் சிதிலங்கள் சிதறிக் கிடப்பதை தொலைக்காட்சியில் வெளியான படங்கள் காண்பித்துள்ளன.
முஸ்லீம்கள் பெருமான்மையாக வாழும் இந்தோனீசியாவில், அண்மைய மாதங்களில் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரித்து வருகிறது.இந்த குண்டுவெடிப்புகள் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு நடந்துள்ளது.இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களை, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட ஜெம்மா அன்ஷுரட் தவ்லா என்ற குழுவால் நடத்தியிருக்கலாம் என்று இந்தோனீசியாவின் உளவுத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

நன்றி:பிபிசி தமிழ்

06 மே 2018

ரணிலுடன் எழுத்து மூல ஒப்பந்தம் என்கிறார் சிவசக்தி ஆனந்தன்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாம் வெறுமனே ஆதரவளிக்கவில்லை. எழுத்து மூலம் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்ட பிறகே ஆதரவினை வழங்கியுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா, பாவற்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அண்மையில் நானும் எனது கட்சியின் தலைவரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உரையாடி இந்தோம். இந்த சந்திப்பு குறித்த உண்மையை தெரியாத சிலர் பொய்யாக வதந்திகளை பரப்பி வந்தனர். ஆனால் அந்த சந்திப்பின் உண்மைத் தன்மையினை தற்போது வெளிப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.நாம் அரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகள், காணி விடுவிப்பு, காணாமல் போனோர் ஆகிய விடயங்கள் உள்ளடக்கிய சில கோரிக்கைகளையே பிரதமருக்கு எழுத்து மூலமாக முன்வைத்தோம்.இந்த நிலையில் குறித்த கோரிக்கைக்கு பிரதமர் ரணில் உடன்பட்டதுடன், எழுத்து மூலமாக கையெழுத்திட்டு ஒப்பந்தமொன்றை வழங்கியுள்ளார்.
நாம் வெறுமனே பிரதமருக்கு ஆதரவளிக்கவில்லை. எழுத்துமூல உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே ஆதரவினை வழங்கியுள்ளோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தனும் 3 வரவு செலவுத் திட்டத்துக்கும் ஆதரவளிக்க எவ்வித எழுத்து மூல ஒப்பந்தத்தையும் செய்ய முடியாதுள்ளது.இதற்கு காரணம் அவர்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதால் எதனையும் கோர முடியாதவர்களாக உள்ளனர்.ஒரு தனி மனிதனாகிய என்னால் ரணில் விக்ரமசிங்கவுடன் நிபந்தனை போட முடியுமாக இருந்தால் 15 பேராக உள்ள கூட்டமைப்பினர் மக்களுக்காக எவ்வளவு விடயங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.பிரதமருடன் செய்து கொண்ட ஒப்பந்த நகலையும் சிவசக்தி ஆனந்தன் மக்கள் முன்பு காண்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

01 மே 2018

புலிகள் இயக்கப் போராளி பிரதீபனுக்கு மக்கள் இறுதி அஞ்சலி!

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளி பிரதீபனின் இறுதிக்கிரியைகள் நேற்று மதியம் முல்லைத்தீவு முத்தையன்கட்டிலுள்ள அவரது வீட்டில் இடம்பெற்றது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் பணியாற்றிய ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த  போராளி பிரதீபன் நேற்றுமுன்தினம் உயிரிழந்திருந்தார்.உயிரிழந்த போராளியின் இறுதி வணக்கக் கூட்டம் முத்தையன்கட்டு இளந்தளிர் கல்வி நிலையத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. அவரது இறுதி வணக்க ஊர்வலமும் மிகவும் உணர்வெழச்சியுடன் நடத்தப்பட்டுள்ளது. இந்த இறுதி நிகழ்வின்போது பெருந்திரளான பொதுமக்கள்,மற்றும் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

27 ஏப்ரல் 2018

கனடாவின் பிரதமர் சிங்களவர்களுக்கு வாழ்த்து கூறவில்லை எனக் குற்றச்சாட்டு!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உணவுகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இலங்கையின் பெரும்பான்மையினரான சிங்கள மக்களை புறக்கணித்திருப்பதாக கனடாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டேனியல் ஜேன் குற்றம்சாட்டியுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் புத்தாண்டு வாழ்த்து செய்திகளில் தமிழ் மக்களுக்கு மாத்திரமே வாழ்த்து கூறப்பட்டிருப்பதாகவும், பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களை அவர் புறக்கணித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் ஊடாக கனடாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும், இந்த நிலையில், எதிர்வரும் விசாகப்பூரணை தினத்தை முன்னிட்டு, சிங்கள பௌத்த மக்களுக்கு வாழ்த்து செய்தியை பிரதமர் அனுப்ப வேண்டும் என்றும் கனேடிய பாதுகாப்பு ஆலோசகர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் பதில் வழங்கியுள்ள கனடாவின் பிரதமர் அலுவலக பேச்சாளர் ஒருவர், தமிழர்கள் விடயத்தில் முன்னைய அரசாங்கம் கடைபிடித்த நடைமுறையையே பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.

22 ஏப்ரல் 2018

கோமாளி நடிகர் எஸ்.வி.சேகர் தலைமறைவு!

Image result for s.v.sekarபத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது எஸ்.வி. சேகர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து தெரியவரவில்லை. பெண் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தட்டியது சர்ச்சையானது. இச்சம்பவம் தொடர்பாக திருமலை என்பவர் முகநூலில் மிக மோசமாக பதிவிட்டிருந்தார்.பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் இந்த பதிவை நடிகர் எஸ்.வி.சேகரும் தம்முடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் இப்பதிவை நீக்கிய எஸ்.வி.சேகர், மன்னிப்பு கேட்டார். இவ்விவகாரம் குறித்து எஸ்.வி.சேகர் மீது போலீசில் பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து எஸ்.வி.சேகர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. தற்போது எஸ்.வி.சேகர் அவர் வீட்டில் இல்லை என்றும் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வரவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனிடையே எஸ்.வி.சேகர் வீடு மீது தாக்குதல் நடத்தியதாக 30 பத்திரிகையாளர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 ஏப்ரல் 2018

அன்னை பூபதியின் நினைவு இல்லத்தில் பாதணிகளுடன் நின்ற பொலிஸார்!

தியாக தீபம் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் நிகழ்வுகள் நடைபெற்றுவந்த நிலையில் சமாதிக்கு அருகில் பொலிஸார் தமது பாதணிகளுடன் கடமையில் ஈடுபட்ட நிலையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களை அங்கிருந்துவெளியேற்றினார் என தெரிவிக்கப்படுகிறது.அன்னை பூபதியின் இந்த சமாதியென்பது எம்மை பொறுத்தவரையில் புனித இடமாக கருதுகின்றோம் எனவே தயவுசெய்து உங்களது பாதணிகளை வெளியே கழற்றிவிட்டு வாங்கள் என்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பொலிஸாரிடம் தெரிவித்தார் என்றும் இதனை தொடர்ந்து பொலிஸார் சமாதிக்கு வெளியில் நின்று தமது கடமைகளை மேற்கொண்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு புனித இடமாக கருதப்படும் அன்னை பூபதியின் சமாதிப்பகுதியில் பொலிஸார் பாதணிகளுடன் நின்றது தொடர்பில் அங்கு நின்ற பலரும் தமது அதிர்ப்தியை வெளிப்படுத்தினர் எனக் கூறப்படுகிறது.

18 ஏப்ரல் 2018

ஜோர்ஜ் புஷ்ஷின் தாயார் காலமானார்!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தாயார் காலமானார்முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தாயார் தனது 92ஆவது வயதில் காலமானார்.
இவர் ஜார்ஜ் எச் டபள்யு புஷ்ஷின் மனைவியும், ஜார்ஜ் டபள்யு புஷ்ஷின் தாயும் ஆவார்.
1989ஆம் ஆண்டிலிருந்து 1993ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் முதல் குடிமகளாக இருந்த இவரின் உடல்நலம், சிறிது நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் அவருக்கு மேல் சிகிச்சை நிறுத்தப்பட்டது.
அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இவரின் கணவருக்கு 93வயதாகிறது அவர் நீண்டகாலம் வாழ்ந்த அமெரிக்க அதிபர் என்ற பெயரை பெறுகிறார். பார்பராவின் மகன் ஜார்ஜ் புஷ் 2000ஆம் ஆண்டு அமெரிக்காவின் 43ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இருமுறை அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"எனது அன்பு அம்மா தனது 92ஆவது வயதில் காலமானார். லாரா, பார்பரா, ஜென்னா மற்றும் நான் துக்கத்தில் இருக்கிறோம், ஆனால் எனது அம்மாவின் ஆன்மா அமைதியில் உள்ளது என்பதால் எங்களின் மனதும் அமைதியாக உள்ளது. பார்பரா புஷ் மிகச் சிறந்த முதல் குடிமகளாக இருந்தார். பிறரை போல் இல்லாமல் உத்வேகம், அன்பு மற்றும் கல்வியை மில்லியன் கணக்கானவர்களுக்கு வழங்கியவர்.
அவரின் கடைசி காலம் வரை அவர் எங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். பார்பரா புஷ்ஷை தாயாக பெற்ற நான் அதிர்ஷ்டசாலி; எனது குடும்பம் அவரை இழந்து வாடுகிறது. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி" என ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.
பார்பரா புஷுக்கு ஜெப் புஷ் என்ற மற்றொரு மகனும் உள்ளார். அவர் 1999ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டுவரை ஃபுளோரிடாவின் ஆளுநராக செயல்பட்டார். மேலும் 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
அமெரிக்காவின் முதல் குடிமகளுக்கான சில வரைமுறைகளை தகர்த்து, பார்பரா புஷ் அமைப்பை தொடங்கினார் அதில் வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கல்வி அறிவுபெற வழிவகைச் செய்தார்.

நன்றி:பிபிசி தமிழ்

17 ஏப்ரல் 2018

நிதியுதவிகளைப் பெற இலங்கைக்கு அமெரிக்கா நிபந்தனை!

இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு, அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு அமெரிக்க ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ள சட்டமூலம் குறித்தே அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.இலங்கையின் ஜனநாயக திட்டங்களிற்காக அமெரிக்கா 35 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. காணாமல்போனோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளிற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த நிதியை பெறுவதற்காக இலங்கை மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு ஏற்ப நம்பகதன்மை மிக்க பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு இணங்கியுள்ளது என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் உறுதிசெய்யவேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.
மேலும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இதனை உறுதிசெய்து நிதி ஒதுக்கீட்டு குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை சித்திரவதைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கும் பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதற்கும் இணங்கியுள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் உறுதிசெய்ய வேண்டும்.
இலங்கை குறிப்பிட்ட நிதியை பெறுவதற்காக காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தை அமைக்க வேண்டும், யுத்தத்தின் இறுதி தருணத்தில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும். படையினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.இலங்கையின் படையினருக்கு என 500,000 டொலர்களையே ஒதுக்கீடு செய்துள்ள அமெரிக்கா அதனை மனிதாபிமான மற்றும் இயற்கை அனர்த்தங்களை கையாள்வதற்கான பயிற்சிகளிற்கும் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளிற்குமே பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.பாலியல் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த அமைதிப்படையினருக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வலுவான நடவடிக்கையை எடுத்தால் மாத்திரமே அமைதிப்படை நடவடிக்கைகளிற்கான நிதியை இலங்கைக்கு வழங்கவேண்டும் எனவும் அமெரிக்க காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.

15 ஏப்ரல் 2018

சிகரெட் உயிரைக் குடித்தது..கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி பாரதிபுரத்தில் சிகரெட் புகைத்தவாறு பெற்றோல் போத்தலுடன் பயணித்தவர், தீ பற்றிக் கொண்டதால், படுகாயமடைந்து உயிரிழந்தார். அதே இடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் றெனோல்ட் றீகன் (வயது – 34) என்ற குடும்பத் தலைவரே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த 16 ஆம் திகதி இவர் வேலைதேடி மோட்டார் சைக்கிளில்
பயணித்துள்ளார். மூடி இல்லாத போத்தலில் பெற்றோல் கொள்வனவு செய்து சிகரெட் புகைத்தவாறு பயணித்தார். போத்தல் நழுவி விழ பெற்றோல் ஊற்றுப்பட்டது. அதனை எடுக்கக் குனிந்தபோது வாயிலிருந்த சிகரெட் நெருப்புப்பட்டு தீ பற்றியது. அவரது நெஞ்சு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தீ பற்றியது. கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். சிகிச்சை பயனளிக்காது நேற்றுமுன்தினம் உயிரிழந்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

12 ஏப்ரல் 2018

சீமான் கைது...அதிரடிப்படை குவிப்பு...திரளும் தொண்டர்கள்!

அதிரடி படை கொலை முயற்சி வழக்கில் சீமானை கைது செய்யவும், போராட்டம் நடத்திய பிற தலைவர்களை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளநரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, நடந்த போராட்டத்தில், போலீசாரை தாக்கியதாக சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து, இன்று காலை போராட்டம் நடத்திய சீமான் கைது செய்யப்பட்டு பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.இதேபோல மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து போராட்டம் நடத்தியதற்காக இன்று கைது செய்யப்பட்ட மணியரசன், தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு, இயக்குநர்கள் பாரதிராஜா, கவுதமன், அமீர் ஆகியோரும் சிட்லபாக்கத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தங்க வைக்கப்பட்டுள்ள பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தை சுற்றி மதியம் திடீரென அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. நாம் தமிழர் கட்சியினர் சீமான் கைது செய்யப்படுவதை தடுக்க முற்படுவார்கள் என்பதால் அதிரடி படை குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மண்டபத்திற்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாததால் தொண்டர்கள் அங்கே குவிந்த வண்ணம் உள்ளனர்.பிரதமர் மோடி தமிழகத்தில் சாலை மார்க்கமாக தமிழகத்தில் பயணிக்க முடியாததாலும், ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இவை இரண்டுமே டெல்லியில், உள்ளோருக்கு கோபத்தை உருவாக்கியுள்ளது என்பதால்தான், எங்களை கைது செய்கிறார்கள் என தமிமுன் அன்சாரி தொலைபேசி வாயிலாக ஊடகங்களில் தெரிவித்தார்.போராட்ட தலைவர்கள்

11 ஏப்ரல் 2018

பிரான்சில் கடத்தப்பட்ட தமிழ் சிறுமி மீட்பு!

பிரான்சில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட 17 வயதான ஈழச் சிறுமி ஒருவர் மூன்று வாரங்களின் பின் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 20ம் திகதி Goussainville நகரில் இருந்து குறித்த சிறுமியை மூன்று நபர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த சிறுமி வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறுமியின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் 28 வயதான உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஏப்ரல் 2018

புரட்சியாக உருவெடுத்த சேப்பாக்க போராட்டம்!

வெளிநாட்டு வீரர்கள் சென்னையில் நடக்கும் காவேரி போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது. இது ஒரு தேசிய பிரச்சனை என்று நிரூபிக்க நடத்தப்பட்ட இந்த போராட்டம் பெரிய அளவில் மாறி உலக அளவில் வைரலாகி உள்ளது. கொல்கத்தா அணிக்கும் சென்னைக்கும் இடையில் இன்று ஐபிஎல் போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் செல்லும் வழியில் தற்போது காவிரி போராட்டம் நடக்கிறது. இதனால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் குறித்துதான் தற்போது மொத்த இந்தியாவும் பேசிக்கொண்டு உள்ளது.தற்போது காவிரி பிரச்சனை இருமாநில பிரச்சனையாக இல்லாமல் தேசிய பிரச்சனையாக மாறியுள்ளது. மற்ற மாநில அணி வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதால் இந்த பிரச்சனை இந்தியா முழுக்க பேசப்பட்டு வருகிறது. காவிரி பிரச்சனையை துச்சமென கருதிய தேசிய மீடியாக்கள் கூட இதை பற்றித்தான் இப்போது பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.சென்னை அணியிலும், கொல்கத்தா அணியிலும் நிறைய வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர்கள், ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்கள், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளை சேர்ந்த வீரர்கள் கூட இருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் தெரியாமல் இருந்த காவிரி பிரச்சனை இப்போது வெளியே வந்து இருக்கிறது.இந்த போராட்டம் ஒரு வகையில் வெற்றியை பெற்று இருக்கிறது என்று கூட கூறலாம். போராட்டம் செய்த மக்களின் முக்கியமான ஒரு எதிர்பார்ப்பு, தேசிய அளவில் இந்த பிரச்சனையை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த போட்டி இப்போது உலக அளவில் வைரல் ஆகி உள்ளது.ஆனால் இந்த போராட்டம் இன்னும் முடியவில்லை. இன்று இரவு 11 மணிக்கு போட்டி முடியும் வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதே டிவிட்டரில் சேப்பாக்கம் சென்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் வைரலாகிவிட்டது. இதனால் உலக அளவில் இன்னும் சில நிமிடத்தில் இந்த ஹேஷ்டேக் வைரலாக வாய்ப்பு உள்ளது.

07 ஏப்ரல் 2018

ஜெர்மனியின் முன்ஸ்ரர் நகரில் வாகனத்தால் மோதித் தாக்குதல்!

ஜெர்மனி: பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல், பலர் பலிஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள முன்ஸ்ரர் நகரில் பாதசாரிகளிடையே வாகனம் ஏற்றப்பட்டதில் பலர் மரணமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவத்தில், அந்த வாகன ஓட்டுநர் உள்பட பலர் இறந்துள்ளதாக உள்ளூர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.தாக்குதலாளி தம்மைத் தாமே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று கருதப்படும் இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று என்று உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.அந்த நகரின் கீபேன்கெர்ல் சிலை அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சரக்கு வாகனம் ஒன்று நத்தார் பொருட்கள் வாங்குவதற்கான சந்தையில் பார ஊர்தி ஏற்றப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று தாக்குதல் நடந்த இடத்துக்குச் செல்லவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கீபேன்கெர்ல் சிலை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் மேசை மற்றும் நாட்காலிகள் சேதமடைதிருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

நன்றி:பிபிசி தமிழ்

02 ஏப்ரல் 2018

சுங்கச்சாவடி தகர்த்த சோழன்,வேல்முருகனுக்கு குவியும் வாழ்த்துகள்!

Velmurugan Arrested for Protesting at Ulundurpet Tollgate காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அதன் தலைவர் வேல்முருகன் தலைமையில் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும்,போராட்டக்காரருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுங்கச்சாவடி அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இதனால் வேல்முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சமூக வலைத்தளங்களில் வேல்முருகனின் போராட்டத்திற்கு ஆதரவு வலுத்து வருகிறது.வேல்முருகனின் போராட்டத்திற்கு மக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆதரவாக பதிவிட்டுவருகிறார்கள். ஒரு ட்விட்டரில் பதிவில், போராட்டம் என்றால் இதுதான் போராட்டம்.. இது போன்ற போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க தமிழர்கள் முன் வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.தமிழர்கள் என்றால் மத்திய அரசு எப்போதும் கிள்ளுக்கீரையாக பார்க்கிறது. இதைத்தான் அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிட்டு இருக்கிறதா என்று இன்னொரு பதிவில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.தமிழகத்தின் பெரிய கட்சிகள் எல்லாம் வழக்கு, பின் விளைவுகள் என்று பயந்து கொண்டு இருக்கும்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் செய்திருப்பது தரமான சம்பவம் என்றும், வேல்முருகனுக்கு வாழ்த்துகளும் என்றும் ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இன்னொரு ட்விட்டரில் பதிவில், நீதி மறுப்பதும், நீர் மறுப்பதும் தான் வன்முறை. வரி மறுப்பது அல்ல ; எங்களுக்கு நீர் இல்லையென்றால் உங்களுக்கு வரி இல்லை என்று பதிவிடப்பட்டுள்ளது.இன்னொரு ட்விட்டர் பதிவில், அன்றைய சோழன் சுங்கம் தவிர்த்தான். இன்றைய சோழன் சுங்கம் தகர்த்தான் என்றும் வேல்முருகனைக் குறிப்பிட்டு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். வேல்முருகனின் இந்தப் போராட்டத்தால், சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவு பெருகியுள்ளது.

29 மார்ச் 2018

ஈபிடிபி யினரின் ஊழலை யாழ்,மேயர் விசாரிக்கவேண்டும்-விக்னேஸ்வரன்!

யாழ்ப்பாண மாநகரசபையின் கடந்த நிர்வாகத்தில் ஈ.பி.டி.பி செய்த ஊழல்கள் தொடர்பாக, யாழ். மாநகர மேயர், விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஊழல் விசாரணைகளுக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஆதரவை வழங்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.“ஈ.பி.டி.பி, கடந்த காலங்களில் யாழ்.மாநகர சபையில், செய்த ஊழல் தொடர்பில் தற்போது ஆட்சிப் பீடம் ஏறியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விசாரணைகளை செய்ய வேண்டும். அதில் உள்ள உண்மைகளை கண்டறிய வேண்டும். இது தொடர்பில் வடக்கு மாகாண சபையும் விசாரணைகளை மேற்கொள்ளும். இவ்விடயத்தை விசாரணை செய்ய ஏற்கனவே வடக்கு மாகாண சபையினால் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அக் குழு நடத்திய விசாரணைகளில் ஈ.பி.டி.பி கட்சியின் ஆட்சியில் யாழ்.மாநகர சபை நிர்வாகத்தில் ஊழல்கள் நடைபெற்று உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். எனவே தற்போது ஆட்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஈ.பி.டி.பி கடந்த காலத்தில் செய்த ஊழல் தொடர்பில் முறையான விசாரணை செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

26 மார்ச் 2018

பிரான்சில் தமிழ் மாணவி கடத்தப்பட்டுள்ளார்!

Bildergebnis für franceபிரான்ஸ் - பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் பகுதியில் ஈழத்தமிழ் மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவியின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.குறித்த போராட்டமானது, Lycée Romain Rolland, 21 Av de Montmorency, 95190 Goussainville என்ற இடத்தில் நாளை மாலை ஐந்து மணிக்கு (உள்ளூர் நேரம்) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.பொலிஸாரின் பாதுகாப்பு மற்றும் அனுமதியுடன் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த 20ம் திகதி பாடசாலைக்குச் செல்லும் போது கால் மற்றும் கைகளை கட்டியவாறு எனது மகள் கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன்.மகள் கடத்தப்பட்டு ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. என் மகள் இதுவரையிலும் என் கைகளில் கிடைக்கவில்லை. இந்நிலையில், அனைவரும் ஒன்று சேர்ந்து எனது மகளை மீட்டுதர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன.இது போன்ற சம்பவம் வேறு எந்த பிள்ளைக்கும் வரக்கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.இந்நிலையில், நாளை பொலிஸாரின் அனுமதியுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்துகொண்டு தமக்கு ஒத்துழைக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும், இதுவரையில் மாணவி குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

20 மார்ச் 2018

தமிழின உணர்வாளரும் சசிகலாவின் கணவருமான நடராஜன் காலமானார்!

உடலுக்கு எம்பாமிங் சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம. நடராஜன் (வயது 75) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் 1942-ம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் நடராஜன். பின்னர் அரசு மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரியாக பணியாற்றினார். 1975-ம் ஆண்டு சசிகலாவை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.பின் 1980களில் ஜெயலலிதாவுடன் நட்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு பின்புலமாக, ஒருகட்டத்தில் ஆலோசகராகவும் இருந்து வந்தார் நடராஜன்.அண்மையில் அவருக்கு உடநலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை குளோபல் மருத்துவமனையில் கடந்த 16-ந் தேதியன்று தீவிர சிகிச்சைக்காக நடராஜன் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.35 மணியளவில் நடராஜன் உயிர் பிரிந்தது.அவரது உடல் எம்பாமிங் செய்வதற்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. எம்பாமிங் செய்த பின்னர் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் வருகிறார். நடராஜன் இறப்பு சான்றிதழ் கொடுத்த பின்னர் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்படும்.

18 மார்ச் 2018

சிறீலங்கா எதையும் செய்து விடப்போவதில்லை என்ற புலம்பெயர் அமைப்பின் கூற்றுக்கு பொறுப்போம் என்கிறார் சிறீதரன்!

ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. கால அவகாசம் முடிவடைவதற்குஇன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில் அரசாங்கம் எதனையும் செய்யாது என்பது புரிகின்றது. இந்த கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்க ஜெனிவா வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை வௌ்ளிக்கிழமை ஜெனிவா வளாகத்தில் சந்தித்து பேச்சு நடத்திய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான மாணிக்கவாசகர் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.இந்த சந்திப்பின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிடுகையில், '2019 ஆம் ஆண்டுடன் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுக்கு வந்துவிடும். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யாத அரசாங்கம் எதிர்வரும் ஒரு வருட காலத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே அரசாங்கம் எதனையும் செய்யப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது.அந்தவகையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்க்கமான தீர்மானத்தை எடுத்து அறிவிக்கவேண்டும். நாங்கள் இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்தும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றதே என்று எம்மிடம் சர்வதேச நாடுகள் கேள்வியெழுப்புகின்றன. தற்போது இலங்கை விவகாரம் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்று புலம்பெயர் அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன. இவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமே தமிழர்கள் தீர்வைப் பெறலாம் என்றார்.இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிடும்போது 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஒரு வருடம் பொறுமைகாக்கவே விரும்புகின்றது . அதன் பின்னர் சர்வதேசத்துடன் இணைந்து எவ்வாறான திட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதனை ஆராய்வோம்.அத்துடன் இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்த வழிவகைகளை கூறவேண்டும். நாம் பொறுமை காக்கின்றோம். முடியாத பட்சத்தில் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவோம் என்றார்.

17 மார்ச் 2018

ஜெனிவா பிரேரணையை நிறைவேற்ற சிறீலங்கா எதனையும் செய்யவில்லை!

Bildergebnis für yasmin sookaஜெனி­வாவில் 2015ஆம் ஆண்டு நிறை­வேற்றப்­பட்ட பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வதற்கு இலங்கை அர­சாங்கம் எத­னையும் செய்யவில்லை. காணாமல் போனோர் குறித்து விசா­ரிக்கும் அலுவல­கமும் பாதிக்­கப்­பட்ட மக்­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தாக இல்லை என்று சமா­தா­னத்­திற்கும் நீதிக்­கு­மான சர்வதேச அமைப்பின் தலை­வ­ர் ஜஸ்மின் சூக்கா தெரி­வித்தார்.ஜெனி­வாவில் நேற்று முன்­தினம் நடைபெற்ற இலங்கை மனித உரிமை நிலை தொடர்­பான விசேட உப­கு­ழுக்­கூட்­டத்தில் உரை­யாற்­­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.யுத்­தக்­குற்­றங்கள் மன­தகுலத்திற்கு எதி­ரான குற்­றங்கள் என்ற விட­யங்­களின் அடிப்படையி­லேயே ஜகத் ஜய­சூ­ரிய மீது சர்­வ­தேச நியா­யா­திக்கம் பிர­யோ­கிக்­கப்­பட்­டது. இதே­வேளை யுத்­தத்­தின்­போது என்ன நடந் தது என்ற உண்மை கண்­ட­றி­யப்­ப­ட­வேண்டும். அதனடிப்படையிலேயே தர்ஸ்மன் தலை­மை­யி­லான நிபுணர் குழுவை அன்று பான்கீ மூன் நிய­மித்தார். நானும் அதில் அங்கத்துவம் பெற்றேன்.யுத்தக் குற்­றங்கள் தொடர்­பான குற்றச்சாட்­டுக்கள் குறித்து ஆரா­யு­மாறு எமது நிபுணர் குழு­விற்கு பணிக்­கப்­பட்­டது. நாம் சிவி­லி­யன்­களின் உயி­ரி­ழப்பு தொடர்­பாக ஆராய்ந்தோம். எமக்கு கிடைத்த தக­வல்­களின் படி 40 ஆயிரம் என்று கூறப்­பட்­டது. நாங்கள் தர­வு­களை சேக­ரித்தோம். எமது பரிந்துரைக்கு அமை­வா­கவே முன்னாள் ஐ.நா. செய­லாளர் பான் கீ மூன் உள்­ளக விசா­ரணை பொறி­முறை ஒன்றை இலங்­கையின் யுத்தம் தொடர்பில் அமைக்­கு­மாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் நாம் மதிப்­பிட்ட எண்­ணிக்­கையை விட உயி­ரி­ழப்­புக்கள் அதி­க­மாக இருக்கும் என கரு­தப்­பட்­டது. அது 75 ஆயி­ர­மாக இருக்கும் என்றும் கரு­தப்­பட்­டது.நாங்கள் மத பிர­தி­நி­தி­க­ளு­டனும் கலந்துரையாடினோம். நாங்கள் சாட்­சி­யா­ளர்­க­ளிடம் ஆதாரங்களைப் பெற்றோம். எமக்கு கிடைத்த முறை­யான தகவல்களின் பிர­கா­ரமே எமது மதிப்­பீட்டை வெளி­யிட்டோம்.இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பாக ஜெனி­வாவில் ஒரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அந்த பிரேரணைக்கு இலங்கை அர­சாங்­கமும் அனு­ச­ரணை வழங்­கி­யது. உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு, விசேட நீதி­மன்றம், காணா­மல்­போனோர் அலு­வ­லகம் என்­பன குறித்து இந்த பிரே­ரணை வலி­யு­றுத்­து­கின்­றது. நட்­ட­ஈடு தொடர்­பா­கவும் இந்த பிரே­ரணை வலி­யு­றுத்­து­கின்­றது. ஆனால் இது­வரை எந்த முன்­னேற்­றமும் இந்தப் பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வதில் ஏற்­பட்­ட­தாக தெரியவில்லை. அர­சாங்கம் எத­னையும் செய்­ய­வில்லை.உண்மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை நிறு­வுவதன் மூலம் பல விட­யங்­களை அறிந்­து­கொள்ள முடியும். குறிப்பாக பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்தது என்­பதை மட்­டு­மன்றி முழு­நாட்­டுக்கும் இந்த விட­யத்தை தெரிந்­து­கொள்­வ­தற்­கான சந்­தர்ப்பம் கிடைக்கும். அத­னால்தான் ஒரு நாட்டில் நிறு­வன ரீதி­யான கட்­ட­மைப்பில் இதனை செய்யவேண்டு­மெனக் கூறப்­ப­டு­கின்­றது.இலங்கை அதி­க­மான காணா­மல்­போ­னோர்கள் தொடர்­பான முறைப்­பா­டு­களை கொண்டுள்ள நாடு­களில் ஒன்­றாக காணப்­ப­டு­கின்­றது. காணாமல்போனோர் குறித்த அலு­வ­ல­கத்தை நிய­மித்­த­மை­யா­னது ஒரு சிறந்த நடவடிக்கை என்றே சர்வதேச சமூகம் பார்க்கின்றது. அதன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்றே சர்வதேச சமூகம் கருதுகின்றது. எனினும் வரைபில் சில குறைபாடுகள் இருப்பதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையாத நிலைமையும் இருக்கின்றது. பலர் அது சரியான முறையில் இயங்காது என்று குறிப்பிடுகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

16 மார்ச் 2018

இலங்கை குறித்து மாற்றுப்பொறி முறைக்கு ஆதரவு கோரப்படலாம் என நம்பப்படுகிறது!

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த இரண்டு விவாதங்கள் நடைபெறவுள்ளன. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கா மாற்று பொறிமுறையை முன்னெடுக்குமாறு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஏற்கனவே ஜெனிவா வளாகத்தில் நடைபெற்றுவரும் இலங்கை தொடர்பான உபகுழுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்த செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பான விடயத்தில் தாம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்பதாக கூறியிருந்தார். அந்தவகையில் இன்று நடைபெறும் விவாதம் மற்றும் எதிர்வரும் 21 ஆம்திகதி நடைபெறும் விவாதங்களின் போது இந்த மாற்றுப் பொறிமுறை தொடர்பில் செயிட் அல் ஹுசைன் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.இலங்கையானது 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு நீடிக்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையை இலங்கை இதுவரை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்ற விடயத்தை செய்ட் அல் ஹுசைன் அதிருப்தியுடன் வெளிப்படுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.

14 மார்ச் 2018

இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் 76 வயதில் மரணம்!

ஸ்டீஃபன் ஹாக்கிங்இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், தனது 76ஆவது வயதில் மரணமடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனை சேர்ந்த இவர், ’கருந்துளை மற்றும் சார்பியல்’ சார்ந்த பணிகளுக்கு புகழ்பெற்றவர்.
ஏ ஃப்ரீஃப் ஹிஸ்டிரி ஆஃப் டைம்`( A Brief History of Time) என்ற புத்தகம் உட்பட பல புகழ்பெற்ற அறிவியல் புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
"எங்களது அன்புமிக்க தந்தை இறந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்" என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தன்னுடைய 22ஆம் வயதில், மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கும் `மோட்டார் நியூரான் நோய்` என்னும் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது மேலும் அந்த நோயால் அவர் சில நாட்களே உயிருடன் வாழ்வார் என்றும் கூறினர்.அந்த நோயால் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது; மேலும் அவர் பேச முடியாத நிலைக்கும் போனார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருக்கும் அவரது இல்லத்தில் அவரின் உயிர் அமைதியாக பிரிந்தது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரின் பிள்ளைகளாகிய லூசி, ராபட் மற்றும் டிம்.
"ஸ்டீஃபன் ஹாக்கிங் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி மேலும் அவரின் பணிகள் ஆண்டாண்டு காலம் நிலைத்திருக்கும்" என தெரிவித்துள்ளனர்
அவரின் மன தைரியம் மற்றும் உறுதியை புகழ்ந்த அவரின் பிள்ளைகள், அவரின் புத்திசாலித்தனமும், நகைச்சுவை உணர்வும் உலகளவில் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றும் தெரிவித்தனர்.ஸ்டீஃபன் ஹாக்கிங்நன்றி:பிபிசி தமிழ்.

01 மார்ச் 2018

தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் அனந்தி, அருந்தவபாலன், ஐங்கரநேசன்!

Bildergebnis für தமிழ் மக்கள் பேரவைதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தியடைந்திருந்த வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அனந்தி சசிதரன், பொ.ஐங்கரநேசன் மற்றும் க.அருந்தவபாலன் ஆகியோர் புதிதாக வருகை தந்திருந்தனர். இவர்கள் மூவரும், தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் இன்று இணைக்கப்பட்டுள்ளனர்.இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சபை ஏற்றுக்கொண்டால் வருகைதந்த மூவரையும் மத்திய குழுவில் இணைத்துக்கொள்ளமுடியும் எனத் தெரிவித்தார். இதனையடுத்து குழு உறுப்பினர்களின் முழு சம்மதத்துடன் மூவரும் மத்தியகுழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.ஈபிஆர்எல்எவ் சார்பில் தெரிவாகி அமைச்சராக பதவி வகித்த ஐங்கரநேசனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.இதேவேளை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள் க.அருந்தவபாலன் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராகச் செயற்பட்ட அனந்தி சசிதரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

26 பிப்ரவரி 2018

கூட்டமைப்பின் செயற்பாடு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கவில்லை!

இலங்கை அரசாங்கம் ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்பதன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இல்லை என்பது தெளிவாகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புகூறல் தொடர்பாக முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டு 2 மாற்று வழிகளாக, போர்குற்றங்களை புரிந்தவர்கள் என அறியப்படுபவர்கள் உறுப்பு நாடுகளுக்கு பயணம் செய்தால் உறுப்பு நாடுகள் தமது நீதிமன்றங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அல்லது, விசேட குற்றவியல் தீர்பாயம் ஒன்றை அமைத்து அதற்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.இவ்வாறான நிலையில் கடந்த 24 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐ.நா தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த ஐ.நாவின் உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு கால அவகாசத்தில் 1 ஆண்டு நிறைவில் இலங்கை அரசு ஒன்றும் செய்யவில்லை.இவ்வாறான நிலையில், தமிழ்தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடைய கருத்தை வலுப்படுத்த வேண்டுமே தவிர ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்கக் கூடாது. ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குரலாக இல்லை. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களின் குரல் ஐ.நா வரை செல்ல வேண்டும். அதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கையெழுத்து போராட்டம் ஒன்றை ஒழுங்கமைத்துள்ளது. இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து கையொப்பங்களை இடவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

24 பிப்ரவரி 2018

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மரணம்!


இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி  உனா மக்கோலி திடீரென மரணமானார். கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அதிகாலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
54 வயதான உனா மக்கோலி, மருத்துவ விடுப்பில் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி திடீரென மரணமானார். கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அதிகாலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 54 வயதான உனா மக்கோலி, மருத்துவ விடுப்பில் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் இலங்கைக்கான ஐ.நாவின் முதல் பெண் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஐ.நாவின் 21 அமைப்புகளுக்கு தலைமை தாங்கியிருந்தார். உனா மக்கோலி இலங்கையில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இரண்டு ஆண்டுகள் அவர் ஐ.நா வதிவிட இணைப்பாளர் மற்றும் ஐ.நா அபிவிருத்தி திட்ட பிரதிநிதியாகவும் அதற்கு முன்னர் யுனிசெப் பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார். இவர் பனாமா, டோகோ, சூடான், கென்யா, அங்கோலா போன்ற நாடுகளிலும் பணியாற்றினார்.அயர்லாந்தைச் சேர்ந்த உனா மக்கோரி இரண்டு பிள்ளைகளின் தாயாராவார். இவரது மரணம் ஆழ்ந்த துயரத்தை தருவதாக ஐ.நா வருத்தம் தெரிவித்துள்ளது.

18 பிப்ரவரி 2018

நாமே ஆட்சி அமைப்போம் என்கிறார் மாவை!

மகிந்தவுடன் மாவை,சம்பந்தன்
யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டிப் பிரதேச சபை ஆகியவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆட்சி அமைக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டிப் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா, “ நாம் தனித்து கூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளின் தவிசாளர்கள், உப தவிசாளர்களை நியமிப்போம். அந்தச் சபைகளில் நாங்கள் ஆட்சி அமைப்போம். ஐக்கிய தேசியக் கட்சி, ஈ.பி.டி.பி. ஆகியன ஆட்சி அமைக்கும் கட்சிகளுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கும் என்று தெரிவித்துள்ளன. அவர்கள் ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தெளிவான கருத்து இல்லை. இவ்வாறான நிலையில் இதற்குப் பதில் சொல்வது பொருத்தமாக இருக்காது எனவும் மாவை.சோ.சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

16 பிப்ரவரி 2018

இலங்கை விவகாரத்தை பாதுகாப்பு சபைக்கு மாற்றக்கோரி கையெழுத்து போராட்டம்-கஜேந்திரகுமார்!

Bildergebnis für kajenthiran kumar ponnambalamஇலங்கைக்கு வழங்கப்பட்ட 2 வருட கால அவகாசத்தை உடனடியாக இடைநிறுத்தி, இவ்விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் என வலிறுயுத்தி, கையெழுத்துப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. பேரவையில், இலங்கை அரசாங்கத்துக்கு 30.1 தீர்மானம் நிறைவேற்றுவதுக்கு 2 வருட கால அவசாகம் கடந்த ஆண்டு கூட்டத்தொடரின் போது வழங்கப்பட்டது. அக்கால அவகாசம் வழங்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறும் வகையில் கலப்பு நீதிமன்றம் ஒன்றினை நிறுவுவதனைக் கூட ஏற்றுக்கொள்ளாத நிலையில்தான் இரண்டு வருட கால அவசாகம் வழங்கப்பட்டது. இன்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் செயற்பட்டது போலவே பொறுப்புக்கூறலில் எதுவித முன்னேற்றகரமான நடவடிக்கைகயும் இன்றியே இலங்கை அரசாங்கம் இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட போதும் அதன் செயற்பாடின்மையால் மக்கள் அதனை நிராகரித்திருக்கின்ற நிலையில், ஒரு விதமான முன்னேற்றமும் இல்லை என்ற யதார்த்த நிலைதான் காணப்படுகின்றது.
நாம் ஏற்கனவே இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என வலிறுயுத்தி வந்திருந்தோம். இலங்கை ஜனாதிபதியும் சரி பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் 30.1 அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றை நிறைவேற்றப்போவதில்லை என தெளிவாகக் கூறிய நிலையிலேயே அவர்களுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களும், காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனப் போராடுகின்ற மக்களும் கடந்த ஒருவருடமாக தெருக்களிலேயே இருக்கின்றனர். எனவேதான் நாங்கள் மேலதிக கால அவகாசத்தை இடைநிறுத்தி இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்னிறுத்த வேண்டும். அல்லாவிடின் குறைந்த பட்சம் இலங்கைக்கென சர்வதேச விசாரணைத் தீர்ப்பாயம் ஒன்றாவது உருவாக்கப்படவேண்டும் என வலியுறுத்தவுள்ளோம்.
இதன்பொருட்டு, மக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளோம். இதற்கான கையெழுத்துப் போராட்டத்தை விரைவில்; ஆரம்பிக்கவுள்ளோம். இப்போராட்டமானது தமிழ் மக்கள் பேரவை, பேரவையில் இணைத்தலைவராகவுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. வீடு வீடாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று கையெழுத்துகள் பெறப்படும். அம் மக்களுக்கு யதார்த்த நிலைபற்றி தெளிவுபடுத்தப்படும்” என்றார்.

14 பிப்ரவரி 2018

வட்டக்கச்சியில் இளம் பெண் படுகொலை!

வட்டக்கச்சியில் இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் பெண் ஒருவர் இன்று பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வடக்கச்சி 10வது வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் நிரோசா (வயது 24) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு ஏழு மற்றும் ஒன்றரை வயதுடைய இரு பிள்ளைகள் உள்ளனர்.பெண்ணின் கணவர் தொழிலுக்காக வெளியே சென்றுள்ளார். சடங்கு நிகழ்வு ஒன்றுக்கு அயலவர்களும் சென்றிருந்த வேளையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் பின்புறமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை குற்றத்தடயவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

12 பிப்ரவரி 2018

தேர்தல் முடிவுகள் கூட்டமைப்புக்கு பின்னடைவே என சித்தார்த்தன் கருத்து!


தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் சற்று பின்னடைவே என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். “ தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றுக்கு மாத்திரமல்லாமல், சிங்களக் கட்சிகளுக்கும் மக்கள் வாக்களித்திருப்பது வேலைவாய்ப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகள் குறித்த அவர்களது வாக்குறுதிகளுக்காகவேயாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் சற்று பின்னடைவே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். “ தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றுக்கு மாத்திரமல்லாமல், சிங்களக் கட்சிகளுக்கும் மக்கள் வாக்களித்திருப்பது வேலைவாய்ப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகள் குறித்த அவர்களது வாக்குறுதிகளுக்காகவேயாகும்.சமாந்தரமான இரு வழி பாதையாக தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் மக்களின் உடனடித்தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவை இருக்க வேண்டும் என்பது தனது கருத்தாக இருக்கின்ற போதிலும், அதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பல விதமான பிரச்சினைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இரண்டாம் பட்சமாக கருதிவிட்டது என்றும், ஆனால், மக்கள் அவற்றை முதல் பிரச்சினையாக கருதுவதையே தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன. அதுமாத்திரமன்றி தமிழர் பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகளும் இனி சிரமமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

09 பிப்ரவரி 2018

வாக்களிப்பு நிலையங்களில் கைபேசிக்கு தடை!

Ähnliches Fotoஉள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்காக 13, 374 வாக்களிப்பு நிலையங்கள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இதுதவிர நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்களில் கையடக்க தொலைபேசிப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறித்த பகுதியில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தல், காணொளி எடுத்தல், புகைப்படம் எடுத்தல், புகைத்தல், மதுபானம் அருந்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

08 பிப்ரவரி 2018

மூன்று பிள்ளைகளின் தந்தையான போராளி சாவடைந்துள்ளார்!

விசுவமடுவில் மூன்று பிள்ளைகளின் தந்தையான வீரப்பன் என்று அழைக்கப்படும் சந்திரச்செல்வன் என்ற முன்னாள் போராளியின் மரணம் அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடிய இவர், தனது இரண்டு கால்களை இழந்ததுடன் தனது இரண்டு கைகளின் விரல்களையும் இழந்து கடும் காயத்திற்கு உள்ளாகியிருந்தார்.
விசுவமடுவில் வசித்து வந்த இவர் இன்று மரணமடைந்துள்ளார். நாட்டுக்காக போராட்டத்தில் இணைந்த சந்திரச்செல்வன் தனது உடல் அங்கங்களை இழந்து மிகுந்த வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். விசுவமடுவின் குமாரசாமிபுரம், புன்னை நீராவியில் வசித்து வந்த இவர் இன்று மரணமடைந்திருப்பது அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

04 பிப்ரவரி 2018

தமிழ்த் தேசியப்பேரவையின் கலந்துரையாடலை தடுக்க குழப்பம் விளைவித்தது ஈபிடிபி!

யாழ்ப்பாணம் - றக்கா வீதி - மருதடிப் பிரதேசத்தில், நேற்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில், நேற்று மாலை மக்கள் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது, தாம் ஈ.பி.டி.பியினர் எனக் கூறியவாறு, ஈ.பி.டி.பியின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சில இளைஞர்கள், இப்பகுதியில் வேறு கட்சிகள் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்போவதில்லை எனக் கூறியவாறு, அங்கிருந்த ஒலி மற்றும் ஒளி சாதனங்களின் வயர்களை அறுத்துவிட்டு மேடைப் பகுதியில் அமர்ந்துள்ளனர்.
பின்னர், மாலை 06.30 மணியளவில் குறித்த பிரதேசத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் கலந்துரையாடலுக்கு மக்கள் திரளத் தொடங்கியபோது, அங்கிருந்து குறித்த தரப்பினர் நழுவிச் சென்றுள்ளனர். இதையடுத்து, யாழ். மாநகர வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர முதன்மை வேட்பாளருமான வி.மணிவண்ணன் உள்ளிட்டோர் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது திடீரென முச்சக்கரவண்டிகளில் வந்த சில குண்டர்கள், இது ஈ.பி.டி.பியின் இடம், இங்கு பிரசாரத்தில் ஈடுபட எவருக்கும் அனுமதி இல்லை எனக் கூச்சலிட்டவாறு கலந்துரையாடல் நடைபெற்ற இடத்தை நோக்கி கற்களைக் கொண்டுத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.