![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfZnuYvVd4IawdTFMCIt2znP05t8LogKgimca7NswZ2qJJaPQUr8NagyAgFcjbQI7bXxyVheCbQbGuanss9Y0NpAlgUapUA2EbSH7WDJFrc2ZxtHd82mkmKO5kVPbbfgcBeFTegTKAM_I/s400/images.jpg)
முப்பது வருடங்களாக இலங்கை செயற்பட்ட விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சகல மக்களுக்கு சுதந்திரத்தை வென்று கொடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சுதந்திரம் பறிபோயிருப்பது இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாக உறுதியாகியிருப்பதாக பிரித்தானியாவில் வாழும் சிங்களவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய சட்டத்தின்படி 72 மணித்தியாலங்களுக்கு செயற்படுத்தப்படும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் இந்த நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். பிரித்தானியாவில் இயங்கும் நோர்வே சட்ட நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய புலம்பெயர் தமிழர்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் இந்த நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக