30 ஜூன் 2011

வடமராட்சியில் குண்டு சத்தங்கள்!மக்கள் பீதியில்.

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று இரவு தொடர்ச்சியாகக் குண்டுச் சத்தங்கள் கேட்டதாகத் தென்மராட்சிக் கரையோரப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
நேற்று இரவு 8 மணிமுதல் சுமார் 10 நிமிடங்களுக்கு இந்தக் குண்டுச் சத்தங்கள் நீடித்ததாகவும், குண்டுச் சத்தங்களின் பின்னர் அந்தப் பகுதியில் இருந்து வானத்தை நோக்கி வெளிச்சக் குண்டுகளும் ஏவப்பட்டதாகவும் இதனால் தென்மராட்சி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முதலில் குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் பின்னர் ஏவப்பட்ட வெளிச்சக் குண்டுகளால் தென்மராட்சி கரையோரப் பிரதேசம் பிரகாசமாகக் காணப்பட்டதாகவும் வரணி வாசி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்த மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக