சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனு பட்டியல் தயாரிப்பின்போது இடம்பெற்ற முறைகேடுகளை மறைத்து தம்மிடம் கையொப்பம் பெறப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர்கள், குறித்த செயலுக்கு தமது வன்மையான கண்டனத்தினையும் பதிவு செய்துள்ளனர்.
சம்பவத்தன்று காலையில் தம்மிடம் முறையான வேட்பாளர் பட்டியலைக் காட்டி அடையாள அட்டைப் பிரதி மற்றும் கையொப்பம் பெறப்பட்டதன் பின்னர், மீண்டும் மதியவேளை வேறொரு வேட்பாளர் பட்டியலில் முறைகேடாக கையொப்பம் பெறப்பட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் தமது சக வேட்பாளர்கள் மற்றும் பிரதேச மக்களின் மன உணர்வினைக் கருத்திற்கொண்டு இந்த தேர்தலில் நிற்பதிலிருந்து தாம் ஒருமித்தவகையில் விலகிக்கொள்வதாகவும், மிகுந்த மனவருத்தத்துடன் எடுக்கப்பட்ட இந்த முடிவிற்கு கீழ்த்தரமான சம்பவங்களே காரணமாக அமைந்துள்ளது என்று அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த கடிதத்தினை தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு அனுப்பியுள்ளதோடு அதன் பிரதிகளை ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக