![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtaS7ZXvKRhGyF7X8fkTay5R8Be0dhrwjaeiUiB2CRvNMhatxFlfIZUMBoGXesTNwL00YRKEpmCtbTRNY4dVM7ISu3zZ2uYnsc0jQmwWI1GFVcaQS1hQwqNC19OTJb1e6lGwkgdXNLGFo/s400/channel+4.jpg)
இந்த வழக்கின் சந்தேக நபர்கள், விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கினார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை எனவும், அவர்கள் விடுதலைப் போராளிகள் எனவும், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி விக்டர் கொப்பே வாதிட்டுள்ளார்.
எனவே விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியது சட்ட விரோதமானது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் விடுதலைப் புலிகள், பயங்கரவாதிகள் அன்றி, விடுதலை போராளிகள் என்ற தமது வாதத்துக்கு ஆதாரமாக காண்பிப்பதறாகாக, சனல் 4 தொலைக்காட்சியின் காணொளியை நீதிமன்றத்தில் திரையிட கோரியுள்ளார்.
இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இதேவேளை, எதிர்வரும் மூன்று வாரங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளா? அல்லது விடுதலைப் போராளிகளா என ஹேக் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக