
தோ்தலில் தோல்வியடைந்த பின்னா் தனது சொந்த இடத்திற்கு சென்ற மகிந்த ராஜபக்ச அங்கு வந்து தன்னைச் சந்தித்த பொதுமக்களுடன் கலந்துரையாடிவிட்டு அடுத்தநாள் காலையில் பிள்ளைகளுடனும் தனது சகோதரா்களுடனும் கோபதாண்டவம் ஆடியதாகத் தெரியவருகின்றது.
தனது 45 வருட அரசியல் வாழ்க்கை எனது பிள்ளைகளாலும், சகோதரா்களாலும் அழிந்துவிட்டது என மகி்ந்த கத்தியுள்ளார்.
என்னை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறாகள் என கோத்தபாய தனது அண்ணணுக்கு தொலைபேசியில் எடுத்து கூறிய போதே மகிந்த இவ்வாறு கத்தியுள்ளார்.
எனக்கு வாய்த்த சகோதரங்களும் அப்படி, பிள்ளைகளும் அப்படி, நான் என்ன செய்வது என மகிந்த துக்கத்தில் பிதற்றியதாக மகி்ந்த ராஜபக்சவுக்கு நெருங்கிய வட்டாரங்களால் செய்தி கசிந்துள்ளது.