27 May 2012

குழப்பத்தை ஏற்படுத்த முனைந்து குழம்பிப்போன பிள்ளையான்!


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 2012.05.25ம் திகதி தொடக்கம் 2012.05.27ம் திகதி இன்று வரை மட்டக்களப்பு அமெரிக்கமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 27.05.2012 இன்று மிகவும் சிறப்பான முறையில் 3000க்கு மேற்பட்ட மக்கள் முன்னிலையில் மாநாடு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அடாவடித் தனம் தோல்வி கண்டது. இம்மாநாட்டை குழப்பும் முகமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது அடிவருடிகளைக் கொண்டு பல துண்டுப் பிரசுரங்களை கடந்த இரு வாரமாக மாவட்டம் முழுவதும் வெளியிட்டார். "எதிர்ப்பு தெரிவிப்போம்", "மானமுள்ள மட்டக்களப்பு மக்கள்" என்ற தலைப்புகள் உட்பட 10க்கு மேற்பட்ட தலைப்புக்களில் மாவட்டம் முழுவதும் உள்ள தமது பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அடிவருடிகளை பயன்படுத்தி துண்டுப் பிரசுரங்களை இலட்சக் கணக்கில் அச்சிட்டு மாவட்டம் முழுவதும் வினியோகித்தனர்.
இதில் பிரசுரம் எழுதுதல், அச்சிடல் பணிகளில் செங்கலடி செல்லம் தியேட்டர் முதலாளியும், பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த முக்கிய பிரதிநிதியுமான மோகன் என்பவர் செயற்பட்டார். யாழ்ப்பாண மக்களை அதாவது வடபகுதி மக்களை இழிவுபடுத்தி இப்பிரசுரம் பிள்ளையானாலும் அவர்களது கூலிப் படையாலும் வெளியிடப்பட்டது.
அதுமட்டுமின்றி கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், பிள்ளையானின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் என்பவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அமைப்பாளருமான பிரதீப் மாஸ்டர் உட்பட்ட குழுவினர் மாவட்டத்தின் பல பாகங்களிலும் மட்டக்களப்பு நகரிலும் தமிழரசுக் கட்சியை தூற்றியும், அதன் தலைமையை கண்டித்தும், வடபகுதி மக்களை இழிவுபடுத்தியும் பிரசுரங்களை ஒட்டியதுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பிரசுரங்கள் மற்றும் பதாதைகளை பிடுங்கி எறிவதிலும், கிளிப்பதிலும் கவனம் செலுத்தினார்கள்.
அதுமட்டுமின்றி பொலித்தீன் மூலம் கறுப்பு கொடிகளை, நகரிலும் மாவட்டங்களிலும் தொங்கவிட்டனர். ஆனாலும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் ஆகியோர் மிகவும் சாதூரியமாக செயற்பட்டு மகாநாட்டை மிகவும் சிறப்பாக நடாத்த ஏற்பாடு செய்தனர்.
இதனை பொறுக்க முடியாத பிள்ளையான் தனது கையாள்களை பயன்படுத்தி மகாநாடு நடாத்த இருந்த மட்டக்களப்பு தேவநாயகம் மண்டப திரை பகுதியை (மேடை) இரு நாட்களுக்கு முன் எரித்தனர். ஆனால் இதிலும் உடனடி நடவடிக்கையை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு ஊறணி அமெரிக்கமிஷன் மண்டபத்தை ஒழுங்கு செய்தனர்.
அதனை பொறுக்க முடியாத தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் குழுவினர் பிள்ளையானின் ஆலோசனையில் மாநாட்டை குழப்ப தீர்மானித்தனர். 2012.05.27ம் திகதி அன்று பெரும் திரளான மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்கள் காலை 9.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்திலும் அதற்கு வெளியிலும் அமைக்கப்பட்ட கொட்டகைகளிலும் குழுமியிருந்தனர்.
இவ்வேளை ஒவ்வொரு நாளும் பிள்ளையான் மாநாட்டு மண்டப வழியாக வாகனத்தில் மெதுவாக கண்ணாடியை திறந்து பார்த்துக் கொண்டு செல்லும் நடவடிக்கை தொடர்ந்தது. 2012.05.27ம் திகதி அன்று மக்கள் திரளை கண்ட பிள்ளையான் (வாகனம் மூலம் வருகை தந்து பார்வையிட்டதுடன்) பெரும் கொதிப்புக்கு உள்ளாகி தனது அடிமைகளை அழைத்து மதுபானம் கொடுத்து மாநாட்டு மண்டபத்தில் சென்று குழப்புமாறும் வாகனங்களை உடைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிநிதிகளும் பிள்ளையானின் அடிமைகளும் மாநாட்டு மண்டபத்துள்ளும் வெளியிலும் நுழைந்து இருந்தனர். இவர்கள் பிள்ளையானின் ஏற்பாட்டில் இராணுவம், பொலிஸ், புலனாய்வுத்துறை ஆகியோரின் உதவியுடன் அங்கு செயற்பட தொடங்கினர். கிட்டத்தட்ட எட்டுப்பேர் நுழைந்தனர்.
இவர்களில் பிள்ளையானின் உறவினரும், வாழைச்சேனை பேத்தாழை கிராமத்தை சேர்ந்த செல்வநாயகம் ஈவெரா என்பவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் உரையாற்றும் போது அவர் வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் கோட்பாட்டை வெளிப்படுத்திய போது கிழக்கு மாகாணம் தனி;த்துவம் கோரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பதால் இவரது கதையை அவமதித்து மண்டபத்துள் சொற் பிரயோகம் பாவிக்க முற்பட்ட போது மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் அவரை தாக்க முற்பட்டனர்.
ஆனாலும் சிலர் தாக்கினர். உடனடியாக புறடியில் பிடித்து எல்லைக்குள் அப்பால் ஈவெரா என்பவர் தள்ளப்பட்டார். ஈவெராவுக்கு மட்டக்களப்பு அம்பாறை மக்கள் அடியும் கொடுத்தனர். இதன் பின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் குழுவினர் வீதியில் நின்றிருந்த வடபகுதி மக்கள் வருகை தந்த பஸ் வண்டிக்கு கல் வீசினர். இதன் பின்னணியில் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் செயற்பட்டார்.
அத்தோடு பிரசாந்தன் மாகாணசபை உறுப்பினர் மகாநாடு நடைபெறும் மண்டபத்தின் அருகில் உள்ள பிரதான வீதியால் தமது வாகனத்துக்கு பின் ஆட்டோவில் சவப்பெட்டி (வெற்றுப்பெட்டி) கட்டிக் கொண்டு பல தடவை போக்குவரத்து மேற்கொண்டார்.
இவ்வேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக வருகை தந்த பிள்ளையானின் அடிமைகள் ஒரு சிலர் மாநாட்டை பார்வையிட்டு தமது வருகை தந்திருந்த நண்பர்கள், உறவினர்களுடன் மாநாட்டை பாராட்டி கூறியுள்ளனர். பிள்ளையான் பொலநறுவை, திருகோணமலை, அம்பாறைகளில் இருந்து 16 பஸ் வண்டிகளில் சிங்கள மக்களை இறக்கி நடாத்திய தமது மாநாட்டை விட இங்கு மக்கள் பெரும் எழுச்சியுடன் சம்பந்தர் ஐயாவை வரவேற்று கொண்டு வந்து நடாத்தும் இம் மகாநாடு அமைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இவ்வேளை ஒரு சில அடிமைகள் தம்மை இதனை குழப்புமாறு பிள்ளையான் அனுப்பியதையும் தெரிவித்துள்ளனர். பிள்ளையானிடம் இருந்து எப்படி வெளியேறுவது என்று யோசித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஏனெனில் பிள்ளையானிடம் இரந்து விலகினால் தமது உண்மைகள் எல்லாம் வெளியில் சென்று விடும் என்பதால் தங்களை சுட்டுவிடுவார் எனக் கவலைப்பட்டுள்ளனர். இந்நிகழ்வுக்கு வருகை தந்த பிள்ளையானின் பிரதேச சபை உறுப்பினர் பிள்ளையான் போகச் சொன்னததால் வந்ததாக கூறியதுடன் பிள்ளையானால் தமக்கு கஷ்ரமாக உள்ளதாகவும் ஒருவரிடம் கவலைப்பட்டுள்ளார். பாவம் பிள்ளையானுடன் இணைந்தவர்கள் இவ்வேளை செ.ஈவெரா என்பவர் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதும் பயந்த பிள்ளையானின் அடிமைகள் மெதுவாக நழுவி வெளியேறினர்.
இம்மாநாட்டுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மலையகம் உட்பட பல பகுதிகளில் இந்து தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவும், முஸ்லிம்கள் சிலரும் சமூகமளித்தனர். மாநாட்டில் கலந்து கொண்டோர் இக்கட்சி தமது சொத்து என்ற வகையில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
இம்மாநாட்டை குழப்ப வேண்டும் என்ற பிள்ளையானில் செயற்பாடு அனைத்தும் தோல்வி கண்டது. மாநாட்டு குழுவே எதிர்பார்க்காத வகையில் மக்கள் பெரும் திரளாக கலந்து சிறப்பித்தனர். மாநாடு பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற்றது. பாவம் பிள்ளையான் இம்மாநாட்டை குழப்ப பல இலட்சம் ரூபாய் செலவு செய்தும் தமது எண்ணம் நிறைவேறவில்லை என்ற வேதனையுடன் தமது சகாக்கள் மீது கோபத்துடன் இருக்கின்றார். என தகவல் கிடைத்துள்ளது. 

இனவழிப்பு குற்றவாளியை அனுமதிக்காதே!லண்டனில் திரண்ட தமிழ் மக்கள்.

பிரித்தானிய அரசி முடிசூட்டிய அறுபதாவது வருட நிறைவுவிழாவே களங்கம் சூழப்போகிறது. அந்த விழாவுக்கு சிங்களதேசத்தின் அதிபரும் பெரும் இனஅழிப்பு ஒன்றின் பிரதான குற்றவாளியுமான மகிந்தராஜபக்ச வருவதை அனுமதிக்க வேண்டாம்.
இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்து தமிழர் பிரதேசங்களில் இன்றும் இராணுவ ஆட்சியை நடாத்திவரும் மகிந்த ராஜபக்ச இந்த விழாவில் கலந்து கொள்வது உலக மானுட பண்புகளுக்கும் மனித உரிமைகளுக்கும் பெருத்த அவமானம் ஆகும்.
அத்துடன் பாரம்பரியம் மிக்க பிரித்தானிய முடியாட்சிக்கும் இது மிகப்பெரும் களங்கத்தையும் வரலாற்று அவமானத்தையும் தந்துவிடும்.
மனிதஉரிமைகளையும் சர்வதேச சட்டங்களையும் காலில் போட்டு மிதித்து அதன்மீது ஏறிநின்று கொடும்ஆட்சி புரியும் மகிந்த ராஜபக்சவை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்கவேண்டாம் எனக்கோரி நடாத்தப்பட்ட இக்கவனஈப்புப் போராட்டத்தில் காவற்துறை அனுமதியளித்திருந்த எண்ணிக்கையை விட பல மடங்குமக்கள் கலங்து கொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

26 May 2012

லண்டன் வரும் மகிந்தவை விரட்ட அணிதிரள்வோம்!

சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச லண்டன் வருதை எதிர்த்து இன்று பிற்பகல் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிங்களப் பேரினவாதம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர் தாயகத்தில் மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பின் உச்சமாய் 2009 ஆம் ஆண்டில் வகை தொகையின்றி ஒரு இலட்சத்திற்கும் மேலாக தமிழ் மக்களை கொன்று மிகப்பெரும் தமிழின அழிப்பினை செய்த போர்க்குற்றவாளியான சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச லண்டன் வருவதை புறக்கணித்து மேற்கொள்ளப்படும் போராட்டத்தில் பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் பிரித்தானிய தமிழர் ஒன்றியம் கேட்டுள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் பொது எதிரிக்கு எதிராக அணி திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் எனவே இன்று மாலை 4.00 மணியிலிருந்து 7.00 மணிவரை பிரித்தானிய தலைமை அமைச்சரின் காரியாலயம் அமைந்திருக்கும் டவ்னிங் வீதி லண்டன் என்ற இடத்தில் அனைவரையும் கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா வாழ் தமிழ் அமைப்புக்கள், ஆலய, பாடசாலை நிர்வாகங்கள், மற்றும் ஊர் சங்கங்கள், பழைய மாணவர் அமைப்புக்கள் என அனைவரையும் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தெகிவளையில் காவிகள் போராட்டம்,காத்தான்குடியில் தீ வைப்பு,முஸ்லீம்களுக்கும் ஆப்பு!

seithy.com gallery news
தெஹிவளை மிருகக்காட்சி சாலை கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாருர் ரஹ்மான் குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளை எதிர்த்து நேற்று (25.05.2012) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் மதரசாவை அங்கிருந்து அகற்றுமாறு கோசமிட்டதுடன் பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.
அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸ் மதரசா பகுதியில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர். இவ்வார்ப்பாட்டத்தில் ஐம்பது தொடக்கம் நூறு பேர் வரை கலந்துகொண்டனர். மேலும் இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் இந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பி.ப. 2:30 மணியளவில் முச்சக்கர வண்டிகளில் வந்த இனந்தெரியாத நபர்கள் மதரசா மீது கற்களை வீசிவிட்டுச் சென்றிருந்ததுடன் பின்னர் பிற்பகல் 4 மணியளவில் கல்விஹாரவில் இருந்து பிக்குமார் மற்றும் பொதுமக்களைக் கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று புறப்பட்டு மத்ரசாவைத் தாண்டி மிருகக்காட்சி வீதி சந்திக்கு வந்து சேர்ந்தது. குறித்த இடம் மாடுகளை அறுக்கும் மடுவமாக பாவிக்கப்படுவதாகவும் அதை மூட வேண்டும் என்பதும் முக்கியமான கோசமாக ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.
ஜாமியுஸ் ஷபாப் நிறுவனத்தின் காணியில் அமைந்திருக்கும் மேற்படி பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், பதினைந்து வருடங்களாக இவ்விடத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்பதற்றத்தை அடுத்து இவ்விடயத்தை ஆராயவென தெஹிவலை பொலிஸாரால் இன்று தெஹிவளை, கல்கிஸ்ஸை மாநகர சபை கட்டிடத்தில் பிற்பகல் 03.00 மணிக்கு பள்ளிவாயல் நிருவாகிகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கலந்துகொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது. 


காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய காத்தான்குடி அலுவலகம் இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து எரிகப்பட்டுள்ளது. இதனால் அலுவலக கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் அமைக்கப்பட்டிருந்த இவ் அலுவலகம் இன்று மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கபடபடவிருந்நமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

25 May 2012

செங்கல் ஆலையில் இரகசியமான முறையில் சடலங்கள் எரிப்பு!


செங்கல் ஆலையில் இரகசியமான முறையில் மனித சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளன!இராணுவத் தூபிகளை நிர்மாணிக்க செங்கற்களை உற்பத்தி செய்த அநுராதபுரம் செங்கல் ஆலையொன்றில் கடந்த காலங்களில் மிகவும் இரகிசயமான முறையில் இளைஞர்களின் சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஜெதவனாராம, அபயகிரி போன்ற புனிதத் தளங்களின் புனர்நிர்மாணப் பணிகளுக்கும் ஆலையிலிருந்தே செங்கல் பெறப்படுகிறது. இந்த ஆலை யுனிஸ்கோ நிறுவனத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாகும். ஒரே தடவையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான செங்கற்களை உற்பத்திசெய்யும் வசதிகள் இங்கு காணப்படுகின்றன.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இராணுவ நினைவுத்தூபி நிர்மாணத்திற்குத் தேவையான செங்கற்களை உற்பத்தி செய்வதாகக் கூறி, இந்த செங்கல் ஆலையையும், அதற்குச் சொந்தமான ஏக்கர் கணக்கான காணிகளையும் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பின்னர் ஆலை சிவில் பாதுகாப்பு படையணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்பின்னர் வெளி நபர்கள் ஆலைக்குள் உட்பிரவேசிப்பது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சில சமயங்களில் பாதுகாப்பு அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த காலங்களில் அடிக்கடி வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பல இளைஞர்களின் சடலங்கள் இங்கு எரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலையில் தொடர்ச்சியாக செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுவதால் சடலங்கள் எரிக்கப்பட்டதற்கான எந்தவித தடயமும் கிடைக்காது. இதனாலேயே சடலங்களை எரிக்க இந்த ஆலை தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

உலக நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்த அமெரிக்காவின் 2011ம் ஆண்டுக்கான அறிக்கை நேற்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.200பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 44 பக்கங்களில் விபரிக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனும், ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் மைக்கல் போஸ்னரும் இணைந்து நேற்று வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் அதிபரும், பாராளுமன்றமும் மக்களால் தெரிவு செய்யப்பட்டாலும் அதிபரின் குடும்பமே ஆட்சியில் முழு ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், இரண்டு சகோதரர்கள், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொருளாதார அமைச்சு என இரு நிறைவேற்று அதிகாரமுள்ள பதவிகளை வைத்துள்ளனர்.
மூன்றாவது ககோதரர் நாடாளுமன்றத்தில் சபாநாயகராக உள்ளார். அதிபரின் மகன் உட்பட அவரது உறவினர்கள் முக்கியமான அரசியல் மற்றும் இராஜதந்திர பதவிகளில் உள்ளனர். அதிபர் மற்றும் நாடாளுமன்றத தேர்தல் இரண்டுமே தேர்தல் சட்டங்களை மீறிய மோசடியாகவே இடம்பெற்றன. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்புப் படைகளினதும் அரச ஆதரவுக் குழுக்களும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளையும், கடத்தல், கப்பம் கோரும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளதால் அங்கு மனித உரிமை மீறல் பிரச்சினைகள் பெருமளவில் காணப்படுவதாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற குழுகள் பொதுமக்கள், சமூகசெயற்பாட்டாளர்கள், விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் ஆகியோரை துன்புறுத்தி வருகின்றனர். ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தல்களுக்குள்ளேயே செயற்படுகின்றனர். இலங்கையில் காணாமல் போனோல் பிரச்சினை முன்னைய ஆண்டுகளை போலவே காணப்படுகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். அதற்கு எவ்வித பொறுப்புக்களும் கூறப்படவில்லை. பாதுகாப்புப் படையினர் தடுத்து வைத்திருப்போரை சித்திரவதை செய்கின்றனர். பொதுமக்கள் பலர் கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்படுபவர்களில் சிலர் விசாரணையின் போது மரணமாகியுள்ளனர்.நீதி விசாரணைகளின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்படுகின்றனர். கருத்து வெளியிடுதல், ஊடக சுதந்திரம், ஒன்றிணையும் சுதந்திரம், ஒன்று கூடும் உரிமை நடமாடும் சுதந்திரம் என்பவற்றுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. சிறுபான்மைத் தமிழர்களுக்கெதிரான பாகுபாடுகள் அதிகமாக காணப்படுகின்றன.
மனித உரிமை மீறல்களால் எண்ணிலடங்காத தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல்கள், படையினரின் சித்திரவதைகள், ஊழல் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டவர்களை அதிகாரபூர்வமாக தண்டிப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. ஏனெனில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பிருப்பதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 May 2012

மனித உரிமை விவகாரங்களில் நேர்மையில்லாத உலக நாடுகள்!

உலகின் பெரும்பாலான நாடுகள் மனித உரிமை விவகாரங்களில் நேர்மையாகச் செயற்படவில்லை என
சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பில், உலக நடுகளின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என வருத்தம் தெரிவித்துள்ள அவ்வமைப்பு, 91 நாடுகளில் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதெனவும், 101 நாடுகளில் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதெனவும், சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய கிழக்கிலும், வட ஆபிரிக்காவிலும் இடம்பெற்ற மனித உரிமைக்கான ஜனநாயகப் போராட்டங்களை, பல நாடுகள் சந்தர்ப்பவாத அடிப்படையில் பயன்படுத்திக் கொண்டதாகவும், சிறிலங்கா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சலீல் செட்டி, பக்கச்சார்பான முறையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கருத்துக்களை உலக நாடுகள் வெளியிடுவது பொருத்தமற்றது எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை நான் பார்த்தேன்!

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு, நீண்ட நாட்களாகப் பாதுகாப்பு வழங்கிவரும் படையணியாக இம்ரான் பாண்டியன் படையணி இருந்தது யாவரும் அறிந்த ஒரு விடையம். இது இராணுவத்துக்கும் தெரிந்த தகவல்
தான். தலைவரின் பாதுகாப்பை இப்படையணியூடாகப் பாதுகாத்து வந்தவர்களுள் மிக முக்கிய நபராக சொர்ணம் கருதப்படுகிறார். ஆனால் பலர் அறிந்திருக்காத விடையம் ஒன்று உள்ளது, ஏன் ..விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலர் கூட இதனை அறிந்திருக்கவில்லை எனலாம். அது என்னவென்றால் 2002ம் ஆண்டு இம்ரான் பாண்டியன் படையணி பிரிக்கப்பட்டு, அதில் உள்ள சிலரைக் கொண்டு ராதா வான்காப்பு படையணி பலப்படுத்தப்பட்டது. பின்னர் அப்படையணியே தலைவரின் பாதுகாப்பை கவனித்துவந்தது.
இவர்களுக்கே சைவர் (0 0) இலக்கத்தில் ஆரம்பிக்கும் தகடுகள் வழங்கப்பட்டது. (விடுதலைப் புலிகள் தங்கள் கழுத்தில் நச்சுக் குப்பியோடு சேர்த்து இத் தகடுகளை அணிந்திருப்பது வழக்கம்) இவ்வாறு சைவர் தகடுகள் வழங்கப்பட்ட போராளிகளே முள்ளிவாய்க்கால்வரை தேசிய தலைமையை பாதுகாத்து வந்துள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை தான் கண்டு அவரோடு பேசியதாக, சைவர் இலக்க தகட்டுடன் போராடி பின்னர் மீண்டு வந்துள்ள போராளி ஒருவர் அதிர்வுக்குத் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இருந்து, நந்திக்கடல் பக்கமாகச் செல்ல ஒரு பாதை இருப்பதாகவும், அப்பாதையில் உண்டியல் பிள்ளையார் கோயில் என்று ஒரு கோவில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கறுப்பு நிறம் கொண்ட, சேறு சகதிகளில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிளில் வந்த பொட்டு அம்மான், கடல் மூடப்பட்டுவிட்டதா என்று தன்னிடம் கேட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனூடாக, ஆனந்தபுரம் சமருக்குப் பின்னர், பொட்டம்மானை தாம் காணவில்லை என்றும், முள்ளிவாய்க்கால் பகுதியில் பொட்டம்மான் இருக்கவில்லை என்ற கூற்றுக்களில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது. ராதா வான்காப்பு படைப்பிரிவில் இருந்து சிலர் மற்றும் தலைவரின் மகனின் பாதுகாப்பு பிரிவில் இருந்து சிலரும் சேர்ந்து ஒரு குழுவாகச் சென்று, இராணுவ முற்றுகையை உடைத்து வெளியேற முற்பட்டுள்ளனர். இந் நிலையில் அவர்களை இராணுவம் சுற்றிவளைத்துவிட்டது. (இதில் தலைவரின் மகன் சாள்ஸும் அடங்குவார்) இக் குழுவில் இருந்த எழில் வண்ணன் என்பவர், தனது சட்டலைட் தொலைபேசியூடாக டென்மார்க்கில் உள்ள உற்ற நண்பரைத் தொடர்புகொண்டு, தாம் சுற்றிவளைக்கப்பட்டதை விபரித்துள்ளார். அச் சுற்றிவளைப்பில் இருந்து தாம் தப்பிக்க முடியாது எனவும், எல்லாம் முடிந்துவிட்டது... ஆனால் போராட்டத்தை புலம்பெயர் மக்களே இனிக் கொண்டு நடத்தவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இருந்து, தன்னுடன் பேசிவிட்டு புறப்பட்ட பொட்டம்மானைப் பார்த்து என்ன செய்யப்போகிறீர்கள் என நான் கேட்டேன். போராடுவோம் இறுதிவரை போராடுவோம். கடல் மூடப்பட்டால், பிறிதொரு பகுதியை உடைக்க முடியும் என்று சற்றும் மனம் தளராதவராய் அவர் கூறிவிட்டு, நந்திக்கடல் பக்கமாகச் சென்றார் என்று சைவர் இலக்க தகடு கொண்ட போராளி ஒருவர் மேலும் தெரிவித்தார். தேசிய தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சுமார் 600க்கும் மேற்பட்ட போராளிகள் காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். அவர்கள் அனைவரும் இலக்கை அடைந்தார்களா என்பது தான் தனக்குத் தெரியவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் பொட்டம்மான் குறித்து முன்னர் வெளியான பல தகவல்கள் பிழையானவை என்பது மட்டும் தற்போது நிரூபனம் ஆகியுள்ளது எனலாம். அவர் தேசிய தலைவரோடு முள்ளிவாய்க்காலில் நின்றிருந்தது உறிதிப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி:அதிர்வு

23 May 2012

ஜெனிவா தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம்!


சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எதைக் கூறியிருந்தாலும், தாம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று நண்பகல் வொசிங்டனில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட்டிடம், ஹிலாரி கிளின்ரன் – ஜி.எல்.பிரிஸ் சந்திப்பின் இறுதியான விபரங்கள் உள்ளதா என்று கேள்வி எழுப்பட்டது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வூட்ரோ வில்சன் நிலையத்தில் உரையாற்றியபோது அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா நிராகரிப்பதாகக் கூறியதை செய்தியாளர்கள் அவரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அதற்குப் பதிலளித்த இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட்,
 “சிறிலங்கா சந்திப்புத் தொடர்பாக அழகாகவும் விரிவாகவும் கடந்த வெள்ளிக்கிழமை பேசியதாக நினைக்கிறேன். அப்போது முழுமையான விபரங்களை வெளிப்படுத்தினேன்.
நாங்கள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னால் நிற்கிறோம். அதன்படியே செயற்படுகிறோம். அதையே தொடர்வோம்“ என்று கூறியுள்ளார்.
அதேவேளை நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் சரத் பொன்சேகா விடுதலை தொடர்பாக அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

22 May 2012

சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபட முடியாது!


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராகவோ, மாகாணசபை உறுப்பினராகவோ பதவியேற்க முடியாது என்று சட்டமா அதிபர் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு அளித்துள்ளார்.
ஆனாலும்,இலங்கையின் அரசியலமைப்பின் படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள் ஏழு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவோ அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடவோ முடியாது. பொதுமன்னிப்பு சரத் பொன்சேகாவின் சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தை மட்டுமே குறைத்துள்ளது.
அவரது சிறைத்தண்டனை குறைக்கப்படவில்லை. அவரது சிறைத்தண்டனைக்காலம் குறைக்கப்பட்டால் தான் அரசியலில் ஈடுபட முடியும். என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சரத் பொன்சேகாவின் குடியியல் உரிமைகளை முழுமையாக மீளப்பெறுவதற்கு அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தப் போவதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்று குடியியல் உரிமைகளை இழந்தாலும் கூட, அவற்றை மீளவழங்கும் வகையில் ஒருவருக்கு முழுமையான பொதுமன்னிப்பு அளிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
சந்திரிகா ஆட்சிக்காலத்தில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்த தற்போதைய அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இத்தகைய பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார்.
ஆனால் அத்தகைய முழுமையான பொதுமன்னிப்பு சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

21 May 2012

கிலாரியிடம் பொய் கூறினார் பீரிஸ்!

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனைச் சந்தித்தபோது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உண்மையான தகவல்களை கூறவில்லை என்றும் அவர் புள்ளிவிபரங்களைத் திரித்துக் கூறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஹிலாரி கிளின்டனுடன் நடத்திய பேச்சுக்களுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த போது, நாட்டின் ஏனைய பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8 சதவீதமாககு இருக்கும் போது, போருக்கு பின்னரான காலகட்டத்தில் வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி 22.9 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பொருளியல் ஆய்வாளரான முத்துக்கிருஸ்ண சர்வானந்தா, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் கருத்து புள்ளிவிபர தகவல்களை திரிபுபடுத்தி, சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் தந்திரோபாய வழிமுறையாகவே கருதப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
“ஹிலாரி கிளின்டனுடனான சந்திப்பின் போது, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு ஒரு சில புள்ளிவிபரங்களின் அடிப்படையிலான தகவல்களையும், வடமாகாணத்தை பொறுத்தவரையில் வேறு சில புள்ளிவிபரங்கள் அடிப்படையிலான தகவல்களையும் அவர் வழங்கியுள்ளார்.
சிறிலங்காவின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி 2010ம் ஆண்டு கூடுதலான வளர்ச்சியை கண்டுள்ளது உண்மைதான்.
என்றாலும், இது புது விடயம் அல்ல. போர்நிறுத்த காலத்தில் கூட இப்படியான ஒரு சூழல் ஏற்பட்டது.
ஆனால் போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்ட அந்த பொருளாதார வளர்ச்சி நிலைத்து நிற்கவில்லை.
அதேபோல் வடமாகாணத்திலும் பொருளாதார வளர்ச்சி தொடருமா என்பதும் கேள்விக்குறியே.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியதில் சற்றுக் கள்ளத்தனம் இருப்பதாக தான் கருதுகிறேன்.
அரசியல் விவகாரங்கள் மற்றும் மனிதஉரிமை விபரங்களை திரிபுபடுத்திக் கூறும் தற்போதைய ஆட்சியாளர்களின் பரப்புரை உத்தியாகவே பீரிசின் கருத்துக்கள் உள்ளன.
சிறிலங்கா அரசு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சி தான் முக்கியம் என்று பரப்புரை செய்து வருகிறது.
அதற்காக வெளிநாடுகளிடமிருந்தும் உதவிகளை வெளிப்படையாக கேட்டு வருகிறது.
அதனை ஆதரிக்கும் வகையில் இப்படியாக திரிபுபடுத்தப்பட்ட புள்ளிவிபரங்களை வெளியிட்டு அவர்களை தவறான வழியில் நம்ப வைக்கும் நடைமுறையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதே கருத்தையே ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோவும் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.