31 ஜூலை 2018

எழுந்து வா தலைவா என கோஷமிட்டவர்களிடம் ஐயா வந்துடுவாரா எனக்கேட்டவர் மீது தாக்குதல்!

அடி, உதை ஐயா வந்துருவாரா என்று நக்கலாக கேள்வி எழுப்பிய நபரை காவேரி மருத்துவமனை அருகே, திமுக தொண்டர்கள் அடித்து உதைத்தனர். சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, இன்று 4வது நாளாக சிகிச்சை தொடர்கிறது. இதையடுத்து மருத்துவமனை வெளியே, தொண்டர்கள் பலரும் குழுமியிருந்து வாழ்க கோஷங்களை எழுப்பியபடி உள்ளனர்.இன்று மதியம், இப்படி குழுமியிருந்த தொண்டர்களை அணுகிய, நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர், ஐய்யா வந்துவிடுவாரா என கேலியாக கேள்வி எழுப்பினாராம். இதனால் தொண்டர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். அதில் சிலர் அந்த நபரை பிடித்து அடிக்க தொடங்கியதால் அங்கு பெரும் கூச்சல், சத்தம் எழுந்தது.கருப்பு சிவப்பு வண்ணத்தில் சேலை கட்டிய பெண் தொண்டர் ஒருவர், அந்த நபரை பார்த்து கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்துவிட்டார். நாங்கள், எழுந்து வா என கோஷம் போட்டபடி இருக்கிறோம். ராத்திரி பகலாக இங்கேயே தங்கியிருக்கிறோம். இவர் என்னடான்னா, ஐயா வந்துடுவாரா என நக்கலாக கேள்வி எழுப்புகிறார் என்று சத்தம் போட்ட காட்சிகள் அங்கிருந்த ஊடகத்தாரின் கேமராக்களில் பதிவாகியுள்ளது.இதையடுத்து ஆண் தொடர்கள் சிலர் அந்த நபரை அடித்து தள்ளி விட, அப்போது போலீசார் அங்கு வந்து, அந்த நபரை மீட்டு வெளியே போகச் சொல்கிறார்கள். இந்த காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இப்படி பேசினால் அடிப்பார்கள், பேசாமல் போய்விடு என ஒரு இளைஞர், அந்த நபரிடம் எச்சரிக்கும் காட்சியும் வீடியோவில் உள்ளது.காவேரி மருத்துவமனை வெளியே குவிந்துள்ள தொண்டர்களுக்கு திமுக சார்பில் இலவச உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்களும் அங்கேயே குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

28 ஜூலை 2018

தா.பாண்டியன் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

Senior Communist leader Tha Pandian hospitalised மூத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக இருந்தவர் தா.பாண்டியன். முதுபெரும் கம்யூனிச தலைவர்களில் ஒருவர். அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
85 வயதான தா.பாண்டியன் சமீப காலமாக சிறுநீரக பிரச்சினை தொடர்பாக டயாலிசிஸ் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அராலியில் குள்ள மனிதர்கள் அட்டகாசம்,மக்கள் பீதி!


மரத்­துக்கு மரம் தாவும் குள்­ளர்­கள் பெண்­கள், குழந்­தை­கள் மீதும் வீடு­க­ளின் மீதும் கல்­வீ­சித் தாக்­கு­ம் சம்பவங்களால்,   அராலியில் நேற்­றி­ர­வு பெரும் பதற்­றம் நில­வி­யது.
மரத்­துக்கு மரம் தாவும் குள்­ளர்­கள் பெண்­கள், குழந்­தை­கள் மீதும் வீடு­க­ளின் மீதும் கல்­வீ­சித் தாக்­கு­ம் சம்பவங்களால், அராலியில் நேற்­றி­ர­வு பெரும்
பதற்­றம் நில­வி­யது.நேற்று இரவு அராலி, ஐய­னார் ஆல­யத்­தைச் சூழ­வுள்ள பகு­தி­க­ளில் இந்­தக் குள்ள மனி­தர்­க­ளின் தாக்­கு­தல் இடம்­பெற்­ற­தா­கக்
கூறப்­ப­டு­கின்­றது. அரா­லி­யில் உள்ள அதி­க­மான வீடு­கள் மீது நேற்­றி­ரவு கல் வீசப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. கல் எறிந்­து­விட்டு மரத்­துக்கு மரம் தாவி­யும் ஒடி­யும் மறை­யும் குள்­ளர்­க­ளைத் தேடி ஊர­வர்­கள் திரண்­ட­னர். இத­னால் அந்த இடம் பதற்­றக் கள­மா­னது. மக்­களை அச்­சு­றுத்­து­வ­தற்­காக திட்­ட­மிட்டு இவ்­வான சம்­ப­வங்­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என்று இளை­ஞர்­கள்
தெரி­வித்­த­னர்.
சம்­ப­வம் தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வ­னுக்கு தக­வல் வழங்­கப்­பட்­டது. அவர் உட­ன­டி­யாக அந்த இடத்­திற்கு விரைந்­தார். நில­மை­களை அறிந்து வட்­டுக் கோட்­டைப் பொலி­ஸா­ருக்கு தக­வல் வழங்­கி­னார்.
இரவு 8.30 மணி­ய­ள­வில் வட்­டுக்­கோட்டை பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்ட பொலி­ஸார் குழு­வி­னர் சம்­பவ இடத்­துக்கு வந்­த­னர். விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.
கடந்த சில தினங்­க­ளா­கவே வீடு­கள் மீது கல்­வீச்சு நடப்­ப­தாக மக்­கள் முறை­யிட்­ட­னர். குள்­ளர்­கள் வீடு­க­ளின் கூரை­க­ளில் தாவு­வ­தால் வீட்­டில் உள்ள பெண்­கள், சிறு­வர்­கள் பயத்­து­ட­னேயே வாழ்­கின்­ற­னர் என்­ற­னர். வீட்­டுக் கூரை­யில் ஏதோ ஒன்று விழு­வது போன்று சத்­தம் கேட்டு வெளி­யில் வந்­தால் குள்ள மனி­தர்­களை ஒத்­த­வர்­கள் கூரை­யில் இருந்து மதி­லுக்­குப் பாய்ந்து மதி­லில் இருந்து வீதிக்­குப் பாய்ந்து சில நொடி­க­ளில் தப்­பித்­துச் சென்­று­ வி­டு­கின்­ற­னர் என்­றும் மக்­கள் தெரி­வித்­த­னர்.
அண்­மை­யில் பொது­மக்­கள் அவர்­க­ளைத் துரத்­திச் சென்­ற­னர். அவர்­கள் அரா­லித் துறை நோக்கி ஓடித் தப்­பி­னர். நேற்று முன்­தி­னம் கட­லுக்­குச் சென்று வந்த ஒரு­வரை மடக்­கிய குள்ள மனி­தர்­கள், அவரை விசா­ரித்­துள்­ள­னர். இத­னால் அவர் பயத்­தில் உள்­ளார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. மிக­வும் குள்­ள­மாக இருக்­கும் அவர்­கள் கைக் கோட­ரி­யை­யும் வைத்­துள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.
சில­ருக்கு கைக் கோட­ரி­யைக் காட்­டிப் பய­மு­றுத்­தி­யுள்­ள­னர். எனவே பாது­காப்பு ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளுங்­கள் என்று மக்­கள் பொலி­ஸாரை கேட்­ட­னர். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சர­வ­ண­ப­வ­னி­ட­மும் அந்­தக் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.
இது தொடர்­பான கூட்­ட­மொன்று இன்று மாலை 5 மணிக்கு அராலி மாவத்தை விளை­யாட்டு மைதா­னத்­தில் பொலி­ஸா­ரால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. அதில் பொலி­ஸார், மற்­றும் கிராம மக்­க­ளைக் கலந்­து­கொள்­ளு­மாறு மூத்­த­வர்­கள் வேண்­டு­கோள்­வி­டுத்­த­னர். மேல­திக விசா­ர­ணை­களை பொலி­ஸார் மேற்­கொண்­ட­னர்.

24 ஜூலை 2018

நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்திக் விடுதலை!

Naam Tamilar Party’s student leader Idumbavanam Karthik released from jail காவிரி உரிமைக்காக ஐபிஎல் முற்றுகையில் ஈடுபட்டதற்காக, குண்டர் சட்டத்தில் கைதான நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் விடுதலை செய்யப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "காவிரி நதிநீர் உரிமைக்காகத் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்றுவந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மக்களைப் திசைதிருப்புவதாக அமைந்ததால், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தாமல் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்துகொள்ளுங்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டும் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற்றதால் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி வழக்குத் தொடரப்பட்டது. மேலும் கட்சியைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துவிட்டனர். அதே வழக்கில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கடந்த மே-18 அன்று சென்னை, பெருங்குடியில் நடைபெற்ற மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிவிட்டு இரவு அலுவலகம் திரும்புகையில் காவலர்களால் கைது செய்யப்பட்டு பின்னர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். கடந்த ஜூலை 4 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் நீதிபதிகள் அமர்வில் நேர் நிறுத்தப்பட்டு ஜூலை 14 அன்று குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதாக தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இன்று நேற்று ஜூலை 23 ஆம் தேதி பிணை கிடைத்ததையொட்டி இன்று ஜூலை 24 இல் புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். அவ்வயம் சிறப்பான வரவேற்பு அளிக்கும் விதமாக நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்புரிமையுடன் அழைக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.