24 ஜூலை 2018

நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்திக் விடுதலை!

Naam Tamilar Party’s student leader Idumbavanam Karthik released from jail காவிரி உரிமைக்காக ஐபிஎல் முற்றுகையில் ஈடுபட்டதற்காக, குண்டர் சட்டத்தில் கைதான நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் விடுதலை செய்யப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "காவிரி நதிநீர் உரிமைக்காகத் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்றுவந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மக்களைப் திசைதிருப்புவதாக அமைந்ததால், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தாமல் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்துகொள்ளுங்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டும் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற்றதால் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி வழக்குத் தொடரப்பட்டது. மேலும் கட்சியைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துவிட்டனர். அதே வழக்கில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கடந்த மே-18 அன்று சென்னை, பெருங்குடியில் நடைபெற்ற மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிவிட்டு இரவு அலுவலகம் திரும்புகையில் காவலர்களால் கைது செய்யப்பட்டு பின்னர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். கடந்த ஜூலை 4 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் நீதிபதிகள் அமர்வில் நேர் நிறுத்தப்பட்டு ஜூலை 14 அன்று குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதாக தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இன்று நேற்று ஜூலை 23 ஆம் தேதி பிணை கிடைத்ததையொட்டி இன்று ஜூலை 24 இல் புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். அவ்வயம் சிறப்பான வரவேற்பு அளிக்கும் விதமாக நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்புரிமையுடன் அழைக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக