08 டிசம்பர் 2013

பெரும் தோல்வியில் காங்கிரஸ்!பாரதிய ஜனதா வெற்றிப்பாதையில்!

வெற்றி பெற்ற தலைவர்கள் 
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது. மதியம் 21.10 மணி நிலவரப்படி டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.
70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் 22 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளார். பாஜக 9 தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் 6 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேசத்தில் பாஜக 152 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 63 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 5 தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
199 தொகுதிகளில் நடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்த-ல் பாஜக 139 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 26 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 8 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 10 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். பாஜக 12 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் 43 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. 45 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக