
இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, வெல்லிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து 4 முறை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ள நிலையில் தற்போது, இலங்கை கடற்படையினருக்கு நேவி பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக