01 டிசம்பர் 2013

கருணாநிதி பாணியில் ஜெயலலிதா!

சிறீலங்கா கடற்படை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது என்ற இந்தியாவின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, வெல்லிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து 4 முறை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ள நிலையில் தற்போது, இலங்கை கடற்படையினருக்கு நேவி பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக