29 செப்டம்பர் 2010

சிங்கள காமவெறிபிடித்த பொலிஸாராலேயே இளைஞர் கொலை!

காத்தான் குடி பிரதேசத்தில் வைத்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்ட ஆண் ஒருவர் உண்மையில் காவற்துறை அதிகாரி ஒருவரால் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு காத்தான்குடி, கல்லடி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி சுருக்கிட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் தற்கொலை செய்துக் கொண்டதாக காவற்துறையினர் தெரிவித்திருந்தனர்.
எனினும் நீதி விசாரணைகளோ அல்லது பிரேத பரிசோதைனயோ மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் செல்வராசா சங்கர் என்ற 26 வயதுடைய குறித்த ஆணின் மனைவியின் மீது இச்சை கொண்டிருந்த அந்த பிரதேச காவற்துறை அதிகாரி ஒருவரே அவரை கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொல்லப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியான செல்வராசா சங்கர் ஒரு குழந்தைக்கு தந்தையும் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக