19 செப்டம்பர் 2010

மகிந்தவிற்கு சவாலான செயல்திட்டத்தை கட்சி செயற்குழுவில் சமர்ப்பிக்குமாறு ரணில் கோரிக்கை.

கட்சியின் பதவிகளுக்காக முரண்பட்டு கட்சியை பிளவுபடுத்தாது மகிந்த ராஜபக்சே வின் சர்வாதிகார நிர்வாகத்தை கவிழ்ப்பதற்காக நடைமுறைச் சாத்தியமான அரசியல் வேலைத் திட்டமொன்றை செயற்குழுவில் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் அதிருப்தி குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்மறுசீரமைப்பைக் கோரி நிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் யோசனைகளுடன் நேற்று (17) தன்னைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்டி சில்வாவிடம் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்
பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக முண்டியடித்துச் செயற்படும் சிலர் கடந்த காலங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே விற்கோ அல்லது அவரது குடும்ப நிர்வாகத்திற்கு எதிராகவோ பகிரங்கமாக எவ்வித வார்த்தைகளைக்கூட வெளியிடவில்லை என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக