05 செப்டம்பர் 2010

அம்பாறையில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி!



நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த காதல்ஜோடி ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளது.
அம்மாவட்டத்தின் திருக்கோவில்-விநாயகபுர முகத்துவார பிரதேசத்தின் தென்னந்தோப்புப் பகுதி ஒன்றில் இவர்கள் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்டனர்.
தகவல் அறிந்து வந்த பொலிஸார் இவர்களை மீட்டு திருக்கோவில் வைத்தியசாலையில் சேர்த்தனர். தற்போது இருவரும் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
இத்தற்கொலை முயற்சி தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொலிஸார் முடுக்கி விட்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக