20 செப்டம்பர் 2010

ஜேர்மன் வைத்தியசாலையில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி!

ஜேர்மன் வைத்தியசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டும் ஒருவர் பலத்த காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் பிரெஞ்ச், சுவிஸ் எல்லைக்கு அண்மையாகவுள்ள லொவெரச் தென் மேற்கு நகரில் நடந்துள்ளது. அங்குள்ள செயிண்ட் எலிசபெத் மருத்துவமனைக்குள் நடந்து சென்ற பெண்ணொருவர் தாம் கொண்டுசென்ற தானியங்கித் துப்பாக்கி மூலம் சுட்டுள்ளார். இறந்தவர்களில் இவரும் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. 15 நிமிடங்களுக்குள் அப்பகுதியை அடைந்த போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். ஆனால் குறித்த பெண்மணி எவ்வளவு நேரமாக அம்மருத்துவமனை வளாகத்தில் இருந்தார் என்பது இன்னும் தெரியவில்லை.
இதேவேளை குறித்த மருத்துவமனைக்கு எதிராக நடந்த குண்டுவெடிப்பொன்றைப் பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அங்கு இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனவே இந்த இரு சம்பவங்களுக்கும் இடையில் ஏதாவது தொடர்பு உள்ளதா எனப் போலீஸ் விசாரணை செய்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக