15 செப்டம்பர் 2010

தந்தை 700 மீட்டர் ஆழச் சுரங்கத்தில்: குழந்தை சுகப் பிரசவம்!

சில்லி நாட்டில் கடந்த 40 தினங்களாக சுமார் 700 மீட்டர் ஆழச் சுரங்கத்தில் பலர் அடைபட்டுள்ளனர். அடைபட்டுள்ள சுரங்கத் தொழிலாளர்களை மீட்க சில்லி நாட்டு அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த சமயம் அதன் வாயில் இடிந்து கற்பாறைகளால் அது மூடப்பட்டது. இருப்பினும் பலர் அச் சுரங்கத்தினுள் இன்றுவரை உயிரோடு உள்ளனர். சிறிய ஓட்டை வழியாக அவர்களுக்கு உணவுகள் மற்றும் தேவையான அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர் ஒருவரின் மனைவி அவரின் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அதனை உடனடியாக வீடியோ எடுத்த குடும்பத்தினர் அதனை சிறு ஓட்டை வழியாக சுரங்கத்திற்குள் செலுத்தி அதைக் காண்பித்தும் உள்ளனர். சுரங்கத்தில் உள்ள பலரின் மனநிலை பாதிப்படைந்து வருவதால், அவர்களையும், தந்தையையும் உற்சாகப்படுத்தும் விதமாக இக் காட்சிகள் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக