09 செப்டம்பர் 2010

அச்சகம் சீல் வைக்கப்பட்டு இருவர் கைதுசெய்யப்படுவதற்கு காரணமான சுவரொட்டிகள் வெளியாகியுள்ளன.

அச்சகம் சீல் வைக்கப்பட்டு அச்சக உரிமையாளரது மனைவியையும், சகோதரரையும் தடுத்துவைப்பதற்கு காரணமான சுவரொட்டியின் பிரதியொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவினால் ணையத்திற்குஅனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‘வை ஹிட்லர் போல சித்தரித்து ஒரு சுவரொட்டி வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய சுவரொட்டி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் குடும்ப ஆட்சியை சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த சுவரொட்டிகளை அச்சிட்ட அச்சகத்திற்கு சீல் வைத்த மிரிஹான காவல்துறையினர் அச்சகத்தின் உரிமையாளரது மனைவியையும், சகோதரரையும் தடுத்துவைத்துள்ளனர். அச்சக உரிமையாளர் காவல்துறையினரிடம் சரணடையும் பட்சத்தில் இவர்கள் விடுவிக்கப்படுவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக