10 செப்டம்பர் 2010

தாம் பயிற்சியளிக்கவில்லை என்கிறார் கோத்தபாய.

பாகிஸ்தானைச் சேர்ந்த எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இலங்கையில் பயிற்சி பெறவே இல்லை என்று இலங்கையின் பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோட்டாபய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் பயிற்சி முகாம் ஒன்றில் இராணுவ பயிற்சிகளைப் பெற்றார் என்று அவ்வியக்கத்தின் தீவிரவாதி ஒருவர் இந்தியாவின் மராட்டிய மாநில பொலிஸாருக்கு வழங்கி இருக்கும் வாக்குமூலத்தை கோட்டாபய முற்றாக நிராகரித்துள்ளார். இலங்கையில் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இயங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக