21 செப்டம்பர் 2010

ஆஸி.சிறையில் கூரை மேல் போராட்டம் ! ஈழத் தமிழர்கள் ஒன்பது பேர் தற்கொலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் 07 பேர் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் Villawood தடுப்பு முகாமின் கூரையில் ஏறி நின்று இன்று தற்கொலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இவர்களுடன் ஆப்கானியர் ஒருவரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நாடு கடத்தும் தீர்மானத்தை ஆஸி அரசு மாற்றிக் கொள்ளாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வார்கள் என்று இவர்கள் மிரட்டுகின்றார்கள்.
பீஜி நாட்டவர் ஒருவர் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட நிலையில் இக்கூரையில் இருந்து காலையில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸியின் Villawood தடுப்பு முகாம் கைதிகளான சட்டவிரோத குடியேற்றவாசிகளில் சிலர் இன்று முகாமின் கூரையில் ஏறி நின்று தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் செய்கின்றமையால் அங்கு பாரிய பதற்றம் நிலவுகின்றது.
அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு கடத்தப்படுகின்றமையை ஆட்சேபித்தே இவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். நாடு கடத்தும் தீர்மானத்தை ஆஸ்திரேலிய அரசு வாபஸ் பெறா விட்டால் கீழே குதித்துத் தற்கொலை செய்வார்கள் என்றும் மிரட்டுகின்றார்கள்.
பிஜி நாட்டவர் ஒருவர் அதிகாலையில் கூரையில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இவ்வார்ப்பாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருப்போரில் ஒன்பது பேர் வரையானோர் இலங்கைத் தமிழர்கள் என்றும் ஒருவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இரவிலும் போராட்டம் தொடரும் என்று இவர்கள் அறிவித்துள்ளார்கள். இவர்களை கீழே இறக்குகின்றமைக்கு பொலிஸாரும், சிறைச்சாலை அதிகாரிகளும் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுடன் பேச்சு நடத்த இலங்கையர் ஒருவர் ஆஸி அதிகாரிகளால் கூரைக்கு தூது அனுப்பப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் கூரையை விட்டு இறங்கி வந்த பின் பிரச்சினையைப் பேசித் தீர்க்கலாம் என்பது அதிகாரிகளின் நிலைப்பாடாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக