03 செப்டம்பர் 2010

18 யுவதிகளின் ரோமியோ கைது!



இளம்யுவதிகள் 18 பேரை காதலித்து ஏமாற்றியமை மட்டுமன்றி அந்த இளம்யுவதிகளின் தங்க நகைகளையும் கொள்ளையடித்த 35 வயது ரோமியோவை மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
இவரால் பாதிக்கப்பட்ட இளம்யுவதிகளில் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்தே இக்கைது இடம்பெற்றுள்ளது. 18 இளம்யுவதிகளின் காதலனாக இருந்து வந்த இந்நபர் அந்த இளம்யுவதிகளில் நால்வரை திருமணம் செய்து கொண்டார் என்றும் மிகுதியான 14 பேரில் நால்வருடன் ஒன்றாக வாழ்ந்திருக்கின்றார் என்றும் பொலிஸாரின் புலனாய்வு விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இக்கைது நடவடிக்கையை தொடர்ந்து பல இளம்யுவதிகளின் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன என்று இரத்தோட்டை பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக