28 செப்டம்பர் 2010

மன்னார் பேசாலை கடற்கரைப் பகுதியில் உருக்குலைந்த ஆணின் சடலம் மீட்பு!

மன்னார் பேசாலை நடுக்குடா கடற்கரையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டு, நேற்று திங்கட்கிழமை மாலை பேசாலை பொலிஸார் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சடலத்தின் தலைப்பகுதி மற்றும் கால் பகுதிகள் சிதைவடைந்த நிலையில் உள்ளது. இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை. இதே வேளை கடந்த ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதி மன்னார் மூர் வீதி காட்டுப்பள்ளிக்கு பின்புறமாக கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மன்னார் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக