04 செப்டம்பர் 2010

ஐ.தே.கட்சி உறுப்பினர் சாகும் வரையில் உண்ணாவிரதம்?



அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 8ம் திகதி அரசாங்கத்தினால் 18ம் அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் குறித்த நாளில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் உண்ணாவிரம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் பாதையில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.
திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக