17 செப்டம்பர் 2010

மட்டக்களப்பில் சீன கண்டேனர் வெடித்தது: இந்திய ரோ அதிகாரிகள் காரணமா?


இலங்கையில் சீனாவின் அபிவிருத்தி திட்டங்கள் பல இடம்பெற்று வருகின்றது யாவரும் அறிந்ததே. சீனாவின் அபிவிருத்தி திட்டத்திற்காக கல் உடைப்பதற்கு பல டைனமைட் வெடிபெருட்கள் ஒரு பாரிய கொள்கலனில் கொண்டுவரப்பட்டு, அது கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வைத்து வேறு ஒரு பாரஊர்திக்கு மாற்றப்பட்டுக்கொண்டு இருந்தவேளையே இக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக அதிர்வின் மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவிக்கிறார். இதில் வெடிபொருட்களை மாற்ற முனைந்த 2 சீனர்கள் உட்பட சுமார் 60 பொலிசார் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் கரடியனாறு போலீஸ் நிலையம் முற்றாக இடிந்து தரைமட்டமாகியுள்ளது.
மேலும் 60 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்த டைனமைட் குண்டுகள் சி 4 வகை அல்ல அது இலகுவில் வெடிக்க. அவை பற்றவைத்தாலே வெடிக்கும். இந்நிலையில் இக் குண்டுவெடிப்புக்கும் இந்தியாவின் உளவுத்துறைக்கும் சம்பந்தம் இருக்கலாம் என அறியப்படுகிறது. இலங்கையில் சீனாவின் அபிவிருத்தித் திட்டங்கள் மிக ஆபத்தானவை எனக் காட்டவே இவ்வாறு ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அத்தோடு சில தினங்களுக்கு முன்னர் 2 இந்திய ரோ அதிகாரிகளை இலங்கை நாடு கடத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் பெருகிவரும் நிலையில், சீனாவினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தவிடுபொடியாக்கவும், அதன் ஆதிக்கத்தை இலங்கையில் குறைக்கவும், மற்றும் போர் ஓய்ந்துள்ள நிலையில் சுமார் 60 பொலிசார் மரணமடைந்திருப்பதும் பெரும் நெருக்கடியைத் தோற்றுவிக்கும். சிங்கள மக்கள் சீனாமேல் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில் ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்துள்ளனர் இந்திய ரோ பிரிவினர். சீனாவில் இருந்து கண்டெய்னரில் கொண்டுவரப்பட்ட இந்த பாறைகளை உடைக்கும் டைனமைட்டுக்கள் ஏன் பொலீஸ் நிலையம் முன்பாக நிறுத்தப்படவேண்டும்?
அதற்கு முரணாக இலங்கை இராணுவம் மட்டக்களப்பு பொலீஸ் நிலைய ஆயுதக் களஞ்சியத்திலேயே குண்டுவெடித்தது என முதலில் சிங்கள செய்திச் சேவைகளுக்கு தெரிவித்துள்ளது. இதில் பல முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே இது தான் ஆரம்பம் என்பது போல பிரித்தானியாவில், பல குறும் தகவல்கள்(SMS) உலாவுகின்ற. இத் தாக்குதலை விடுதலைப் புலிகளின் முன் நாள் உறுப்பினர் ராம் செய்ததாகவும் கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக