09 செப்டம்பர் 2018

ஏழுபேர் விடுதலை ஆளுநர் ஏற்றே ஆகவேண்டும்,ஜெயக்குமார் அதிரடி!

யார் பெரியவர்? மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களின் விடுதலையில் அரசின் முடிவை கவர்னர் ஒப்புக்கொள்ள வேண்டும், வேறு வழியில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை 4 மணியளவில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூட்டம் முடிந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அதில் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் பற்றி ஆலோசனை நடத்தினோம். உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் கருணை மனுவை 161வது சட்ட பிரிவின்கீழ் பரிசீலிக்கலாம் முடிவு எடுக்கப்பட்டது.161வது பிரிவு தெளிவாக உள்ளது.அமைச்சரவை முடிவை ஆளுநர் ஏற்றாக வேண்டும். அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதைதான் பின்பற்ற வேண்டும். சட்டத்தில் அப்படித்தான் உள்ளது.இதில் எந்தக் குழப்பமும் இல்லை, தெளிவாக உள்ளது.இன்றே தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். உடனடியாக இப்போதே பரிந்துரையை அனுப்பி வைக்க உள்ளோம்.ஒட்டுமொத்த தமிழரின் எண்ணம் 7 தமிழரையும் விடுவிக்க வேண்டும் என்பதுதான். ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம்தான் இது.அன்று நிறைவேறாமல் போய் விட்டது, இன்று நிறைவேறும். இந்த முறை கண்டிப்பாக அரசின் பரிந்துரை ஏற்கப்படும்.மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டுத்தான் 7 பேரையும் விடுவிக்க முடிவு. உச்ச நீதிமன்றம் அதைத்தான் சொல்லி இருக்கிறது. உச்சநீதிமன்றம்தான் முக்கியமானது, அதற்கு மேலானவர்கள் யாருமில்லை. அதனால் ஆளுநர் இதை ஏற்றே ஆக வேண்டும்.

06 செப்டம்பர் 2018

ஏழுபேர் விடுதலை தமிழக அரசே முடிவு செய்யலாம்-நீதிமன்றம் உத்தரவு!

Tamilnadu govt can release 7 tamils on the Rajiv gandhi murder case: Supreme court ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் கடந்த 2013ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. இதற்கு எதிரான மத்திய அரசின் வழக்கையும் சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்துள்ளது.