30 அக்டோபர் 2010

கிட்லர் செய்ததையே மகிந்த அரசும் செய்கிறது!

உலக மனித உரிமைகள் தினத்தன்று மாபெரும் போராட்டமொன்றை நடத்தி முன்னாள் இராணு வத் தளபதி சரத் பொன்சேகாவை மீட்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரி வித்தார். முன்னாள் சர்வாதிகாரியான ஹிட்லர் 1933 ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவையனைத்தும் படிப்படியாக இன்று இலங் கை அரசும் செய்துவருகிறது. ஹிட்லரின் ஆட்சி போலவே இலங்கை அரசின் ஆட்சியும் இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை கண்டியில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய மங்கள சமரவீர, முன்னாள் சர்வாதிகாரியான ஹிட்லர் 1933 ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவை அனைத்தும் படிப்படியாக இன்று இலங்கை அரசும் செய்துவருகிறது.
இச்சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக ஒரு இலட்சம் பேரைத்திரட்டி எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப் பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளோம். 1933 ஆம் ஆண்டுஹிட்லருக்கு எதிராக மக்கள் எழும்போது ஹிட்லர் அரச அதிகாரங் களை கைப்பற்றினார். அதுபோல் இன்று இலங்கையிலும் நீதிச்சேவை ஆணைக் குழு, பொலிஸ் சேவை ஆணைக்குழு, தேர் தல் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக் குழு போன்ற பல்வேறு ஆணைக்குழுக்க ளை ஜனாதிபதி தனது கையில் எடுத்துள்ளார்.
அவ்வாறு எமது ஜனநாயக உரிமைகள் பறிக் கப்பட்ட தினம் தான் செப்டெம்பர் 8 ஆம் திகதியாகும். எனவே நவம்பர் 8 ஆம் திக திக்கு இரண்டு மாதம் பூர்த்தியாகின்றது. அன் றும் நாடளாவிய நீதியில் ஓர் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளோம். அதேவிதமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி 3 மாதமாகிறது.
இருப்பினும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி உலக மனித உரிமை தினமாகையால் அன்று எமது உரிமை மீறப்பட்ட தினத்தை நினைவு கூறுவதுடன் மாபெரும் போராட்டமொன் றையும் நடத்தி சரத் பொன்சேகாவை மீட்டெ டுப்போம் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக