
மேலும், இலங்கையிலிருந்து சட்டவிரோதமாகச் செல்லும் படகுகளைத் தடுத்து நிறுத்துவதில் இலங்கை கடற்படையினரும் போலீசாரும் தீவிரமாக உள்ளதாகத் தெரிவித்த கோத்தபாய, அண்மையில் இவ்வாறாக இலங்கையில் இருந்து ஒரு படகுகூடச் செல்லவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், விமானம் மூலமாக மக்கள் மூன்றாம் நாடுகளுக்குச் செல்வதையும் கோத்தபாய சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையிலிருந்த புலிகளைத் தாம் தோற்கடித்த பின்னர் இலங்கையில் மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்கிறார் கோத்தபாய. எனவே மக்கள் அகதிகளாக வெளியேற வேண்டிய தேவை எதுவுமே இல்லையாம் என்பது அவரது வாதமாகும். எனவே இலங்கை அகதிகள் யாருக்கேனும் அகதியுரிமை வழங்குவதில் அவுஸ்திரேலியா கடுமையான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோத்தபாய கேட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக