
யாழ்ப்பாணத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து சென்ற சிங்களக் குடும்பங்கள் சில மீண்டும் இங்குவந்து யாழ். புகையிரத நிலையத்தில் முகாமிட்டுள்ளமை தெரிந்ததே. மணியம் தோட்டம் என்பது தமது சொந்த இடமென இவர்கள் கோரியுள்ளதோடு, தம்மை அங்கு மீளக்குடியேற்ற வேண்டும் எனவும் கோரியுள்ள நிலையிலேயே தமிழ்க் குடும்பங்களை சிங்களப்படைகள் இவ்வாறு துரத்தியுள்ளது.
மணியம் தோட்டத்தில் 1995 ஆம் ஆண்டில் தமது முகாமை அமைத்திருந்த படையினர் தற்போது அங்கு மீளக்குடியமர வந்துள்ள சிங்களவர்களுக்கு ஊக்கம் கொடுத்து, முகாமைச் சூழவுள்ள நிலத்தில் மீள்குடியமர உதவுவதாகவும்கூட செய்திகள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக