
மேலும், இராணுவ அதிகாரிகள் அல்லது படையினர் ஏதேனும் குற்றச் செயல் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டால் அந்தச் சந்தேக நபர்கள் குறித்து அவர்கள் அங்கம் வகிக்கும் படைப் பிரிவிற்கு அறிவிக்கப்படுவது வழமையாகும். கோத்தபாயவின் உத்தரவின் பேரில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் டி.ஆர்.எல். ரணவீர கடத்தல் சம்பந்தமாக கைதுசெய்யப்பட்ட மூன்று இராணுவத்தினரில் இருவர் சிங்காப் படைப் பிரிவில் பணியாற்றியவர்கள் எனக் கூறப்படுகின்ற போதிலும் இதுகுறித்து அப்படைப்பிரிவுடன் தொடர்பு கொண்டதாகத் தெரியவில்லை.
கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள நகை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று இரண்டு கோடி ரூபா கப்பம் கோரியமை சம்பந்தகமாகவே இந்த இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக