08 அக்டோபர் 2010

சோபித தேரரைக் கொலை செய்ய முயற்சியா?

சரத் பொன்சேகாவை வெலிக்கடைச் சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல பிக்குகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சரத் பொன்சேகாவுக்குப் பதில் தம்மை சிறையில் அடைக்குமாறு கூறிய சோபித தேரர் சென்ற வாகனம் நேற்று விபத்துக்குள்ளானதில் பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. சோபித தேரர் நேற்றுக் காலையில் கண்டி தலதா மாளிகை நோக்கி சென்று கொண்டிருந்தார். கொழும்பில் இருந்து புறப்பட்ட இவரின் வாகனத்தை பின் தொடர்ந்து முன்னாலும் பின்னாலும் லொறிகள் வந்து கொண்டிருந்ததாகவும் திடீரென அந்த லொறி தனது வாகனத்தில் மோதியதாகவும் அதனால் தனது வாகனம் சேதமுற்றதுடன் தான் உயிர் தப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனவே இந்த விபத்து என்பது திட்டமிட்ட ஒரு கொலை முயற்சி என்று தேரர் பொலிசில் புகார் செய்துள்ளார். அரசுக்காக அடிதடிகளில் இறங்கும் பிரதி அமைச்சர் மேவின் சில்வாவின் விளையாட்டாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக