20 அக்டோபர் 2010

மாங்குளம் ஏ9 சாலையில் நிலக்கண்ணிவெடி!

மாங்குளம் ஏ9 சாலையில் நேற்றையதினம் ஒரு நிலக்கண்ணிவெடி மீட்கப்பட்டுள்ளது. மல்லாவிக்கும் மாங்குளம் சந்திக்கும் இடைப்பட்ட ஏ9 சாலையிலேயே இது மீட்கப்பட்டது. வெடிக்காதிருந்த இந்த நிலக்கண்ணிவெடி கண்டெடுக்கப்பட்டமையால் நேற்று இரவு 7 மணி முதல் 8.30 வரை அப்பகுதியில் இலங்கை இராணுவத்தினர் போக்குவரத்தைத் தடை செய்திருந்தனர். கண்டெடுக்கப்பட்ட கண்ணிவெடியை இலங்கை இராணுவத்தினர் வெடிக்கச் செய்த பின்னர் வழமைபோல போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
நேற்றையதினம் இலங்கை இராணுவத்தின் வவுனியா ஜோசப் முகாமில் நடந்த வடமாகாண அபிவிருத்திக் கூட்டத்தில் பங்கெடுப்பதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்திருந்தார். இந்நிலையில் இந்தக் கண்ணிவெடி கண்டெடுக்கப்பட்டமையால் வவுனியாவில் பரபரப்பாகக் காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக