12 அக்டோபர் 2010

அதிர்வின் கேள்விகளால் அதிர்ந்து போன சுரேஷ்(காணொளி)


வன்னியில் கடந்த வெள்ளியன்று பாடசாலை சென்றுவிட்டு பஸ்ஸில் வீட்டிற்கு பயணம் செய்துகொண்டிருந்த மாணவியை பேரூந்தில் வைத்து இராணுவத்தினர் அங்க சேஷ்டை செய்துள்ளனர். முறிப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேரூந்தில் மொத்தம் 4 பேரே அந்தவேளை பயணித்துள்ளனர். இதில் ஒரு இராணுவ சிப்பாயும் அடங்கும். மீதமுள்ள 2 இளைஞர்களும் அச்சத்தால் ஒதுங்கிக்கொண்டதால், பேரூந்தில் மாணவியின் நெஞ்சுப்பகுதியோடு அங்க சேஷ்டை செய்தது போதாது என்று அம் மாணவி அணிந்திருந்த அதற்கான உள்ளாடையையும் உருவி வெளியே எறிந்துள்ளான் சிங்கள இராணுவ சிப்பாய்.
மாணவியின் கதறலையும், நிலையையும் புரிந்துகொண்ட ஓட்டுனர், பேரூந்தை அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு ஓட்டிச்சென்று அங்குள்ள உயரதிகாரியிடம் முறையிட்டுள்ளார். சாட்சிகள் ஏதும் உண்டா என உயரதிகாரி கேட்க, அதில் பயணித்த 2 இளைஞர்களும், தாம் கண்டதைக் கூறியும், உங்களை துப்பாக்கியால் சுடுவேன் என அந்த அதிகாரி மிரட்டி, தாக்கியும் உள்ளார். இதனால் அவர்கள் அவ்விடத்தில் இருந்து அகன்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களை நாம் தொடர்புகொண்டு இது குறித்துக் கேட்டுள்ளோம். அரசியல் தீர்வு, ஒரு தீர்வுத்திட்டம், 13 ம் திருத்தச் சட்டம் என நாம் எமது நேரத்தைச் செலுத்துகிறோம், ஆனால் மறுபுறமோ மக்கள் அன்றாட, வாழ்வில் இலங்கை இராணுவத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.
இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது என்பது பற்றி அதிர்வு இணையம் தனது கேள்விகளைத் தொடுத்துள்ளது. அவர் நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக