02 அக்டோபர் 2010

சிங்கள அரச அதிகாரி சடலமாக மீட்பு!

சிங்கள அரச அதிகாரி ஒருவரின் சடலமொன்று அம்பாறை நகர சபை விளையாட்டு மைதானத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை காலையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கொடுத்த தகவலை அடுத்து அப்பகுதிக்குச் சென்ற பொலிசார் இவ்வுடலை மீட்டுள்ளனர். இறந்தவர் அனுர பெரேரா (52) என்றும் இவர் அம்பாறை, ராஜவேவைச் சேர்ந்தவர். நான்கு குழந்தைகளுக்குத் தந்தையாவார்.
இதேவேளை, கல்முனை சம்மாந்துறையில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடலை கடந்த புதன்கிழமை அன்று மீட்டுள்ள பொலிசார் அவ்வுடலை கல்முனை அஷ்ரப் மருத்துவமனையில் கையளித்துள்ளனர். ஆனால் இவ்வுடல் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக