17 பிப்ரவரி 2011

மகிந்தவுடன் கூட்டுச்சேர்கிறாரா கங்கை அமரன்?

இலங்கையில் போர் நடக்கும் போது திரையுலகம் திரண்டு பல போராட்டங்களை நடத்தினார்கள். அதில் சொல்லப்பட்டதும் நாம் புரிந்து கொண்டதும் ஒரே விஷயம் தான். இந்த அழிவுகளுக்கும் கொடுமைகளுக்கும் காரணமானவர்கள் ஒரு புறம் இருக்க, இந்த கொடுமையான பதிவுகளை காலத்துக்கு எடுத்து சொல்லவும் அதற்கு காரணமானவர்களை அடையாளம் காட்டும் பொறுப்பும் திரைத் துறையினருக்கும் கலைத் துறையினருக்கும் அதிகம் உண்டு என்பதே.
இலங்கைப் பிரச்சனை அரசியலாக்கப்படுவது ஒருபுறம் இருக்க இந்தக் கொடுமைகளை எல்லாம் மறைக்க ராஜபக்‌ஷே ஒரு பெரிய சதி திட்டம் தீட்டி வருக்கிறார். அதாவது தமிழில் படம் தயாரிக்க இருக்கிறார் ராஜபக்‌ஷே. இதனால் அவருக்கு என்ன லாபம்... அதில் தானே விஷயமே இருக்கிறது. தமிழில் படம் எடுத்து அதில் வரும் காட்சிகளில் இலங்கையில் உள்ளத் தமிழர்கள் நன்றாக இருப்பது போலவும் அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது போலவும் கொடுமைக்கு காரணமான வர்கள் நல்ல மனிதர்களைப் போலவும் காண்பிக்க வேண்டும் என்பது ராஜபக்‌ஷேவின் கனவு.
இதில் கொடுமை என்னவென்றால், இதற்கு ஒத்துழைப்பதாக ராஜபக்‌ஷேவிடம் வாக்கு கொடுத்திருகிறாராம் ஒரு பிரபல தமிழ் இசையமைப்பாளர். அவர் வேறு யாரும் இல்லை, கங்கை அமரன் தான். இதற்காக எவ்வளவு கோடிகளை வேண்டுமானாலும் கொட்டிக் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாராம் ராஜபக்‌ஷே. சமீபமாக ரகசியமாக இலங்கை சென்று ராஜபக்‌ஷேவிடம் பேசிவிட்டு வந்திருக்கிறாராம் இந்த இசையமைப்பாளர். கொழும்பில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த இந்த இசையமைப்பாளரை ராஜ மரியாதையுடன் தூதர்கள் அரச மாளிகைக்கு அழைத்து சென்றார்களாம்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த இளையமைப்பாளரின் மகன் தற்போது பிசியான பிரபல டைரக்டர் என்பதால் அவரை வைத்தே அந்தப் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம் சதிகாரர்கள். (அப்போ... வெங்கட் பிரபுவிற்கு இனிமேல் தான் மங்காத்தா ஆரம்பம்ன்னு சொல்லுங்க!)
இது பற்றி கருத்து தெரிவித்திருக்கும் கங்கை அமரன், எனக்கு அப்படி ஒரு அவசியம் இல்லை என்றும் அது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், ராஜபக்‌ஷேவை கங்கை அமரன் சந்தித்தது உண்மை தான் என்றும், இன்னும் கொஞ்ச நாட்களில் உண்மை வெளியே வரும் என்றும் செய்திகள் வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக