23 பிப்ரவரி 2011

அஸ்தி கரைப்பு முறைப்படி நடக்கும்!

தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளையின் இறுதிக் கிரியைகள் நேற்று உணர்பூர்வமாக நடைபெற்றது தெரிந்ததே. இந்த நிலையில் ஊறணிச் சுடலையில் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அன்னையின் அஸ்தி இருந்த இடத்தை நாசம் செய்து, அந்த இடத்தில் அவர்கள் வருவதை எதிர்த்த நாய்களைக்கூட சுட்டுக் கொன்று வீசியுள்ளார்கள். தமிழர்களை நாய்களைப்போல சுட்டு வீசுவோம் என்ற எச்சரிக்கை இதனால் விடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் வாழும் பார்வதிப்பிள்ளையின் மகள் இறுதிக்கிரியைகளுக்கு போக முயற்சித்து அனுமதி மறுக்கப்பட்டது தெரிந்ததே. இதன் காரணமாக மாறு வேடத்தில் அவர் வருகிறாரா என்று அறிய இராணுவம் இறுதிக்கிரியைக்கு போன பெண்களை பரிசோதித்ததும் தெரிந்ததே. இந்த நிலையில் பார்வதிப்பிள்ளையின் அஸ்த்தி கரைக்கும் நிகழ்வு வழமைபோல நடைபெறும் என்று வல்வைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து தாம் வல்வைக்கு தொடர்பு கொண்டதாகவும் சாம்பல்காடாத்து முறைப்படி நடக்குமென தமக்கு தகவல் கிடைத்ததாகவும் பார்வதிபிள்ளை அவர்களின் மகன் மனோகரன் வேலுப்பிள்ளை அலைகளுக்கு தெரிவித்தார் என அலைகள் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக