14 பிப்ரவரி 2011

சங்கிலியன் படை விடுத்துள்ள எச்சரிக்கை!

ஒட்டுக்குழுக்களின் ஆதரவுடன் யாழ்,குடா நாட்டில் அரங்கேற்றப்பட்டுவரும்
சமூகச்சீரழிவுகளில் ஈடுபடும் இளைஞர்,யுவதிகளுக்கு "சங்கிலியன் படை"எச்சரிக்கை
விடுத்துள்ளது.யாழ்ப்பாணத்தில் உள்ள சில பிரபலமான பாடசாலை மதில்களில் ஒட்டப்பட்டிருந்த
சுவரொட்டிகள் அவசர அவசரமாக இன்று காலை படையினரால் அகற்றப்பட்டதாக அறியக்கிடைக்கிறது.
சங்கிலியன் படையால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுர விபரம்:
யாழ்ப்பாணத்தில் சமூக சீரழிவுகளில் ஈடுபடுவோருக்கான எச்சரிக்கை!
அன்பான தமிழ் மக்களே,
நாம் எத்தனையோ இன்னல்களையும் துன்பங்களையும் வேதனைகளையும் கடந்து வந்து தமிழ் மானத்தை
காத்து வருகின்றோம்.எமது இனம் சீரழிந்துபோக நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.இரத்தத்தால் சிவந்த
தமிழர் தாயகப்பகுதியில் மானத்தை விற்று வாழ நாம் ஒன்றும் மானம் கெட்ட தமிழர் அல்லர்,மானங்கெட்டு
வாழ்பவர்கள் தமிழர்கள் அல்லர்.
அன்பான உறவுகளே!
அண்மைக்காலத்தில் யழ்,குடாநாட்டில் அதிகரித்துவரும் சமூகச்சீரழிவுகளை உடனடியாக நிறுத்துவதற்காக
எம்மால் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.சமூகச்சீரழிவுகளில் ஈடுபடும் இளைஞர் யுவதிகளுக்கு
உடனடியாக தண்டனை வழங்கி எமது இனத்தை காப்பாற்றவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எதிரியானவன் பல வழிகளில் பல தந்திரோபாயங்களை பயன்படுத்தி தமிழினத்தை அழித்து வருகின்றான்.
அதன் ஒரு பகுதியாகத்தான் இன்றைய யாழ்ப்பாணத்தில் பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய ஆபாசத்திரைப்படங்களை
புழக்கத்தில் விடுவதோடு ஆபாச இணையத்தளங்களையும் மறைமுகமான விபச்சாரவிடுதிகளையும் நிறுவி எமது இளைய
தலைமுறையை ஒரு கீழ்த்தரமான சிந்தனையுடையவர்களாக மாற்ற எதிரி முனைகின்றான்.
இதற்கு தமிழர் தாயகத்தில் இயங்கி வரும் ஒட்டுக்குழுக்கள் எதிரியுடன் கைகோர்த்து எமது இனத்தை சீரழித்து வருகின்றனர்.
இச்செயல்களை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.எமது பண்பாட்டை சீரழிக்கின்ற பாலியல் பலாத்காரம்,பாலியல்
சேஷ்டைகளில் ஈடுபடும் நபர்கள் அச்செயற்பாடுகளை இனியும் தொடர்வார்களாயின் அதற்குரிய தண்டனை வழங்கப்படும்.
நன்றி.
சங்கிலியன் படை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக