18 பிப்ரவரி 2011

கலைஞர் தொலைக்காட்சி நிலையம் சல்லடை போட்டு தேடுதல்!

ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் தொடர்பாக தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் ரி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் நுழைந்து அதிரடியாக சோதணை நடத்தினர். நள்ளிரவு முழுவதும் நடந்த இந்த சோதணை மூலம் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பரிசீலித்து நிர்வாக உறுப்பினர்களிடம் கேள்விக்கணைகள் மூலம் துளைத்தெடுத்து வருகின்றனர்.
மத்திய அமைச்சராக இருந்த ராஜா 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விற்றதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை வந்ததையடுத்து ராஜா மற்றும் அதிகாரிகள் ஸ்வான் நிறுவன உரிமையாளர் ஷாகித்உஸ்மான்பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அனைவரும் திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களாக நடத்திய விசாரணையில் வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்தாகவும், பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் சி.பி.ஐ, தனது விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தது.
இந்நிலையில் ஸ்வான் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டதில் அந்நிறுவனம் ஆயிரத்து 537 கோடிக்கு வாங்கிய சில மாதங்களிலேயே 4 ஆயிரத்து 200 கோடிக்கு விற்று கொள்ளை லாபம் பெற்றது. இத‌ைனை தொடர்ந்து இந்த நிறுவனத்திற்கும் கலைஞர் டி.விக்கும் இடையில் பண பரிவர்த்தனை நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது ஸ்வான் நிறுவனத்தின் மற்றொரு கிளை அலுவலகம் மூலம் 200 கோடி வழங்கப்பட்டதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக