16 பிப்ரவரி 2011

வான் புலிகளும் தமிழகத்தில் தஞ்சமாம்!

இராணுவத்தினருடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வான்புலிகளும் தப்பித்துச் சென்றுள்ளதாக திவயின பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளதாக தமிழ் இணையம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தப்பிச் சென்ற ஏனைய விடுதலைப் புலி உறுப்பினர்கள் போன்று அவர்களில் சிலரும் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாகவும் இலங்கைப் புலனாய்வுத்துறையினரை மேற்கோள் காட்டி அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் புதிதாக ஒருங்கிணையும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் கடந்த டிசம்பர் மாதக் கடைசியில் தேவையான பயிற்சிகளை நிறைவு செய்துள்ளனராம்.(புலிகள் முள்ளிவாய்க்கால் வரை எந்தவிதமான பயிற்சியும் பெறாமல் போராடியது போன்றும் தற்போதே இவர்கள் பயிற்சி பெறுவது போன்றும் சிறுபிள்ளைத்தனமாக அந்த செய்தி வெளியாகியுள்ளது)
அவர்கள் கேரளாவிலும் ஆயுதப் பயிற்சியைப் பெற்றுள்ளதுடன், அது தொடர்பான குறும்படமொன்றையும் தயாரித்துள்ளமை குறித்து இந்திய உள்ளகப் பாதுகாப்பு அமைச்சுக்குத் தகவல் கிடைத்துள்ளதாம்.
எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை தமிழகத்தில் புலிகள் எச்சரிக்கை என்ற போர்வையில் புலிகள் போன்ற தோற்றப்பாட்டில் சிலரை உருவாக்கி அவர்களை வைத்து இந்திய,இலங்கை அரசின் சில சதிவேலைத்திட்டங்களை அரங்கேற்றுவதற்கே இரு நாடுகளும் முயல்வது தெளிவுஇதையறியாமல் சில ஊடகங்கள் இவர்களின் சதி வேலைத்திட்டங்களுக்கு துணை போவதே வேதனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக