21 பிப்ரவரி 2011

சுவாமி பிரேமானந்தா காலமானார்.

திருச்சி மாவட்டம், விராலிமலை அருகே ஆசிரமம் நடத்தி வந்த பிரேமானந்தா கொலை, கற்பழிப்பு வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுயநினைவை இழந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவர் இலங்கை மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக